Total Pageviews

Sunday 22 April 2012

மதன் கிமு கிபி

மு தல்
ஆதிமனிதன் ஒரு பெண்
என்பது விஞ்ஞானபூர்வமான
உண்மை சுருக்கமாகச்
சொன்னால் முதல் மனிதன்
ஆதாம் அல்ல ஏவாள் தான்.
அதுவும் அவள் ஐரோப்பிய
வெள்ளைக்கார ஏவாளும்
இல்லை ஆப்ரிக்க
கருப்பு ஏவாள்.
சுமார் மூன்று லெட்சம்
ஆண்டுகளுக்கு முன்பு அந்த
பெண் ஆப்ரிக்காவின் தென்
பகுதியில் ஒரு மலைச்சரிவில்
நடந்து சென்றாள்.
மலைக்கு அடிவாரத்தில் கடல்,
கடற்க்கரையை நோக்கி அவள்
நடந்து சென்றிருக்க வேண்டும்.
கடலோரமாக செத்துக்கெடந்த
ஏதோ ப்ராணி அவள் பார்வையில்
பட்டிருக்கவேண்டும்
அதை சாப்பிடுவதற்க்காக அவள்
மலைச்சரிவிலிருந்து இறங்கி
இருக்கலாம்.
அல்லது வெறுமனே அங்கே
சிறிது நேரம்
அமர்ந்து இலைப்பாரி கடலை
வெரித்து
பார்த்துக்கொண்டிருந்தி
ருக்களாம். அவள் மனதில் என்ன
ஓடியதோ..!
யாருக்கு தெரியும்..? ஒரு நல்ல
விஷயம்.., நடந்து சென்ற அவள்
தன் காலடிச்
சுவடுகளை விட்டுப் போய்
இருக்கிறாள். சில
ஆண்டுகளுக்கு முன்பு தான்
தொல்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் அந்த
காலடிச்சுவடுகளை
கண்டுபிடித்தார்கள்.
ஆராய்ச்சிகள் நடத்தியதில் அந்த
சுவடுகள் சுமார்
மூன்று லெட்சம்
ஆண்டுகளுக்கு முந்தையது
என்று தெரியவந்து விஞ்ஞான
உலகம் பிரம்மிப்பில் ஆழ்ந்தது.
சும்மா இல்லை சந்திரனில்
நீள்ஆம்ஸ்ட்ராங் பதித்த முதல்
காலடிக்கு இணையானது
அல்லவா அது. நம்மைப்
போலவே கைகளை வீசி
சாவதானமாக நடந்த அந்த
முதல் பெண்ணிடம் ஒரு விஷேச
ஜீன் இருந்தது என்றும்
விஞ்ஞானிகள்
கண்டுபிடித்தார்கள்.
“மீட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ ’’
என்கிற ஜீன் அது உலகில் உள்ள
அத்தனை மனிதர்களும் உருவாக
அடிப்படை காரணமான ஆதார
சக்தி அந்த ஜீன் தான்
என்று விஞ்ஞானிகள்
பிற்ப்பாடு அறிவித்தார்கள்.
ஆகவே விஞ்ஞான
அடிப்படையில் பார்த்தாலும்
முதலில் சக்தி இல்லையோல்
சிவம் இல்லை.
ஆண் உதவி இல்லாமல்
தாங்களாகவே வம்ச
விருத்தி செய்துகொள்ளக் கூடிய
பெண் உயிரிணங்கள் உண்டு
“அபிக்ஸ் ’’ என்கிற ஈ வகை ஓர்
உதாரணம். இந்த
வகை உயிரிணங்களில் பெண்
தானாக உள்ளுக்குள் கருத்
தரித்து ஒரு மகளை
பெற்றெடுக்கும் வம்சம்
வம்சமாக தாய் மகள், தாய் மகள்
தான். ஆணே கிடையாது.
ஆனால் அத்தனையும்
ஒரே மாதிரி க்ளோன்கள்
என்பதால் இதில் பரிணாம
வளர்ச்சி என்பதே இல்லாமல்
போய்விடுகிறது. இறைவன் சில
உயிரிணங்களை மட்டும்
ஒரு சோதனை முயற்சியாக
இப்படி படைத்திருக்க
வேண்டும்.
மனித இனத்திலும் பெண் இந்த
வகையில் ஆண்
உதவி இல்லாமல்
கருத்தரித்து பெண்களாக
பெற்றிருந்தால்...!?
கிமு என்று ரொம்ப ரொம்ப
பின்னோக்கி போனால்
மனிதனுக்கும்,
குரங்குகளுக்கும்
ஒரே முன்னோர் தான்
என்பது தெரிய வருகிறது. அந்த
முன்னோரிடமிருந்து இரு
