Total Pageviews

Wednesday 16 May 2012

மாறன்

இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர்
ஒரு பாண்டிய மன்னன்
வியட்நாம்
நாட்டை ஆண்டிருக்கிறான் !
அவன்தான் வரலாறு அறிந்த
முதல் வியட்னாமிய மன்னன்.
அவனுடைய பெயர்
ஸ்ரீமாறன் . தமிழில்
இதை திருமாறன்
என்று சொல்லலாம்.
வியட்னாமில்
கண்டுபிடிக்கப்பட்ட மிகப்
பழைய சமஸ்கிருத
கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன்
என்று குறிப்பிடுகிறது .
இந்தக் கல்வெட்டில் ஆட்சி,
ஆண்டு முதலிய விவரங்கள்
கிடைக்கவில்லை .
கல்வெட்டின்
பெரும்பகுதி அழிந்துவிட்டது .
ஆனால் எழுத்து அமைப்பின்
அடிப்படையில் இது கி. பி .
இரண்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததாக அறிஞர்கள்
கருதுகின்றனர் .
வியட்னாமில் வோ -சான்
என்னும் இடத்தில்
ஒரு பாறையின்
இரண்டு பக்கங்களில் ( VO–
CHANH ROCK INSCRIPTION)
இது செதுக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமாறன் என்ற அரசனின்
குடும்பம் செய்த
நன்கொடையை ( தானத்தை)
கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பாறையின் ஒரு பக்கத்தில் 15
வரிகளும் மறு பக்கத்தில்
ஏழு வரிகளும் உள்ளன .
ஆனால் ஒன்பது வரிகள் தவிர
மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன.
சமஸ்கிருத பாட்டுப்
பகுதி வசந்த
திலகா அணியிலும் ஏனைய
வரிகள் உரைநடையிலும்
உள்ளன . கிடைத்த
வரிகளிலும் கூட சில
சொற்கள் அழிந்துவிட்டன.
கல்வெட்டின் சில வரிகள் :-
. . . . . ... ப்ரஜானாம்
கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . .
வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . ..
ன . . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம்
ஸ்வகன . . .. ..ச . . . . . . . . . .. ..
இந்தக் கல்வெட்டில் ,
தனக்குச் சொந்தமான
வெள்ளி , தங்கம் , தானியக்
குவியல் மற்றுமுள்ள
அசையும் ,
அசையா சொத்து (ஸ்தாவர ,
ஜங்கம் ) வகைகள்
அனைத்தையும்
தமக்கு நெருங்கிய
மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக
மன்னன் அறிவிக்கிறான்.
எதிர்கால மன்னர்கள்
இதை மதித்து நடக்க
வேண்டும் என்றும்
ஆணை பிறப்பிக்கிறான்.
இது வீரனுக்கு தெரியட்டும் . . .. . . .. . . .. .. . .என்று பாதியில்
முடுகிறது கல்வெட்டு.
இதில் முக்கியமான சொற்கள்
“ ஸ்ரீமாற ராஜகுல ”
என்பதாகும் . இந்த
திருமாறனைக்
குறித்து மிகவும் குறைவான
தகவலே கிடைத்துள்ளது .
ஆனால் வியட்னாம்,
லாவோஸ் ,
கம்போடியா ஆகிய
நாடுகளில் 1300
ஆண்டுகளுக்கு நிலவிய
இந்து சாம்ராஜ்யத்தின் முதல்
மன்னன் இவன்
என்பதை சீனர்களின்
வரலாறும்
உறுதி செய்கிகிறது .
திருமாறனை சீன
வரலாற்று ஆசிரியர்கள்
கியு லியன் (KIU LIEN )
என்றும் இவன் ஹான்
வம்சம் (HAN DYNASTY )
சீனாவை ண்டபொழுது அவர்களின்
கட்டுபாட்டில் இருந்த ‘ சம்பா’
தேசத்தில்
புரட்சி செய்து ஆட்சியைக்
கைபற்றியதாகவும்
எழுதிவைத்துள்ளனர் .
சம்பா (CHAMPA )
என்பது தற்போதைய
வியட்னாமின்
ஒரு பகுதியாகும் . மன்னனின்
குடும்பப் பெயர் கியு (KIU )
என்றும் மன்னனின் பெயர்
லியன் ( LIEN) என்றும்
எழுதிவைத்துள்ளனர் . இவன்
காங்ட்சாவோவின் (KONG
TSAO ) புதல்வன் என்றும்
தெரிகிறது .
தென்கிழக்கு ஆசியா முழுதும்
முதல்முதலாக
தொல்பொருள்
ஆராயச்சி நடத்திய
பிரெஞ்சுக்காரர்கள்
ஸ்ரீமாறனும் ,
கியு லியானும் ஒருவர்தான்
என்று உறுதிசெய்துள்ளனர்.
கி. பி . 137 ல்
சீனர்களை எதிர்த்துக் கலகம்
துவங்கியது . ஆனால்
கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன்
ஆட்சி ஏற்பட்டது .
ஸ்ரீ மாறனுக்குப் பின்னர்
ஆண்ட மன்னர்களில்
பெயர்கள் எல்லாம்
சீனமொழி வாயிலாக
‘ உருமாறி ’ கிடைப்பதால்
அவர்களின் உண்மையான
பெயர்கள் தெரியவில்லை.
எல்லா மன்னர்களின்
பெயர்களும் பான் (FAN)
என்று முடிவதால்
இதை ‘வர்மன் ”
என்று முடிவுசெய்துள்ளனர் .
ஏனெனில்
இடையிடையேயும் ஆறாம்
நூற்றாண்டுகளுக்குப்
பின்னரும் மன்னர்களின்
பெயர்களுக்குப் பின்னால்
‘ வர்மன் ’ என்ற பெயர்
தெளிவாக உள்ளது . இதில்
வியப்பு என்னவென்றால்
தமிழ்நாட்டில் கிடைத்த
செப்புப் பட்டயங்களிலும்
பாண்டியன் வம்சாவளியில்
ஸ்ரீமாறன் , வர்மன் என்ற
இரண்டு பெயர்களும்
கிடைக்கின்றன .
இந்தோனேசியாவுக்குச்
சொந்தமான
போர்னியோ தீவின் அடர்ந்த
காட்டிற்குள் மூலவர்மன்
என்ற மன்னனின்
சமஸ்கிருதக்
கல்வெட்டு கிடைத்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில்
800 க்கும் அதிகமான
சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள்
கிடைத்துள்ளன .
வியட்னாமியக்
கல்வெட்டு ‘பாண்டிய’ என்ற
பெயரைக் குறிப்பிடவில்லை .
ஆயினும் ஸ்ரீமாறன் ( ஸ்ரீ =
திரு ) என்பவன்
பாண்டியனே என்பதற்குப் பல
சான்றுகள் உள்ளன:-
( 1 ) இடைச்சங்கத்தின்
கடைசி மன்னன் பெயர்
திருமாறன் . அவன் அரசாண்ட
காலத்தில் கடல்
பொங்கி தென்
மதுரையை அழித்ததால்
அவன் தற்போதைய
மதுரையில்
கடைச்சங்கத்தை அமைத்ததாக
உரையாசிரியர்கள்
எழுதி வைத்துள்ளனர். இந்த
மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில்
ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.
( 2 ) வேள்விக்குடி செப்பேடும்
திருமாறன் என்ற மன்னனைக்
குறிப்பிடுகிறது .
அதே செப்பேட்டில்
மாறவர்மன்
( அவனி சூளாமணி ),
ஸ்ரீமாறவர்மன் ( அரிகேசரி)
ஸ்ரீ மாறன் (ராஜசிம்மன் )
என்ற பெயர்களையும்
காணலாம் . பாண்டிய வம்ச
மன்னர்கள் மாறன், சடையன்
என்ற
பெயர்களை மாறி மாறிப்
பயன்படுத்துவர் .
( 3 )
தொல்காப்பியத்தை அரங்கேற்றிய
இடைச்சங்க கால மன்னன்
நிலந்தரு திருவில் பாண்டியன்
என்று பனம்பாரனாரின்
பாயிரம் கூறுகிறது. பல
நாடுகளை வென்று தந்ததால்
“ நிலந்தரு ”
“ திரு பாண்டியன் ” ( ஸ்ரீமாறன் )
என்று பெயர்
ஏற்பட்டிருக்கலாம் .
( 4 ) சங்க இலக்கியப்
பாடல்களிலும்
அடிக்குறிப்பிலும்
குறைந்தது பத்து முறை ‘மாறன் ’
என்ற மன்னர்கள்
குறிப்பிடப்படுகின்றனர் .
இவர்களில்
குறிப்பிடத்தக்கவர்
இடைச்சங்ககால மன்னன்
முடித்திருமாறன் .
நற்றிணை 105 , 228 ஆகிய 2
பாடல்களை இயற்றியவன் .
( 5 )
தென்கிழக்கு ஆசியா முழுவதும்
அகத்திய முனிவரின்
சிலைகள் கிடைக்கின்றன.
அகத்தியர் “ கடலைக் குடித்த”
கதைகளும்
பிரபலமாகியிருக்கின்றன .
முதல்முதலில் கடலைக்
கடந்து ஆட்சி நிறுவியதை “கடலைக்
குடித்தார் ”
என்று பெருமையாக
உயர்வு நவிற்சியாக
குறிப்பிடுகின்றனர் .
வேள்விக்குடி செப்பேடு இந்தக்
கதைகளைக்
குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின்
“ குல குரு” என்றும்
கூறுகிறது .
( 6 ) இந்திய
இலக்கியகர்த்தாக்களின்
முக்கிய இடத்தை வகிக்கும்
மாபெரும் வடமொழிக்
கவிஞன் காளிதாசன்,
பாண்டியர்களையும்
அகத்தியரையும்
தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான்
( ரகு வம்சம் 6 – 61)
ஆசியாவில் 800 க்கும்
அதிகமான சமஸ்கிருதக்
கல்வெட்டுகள்
கிடைத்துள்ளன .
( 7 ) புறநானூற்றுப் பாடல்
( புறம் 182 ) பாடிய
ஒரு பாண்டிய மன்னன் பெயர்
“ கடலுள் மாய்ந்த”
இளம்பெருவழுதி . இவன்
வெளிநாடு செல்லும்போதோ,
வெளிநாடுகளை வென்று திரும்பும்
போதோ கடலில்
மூழ்கி இறந்திருக்கலாம் .
( 8 ) டாலமி , பெரிப்ளூஸ் என்ற
யாத்ரீகர்கள் கி.பி . முதல்
இரண்டு நூற்றாண்டுகளில்
நடந்த தென் இந்திய கடல்
வாணிபத்தைக்
குறிப்பிடுகின்றனர் .
( 9 ) தென் இந்தியாவை கி.மு.
இரண்டாம்
நூற்றாண்டு முதல் 400
ஆண்டுகளுக்கு ஆண்ட
சாத்வா இன மன்னர்கள் தமிழ்
மொழியில் வெளியிட்ட
நாணயங்களில் ‘கப்பல்’ படம்
உள்ளது .
( 10) தமிழ் நாடு முழுவதும்
கிடைக்கும் ரோமானிய
நாணயங்களும் தமிழர்களின்
கடல்
வாணிபத்தை உறுதி செய்கின்றன.
( 11) ‘மிலிந்த பன்ன’ என்ற
கி. மு. இரண்டாம்
நூற்றாண்டு பெளத்த மத
நூல் வங்கம் ,
சோழமண்டலம் , குஜராத்,
சீனம் ,
எகிப்து இடையே நிலவிய
வணிகத்தைக்
குறிப்பிடுகிறது .
( 12) மலேசியாவில் தமிழ்
கல்வெட்டு இருக்கிறது.
தாய்லாந்தில்
தமிழ்நாட்டு நாணயங்கள்
கிடைத்துள்ளன .
மேற்கூரிய சான்றுகள்
அனைத்தும் தமிழர்களின்
கடல் பயண வன்மையைக்
காட்டுகின்றன. அகஸ்டஸ்
சீசரின் அவையில் பாண்டிய
மன்னனின் தூதர்
இருந்ததையும் ரோமானிய
ஆசிரியர்கள்
குறிப்பிடுகின்றன .
ரோம் (இத்தாலி )
வரை சென்ற தமிழனுக்கு,
தென்கிழக்கு ஆசியாவிலுள்ள
வியட்னாமுக்குச்
செல்வது எளிது தானே !
Reference :
( 1 ) R .C . MAJUMDAR-
CHAMPA : HISTORY &
CULTURE OF AN INDIAN
COLONIAL KINGDOM IN
THE FAR EAST GIAN
PUBLISHING HOUSE DELHI –
REPRINT 1985.

