Total Pageviews

Thursday 26 April 2012

சித்த மருத்துவம்

வாதம், பித்தம், கபம் ஆகிய
மூன்றுமே நோய்களின்
ஆதாரங்களாகும். உடலில் நோய்
அதிகமாக
இருக்கிறதா என்பதை பரிசோதிக்க
சித்தர்கள் கூறும்
பரிசோதனை முறை வருமாறு.
காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில்
எடுங்கள். அதில்
இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள்.
அதன் பின்
அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள்.
எண்ணெய்த்துளி பாம்பு போல
வளைந்து காணப்பட்டால் உங்கள்
உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம்
போல வட்டமாக இருந்தால்
உங்களுக்கு பித்த நோய் உள்ளது.
முத்துப்போல நின்றால்
உங்களுக்கு கப சம்மந்தமான நோய்
வந்துள்ளது. மேலும் எண்ணெய்த்
துளி வேகமாகப் பரவினால் நோய்
விரைவில் குணமாகும், மெதுவாகப்
பரவினால் காலதாமதமாகும்,
அப்படியே இருந்தால் நோய்
குணமாகாது.
எண்ணெய்த்துளி சிதறினாலோ,
அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக்
குணப்படுத்த இயலாது

No comments:

Post a Comment