கிளைகள் பிரிகின்றன.
ஒன்று குரங்கு வகைகள்,
இன்னோன்று மனித வகைகள்.
குரங்குகளிள் பரிணாம
வளர்ச்சி அடைந்த ஒரு பிறிவு
“ஏப்ஸ் ’’ என்று அழைக்கப்படும்
குரங்குகள். இவை நாலு வகை.
கிப்பன் குரங்கு: - சாகிர
வரை ஏகபத்தினி விரதன்.
ஓரான் கூட்டான் குரங்கு: -
தனிமையாக
வாழ்ந்து அவ்வப்போது
பெண்ணைத் தேடும் சாமியார்
டைப்.
அடுத்து..,
கொரில்லா : - அரசர்கள்,
அரசியல் வாதிகள்
மாதிரி அந்தப்புரம் வைத்துக்
கொள்கிறவர்.
மற்றும்..,
சிம்பன்சி: - இது காச
நோவா வகையைச் சேர்ந்தது.
அதாவது பல பட்டரை.
குரங்குகளை போலவே மனித
இனத்திலும் பலவிதமான மனித
வகையினர் உலகில்
நடமாடினார்கள். மற்ற மனித
இனங்கள்
அழிந்து மிச்சமிருந்தது இரண்டு
வகையினர்தான். ஒன்று
“நாம் ’’ , மற்றொன்று
“நியான்டர்தாள் ’’ மனிதன்.
ஒருலெட்சம்
ஆண்டுகளுக்கு முன்பு
இப்போது கொரில்லாவும்,
சிம்பன்சியும் காட்டில்
வசிப்பது போல மனிதனும்,
நியான்டர்தாள் மனிதனும்
சமத்துவமாக பூமியில் வளம்
வந்தார்கள். நியான்டர்தாள்
குடும்பத்தினர் தனியாக
வாழ்ந்தார்கள். அவர்களுக்கு தீ
மூட்டத் தெரிந்திருந்தது.
வேட்டையாடி இறைச்சியை
சுடவைத்து திண்றார்கள்.
கொள்ளப்பட்ட விளங்குகளின்
தோல்களை உரித்தெடுத்து
உடம்பில் சுற்றிக்
கொண்டார்கள்.
இறந்தவர்களுக்கு பள்ளம்
தோண்டி மிகுந்த
மரியாதையுடன்
புதைத்து கலங்கினார்கள்.
கூடவே அந்த உடல்
மீது பூக்களைத் தூவினார்கள்.
“க்ரோமக்னன் ’’
என்று அழைக்கப்பட்ட
இன்னொரு இனம் தான் நாம்.
இந்த வகை மனிதர்கள்
பல்கி பெருகியவுடன்
நியான்டர்தாள் மனித இனம்
சுமார் முப்பதாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து
போனது. இதற்கான
உண்மை காரணங்கள்
தெரியவில்லை. இரு மனித
இனங்களுக்கும்
இடையே களவிகள்
நிகழ்ந்திருக்கக்கூடும்
எண்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள். ஆனால்
மனித உடலில் நியான்டர்தாள்
ஜீன் இல்லை.
உடற்க்கூறுப்படி க்ரோமக்னன்
மனிதன் தான்
ஹோமோசேப்பியன்
என்று அழைக்கப்படும்
இன்றைய மனிதன்.
ஹோமோ என்றால் மனித,
சேப்பியர்ஸ் என்றால்
புத்திசாலிதனமான.
நாமே வைத்துக்கொண்ட
பெயர்தான்.
நம்மை விட புத்திசாலிதனம்
குறைந்த நியான்டர்தாள்
மனிதர்களை ஒட்டுமொத்தமாக
வேட்டையாடி அழித்தது
நாம்தான் எண்கிறார்கள் சில
ஆராய்ச்சியாளர்கள்.
க்ரோமக்னன் என்கிற மனித
இனம் தனியாக பிரிந்து உருவாக
வழிவகுத்த ஆப்ரிக்க ஏவாள்தான்
அந்த மலைச்சரிவில்
நடந்து போனவள்.
இன்று க்ரோமக்னன் என்கிற
அந்த ஆதிமனிதன் பேன், சர்ட்
அனிந்துகொண்டு சாதாரணமாக
அண்ணாசாலையில்
நடந்து போனால்.
உங்களுக்கு ஒரு வித்தியாசமும்
தெரியாது. அவனிடம்
மயிலாப்பூருக்கு போக
விலாசம் கூட கேட்பீர்கள்.
தொடரும்....,
(புத்தகம் கி.மு-கி.பி.
ஆசிரியர் திரு. மதன்Sir.)

No comments:

Post a Comment