வளரி

வளரி என்பது ஓடித்
தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய
தமிழரால் பயன்படுத்தப்பட்ட
ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம்
ஆகும். இதற்கு ஒத்த
ஆயுதங்களை வளைதடி, பாறாவளை,
சுழல்படை, படைவட்டம் என்றும்
அழைத்தனர்.
அமைப்பு
இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால்
உபயோகப்படுத்தப்பட்ட பூமராங்
வகை ஆயுத
வடிவமைப்பை உடையது. பூமராங்
எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும்.
ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட
வளரி அப்படியல்ல. வளரிகள்
பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன.
சாதாரணமாக வளைந்த
இறக்கை வடிவான மரத்தால்
செய்யப்பட்ட துண்டாகும். சில
வளரிகளின் விளிம்புகள் பட்டையாக
கூராக இருக்கும்.
ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க,
மரத்தால் ஆன வளரியைப்
பயன்படுத்துவது உண்டு.
கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி,
விசிறி, வீசி விட வேண்டும்.
சிலவற்றை இரும்பிலும்கூட
செய்வார்கள். பட்டையான கூரான
வளரியை வீசினால்
சுழன்று கொண்டே சென்று,
வெட்டுப்படக்கூடிய இலக்காக
இருந்தால் சீவித்தள்ளி விடும்.
எறியப்படும் முறைகள்
வளரிகள் குறிவைத்து எறிவதற்குப்
பல முறைகள் உண்டு. பொதுவாக
சுழற்றப்பட்டே எறியப்படும்.
இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக
அல்லது கிடையாக சுழலும்.
அல்லது சுழலாமலே செல்லக்கூடும்.
அதன் சுழற்சி வேகத்திலும்
தங்கியுள்ளது.
உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின்
கழுத்தைக் குறிவைத்து எறியப்படும்.
பொதுவாக
கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.
பயன்
வளரி மான் வேட்டையின்
போது பயன்படுத்தப்படும்
ஒரு ஆயுதமாகும். பண்டைய போர்
வகைகளிலும்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கள்ளர் நாடு,
சிவகெங்கை - தற்போதைய
பட்டுக்கோட்டை, மதுரை,
இராமநாதபுரம் ஆகிய
மாவட்டங்களின் சில பகுதிகளில்
பாவிக்கப்பட்டிருக்கின்றது.
வளரி எறிதல் போட்டிகளும்
நடைபெற்றிருக்கின்றன.
சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த
மருது சகோதரர்கள், மற்றும்
அவர்களது படைத்தளபதிகளான
வைத்திலிங்க தொண்டைமான்
ஆகியோர் வளரியையே ஆயுதமாகப்
பாவித்து ஆங்கிலேயர்களுடன்
சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் வளரி
"வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள
கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும்
கள்வர், எயினர் (மறவர்) போன்ற
குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக
வாழ்ந்து வந்துள்ளனர். சங்க
இலக்கியமாகிய புறநானூறு 347ஆம்
பாடலில் மணம் நாறு மார்பின்
மறப்போர் அகுதை குண்டு நீர்
வரைப்பின் கூடல் என்ற
ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற
குறுநிலத் தலைவன் ஒருவன்
பொன்புனை திகிரி (உலோகத்தாலான
சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண
நேரத்துக்குள்,
கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும்
வண்ணம், கண் பார்வைக்குத்
தோன்றி மறைந்து விடக்கூடிய
வகையில் விரைந்து செலுத்தவல்ல
ஒரு வீரன் என்று புறநானூறு 233-
ஆம் பாடலில் (அகுதைக் கண்
தோன்றிய பொன்புனை திகிரியிற்
பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது.
மறவர்களின் முதன்மையான
போர்க்கருவி என்று இலக்கியங்களும்
பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற
வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில்
குறிப்பிடப்படுகிறது."
ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட
மருது பண்டியர், வளரி வீசுவதில்
வல்லவராய் விளங்கினார்.
சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட
கர்னல் வெல்ஸ் என்பவர்
எனது ராணுவ நினைவுகள் என்னும்
நூலில், ""சின்ன மருது தான்
எனக்கு ஈட்டி எறியவும்,
வளரி வீசவும் கற்றுக் கொடுத்தான்.
வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில்
தமிழகத்தில் மட்டும் தான்
பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும்,
திறமையுமிக்க ஒருவரால் 300
அடி தூரம் குறி தவறாமல் வீச
முடிகிறது'' என்று கூறியுள்ளார்.
இந்த ஆயுதம் தமிழருக்கும்
ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும்
பொதுவானது.
தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய
பழங்குடியினர்,
அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும்,
அவர்களின் மொழி, கலாசாரம்,
பண்பாடு உருவ அமைப்பு முழுவதும்
தமிழரோடு ஒப்புமை உடையது எனவும்
கூறியுள்ளனர்.
தமிழர்களின் வளரியைப்
பற்றி அக்காலத்தில்
புதுக்கோட்டை திவானாய்
விளங்கியவர்
தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது,
வளரியின் அமைப்பு பற்றியும்
அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும்
படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
""வளரி என்பது இழைக்கப்பட்ட
மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம்.
சில சமயங்களில் இரும்பினாலும்
செய்யப்படுவதுண்டு.
பிறை வடிவிலான அதன்
ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக்
கனமாய் இருக்கும். (அரிவாள்
அல்லது கத்தியைப் போல் அல்லாமல்)
இதன்
வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப்
பட்டிருக்கும். இதை எறிவதில்
பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான
முனையைக் கையில் பிடித்து, வேகம்
கொடுப்பதற்காகச்
சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன்
இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.
ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட
விலங்கையோ, ஏன்
மனிதரையோ கூட வீழ்த்தும்
படி வளரியால் எறியும்
வல்லமை படைத்தவர்கள் உண்டெனத்
தெரிகிறது. ஆனால், தற்சமயம்
அப்படிப்பட்டவர்கள்
இல்லை என்றே கூறும்படியான
நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம்
முயல்,
குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத்
தெரிகிறது. இருந்த போதிலும்,
வளரியின்
வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான்
கூற வேண்டும்''.
பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின்
வடகரையில் இருந்து எறிந்த வளரி,
அதன் மைய மண்டபத்தைத்
தீண்டாமல் அதையும்
தாண்டி எதிர்கரையில் உள்ள
முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்;
அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக்
கொப்புக்களைக் கத்தரித்து, அதைக்
கடந்து வீழ்ந்ததாம். இது இக்கால
ஒலிம்பிக் சாதனையை விட அதிக
தூரமாகும் என ஆய்வாளர்
மீ.மனோகரன் "மருதுபாண்டிய
மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன்
கூறுகிறார்.

நைல்நதி

கடல் கொண்ட குமரி(லெமுரியா)க்
கண்டத்திலிருந்து பல
பகுதிகளுக்கும் தமிழர்கள்
இடப்பெயர்வு மேற்கொண்டு
அங்கேயே அவர்கள்
வாழ்விடங்களை அமத்தனர்.
அவர்கள் தான் பிந்தைய நாட்களில்
தனி இனமாக உருவெடுத்தனர்
அவர்களில் ஒரு பிரிவினர்தான்
எகிப்தியர்.
இதையெல்லாம் ஆயிரமாயிரம்
வரலாற்றாய்வுகள் நிரூபிக்கின்றன.
"குமரியக் கிழக்கு மலையாளப்
பாண்டியப்
பண்டு நாட்டிலிருந்து செங்கடல்
வந்து நைல் நதிக்கரையில்
குடியேறிய (தமிழர்களே)
மக்களே எகிப்தியர் என்று புராதன
கிழக்கு வரலாறு (The Ancient
History Of The Near East) பக்கம் 92ல்
தனது நூலில் ஆர்.ஹெச் ஹால்
என்பவர் கூறுகிறார்.
அவரே, திராவிட மக்களும்
எகிப்தியரும் ஒரே இனத்தைச்
சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார்.
இதே கருத்தினை Outline Of The
History By H.G.WELLS , Man's
Place In Nature And Other
Eassayas p- 233- Thomas Huxl
மற்றும் ரிக்வேத இந்தியா என்ற
தமது நூலில் பண்டிதர் சவுரிராயர்,
மற்றும் மெகஸ்தனிஸ் ஆகியோரும்
குறிப்பிடுகிறார்கள்"(1)
நமது தமிழகத்திலிருந்து எகிப்து
சென்ற மக்கள் (தமிழர்கள்)
அரசாண்டுமுள்ளனர்.
"கி.மு. 4500 இல்
எகிப்து நாட்டை மீனன் என்ற தமிழன்
ஆண்டான். இதுப்பற்றிய அக்கால
குருவான மனேதா என்பவர் மீனன்
முதல் 300 அரசர் வரலாற்றை அவர்
அங்கு எழுதிவைத்தார்.
இ.மு. 4000இல் பரவன் என்ற தமிழ்
மன்னன் எகிப்து அரசனாக
விளங்கினான்...." (2)
எகிப்து நாட்டிற்கு, இடம் பெயர்ந்த
நம்மவர்கள் ஆயிரமாயிரம்
ஆண்டுகள் ஆனாலும் தங்கள்
இனத்தையும் தாய் நாட்டின்
உறவையும் மறந்ததில்லை!
இங்குள்ள தமிழரும் எகிப்திய
(தமிழரும்) மக்களும்
ஒருவருக்கொருவர் கொடுக்கல்
வாங்கல்களில், வணிகத்தில்
தாராளமாகவே ஈடுபட்டனர்;
திருமண உறவையும்
மேற்கொண்டிருந்தனர்.
"தமிழகத்திலிருந்து எகிப்திற்கு
வாசனை கோந்துகள், புதிய
வாசனை மரங்கள்,
யானைத்தந்தத்தில்
பொன்னெழுத்துக்களால் செய்த
பொருட்கள், கேசித்து என்ற மரம்,
அகிற்கட்டை,தூய
சாம்ராணி,கண்மை, ஒலி பனம்,
நாய்தலையுள்ள குரங்குகள்,நீண்ட
வால் குரங்கு,வேடை நாய்கள்,
புலித்தோல் உள்ளிட்ட பல
பொருட்களும்
ஏற்றுமதி செய்யப்பட்டன.
சந்தனக்கட்டை, தந்தம், குரங்கு,
மயில் போன்றவற்றைக் குறிக்க
எகிப்திலும் தமிழ்
மொழியிலேயே அழைத்தனர்
என்று ஒப்பிலக்கணம் எழுதிய
கால்டுவெல் குறிப்பிடுகிறார். (3)
இங்கு நடக்கும் அரசியல்
பூசல்களால் அவதியுற்ற தமிழர்கள்
சில வேலைகளில் குழு குழுவாக
கப்பல்களில்
எகிப்து சென்று தஞ்சமடைந்தனர்.
அதே போல் எகிப்தில் ஏற்படும்
அரசியல் நெருக்கடியால் துன்புறும்
மக்களும் தாய்த் தமிழ் தேசம்
வந்து வசிக்கத் தொடங்கினர்.
இந்த இடப்பெயர்வுகள்
இப்போதிலிருந்து கடந்த ஆயிரம்
ஆண்டுகளில்தான் அதிகம்
நடந்துள்ளது, என
வரலாற்று ஆய்வாளர்கள்
கருதுகிறார்கள்.

Tuesday 15 May 2012

தமிழ் மன்றம் இணையத்தில் இருந்து

எதியோபிய நாகரிகம் சூடான்-
எதியோபியாவின் வட பகுதியில்
நைல் ஆற்றுக் கரை ஓரம்
தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம்
எகிபது நாகரிகத்தினும்
பழமை மிக்கது எனறும்
உண்மையில் எதியோபிய
நாகரிகரே எகிபது நாகரிகத்தையும்
அமைத்ததாக சொல்லப்படுகிறது.
ஆயினும் மேலையர்
எகிபதையே பெருமைபட
பேசுகின்றனர். உலகில்
பலருக்கு எதியோபியாவில் பழம்
நாகரிகம் இருந்ததே அறியாமல்
உள்ளனர். எதியோபிய நாகரிகம்
காலத்தால் எகிபதினும் முற்பட்டது,
இதாவது, 9,500 ஆண்டுகள்
பழமையுடையதாய்
சொல்லப்படுகிறது.
இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த
எழுத்துகள் மண்டி எனும் ஊரில்
கண்டெடுக்கப் பட்டன.
இதற்கு பிற்பட்டதே எகிபதின்
எழுத்துகள். நாகரிகத்தில்
எதியோபியா எகிபதுக்கு சற்றும்
குறைவில்லாதது..
எதியோபிய நாகரிக மன்னர்
பெயர்களைக் காணும்
போது இவர்களுடைய முன்னோர்
தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற
கருத்தை தோற்றுவிக்கிறது.
இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர்
பெயர்கள் இடம்பெறுவது சேரம்
ஆட்சி ஒர்
காலத்தே இங்கு வழங்கி இருக்க
வேண்டும்
எனபதை உணர்த்துகிறது.
தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக
மன்னர்
பெயர்களை சிந்துவெளி முத்திரைப்
பெயர்களோடும், சங்க இலக்கியப்
பெயர்களோடும், பிற நாகரிக
மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும்
ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை.
இந் நாகரிக மன்னர் பெயர்
ஒப்பீடு இந் நாகரிகங்களின் மக்கள்
ஒரு குலைக் காய் போல் ஒரு மூல
நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல்
வேண்டும், அதோடு அம்மூல தாய்
நாகரிகம் தமிழர்
உடையது என்று விளக்குவதே
இக்கட்டுரையின் நோக்கம்.
இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப
6.500 ஆண்டுகள் அளவில்
தோன்றின அதற்கு முன் எழுத்துகள்
கிடையா. தமிழின் காலம்
கல்வெட்டு, சங்க இலக்கியச்
சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள்
பழமையதாக சொல்லப்படுகின்றது.
எதியோபிய மன்னர்தம் தமிழ்ப்
பெயர்கள் 6,500 ஆண்டுகள்
பழமை மிக்கதால் தமிழின்
பழமையை 6,500
ஆண்டுகளுக்கு முன் போடலாம்,
அதோடு எதியோபியாவில் கிடைத்த
மட்பாண் டங்கள் ஆதிச்சநல்லூர்
முதுமக்கள் தாழிகளை முழுதும்
ஒத்துள்ளதால் தமிழும் தமிழர்
நாகரிகமும் 9.500 ஆண்டுகள்
பழமைமிக்க எதியோபிய
நாகரிகத்தினும் மேலாக, இதாவது,
10,000 ஆண்டுகள் தொன்மையதாய்
கொள்ளலாம்.
இப்பெயராய்வு எதியோபிய மன்னர்
Tafari Mokonnen 1922 இல்
வெளியிட்ட மன்னர் பெயர்
பட்டியலை அடிப்படையாகக்
கொள்கிறது.
ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21
பேர் ஆண்டுள்ளனர். அதில்
முதலாமவர்
O r i or aram 4530-4470BC – தமிழில்
ஓரி என்பது செப்பமான் வடிவம்.
கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக
சங்க இலக்கியத்தில்
குறிக்கப்படுபவன் வல் வில்
ஓரி என்பான். எனவே ஓரி எனம்
பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.
Gariak 4470-4404 BC தமிழில்
காரி அக் > காரி அக்கன் என
செப்பமாக படிக்கலாம். சங்க
இலக்கியத்தில்
கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக
குறிக்கப்படுபவன் மலையமான்
திருமுடிக் காரி என்பான். இப்பெயர்
கொரிய நாகரிகத்தில் Dangun
வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk
2182-2137 BC என இடப்பட்டுள்ளது.
தமிழில் காரி அக் > காரி அக்கன் என
செப்பமாக படிக்கலாம். அக்கன் –
வடலூர் வட்ட மருங்கூரில்
கிடைத்த பிராமி எழுத்து பொறித்த
பானைஓட்டில் அதியகன்
எனறு உள்ளது. இதை அத்தி +
அக்கன் என பிரித்து படிக்க
வேண்டும். அக் பிற நாகரிகங்களில்
அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும்
வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற
வழக்குள்ளது. எகிபது நாகரிகத்தில்
4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில்
காரி என பெயர் கொண்டோர் பலர்.
Elaryan 4404-3836 BC - தமிழில் எல்
அரையன் எனபது செப்பமான்
வடிவம். எல் – ஒளி, சிவப்பு ஆகிய
பொருள்களை கொண்டது. எல்லன்,
எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும்
வழங்குகின்றன. மேலை நாடுகளில்
எல் வழங்குகிறது. அரயன் – அரசன்
எனும் பொருள் உடையது. இப்பெயர்
தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில்
ஆளப்பட்டுள்ளது.
Eylouka 3836 – 3932 BC (QUEEN) -
தமிழில் அரசி எயில் அக்கா > எழில்
அககாள் என செப்பமாக படிக்கலாம்.
இது ஒரு தூய தமிழ்ச் சொல்.
பண்டைத் தமிழகத்தில் பெண் அரசுப்
பொறுப்பேற்றதற்கான
சான்று இல்லா நிலையில்
எதியோபியாவில் பெண்
ஆள்வதற்கு தடை இருந்ததில்லை
என்பதற்கு இவள் சான்று.
Kam 2713 – 2635 BC – தமிழில் காம்
> காமன் என செப்பமாக படிக்கலாம்.
காமன் ஒரு தூய தமிழ்ச் சொல்
சமஸ்கிருதம் அல்ல.இங்கு அன்
ஈறு இல்லாமல் உள்ளது.
சிந்துவெளி முத்திரைகளில் காமன்
என்ற பெயர் வழங்குகின்றது. 63
நாயன்மாருள் ஒருவர் கலிக் காம
நாயனார். அதில் காமன்
இடம்பெற்றுள்ளது. சப்பான்
நாகரிகத்தல் காம என்ற பெயர்
வழங்குகிறது.
Elektron 2515 – 2485 BC – தமிழில்
எல்லி கீற்றன் என்பது செப்பமான
வழக்கு. எல் இகர ஈறு பெற்றுள்ளது.
சீன நாகரிகத்தில் Liao
ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu
Abaoji 907 -926 AD - தமிழில்
எல்லு அப்பய்ய தி >
எல்லு அப்பய்யன் தி என செப்பமாக
படிக்கலாம். இங்கு எல் உகர
ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் –
அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர்
கால அறிஞர். தி — சீனத்தில்
வேந்தன் என பொருள் தரும்.
Manturay 2180- 2145 BC – தமிழில்
மாந்தரை என்பது செப்ப வடிவம்.
ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன்
சேரர்க்குரிய பெயர். எதியோபிய
நாகரிகத்தில் சேரர்
ஆட்சி எற்பட்டதற்கான முதல்
சான்று. மாந்தர > மாஞ்சர என
மருவி நடு ஆப்பிரிக்கா வில்
கிளிமாஞ்சரோ என்ற மலைக்
காட்டிற்கு பெயராக வழங்குகிறது.
Azagan 2085 – 2055 BC – தமிழில்
அழகன் என்பது செப்பமான வடிவம்.
தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன்
ஈறும் இடம் பெற்றுள்ளன.
அழகப்பன், அன்பழகன் ஆகியன
இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.
Ramen Phate 2020-2000 BC -
தமிழில் இராமன்
வட்டி என்பது செப்பமான தமிழ்
வடிவம். இங்கு வகரம் பகரமாக
திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய
தமிழ்ச் சொல்.
வாலமீகி இராமாயணத்திற்கு
முன்பே சங்க இலக்கியங்களில்
பயின்று வருகிறது. எகிபது மன்னர்
பலர் இப்பெயர் கொண்டுள்ளனர்.
காட்டாக, Ramesses I 1295-1294 BC -
தமிழில் இராமி சே > இராமி சேயன்
என செப்பமாக படிக்கலாம். இராமன்
இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் –
சிந்து வெளி முத்திரைகளில்
பரவலாக அன் ஈறு பெற்றும்,
பெறாமல் சேய் எனறும், இன்னம்
குறுக்கமாக சே என்றும்
வழங்குகிறது.
Wan Una 2000 BC - தமிழில் வண்
உன்ன > வண்ணன் உன்னன் என
செப்பமாக படிக்கலாம். வண்ணன் –
சிந்து வெளி முத்திரைகளில்
வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில்
மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர்
பெயர் Liu Bang 206 -195 BC -
தமிழில் ஒளிய பண் > ஒளியன்
வண்ணன் என செப்பமாக
படிக்கலாம். வ- ப திரிபு. சீன
மொழியில் ன்>ங் என
மூக்கொலி பெறும். சிந்து வெளியில்
ஒளியன் என்ற பெயர்
அருகி வழங்குகிறது. உன்னன் –
தமிழக
சிந்து எழுத்து பானைஓடுகளில்
பொறிக்கப்பட்ட பெயர். இகர
ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும்.
இது உன்னி சேரநாட்டு வழக்கு.
எகிபது நாகரிகத்தில் 5 ஆம்
ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர்
Unas 2375 -2345 BC – தமிழில்
உன்னs > உன்னன் என செப்பமாக
படிக்கலாம்.
Piori 2000 – 1985 BC - தமிழில் பய்
ஓரி > வய் ஓரி > வய்யன் ஓரி என
செப்பமாக படிக்கலாம். வய் –
வெம்மை, வைதல் என்பதன் வேர்,
வய்யன் – சிந்து வெளியில்
வழங்குகிறது,
செங்கல்பட்டு அருகே வய்யா/
வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது.
இது சீன நாகரிகத்தில் Xi, Bi என
திரிந்து பேரளவில் வழங்குகிறது.
Kosi Yope (queen) 1871 – 1890 BC -
தமிழில் அரசி காதி யாப்பி >
காத்தி யாப்பி என செப்பமாக
படிக்கலாம். தகரம் சகர இன
ஒலியான ஸகரமாக திரிந்துள்ளது.
காத்தி – தமிழக ஊர்புறங்களில்
பெண் பெயராக வழங்குகிறது.ஆண்
பால் பெயரான காத்தன்
சிந்து வெளி முத்திரைகளில்
வழங்குகிறது, அங்கு ஒரு பெண்
பால் பெயர் கூட காணப்படவில்லை.
யாப்பி – இது ஒரு முது பழந்தமிழ்ச்
சொல். ஆண் பால் பெயர் யாப்பன்
என்பது.
Etiyopus I 1856 – 1800 BC - தமிழில்
எட்டி யாப்ப > எட்டி யாப்பன் என
செப்பமாக படிக்கலாம். எட்டி –
வணிகர்க்கு உயர்ந்தோன் எனும்
பொருளில் பட்டமாக அளிக்க பட்டது.
எட்டியப்பன் இன்றும் தமிழகத்தில்
வழங்குகிறது. யாப்பன் –
ஒரு பழந்தமிழ் பெயர். தென்
அமெரிக்க இன்கா நாகரிகத்தல்
ஒரு மன்னன் பெயர் . Pachacutec
Inca Yupanqui 1438 – 1471 AD .-
தமிழில் பச்சகுடி யாப்அங்கை >
பச்சைகுடி யாப்பன் அங்கை என
செப்பமாக படிக்கலாம். அஙகன்
அங்கு ஆகிய பெயர்கள்
சிந்து வெளி முத்திரையில்
வழங்குகின்றன. அங்கப்பன்,
அங்கையன் இன்றும் தமிழக்த்தில்
வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன்
நாகரிகங்களும் தமிழர்
நாகரிகங்களே.
Lakndun Nowarari . தமிழில் இள
கந்தன் நவ்வர்
அரி என்பது செப்பமான வடிவம். இள
– இளமைப் பொருள். சங்க
இலக்கியங்களில் இளங்குமணன்,
இளஞ் சேன்(ட்) சென்னி என
வழங்குகிறது. ஐரோப்பாவில்
படை நடத்திய Huna மன்னன்
அத்திளா > அத்தி+இள எனபான்.
சிந்துவெளி முத்திரையில் அத்திள
வழங்குகிறது. கந்தன் -
சிந்துவெளி முத்திரையில்
அருகி வழங்குகிறது. இகர
ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும்.
புகார் நகரின் அக ஊர்
ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம்.
நவ்வன் –
சிந்துவெளி முத்திரையிலும், தமிழக
பானைஓட்டு சிந்து எழுத்திலும்
காணப்படுகிறது. இங்கு அர்
ஈறு பெற்றுள்ளது. அரி >
அரியா இன்றும் தமிழகத்தில்
வழங்கும் பெயர். புதுச்சேரியின் ஓர்
ஊர் அரியான்குப்பம் >
அரியாங்குப்பம்.
Senuka I 1700 -1683 BC - தமிழில்
சேன் உக்க > சேனன் உக்கன் என
செப்பமாக படிக்கலாம். சேனன் –
சிந்து வெளிப் பெயர். இளஞ் சேன்(ட்)
சென்னியில் பயில்கின்றது. உக்கன் -
சிந்து வெளி முத்திரைப் பெயர் 5,300
ஆண்டு சிந்து மட் பாண்டத்தில்
உக்கங்கு என பொறிக்கப்பட்டுள்ளது.
Aktis Sanis 1531 BC - தமிழில்
அஃகுதி சாணி > அஃகுதை சாணன்
என செப்பமாக படிக்கலாம்.
அஃகுதை – சங்க இலக்கியத்தில்
குறிக்கப்படும் பெயர். சாணன் –
இகர ஈறு பெற்று சாணி ஆகியது.
யகர சகர திரிபில் யாணன் > சாணன்
ஆகும். யாணனும் சாணனும்
சிந்து முத்திரைப் பெயர்கள்.
சீனத்தில் Yang உண்டு.
Mandes 1531 – 1514 BC - தமிழில்
மாந்தி என்பது செப்பமான வடிவம்.
உகர ஈறு பெற்று மாந்து எனவும்,
ஐகாரம் பெற்று மாந்தை எனவும்
ஆகும். மாந்தரன் > மாந்து + அரன்
ஒரு சேரப் பெயர். மாந்தை சேரர்
நகரம்.
Amoy 1481 -1460 BC - தமிழல்
ஆமை > ஆமன் இதன் செப்பமான
வடிவம். யா > ஆ திரிபு, யானை –
ஆனை, யாந்தை – ஆந்தை போல்
யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார
ஈறு பெற்று ஆமை ஆனது.
குட்டாமன் – குட்டை+ஆமன்
கேரளத்தில் இன்றும் வழங்குகிறது.
முட்டத்து ஆமக் கண்ணியார் >
முடதாமக்கண்ணியார் பெண்
புலவர்.
இசுரேலின் யூதேய அரசன் பெயர்
Amon 642-640 BC .
Titon Satiyo 1256 – 1246 BC –
தமிழில் திட்டன் சாத்தைய > திட்டன்
சாத்தையன் என செப்பமாக
படிக்கலாம். திட்டன் – திட்டன் குடி >
திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ்
நாகரிக அரசியின் பெயர் Dido 814
BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958
AD. அரசிகளின் பெயர்கள்
கடுஒலி பெற்றுள்ளன. சாத்தன் +
அய்யன் ஒரு கூட்டுப் பெயர்.
சாத்தன் – சிந்து வெளி முத்திரைப்
பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும்
பெயர். கொரிய நாகரிக Danjun
வழிவந்த மன்னன் பெயர் sotae 1357
-1285 BC . சாத்தை > ஐகார
ஈறு பெற்றுள்ளது.
Sanuka 1231 – 1226 BC – தமிழில்
சாண் உக்க > சாணன் உக்கன் என
செப்பமாக படிக்கலாம். யகர சகர
திரிபில் யாணன் சாணன் என
திரிந்தது. சாணன் உக்கன்
சிந்து வெளிப் பெயர்கள். ஈரானின்
ஈலம் நாகரிக மன்னன் பெயர் .Ukku-
Tanish 2500 BC என்பது . பாபிலோன்
மன்னன் பெயர் Nabu Suma Ukin II
732 BC. சீன நாகரிகத்தில் Shang
ஆள்குடி மன்னன் கோவில் பெயர்
Tai Zang 1600 BC தமிழில் தாய் சாண்
என்பது. சீனத்தில் ன்>ங் என
மூக்கொலி பெறும்.
Wiyankihi I 1140 – 1131 BC - தமிழில்
வய்யங்கி > வய்யன்+ அங்கி என
செப்பமாக படிக்கலாம் . சங்க
இலக்கியத்தில் ஒரு மன்னன் பெயர்
வய் ஆவி என்பது.
சீன நாகரிகத்தில் shang
ஆள்குடியில் ஒரு மன்னனுடைய
இயற்பெயர் Bian 1600 BC.
அதே ஆள்குடியில்
இன்னொரு மன்னனுக்கு ஆட்சிப்
பெயர் Xiao xin 1300 – 1251 BC -
தமிழில் வய்ய வய்யன் என்பது.
சீனத்தில் வய்>Xi என்றும் Bi என்றும்
திரிந்துள்ளது.
Ramenkoperm 1057 -1043 BC -
தமிழில் இராமன் கோப்பெரும்
என்பது செப்பமான வடிவம்.
கோப்பெரும் பெண்டு சங்க
இலக்கியத்தில் குறிக்கப்படும் பெண்
பெயர். சோழன் ஒருவன்
கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான்.
Pino stem 1073 BC – தமிழில் பிண்ண
சேம் > விண்ணன் சேமன் என
செப்பமாக படிக்கலாம். வ – ப திரிபு.
விண்ணன் – சங்க இலக்கியத்தில்
விண்ணன் தாயன் என்ற பெயர்
இடம்பெறுகிறது. கொரிய
நாகரிகத்தில் Dangun வழிவந்த
மன்னன் பெயர் Wina 1610 – 1552 BC
தமிழில் விண்ண > விண்ணன்.
சேமன் - சிந்து முத்திரையயில்
வழங்கும் பெயர். ஏமன்
சகரமுன்மிகை(Prothesis)
பெற்று சேமன் ஆனது. விழுப்புரம்
அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர்
உள்ளது.
Hanyon I 957 -956 BC - தமிழில் கான்
யாண் > கானன் யாணன் என
செப்பமாக படிக்கலாம். இங்க ககரம்
ஹகரமாகியது.
சிந்து வெளி முத்திரைகளில் அன்
ஈறு பெறாமல் இவ்விரு பெயரும்
வழங்குகின்றன. சீனத்தின்
கிழக்கு Han குடியில் ஒரு மன்னன்
பெயர் Yan Kang 220 AD – தமிழில்
யாண் கான். ன்>ங் என
மூக்கொலி பெறும்.
Sera I (Tomai) 956 – 930 BC -
தமிழில் சேர (தாமை) > சேரன்
(தாமன்) என செப்பமாக படிக்கலாம்.
தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல்
ஈறு பெற்றும் வழங்கும். தாமல்
காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி.
சேரன் சேரர்க்கான குடிப்பெயர்.
பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர்
Tiglath Pileser 732 -729 BC - தமிழில்
திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன்
வில்லி சேரன் என செப்பமாக
படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன்
ஒரு புகழ் மிக்க சேர மன்னன். சேரர்
வில்லவர் எனப்பட்டதுடன் அவர்
கொடிச் சின்னமும் வில். இப்பெயர்
சேரர் பாபிலோனையும்
ஆண்டதற்கு ஒரு சான்று.
Nicauta Kandae(queen) 740 – 730
BC - தமிழில் அரசி நய் காத்த
கந்தை எனபது செப்பமான் வடிவம்.
நய்யன் காத்தன் கந்தன்
சிந்துவெளி முத்திரைகளில்
பயில்வுறுகிறது. கந்தை பெண்
பாலை தெளிவாக
குறித்து வந்துள்ளது.
Erda Amen Awseya 681 – 675 BC -
தமிழில் எருத ஆமன் அவ் சேய >
எருதன் ஆமன் அவ்வன் சேயன் என
செப்பமாக படிக்கலாம். எருதன்-
எருதின் வலிமையை ஆணின்
வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர்.
காளை என்ற பெயர் இதற்கு சான்று.
சீனத்தின் தெற்கு Nan Liang அரசின்
ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 –
414 AD – தமிழில் தூவா எருதன் >
தூவான் எருதன் என செப்பமாக
படிக்கலாம். தூவாக்குடி தமிழக
ஊர். சேயன் – கொரிய நாகரிகத்தில்
Gija வழிவந்த மன்னன் பெயர் Seon
hye 925 -898 BC தமிழில் சேயன்
கயி என்பது செப்பமான வடிவம்.
கயி சிந்து வெளியில் காஇ என
பயில்வுற்றுள்ளது. அவ்வன் –
தேனி வட்டம்
புலிமான்கோம்பையில் கிட்டிய
நடு கல் பிராமி கல்வெட்டில் வேள்
ஊர் அவ்வன் பதவன்
என்று பொறிக்கப்பட்டு உள்ளது.
Gasiyo Eskikatir - தமிழில் காத்தய்ய
இசக்கி கதிர் > காத்தய்யன்
இசக்கி கதிர் என செப்பமாக
படிக்கலாம். ககரம்
கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர
இன ஒலி ஸகரமாக தரிந்தது.
காத்தவராயன் இன்றும் வழங்கும்
பெயர். இசக்கியம்மன்,
இசக்கிமுத்து ஆகிய பெயர்கள்
தமிழகத்தில் வழங்குகின்றன.
பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர்
Ishki bal 1732 BC - தமிழில்
இசக்கி பால் > இயக்கி வால் என
செப்பமாக படிக்கலாம். வால் -
ஒளிரும் வெண்மை எனப் பொருள்,
வ>ப திரிபால் பால் என வழங்கும்.
பால் – வெண்மைப் கருத்து வேர்.
கதிர்- கதிரேசன் என தமிழகத்தில்
வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல்
ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte
1740 BC – தமிழில் கதிர் நக்கந்தி >
கதிர் நக்கன் கந்தி என செப்பமாக
படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப்
பெயர். கந்தன் > கந்தி ஆகும்.
Tomadyan Piyankhi III 671 – 659 BC
- தமிழில் தாம் அதியன் பய்யங்கி >
தாமன் அதியன் வய்யங்கி என
செப்பமாக படிக்கலாம். அதியன்
சேரக் கிளை மரபினரான
அதியமான்கள் குடிப்பெயர்.
Elalion Taake 402 -392 BC - தமிழில்
எல்லாளியன்
தக்கி என்பது செப்பமான வடிவம்.
எல்லாளன் என்ற தமிழ் மன்னன்
ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன்.
சீனத்தின் Tiefu பழங்குடி வேள்
பெயர் Liu Eloulou 356 -358 BC -
தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன்
எல்லாளன் என செப்பமாக
படிக்கலாம். ஒளியன்
சிந்து முத்திரைப் பெயர். திரை நகர
போனீசிய மன்னன் பெயர் Elulaios
729- 694 BC - தமிழில் எல்லளைய >
எல்லாளியன் என செப்பமாக
படிக்கலாம். தக்கை – தக்கி, தக்கு,
தக்கன் என்றும் வழங்கும்.
கோவை சூலூரில் கட்டிய
சிந்து எழுத்து பொறித்த மட்கலனில்
தக்க இன்னன் என பெயர்
குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய
வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura
1168 – 1180 AD – தக்க குர > தக்கன்
குரவன் என செப்பமாக படிக்கலாம்.
Atserk Amen III 382 BC - தமிழில்
ஆட் செருக் ஆமன் >
ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக
படிக்கலாம். ஆடு – வெற்றி,
செருக்கு — பெருமிதம்.
ஆடு செருக்கு ஆமன் எனறால்
வெற்றிச் செருக்கள்ள ஆமன் என
பொருள். இது கடல் பிறகோட்டிய
செங்குட்டுவன், சித்திர
மாடத்து துஞ்சிய பாண்டியன்
என்பது போல வினைச்
சிறப்பு சுட்டிய பெயர்.
Kolas 295 – 285 BC - தமிழில் காள>
காளன்என செப்பமாக படிக்கலாம்.
இது சிந்துவெளி முத்திரையில்
காணப்படும் பெயர். தமிழகத்தில்
இன்றும் வழங்குகிறது. காளி இதன்
பெண் பால் பெயர்.
நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன்
பெயர் அலி காளன் என்பது.
Stiyo 269 – 255 BC - தமிழில் திய்ய >
திய்யன் என செப்பமாக படிக்கலாம்.
தேனி வட்டம்
புலிமான்கோம்பை என்ற ஊரில்
பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர்
பொறித்த பிராமி நடுகல்
கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற
கேரள சாதிப் பெயர் மிக பின்னர்
ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில்
ஒரு மன்னன் பெயர் Deun gol 874 –
849 BC தமிழில் திய்யன் கோல் என
செப்பமாக உள்ளது. தகர இனக்
கடுஒலி பெற்றுள்ளது. கோல் –
கோலப்பன் இன்றும் வழங்கும்
பெயர்.
Sanay 99 BC தமிழில் சாணை என
செப்பமான வடிவம் பெற்றுள்ளது.
ஐகார ஈறு பெற்றுள்ளது. சாணன் –
காண்க www.yatumayinan.com.
Bawawl 70 – 60 BC தமிழில் பவ்வல் >
வவ்வல் என செப்பமாக படிக்கலாம்.
அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும்.
சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன்
பெயர் Helian Bobo 407 – 425 AD -
தமிழில் கிளியன் பப்ப > கிளியன்
வவ்வன் என செப்பமாக படிக்கலாம்.
வகரம் பகர கடுஒலியாக
திரிந்துள்ளது. இவன் மரபினர்
எல்லாரும் கிளியன் பட்டம்
தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர்
கிள்ளி எனப்பட்டனர்.
Barawas 60 – 50 BC – தமிழில்
பரவன் என செப்பமாக படிக்கலாம்.
பகரம் கடுஒலி பெற்றுள்ளது.
தமிழில் பரவன் மீனவரை குறிக்கும்.
கடல் பரவை எனப்படும்.
Serada 105 -121 AD தமிழில் சேர்
ஆத > சேரன் ஆதன் என செப்பமாக
படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன்
என்ற பெயர் கொண்டிருந்தனர்.
காட்டாக, இமய வரம்பன் நெடுஞ்
சேரல் ஆதன்.
Azegan Malbagad 200 – 207 AD -
தமிழில் அழகன் மால் பகடு என
செப்பமாக படிக்கலாம். மால் —
கருமைக் கருத்து, பகடு – எருமை,
ஆண் எருமையின்
வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை
சூட்டி இருக்கலாம்.
கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப்
பெயர்கள் ஒழிந்தன.
ஆங்காங்கே கலப்பு பெயராக
Tseyon / Tsion - திசையன் போன்ற
பெயர்கள் வழக்கூன்றின.
தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற
நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும்,
வகரம் பகரமாயும், தகரம்
சகரமாயும் திரிந்துள்ளன.
அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல
எழுத்தையே நாட வேண்டும்.
மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும்,
கிழகக்கு நாகரிக மன்னர்
பெயர்களும் தமிழாய்
இருப்பது இடைப்பட்ட
சிந்து நாகரிகமும் தமிழர்
நாகரிகமே என்பதை இது வரை
மறுத்து வந்தவர்களை
நம்பிக்கைப்படுத்த உதவும்.
எதியோபிய மன்னர் பெயர்கள்
தமிழல்ல என மறுப்போர் சங்க
இலக்கியஙகளில்
கற்றத்துறைபோகிய தமிழ்
அறிஞர்களை உசாவ
வேண்டுகிறேன். அதோடு Indus
Script Dravidian, 1995 என்ற
நூலை மேற்கோளாக
கொள்ளும்படி வேண்டுகறேன்.
மிகப் பலர் எண்ணுவது போல்
மூலதாய் நாகரிகமான தமிழர்
நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ,
சுமேரியாவோ,
சிந்து வெளியோ அல்லது கிழக்கு
நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ்
இலக்கியங்கள் தமிழர்
தாயகத்தை தென்புலம் என்கின்றன.
அயினும் அதற்கு தொல்லியல்
சான்று ஏதும் இல்லை.
இது தொடர்பாக
தமிழ்நாடு தொல்லியல்
துறை அடிக்கடல்
ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக
தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள்
வரும் என எதிர் பாரக்கலாம்.
இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய
களமாக
ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ்
நாகரிகத்தின் எல்லையும், காலமும்
விரிந்து இருப்பதை நிறுவ இயலும்.
- சேசாத்திரி.

நாவலன் தீவு

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த
முறை உங்களை 20,000
வருடங்களுக்கு முந்தைய கடலில்
மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச்
செல்லவிருக்கிறேன், என்னுடன்
சேர்ந்து பயணிக்க உங்களின்
பொன்னான 5
நிமிடங்களை ஒதுக்குங்கள்.
இங்கு தான் உலகின் முதல் மனிதன்
பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள்
தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம்
மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான்
நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம்
தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும்
பல வரலாற்று அதிசயங்கள்
நிகழ்ந்துள்ளது. ஆம் இது தான்
"நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "
குமரிக்கண்டம். கடலுக்கடியில்
இன்று அமைதியாக
உறங்கிக்கிகொண்டிருக்கின்றது.
இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக
இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ்க்
கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக
உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா,
இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு,
சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த
ஒரு பிரம்மாண்டமான இடம் தான்
"குமரிக்கண்டம்".
ஏழு தெங்கநாடு,ஏழு மதுரைநாடு,ஏழுமு
ன்பலைநாடு,ஏழு பின்பலைநாடு,
ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரை நாடு,
ஏழு குரும்பனை நாடு என
இங்கு நாற்பத்தியொன்பது நாடுகள்
இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற
இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.
குமரிக்கொடு, மணிமலை என
இரண்டு மலைகள் இருந்துள்ளது.
தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என
பிரம்மாண்டமான மூன்று நகரங்கள்
இருந்தன.
உலகின் தொன்மையான நாகரீகம்
என்று அழைக்கப்படும் சுமரியன்
நாகரீகம் வெறும் நான்காயிரம்
வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரரின் "இறையனார் அகப்பொருள்"
என்ற நூலில் மூன்று தமிழ்ச்
சங்கங்கள் 9990 வருடங்கள்
தொடர்து நடைபெற்றதாக
கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம்
இந்த கடலடியில் உள்ள " தென்
மதுரையில் " கி.மு 4440இல்
4449புலவர்கள்களுடன், சிவன்,
முருகர், அகஸ்தியருடன்
39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல்,
முதுநாரை, முடுகுருக்கு,
கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய
நூல்களை இயற்றப்பட்டது .இதில்
அனைத்துமே அழிந்து விட்டது.
இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்"
நகரத்தில் கி.மு 3700இல்
3700புலவர்கள்களுடன் "அகத்தியம்,
தொல்காப்பியம், பூதபுராணம்,
மாபுராணம்" ஆகிய நூல்கள்
இயற்றப்பட்டது . இதில்
"தொல்காப்பியம்
மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய
"மதுரையில்" கி.மு 1850 இல் 449
புலவர்கள்களுடன் "அகநானூறு,
புறநானூறு, நாலடியார், திருக்குறள் "
ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
இவ்வளவு பழமையான தமிழனின்
வரலாற்றை பெருமையுடன்
உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய
இந்திய அரசு எந்த அக்கறையும்
காட்டாமல் இருப்பது வேதனையான
விஷயம்.
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத
நம் வரலாற்றை நாமே இந்த
உலகிற்கு பரப்புவோம். இனிமேல் நாம்
2000 வருடம் பழமையானவர்கள் என்ற
பழங்கதையை விட்டு விட்டு 20,000
வருட உலகின் முதல் இனம் நம் தமிழ்
இனம் என்று பெருமையுடன்
கூறுவோம்.

Thursday 10 May 2012

அறுசுவை மருத்துவம்

அறுசுவை உணவு
என்றால்
என்னவென்று தெரியுமா
?
அறுசுவை உணவு என்றால்
என்னவென்று தெரியுமா?
பழங்கால இந்திய மருத்துவங்களும்,
ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய
சுவைகளை ஆறு வகைகளாகப்
பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின்
ஆறு முக்கிய தாதுக்களுடன்
இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி,
உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின்
பங்குகளை விளக்குகின்றது.
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு,
கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய
இந்த ஆறுசுவைகளின்
பண்புகளையும், உடல்
நலத்திற்கு இவற்றின் பங்குகளைப்
பற்றியும் சற்று விரிவாய்
பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில்
இருந்து வரும் இந்திய
மருத்துவங்களாகிய ஆயுர்வேதம்,
சித்த மருத்துவம் போன்றவற்றில்
சுவைகள் ஆறு வகைகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன.
உடலானது ரத்தம், தசை, கொழுப்பு,
எலும்பு,
நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய
ஏழு முக்கிய தாதுக்களைக்
கொண்டது என்பதனால்
உடலை "யாக்கை" என்று கூறினர்.
இதில் ஏழாவது தாதுவான
மூளை சரிவர இயங்க முதல்
ஆறு தாதுக்கள் தகுந்த அளவில்
இருத்தல் அவசியம். இந்த
ஆறு தாதுக்களும்,
ஆறு சுவைகளுடன்
கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப்
பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு -
கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு -
எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு -
நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச்
செய்கின்றது
அந்த கால மருத்துவங்களும்,
உணவு முறைகளும்
இதனை அடிப்படையாகக்
கொண்டே இருந்துவந்தது. உடல்
தாதுவைப் பெருக்க, சமன் செய்ய
அதற்கு ஏற்றவாறு உணவு
வகைகளைத் தயாரித்து வந்தனர்.
இதனைக் கொண்டுதான்
"உணவே மருந்து, மருந்தே உணவு"
என்று சொல்வார்கள்.
துவர்ப்புச் சுவை (Astringent)
இது அதிகம் விருப்பு,
வெறுப்பு காட்டப்படாத சுவை.
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும்
உகந்த சுவை. அதிக வியர்வையைக்
கட்டுப்படுத்துகின்றது.
இரத்தப்போக்கினைக் குறைக்க
வல்லது. வயிற்றுப்போக்கினை சரி
செய்யவல்லது.
இது அதிகமாயின், இளமையில்
முதுமை தோற்றத்தை
உண்டுவிக்கும். வாய்
உலர்ந்து போகச் செய்யும், சரளமாக
பேசுவதைப் பாதிக்கும். வாத
நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்
வாழைக்காய், மாதுளை, மாவடு,
மஞ்சள், அவரை, அத்திக்காய்
போன்ற காய் வகைகளில்
அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (Sweet)
மனிதர்களால் அதிகம்
விரும்பப்படும் சுவை இதுதான்.
மனதிற்கு மட்டுமல்லாமல்
உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத்
தரக்கூடிய சுவையிது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும்
உதவுகின்றது.
இது அதிகமாயின் உடல் தளர்வு,
சோர்வு, அதிகத் தூக்கம், இருமல்,
உடல் எடைக் கூடுதல் போன்ற
சிக்கல்கள் பலவும் தோன்ற
வாய்ப்பு உள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்
பழவகைகள், உருளை, காரட் போன்ற
கிழங்கு வகைகள், அரிசி,
கோதுமை போன்ற தானியங்கள்
மற்றும் கரும்பு போன்ற
தண்டு வகைத் தாவரங்களிலும்
இனிப்புச் சுவை அதிக அளவில்
அடங்கியுள்ளது.
புளிப்புச் சுவை (Sour)
உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும்
ஒரு சுவையிது. பசியுணர்வைத்
தூண்டும்.
உணர்வு நரம்புகளை வலுப்பெறச்
செய்கின்றது. இதயத்திற்கும்,
செரிமானத்திற்கும் மிகவும்
நல்லது.
இது அதிகமாயின், தாக
உணர்வினை அதிகரிக்கும்.
பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல்,
இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற
தொந்திரவுகளை உண்டுவிக்கும்.
உடல் தளரச் செய்யும்.
எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி,
தோசை, அரிசி, தக்காளி, புளி,
மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய்
போன்றவற்றில் அதிகம் உள்ளது.
காரச் சுவை (Pungent)
பசியுணர்வைத்
தோற்றுவிப்பதோடு அல்லாமல்,
செரிமானத்திற்கும் பெரிதும்
உதவுகின்றது. உடல் இளைக்கவும்,
உடலில் உள்ள அதிக்கப்படியான
நீரை வெளியேற்றவும் செய்கின்றது.
இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.
தோல்
நோய்களுக்கு நல்லதொரு பலனைத்
தருகின்றது.
அதிகப்படியான காரம், உடல்
எரிச்சலை உண்டுவிக்கும். உடல்
சூட்டை அதிகரித்து,
வியர்வையை அதிகம் சுரக்கச்
செய்யும். குடல் புண்கள் தோன்ற
அதிக வாய்ப்பு அளிக்கும்.
வெங்காயம், மிளகாய், இஞ்சி,
பூண்டு, மிளகு,
கடுகு போன்றவற்றில்
அதிகப்படியான
காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்புச் சுவை (Bitter)
அதிகம் வெறுக்கப்படும் சுவையாக
இருந்தாலும், அதிகம் நன்மைப்
பயக்கும் சுவையும் இது ஒன்றே.
மற்றச் சுவைகளை அறிய
இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த
நோய் எதிர்ப்புச் சக்தியாக
செயல்படுகின்றது. தாக உணர்வைக்
கட்டுப்படுத்துகின்றது. உடல்
எரிச்சல், அரிப்புகளில்
இருந்து நிவாரணம் தருகின்றது.
காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச்
சுத்திகரிப்புச் செய்கின்றது.
இது அதிகமாயின், உடலின் நீர்
குறைந்துப் போகச் செய்யும்.
மேனி வறண்டு கடினத்தன்மைத்
தோன்ற நேரிடும். எலும்புகளைப்
பாதிக்கும். அடிக்கடி மயக்கம்
உண்டாகும், உச்சகட்டமாய்
சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல
வழிவகுக்கும்.
பாகற்காய், சுண்டக்காய்,
கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு,
எள், வேப்பம்பூ, ஓமம்
போன்றவற்றில் இந்த
சுவை மிகுதியாய் உள்ளது.
உவர்ப்புச் சுவை (Salt)
தவிர்க்க இயலாத சுவை இது,
அளவோடு இருக்கும்பட்சத்தில்
அனைவராலும் விரும்பப்படும்
ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச்
செய்கின்றது. மற்றச் சுவைகளைச்
சமன்செய்ய உதவுகின்றது.
உணவுச் செரிமானத்திலும்
பங்கு வகிக்கின்றது.
இது அதிகமாயின் தோல்
தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப்
போகச் செய்யும். தோல்
வியாதிகளையும் தோன்றச்
செய்கின்றது.
உடல்
சூட்டினை அதிகப்படுத்தி சிறுக்
கட்டிகள், பருக்கள் தோன்ற
வழிவகுக்கும்.
கீரைத்தண்டு, வாழைத்தண்டு,
முள்ளங்கி, பூசணிக்காய்,
சுரைக்காய், பீர்க்கங்காய்
போன்றவற்றில் அதிகமாய்
இருக்கின்றது

Wednesday 9 May 2012

திருமணத்திற்கு தமிழில் பெயர் இல்லையே ஏன்

திருமணத்திற்கு தமிழில் பெயர்
இல்லையே ஏன்?
- தந்தை பெரியார்
வாழ்க்கைத் துணை ஒப்பந்த
நிகழ்ச்சி முறை நம்மிலே புதிய
முறையில் நடைபெறுகின்றது.
நமக்கு இம்மாதிரியான
நிகழ்ச்சிக்கு என்ன முறை இருந்தது?
எப்படி நடத்தப்பட்டு வந்தது என்பது நம்
மக்களுக்கு ஒன்றும் தெரியாது.
சூழ்ச்சிக்காரர்களால்
தந்திரக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட
முறையில் வைதிகத் திருமணம்
அவ்வப்போது நடந்து இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி முறை எது முதல்
ஏற்பட்டது என்று சொல்லுவதற்கும்
இல்லை.
சாதாரணமாகக் கூற
வேண்டுமானால் நாம்
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த
காலத்தில் ஏற்படுத்திய
முறையிலேயே நடந்து வந்து இருக்கின்றோம்
என்று தான் கூற வேண்டும்.
இதன் மூலம் நம்மைக்
காட்டுமிராண்டி களாகவும்,
பெண்களை நிபந்தனை அற்ற
அடிமைகளாகவும்
ஆக்குவதே இலட்சியமாகக்
கொண்டே இந்த
ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.
இவற்றைச் சாஸ்திரத்தில்,
புராணத்தில், ஜாதியில் புகுத்திக்
கொஞ்சம் கூட மாறுதல் ஏற்படாத
அளவுக்கு நன்றாக
ஆணி அடித்து விட்டார்கள்.
சிறு மாறுதல் ஏற்பட்டாலும்,
அது கடவுளுக்கு, மதத்துக்கு,
சாஸ்திரத்துக்கு,
ஜாதி முறைக்கு விரோதமானது என்று கருதி வெறுக்கும்படிச்
செய்து விட்டார்கள்.
நாங்கள் நமது இழிநிலைக்கும்,
காட்டுமிராண்டித் தன்மைக்கும்
காரணமாக
இருப்பவை எவை எவை என்று சிந்தித்ததன்
காரணமாகவே, இவை தான் காரணம்
என்று உணரலானோம்.
எதை எடுத்துக் கொண்டாலும்
சாஸ்திரப்படி, மதப்படி,
ஜாதிப்படி என்று எண்ணுவதானாலேயே நமது அறிவு வளர்ச்சிக்கு வேலை இல்லாமல்
போய் விட்டது.
காட்டுமிராண்டிக் காலத்திலும்,
மூர்க்கத்தனமான காலத்திலும்
ஏற்பட்ட முறை என்று ஏன்
சொல்லுகின்றேன் என்றால்,
நம்மிடையே செய்யப்படும் முறையில்
ஒவ்வொன்றுக்கும் என்ன காரணம்
என்று தெரிந்து கொள்ளாமலே செய்து வருகின்றோம்.
தமிழ் பழமையான மொழி; இலக்கிய
இலக்கணங்களைக் கொண்ட மொழி;
எல்லாப் பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும்
பெயர்
உண்டு என்று பெருமைப்படுத்திக்
கொள்ளுவார்கள்.
இப்படிப்பட்ட மொழியில்
இம்மாதிரியான காரியத்துக்குப் பெயர்
இல்லாமல் அந்நிய மொழியின் பெயர்
இருக்கக் காரணம் என்ன?
ஒரு பொருளை உணர்த்தப் பல
சொற்கள் உள்ள மொழி தமிழ் ஆகும்.
உதாரணமாக, நிஜம் என்ற கருத்தில்
மூன்று சொற்கள் உள்ளன. உண்மை,
மெய்மை,
வாய்மை என்று குறிப்பிட்டு, அதன்
நுட்பத்தைப் பற்றி விளக்குவார்கள்.
உள்ளத்தால்
பொய்யாது ஒழுகுவது உண்மை என்றும்,
உடலினால்
பொய்யாது ஒழுகுவது மெய்மை என்றும்,
வாய்ச் சொல்லால்
பொய்யாது ஒழுகுவது வாய்மை என்றும்
நுண்பொருள் கூறுவார்கள்.
இப்படி எல்லாம் உள்ள மொழியில்
முக்கியமான நிகழ்ச்சியாகிய
கல்யாணத்துக்குப் பெயரோ,
நிகழ்ச்சிக்கு ஆதாரமோ இல்லாத
காரணம் என்ன?
நம்மிடையே இந்த
முறையானது ஆதியில்
இல்லை என்பது தான் ஆகும்.
கல்யாணம் என்பதன் பொருளே,
ஒரு பெண்ணை ஓர்
ஆணுக்கு அடிமைப்
படுத்துவது என்று தான் பொருள்
ஆகும்.
பெண்டாட்டி ஓர் ஆணுக்குச் சம்பளம்
இல்லாத வேலைக்காரி என்பது தான்
ஆகும். வேலைக்காரியைக் கூட
அடிக்கவோ, உதைக்கவோ முடியாது.
பெண்டாட்டியை அடிக்கலாம்,
உதைக்கலாம். மற்றவர் ஏன்
என்று கேட்க மாட்டார்கள். கேட்டால்
என் பெண்டாட்டியை நான் அடித்தால்
உனக்கு என்ன? என்று கேட்பான்.
நம் புராணங்கள், சாஸ்திரங்கள்,
புருஷன் தன் மனைவியை என்ன
வேண்டுமானாலும் செய்ய
உரிமை உண்டு; பட்ட
கடனுக்கு விற்கலாம், வைத்துச்
சூதாடலாம், மோட்சத்துக்குப் போக
மற்றவனுக்கு விட்டுக் கொடுக்கலாம்
என்று கூறுகின்றனவென்றால்,
இதனைப் படிக்கும், நம்பும் மனிதன்
எப்படி ஒழுக்கமாக நடக்க முடியும்?
(25.8.1963
அன்று திட்டக்குடி திருமண விழாவில்,
தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய
அறிவுரை) விடுதலை 31.8.1963.
இன்றைக்குச் சட்டத்தில் கூட
ஆணுக்குப் பெண் அடிமை அல்ல.
உத்தியோகம், கல்வியில் உரிமை,
சொத்துரிமை,
மணவிலக்கு உரிமை முதலிய
எல்லாம் வந்து விட்டன.
பெண்களுக்கு என்ன வரவேண்டும்
என்றால், புத்தி தான் இன்னும்
கொஞ்சம் வர வேண்டும். பெண்கள்
அடிமை களாக
இருப்பதனாலேயே தான் கணவன்
மூர்க்கனாக ஆகிவிடுகின்றான்.
பெண்கள் தங்கள் சம
உரிமையினை சரியான முறை யில்
பயன்படுத்திக் கொள்ள முற் பட்டால்
தான், ஆண்கள் எல்லாம்
யோக்கியர்கள் ஆவார்கள்.
29.8.1963 அன்று தென்னூர்
திருமணத்தில், தந்தை பெரியார்
அவர்கள் ஆற்றிய அறிவுரை)
விடுதலை 12.9.1963.
தமிழர் திருமணம் என்பதற்கு என்ன
முறை இருந்தது என்று தெரியவே இல்லை.
தமிழர்களின் இன்றியமையாத
திருமண முறைக்குத் தமிழில் என்ன
பெயர் இருந்தது என்று கூறுவதற்குச்
சொல்லே இல்லை. கன்னிகாதானம்,
மாங்கல்ய தாரணம், பாணிக்கிரகணம்,
கல்யாணம், விவாகம்,
தாராமுகூர்த்தம் என்று இப்படித்தான்
வேற்று மொழிச் சொற்கள் தான்
இருந்து வந்து இருக்கின்றன. தமிழில்
திருமண முறைக்குப் பேர்
இல்லாததனாலேயே தமிழர்களுக்கு என்று ஒருமுறை இருந்ததென்று கூறுவதற்கு இல்லை.
நாங்கள் தான் வாழ்க்கைத்
துணை ஒப்பந்தம் என்ற சொல்லைக்
குறளில் இருந்து கண்டு பிடித்தோம்.

தொழிலாளி

ஏ ழைப்
பாட்டாளி மக்கள்,
தொழிலாளி மக்கள்
கூலி போதாதென்று பட்டினி கிடந்து,
போலிகாரன்
குண்டுகளுக்கு இரையாகிச்
சொத்
பொத்தென்று கீழேவிழுந்து உயிர்விடும்
போது,
அவன்
பெண்டு பிள்ளைகள்
கஞ்சிக்கு ஆலாய்ப்
பறக்கும்
போது,
பட்டேலுக்கும்? நேருவுக்கும்,
பிரசாத்துக்கும், ஆசாத்துக்கும்,
சரோஜினிக்கும் மாதம் 5000, 6000
வீதம் சம்பளமும், அரசபோக
மாடமாளிகை, அரண்மனை வாசமும்,
நேரு தங்கை விஜயலட்சுமிக்கும்,
சுற்றத்தாருக்கும் மாதம் 8000
சம்பளமும், அரசபோக வாழ்க்கையும்,
அடிக்கடி ஆகாயக் கப்பல்
போக்குவரத்துப் பிரயாணமும்
என்றால் இந்தத் தலைவர்கள் எல்லாம்
மக்கள் பிரதிநிதிகளா?
நாட்டு மக்களுக்காகப் பாடுபடும்
தியாகிகளா? அல்லது டர்பிள்வீப்
என்னும் லாட்டரியில் முதல்
பிரை அடித்த
பாக்கியசாலி லட்சுமி புத்திரர்களா?
ஏழைப் பாட்டாளி மக்கள்
முதலாளிகளின் கொடுமையால்
வேலைவிட்டு, வீடு வாசல் விட்டு,
நாடு முழுவதும் பிச்சை எடுக்கத்
துணிந்து அலையும்போது முதலாளிகள்
நிலைமை எப்படி இருக்கிறது?
பணத்தைக் குவிக்கிறார்கள், மாட
மாளிகைகளை உயர்த்துகிறார்கள்,
பஞ்சனையில்
கொஞ்சி விளையாடுகிறார்கள்,
மந்திரிகளோடு சல்லாபமாய்
உலவுகிறார்கள். முதலாளிகளும்
மந்திரிகளும் காதலர் காதலிகளாய்
உல்லாசக் கிரீடைகள் நடத்துகிறார்கள்.
டீ பார்ட்டி, நாட்டியக் கச்சேரி,
இசையரங்கு, சாமி தீபாராதனைபோல்
என்ன
வேடிக்கை எவ்வளவு கேளிக்கையாய்
வாழ்கிறார்கள். சுயராஜ்ய நாட்டில்,
சமதர்மவாதி - பொது உடமைவாதி -
ஏகாதிபத்திய
எதிர்ப்புவாதி என்றெல்லாம்
தப்பட்டை அடித்து விளம்பரம்
செய்யப்பட்டு பேர் பெற்ற பண்டித
ஜவஹர்லால் நேருவின் (முதல்
மந்திரி) தலைமையில்
ஏழை பாட்டாளி மக்கள்
கதி இதுதானா? நூற்றுக்கணக்கான
நாட்களாக கோவை மில்லுகளில்
போராட்டங்கள் நடக்கின்றன. நாட்டில்
பல நூற்றுக்கணக்கான
வேலை நிறுத்தங்கள்
ஏற்பட்டு தொழிலாளிகளும் மக்களும்
அல்லல் பட்டு மிருக ஜீவன் போல்
படாத பாடுபடுகின்றனர்.
இவைகளையெல்லாம் பார்த்தும்,
தங்களால் இவைகளை அடக்க
முடியாமல் பரிகாரம் செய்ய
முடியாமல் போயும் கூட தொழில்
தாபனங்களையெல்லாம் சர்க்கார் ஏன்
ஏற்று நடத்தாமல் இருக்கிறார்கள்?
இதற்குச் சமாதானம் சர்க்கார்
அல்லது மந்திரிகள் முதலாளிகளின்
ஆசை வலையில்
சிக்கி அழுந்தி விட்டார்கள் என்பதைத்
தவிர, அல்லது இந்த மந்திரிகள்
நிலையில்லாதவர்கள் ஆனதால்
கிடைத்த வரை சுருட்டுவோம்
என்கின்ற வேலைத் திட்டத்தைக்
கையாளுகிறார்கள் என்பதைத் தவிர
வேறு எதைச் சொல்ல முடியும்?
என்று கேட்கின்றேன். இந்நாட்டுத்
தொழிலாளிகள் இப்படி அல்லல்
படுகிறார்கள் என்றால் இந்த
ஆட்சி முதலாளிகள்
ஆட்சி என்றுதானே ஆகிறது?
( 02.05.1948 அன்று தூத்துக்குடியில்
நடைபெற்ற திராவிடர் கழக 19ஆம்
மாகாண மாநாட்டில் தந்தை பெரியார்
உரையிலிருந்து....)
-----------------------
க ம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும்
எஞ்சினிலும் வேலை செய்யும்
தொழிலாளர்
களையே தொழிலாளர்களாகக்
கருதுகின்றார்கள். சரீரத்தினால்
பாடுபடும் சூத்திரப் பட்டம் தாங்கிய
நாலுகோடி மக்களும்
தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக்
கூலி இல்லாமல் பார்ப்பனன்
வேலை வாங்கலாம் என்று மனுதர்ம
சாதிரம் சொல்லுகின்றதே.
இது கடவுளின் கட்டளையாம்.
திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன்
சங்கம் என்று தானே கருத்து.
இதற்குத்தானே, இப்படிச் சொல்ல
வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார்
சங்கம் என்றும் சொன்னோம். ஏன்
இந்த இழிவான பெயர்கள் நமக்கு?
பார்ப்பனன் வேண்டுமென்றால் தம்
சங்கத்தைச் சூத்திரனல்லாதான்
சங்கம் என பெயர் வைத்துக்
கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மைப்
பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக்
கொள்ள வேண்டும்? நமக்குச் சொந்தப்
பெயரில்லையா? நாம் திராவிடர்கள்
அல்லவா? பிராமணன்
உயர்வானவனென்று யஞ்யவல்யர்,
நாரதர், பராசரர்
சொன்னது இன்று இந்து சட்டமாகக்
காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே,
சாதிரத்திலே, நடத்தையிலே,
பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே.
கடவுளாலே கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படும்,
இந்த சூத்திரப் பட்டத்தைத்
தாங்கி நிற்பவர்கள்
கஷ்டப்பட்டு வேலை செய்யும்
தொழிலாளர்களாகிய
திராவிடர்களல்லவா? நாம்
எப்பொழுது இந்தச்
சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?
தொழிலாளிகளுக்கு எங்கள்
கொள்கை தெரியுமா?
கூலிகொடுப்பது, கூலி உயர்வது,
போன பெறுவது அல்ல எங்கள்
கொள்கை. ஆனால் தொழிலாளிகள்
முதலாளிகளிடத்தில் பங்கு பெற
வேண்டும்.
ரயில்வே தொழிலாளர்களென்றால்
அவர்கள் அதன் முதலாளிகளிடத்தில்
பங்கு பெற வேண்டும். மிஷினுடைய
தேவைக்கு எப்படிக் கரியும்
எண்ணெயும்
உபயோகப்படுத்தப்படுகின்றதோ அதைப்போல
தொழிலாளியின் உழைப்புக்குத்
தகுந்தபடி செலவுக்குக்
கொடுக்கப்படவேண்டும். கரியும்
எண்ணெயும்
எப்படி மிஷினுக்கு இன்றியமையாதவையோ அதைப்போல
தொழிலாளிக்குக் கூலியும்
இன்றியமையாதது.
முதலாளி கணவனும்
தொழிலாளி மனைவியுமாவார்கள்.
இவர்களுக்குப் பிறக்கின்ற
பிள்ளைதான் லாபம். ஆகவே லாபம்
என்பது இருவருக்கும் பொது. இதைப்
போலவே,
நிலத்திலே வேலை செய்யும்
தொழிலாளர்களுக்கு ஒருபடி இரண்டு படி கூலி அதிகம்
கிடைப்பதால் நாங்கள்
மகிழ்ச்சியடைந்து விட மாட்டோம்.
வேலைக்குத் தகுந்த
கூலி கிடைப்பதுடன்
விளைவிலேயும்,
தொழிலாளர்களுக்கு மில்லில்
பூமியில் பங்கு வேண்டும். எங்கள்
திட்டம் நிறைவேறினால் யந்திரச்
சாலை தொழிலாளர்களுக்கு வந்துவிடும்.
இதுதான் நியாயமான நீதியான
ஆட்சிமுறை. இதில் யாரும் எந்தப்
பஞ்சாயத்தும் செய்யத்
தேவையில்லை. நாங்கள்
பதவியேற்று மந்திரிகளாக வந்தால்
வயது வந்த எல்லா மக்களுக்கும்
ஓட்டுரிமை அளிப்போம்; கட்டாயக்
கல்வியைக் கண்டிப்பாக அமலுக்குக்
கொண்டு வருவோம்; சொத்துக்களில்
லாபத்தில் யாவருக்கும்
சமஉரிமை அளிப்போம்.
காங்கிரஸ் தோழர்களே, கம்யூனிஸ்ட்
தோழர்களே! எங்களை ஏன்
குறை சொல்லுகிறீர்கள். பிறவியிலே,
மதத்திலே, கடவுளிலே இருக்கின்ற
முதலாளித் துவத்தை ஒழிக்க நாங்கள்
பாடுபடுகின்றோம்.
தனி ஒருவனுக்கு உணவில்லையேல்
ஜெகத்தினை அழித்திடுவோம்
என்று கம்யூனிட் தோழர்கள்
சொல்லுகின்றார்கள். உற்பத்தியைக்
கொடுக்கின்ற உலகத்தை ஏன் அழிக்க
வேண்டும்? இரந்தும் உயிர்வாழ்தல்
வேண்டின் பரந்து கெடுக
இவ்வுலகு இயற்றியான்
என்று எங்கள் பொதுவுடைமைத்
தலைவர் வள்ளுவர்
பொன்னெழுத்துக்களால்
பொறித்திருக்கின்றாரே, உணவில்லாத
ஒருவனையும் படைத்து,
உற்பத்தியைத் தருகின்ற
உலகத்தையும் படைத்த அந்தக்
கடவுளையல்லவோ அவர் ஒழிக்கச்
சொல்லுகின்றார். கடவுள்
வேண்டுமானால் நல்ல கடவுளாக
இருக்கட்டுமே. எனதருமை வாலிபத்
தோழர்களே! எங்கள்
கொள்கைகளை உணருங்கள்.
இனி ஒரு கலகம்கூட வரக்கூடாது.
வேண்டுமானால் பார்ப்பனர்களுக்குத்
துணிவிருந்தால்
எங்களை உதைக்கட்டும். கம்யூனிட்
திராவிடத் தோழர்களே நீங்கள்
ஒதுங்கி நில்லுங்கள்.
ஆதிதிராவிடர்கள் முலிம்கள்
போராட்டம் ஆரம்பிக்கப்
போகின்றார்கள். அந்தப்
போராட்டத்திற்கு நீங்கள்
உதவி புரியுங்கள். பூணூலும்
உச்சிக்குடுமியும்
போய்விடுமென்று பார்ப்பான்
பயப்படுவான்.
பிறகு சண்டையே இருக்காது.
உண்மையான
நாட்டுப்பற்று சுயமரியாதைப்
பற்றுடன் நான் சொல்லுகின்றேன்.
சூத்திரப்பட்டம் ஒழிய
வேண்டுமென்றால் கருப்புச்
சட்டையை அணியுங்கள். கருப்புச்
சட்டையின் மூலம்தான்
நமது இழிவை ஒழிக்க முடியும்.
உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.
சிந்தியுங்கள், கம்யூனிட்
தோழர்களே எங்களை நம்புங்கள்.
(18.08.1946 அன்று கும்பகோணத்தில்
மாலை பார்க்கில், தோழர்
கே.கே.நீலமேகம் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய
சொற்பொழிவிலிருந்து...)
குடிஅரசு -19.10.1946

ஆத்திகம் நாத்திகம்

ஆஸ்திகமும் நாஸ்திகமும் -
அறிஞர் அண்ணா
1. ஆஸ்திகம் என்று உண்டானதோ,
அன்றே நாஸ்திகமும் உண்டாயிற்று.
2. ஆஸ்திகம் அறியாமை, பயம்,
சுயநலம் இவற்றில் முளைத்தது;
நாஸ்திகம் அறிவின் விசாரணைகளில்
முளைத்தது.
3. ஆஸ்திகம் அறிவைப்
பாழ்படுத்துகிறது. நாஸ்திகம்
அறிவை ஓங்கச் செய்கிறது.
4. ஆஸ்திகம்
உலகை மிருகநிலைக்கு அழைத்துச்
செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக
நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
5. ஆஸ்திகம்
மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம்
மக்களை மேன்மைப்படுத்துகிறது.
6. ஆஸ்திகம் மக்களை அழிய
வைக்கும். நாஸ்திகம் மக்களை வாழ
வைக்கும்.
7. ஆஸ்திகத்தால் வறுமை,
பிணி முதலியன ஓங்கும்.
நாஸ்திகத்தால் அவை அழியும்.
8. ஆஸ்திகமும் நாஸ்திகமும் என்றும்
தீராப்பகை கொண்டன.
9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும்
அரசாங்கமும், முதலாளித்துவமும்
துணை. நாஸ்திகத்திற்குப்
பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.
10. ஆஸ்திகம் அழியக் கூடியது.
நாஸ்திகம் என்றும் அழியாதது.
11. ஆஸ்திகம் சில சமயம்
நாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும்.
ஆனால்,
நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும்
புறமும் அழிக்கவல்லது.
12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக
வெற்றியாகும். நாஸ்திகத்தின்
வெற்றியோ நிலைபெற்ற
வெற்றியாகும்.
13. ஆஸ்திக நாஸ்திகப்
போராட்டத்தின் லாப நஷ்டக் கணக்கு.
ஆஸ்திகத்திற்குத் தோல்வியும்,
நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர
முறைப்படி இதுவரை உண்டு,
இனியும் உண்டு.
14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத
மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால்,
எல்லா மதத்தையும் நம்பாத
முழு நாஸ்திகமோ நன்மையளிக்கும்,
பெருமையளிக்கும். ஆகையால்,
அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக!
ஓங்குக!!

நீயும் நானும்

சுத்தமான
சமுதாயத்தை
அசுத்தமாக்கும்
நீ
புனிதமானவன்...
அசுத்தமான
சமுதாயத்தை சுத்தமாக்கும்
நான்
தீண்டத்தகாதவன்!
ஆத்மாக்களும்
மாமாக்களும்
உனக்கு
முன்னோடிகள்...
அண்ணலும்
அய்யாவும்
எமது
அடையாளத்தை
மீட்டெடுக்கும்
வழிகாட்டிகள்!
பாம்பனைய
பள்ளிகொண்டு
மகள் புனர
மானங்கெட்ட
புல் மீல்ஸ்
வெஜிடேரியன்கள்
உனது
கடவுளர்கள்...
கருவாட்டுக்
கவுச்சியோடு
சரக்கடிக்கும்
நான்_வெஜ்
காத்தவராயன்கள்
எமக்கான குலச்சாமிகள்!
பொய்யாக
வியர்வை வழித்து
ஆடைசரிய
அபிநயக்கும்
உனக்கு பரதநாட்டியம்...
காய்ப்பேறிய
கால்களோடு
வியர்வையில்
குதித்தெழுந்து
திமிரெடுத்து ஆடும்
எமக்கு
பறையாட்டம்!
சாதீய
கொழுப்பெடுத்து
விலக்கி வைத்து
கழுத்தருக்கும்
நீ
அகிம்சாவாசி...
ஒத்தே வராத
உன்னோடு
ஒத்துவாழ
விரும்புகிற
நான் பயங்கரவாதி!
கலைபாரதி, சித்தமல்லி

தமிழிசை கர்நாடக இசையக மாறியது

கார்நாடக இசை என்பதற்கும்
கர்நாடகாத்திற்கும் எவ்வித தொடர்பும்
இல்லை. மலையைக்கல்
என்றழைப்புது ஒரு காலத்தில்
வழக்கமாக இருந்தது. புறநானூறில்
இமய மலையை வடபெருங்கல்
என்று அழைக்கப்படுகின்றது.
இNது போல் கல்
நாடு என்பது கர்நாடகமாக மருவியது.
இதிலிருந்து கர்நாடகத்திற்கும்
கர்நாடக சங்கீதத்திற்கும் எவ்வித
தொடர்பும் கிடையாது. கி.பி 1116
முதல் 1127
வரை மஹாராஷ்டிராவை அடுத்து தெற்கண்டத்திலிருந்து குறுநில
மன்னணான சோமேஸ்வரபுல்
மோகன் ஒரு இசை மேதையாவான்.
இவன் மானசொல்லேசம் என்ற
ஒரு இசை நூலை எழுதியவன்.
இவனது இசையார்வம் தனக்குத்
தெற்கேயிருந்து (கீழேயிருந்த)
கர்நாடகத்தைப்
பார்த்து தமிழிசைக்கு கர்நாடக
இசை என்று மதல் மதலில்
பெயரிட்டான். இது ஒரு குறிப்பாக
கீழே யிருந்து கர்நாடகத்தின் பெயரால்
கர்நாடக இசை என்று வழங்கினான்.
13ம் நூற்றாண்டில் கரங்கதேவர்
இயற்றிய சங்கீத ரத்னகாரம் என்ற
முதல் வடமோழி இசை நூலின்
பண்ணின் பெயர்கள்
தமிழிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இசை தொடர்பான மதல் வடநூல்
இதுவாகும். இதில் கர்நாடக
இசை ராகங்கள் தமிழிலேயே உள்ளன.
இதில் தேவாரவதனி எனவும், தமிழில்
குறிப்பிடப்பட்டுளளது.
இன்று இவைகள்
மறைக்கப்பட்டு விட்டன. கர்நாடக
இசை தமிழில்
இருந்து களவாடப்பட்டது என்பதற்கு இதைவிடச்
சிறந்து ஆதாரம் தேவையில்லை.
அடுத்து பார்ப்பனியத்தின்
இசை எனவும் அதை இறைவன்
அருளினான் என்ற மோசடியையும்
பார்ப்போம். பத்தாம் நூற்றாண்டளவில்
எழுதப்பட்ட வேதம்;, இசை, நாட்டியம்
தொடர்பாக என்ன
கூறுகின்றது என்பதைப் பார்ப்போம்.
அவர்கள் சாம வேதத்தில்
இருந்தே கர்நாடக
இசை தேன்றியது எனப் பொய்
கூறுவது வழக்கமாக உள்ளது.
தேத்தில் பிராமணர்கள் ஆடல்,
பாடல்களில்
ஈடுபடுவது திட்டவட்டுமாகத்
தடைசெய்யப்பட்டு இருந்தது.
இதை மீறுபவர்கள் பார்ப்பனிய
சேரிகளில் ஒதுக்கி விடப்பட்டனர்.
இது தொடர்பாக உபநிடத்திலும்,
சிலப்பதிகாரத்திலும் பல குறிப்புகள்
உண்டு. மனு சாஸ்திரத்தில்
நாலாவது அத்தியாயத்தில் உள்ள
பதினைந்தாவது பாடலில்
ஆடுவது பாடுவது கூடாது எனப்
பிராமணர்கட்கு உபதேசிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் மரபுப்படி,
வேதப்படி இசை தொடர்பான
அடிப்படை அறிவு கூட
இருக்கவில்லை. தமிழ் பகுதியுடன்
ஏற்பட்ட
தொடர்பை அடுத்தே இசையுடன்
பாடவேண்டும் என்ற ஆவல்
பார்ப்பணர்கட்கு ஏற்பட்டது. இதன்
பின்பு ரிக்வேதத்தில் இலகுவான
பகுதியைப் பிரித்து சாமவேதம் என்ற
பகுதியை உருவாக்கி அதற்கு சாமகானம்
என்று பெயரிட்டுப் பாடினர்.
அது ஒரு இசையாகவே இருக்கவில்லை.
இதைப்
பார்ப்பணர்களே குறிப்பிட்டுள்ளனர்.
சாமகாணம் என உருவாக்கிய
இசை நரி ஊளையிடுவதைப்
போன்றுள்ளது எனவும் பார்ப்பணர்கள்
குறிப்பிட்டுள்ளனர். பார்ப்பானின்
~~மனுசங்|| கதையில
நாலாவது பகுதியில்
124ஆவது குறிப்பில் சாமவேத
இசையும் அதன்
இசையின்மை பற்றியும்
குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக்வேதத்தில்
எட்டாவது அத்தியாயத்தில்
5தாவது குறிப்பிலுள்ள
160வது பாடலில் சாமகானம் பாடும்
போது நரி ஊளையிடுவது போல்
உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிக் வேதத்தின் எட்டாவது பகுதியில்
சாமகானம்
காதுக்கு தவளை கத்துவது போல்
உள்ளது என ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்
பார்ப்பனரே குறிப்பிட்டுள்ளனர்.
ஆனவே கர்நாடக சங்கீதம்
என்பது பார்பணர்களின் சொந்தச்
சரக்கல்ல. மாறாக தமிழர்களிடம்
இருந்து சதிமூலம்
கைப்பற்றியதாகும்.
இந்தியாவின் பல பகுதிகளில்
இருந்து உருவாக்கப் பட்டதாகக்
கூறும் சிவசேகரத்தின்
கூற்று பார்ப்பணியத்தின்
சேவையை மெச்சுவதாகும்.
பார்ப்பணர்கள் ஆடல் பாடல்களில்
ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருந்து காலத்தில்
அவர்களிடம் இசை எதுவும்
இருக்கவில்லை. இதை நாம் மேலும்
ஆராயின் இன்று கர்நாடக சங்கீதத்தில்
உள்ள சமஸ்கிருதச்
சொற்களை எடுப்பின்
கீர்த்தனை என்பது வடசொல்லல்ல.
கீர்த்தி என்ற தமிழ்ச் சொல்லில்
இருந்து கீர்த்தனை என்ற
சொல்லை உருவாக்கினார்கள்.
இசைப்பாட்டு என்பது செந்துரை,
வந்துரை, வரி, உரு எனத்தமிழில்
அழைக்கப்படுவதாகும். இதில்
கீர்த்தனை என்ற கர்நாடக இசைச்
சொல் உரு என்பதில்
இருந்து உருவானதே. இந்த
உரு என்பது தொல்காப்பியத்தில்
கூடக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லவி என்பது பல்+தளிர்
என்பதிலிருந்து உருவானது.
அதாவது பல்லவி என்பது தமிழில்
தளிர்தல் என வருவதாகும்.
அனு பல்லவி என்பது தமிழில்
பின்னால் வருவதாகும். தமிழிசையைப்
பதினைந்தாம் நூற்றாண்டில்
முத்துத்தாண்டவப் பிள்ளை என்ற
தமிழரே ஒழுங்குபடுத்திப் பயன்
படுத்தியவராவார். சுதந்திர
தாசனோ அதற்குப்
பின்வந்து தியாகராஜரோ இனஇறு பாடும்
கர்நாடக
இசை வடிவை உருவாக்கினர்.
இவர்கட்டுகு கீர்த்தனை தெரியாது.
முத்துத்தாண்டுவப்பிள்ளை இவ்விசையைத்
தேவாடத்தில்
இருந்தே உருவாக்கியவர். ஏழாம்
நூற்றாண்டைச் சேர்ந்த தேவார
இசை தொல்காப்பியத்தில்
இருந்தே உருவாக்கப்பட்டது.
இது தொல்காப்பியத்திற்கு முற்பட்ட
நாட்டுப்புற
இசையிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதை நாம்
கூறத்தேவையில்லை. இனஇறுள்ள
கர்நாடக இசையிலுள்ள
ஒவ்வேரு சமஸ்கிரிதச்
சொல்லும்.எந்த தமிழ்
சொல்லிலிருந்து உருவானது என்பதற்கு தமிழில்
மிகச்சிறந்த ஆதாரங்கள் உண்டு.
கிர்த்தனை, பல்லவி, தோடி, சரணம்,
கல்யாணி, திருச்சங்கராபரணம்,
அதிகாமபேதி ...... ........ என்ற
அனைத்து சமஸ்கிருதச் சொல்லும்
எந்தத் தமிழ்
சொல்லிலிருந்து களவாடப்பட்டது என
நிறுவ முடியம்.
இன்று ச,ரி,க,ம,ப,த,நி என்ற
சமஸ்கிருத சொற்கள் தமிழிசையான
குரல், சுத்தம், கைக்கிளை, உழை, இழி,
விளரி என்ற
சொற்களிலிருந்தே களவாடப்பட்டது.
1917ம் ஆண்டு தஞ்சை ஆபிரகாம்
பண்டிதர் ~கர்ணாமிரத சாகரம்| என்ற
1500 பக்கங்கள் கொண்ட நூலில்
கர்நாடக
இசை தமிழிலிருந்து எப்படி களவாடப்பட்டது என்பதை மிகவும்
தெளிவாக நிறுவியுள்ளார்.
அதை அக்காலத்தில் இருந்து பல
சங்கீத வித்துவான்காள் ஏற்றுக்
கொண்டதை, அதே நூலில்
அவரவர்களால் சமர்பிக்கப்பட்ட
மடலின் மூலம் உள்ளடடக்கப்
பட்டுள்ளது. இந்து தழில்
ஏழு இசையளவு தொடர்பாக 2700
ஆண்டுகளுக்கு முன் எழுதிய
தொல்காப்பியத்திலும் ஆதாரமுண்டு.
எஸ். ராமநாதன் என்ற அறிஞ்ஞர்
எந்தெந்துத் Nதுவாரத்தில்
இருந்து இன்றுள்ள கர்நாடகக்
கீர்த்தனை உருவானது என்பதை ஆதாரத்துடன்
நிறுவியுள்ளார். தேவார
இசைக்கு மூலம் காரைக்கால்
அம்மையார் என்பதையும் இறுதியாக
நடந்து தமிழாராச்சி மகாநாடு ஏற்றுக்
கொண்டுள்ளது.
தென்னிந்திய இசை, கர்நாடக இசை,
சாஸ்திரிய இசை எனப் பல
பெயர்களும் இருந்துள்ளது. தமிழ்
மொழியில் இயல், இசை நாடகம்
அல்லது முத்தமிழ், மூன்று தமிழ்,
தமிழ் மூன்று என்ற
பெயரிலிருந்து தமிழ் கலை வேறெந்த
மொழிக்கும் ஆநேகமாகக் கிடையாது.
இசையைப் பொறுத்தவரை செவ்வியல்
இசை இருக்கவில்லை.
எல்லா மொழிக்கும் நாட்டுப்புற
இசை இருந்துள்ளது. நாட்டுப்புற
இசையை எடுத்துக் கொண்டால்
தமிழில் இன்னும் அழிந்து விடாத சில
நூறு சைவகைத் தொகுதிகள் உண்டு.
உதாரணம் ஒப்பாரி இசைவகை,
தாலாட்டு இசைவகை,
மகுடி இசைவகை,
வண்டிக்காரப்பாட்டு,
அறுவைப்பாட்டு, நடுகைப்பாட்டு,
கிளிப்பாட்டு, குயில்பாட்டு,
குறவைப்பாட்டு, சங்குப்பாட்டு,
நையாண்டிப்பாட்டு,
படைப்புவரிப்பாட்டு,
பாம்பாட்டிப்பாட்டு, முர்த்தனப் பாட்டு,
பல்லாண்டுப்பாட்டு,
மயங்கு நிலைப்பாட்டு,
முகவரிப்பாட்டு, ........ ...... என சில
நூற்றுவகைப் பாட்டு உண்டு.
இதற்கு ராகமெல்லாம் உண்டு. இந்தச்
சில நூறுப்
பாட்டுவகை ஒவ்வேன்றும் தமக்குள்
பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.
உதாரணமாக தெம்மாங்கு,
ஒற்றயைடித் தெம்மாங்கு, நாலடித்
தெம்மாங்கு, டப்பாத் தெம்மாங்கு,
தெற்கத்தித் தெம்மாங்கு, இழுவைத்
தெம்மாங்கு அல்லது நெட்டுத்
தெம்மாங்கு, ..... ..... எனத்
தொடர்கிறது.
நையாண்டி இசை யை எடுப்பின்
தெற்கத்தைய நையாண்டி இசை,
சோலமலை நையாண்டி இசை,
மண்வேட்டி நையாண்டி இசை, ........ .......
எனத் தொடர்கின்றது.
சிந்து இசையை எடுப்பின்
காவடிச்சிந்து, வழிநடைச்சிந்து,
வளையல் சிந்து, கும்மிச்சிந்து,
கொலைச் சிந்து, ........ ....... எனத்
தொடர்கிறது.
பல்வேறு பட்ட
தொழில்வகை இருப்பதால்
அதைச்சார்ந்து பலவகை நாட்டுப்புற
இசைவகைகள்
இருப்பது இயல்பாகின்றது.
நாட்டுப்புற
இசை தொழிலை ஒட்டியும்,
அவர்களின் அவலத்திலும்,
சந்தோசத்திலும் உருவானது.
இதிலிருந்து சிலவற்றை மூலமாகக்
கொண்டே கர்நாடக இசை உருவானது.
அந்தத் தமிழிசையைக் களவாடிய
பார்ப்பணர்கள் அதைச் சமுஸ்கிருத
(தெலுங்கு) இசையாக இந்திய
இந்து இசையாக மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ், நாட்டுப்புற
இசையை மீட்டேடுக்க வேண்டும்.
இது முற்று முழுதாக கர்நாடக
சங்கீதத்தில் இருந்து முற்று முழுதாக
வேறுபட்டது.
நாட்டுப்புற இசையிலிருந்ர்
அதை அளந்து கொள்ளும் வகையில்
ஒரு எழுத்து முறையுடன் கூடிய
இசை அளவுடீகால் உருவாக்கப்பட
வேண்டும். அந்து வகையில்
த,ந,ர,ல,..... .... என்ற அதிகளவில்
வரும் நாட்டுப்புற
இசைப்பாடல்களைக் கொண்டு புதிய
அளவீட்டு முறையைக் கைக்கொள்ள
வேண்டும். இது நடைமுறையுடன்
கூடிய அந்து உழைக்கும் மக்களின்
இசையைத் தேடுவதுடன்
தொடர்புடையது. இதன் மூலம்
கர்நாடக சங்கீதத்தின் எழுத்துக்களின்
அதிர்வெண்களுக்கு இசைவாக
இதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
ச-240, ரி- 256, க-258, ம-324, ப-360,
த-384, நி-485 என்ற அதிர்வெண்
அளவுகோல் போல் நாட்டுப்புற
இசையை அளவிடும் புதியதோர்
முறையை உருவாக்கவேண்டும்.
இது த,ந,ர,ல ..... ... என்ற பல
நாட்டுப்புற
இசையை அடிப்படையாகக்
கொண்டதாகும். இன்றுள்ள கர்நாடக
இசை சும்மா இருந்து தின்னும்
ஒருத்தனுக்கே பொருந்தும் வகையில்
உள்ளது. இது உழைக்கம் மக்களிடம்
இருந்து முற்றாக
அன்னியப்பட்டுள்ளது.
மனிதனின் முதல் மொழியான
தாளத்தின் பின்பே மொழி உருவானது.
தாளம் உடலுக்குள் உள்ளது. உடல்
தாளகதியில் இயங்குகின்றது.
தாளத்தைக் கையில் எடுக்கும்
சினிமா மெல்லிகையுடன் கூடிய
மேற்கத்தைய
சீரழிவு இசை என்பது மனிதனின்
உணர்ச்சியைக்
குழப்பி மழுங்கடிக்கின்றது.
உணர்ச்சி மனிதனிடம்
இருந்து பறிட்டு எழுவது,
அதை சிதைப்பதன் மூலம் அவனின்
இசையறிவை இல்லாது ஒழுpக்கின்றது.
இதன் மூலம் பண்பாட்டுச் சீரழிவைப்
புகுத்துகின்றனர். உணர்ச்சி என்ற
தளத்தைப் பிடித்தபடி பண்பாட்டுச்
சீரழிவு பரப்பப்படுகின்றது.
இசை இன்பது ஒரு சூட்சுமமான
மொழியாக உள்ளதால் இலகுவாகப்
பண்பாட்டுச் சீரழிவு ஏற்படுகின்றது.
இன்று தேவை மக்கள் தமக்கான
ஒரு இசையை நாட்டுப்புற
இசையிலிருந்து உருவாக்க
வேண்டும். இந்து இசையின் மூலம்
உன்னதமான மனித சமுதாயத்தின்
முன்னேற்றத்தை முன் தள்ளிய
படி களவாடப்பட்ட கர்நாடக
இசையை மீட்பதாகும்.
இது ஒரு சமுதாயப் புரட்சியின்
தொடர்புடைய நடைமுறையுடன்
தொடர்புடைய விடையமாகும்.
இது மாநாடுகள்
மூலமே கட்டுரைகள்
மூலமே சாத்தியமில்லை.
இது நடைமுறையில் உந்தித் தள்ளம்
ஒரு கருவியாக மாத்திரமே இருக்க
முடியும்.
இன்று கர்நாடக சங்கீதம் ஒரு முட்டுச்
சந்தியில் உள்ளது. அதைக் கேட்போர்
இன்றி பண முதலைகளின் தயவில்,
இந்திய பார்ப்பனிய அரச ஆதிக்க
சதிமூலமே உயிர்வாழ்வது போல்
நடிக்கின்றது. இன்று சங்கீதக்
கச்சேரிகளை நடத்தும்
பணப்போய்களின் கைகளில் கர்நாடகக்
கச்சேரி விதைகட்ட
மாத்திரமே பயன்படுகிறது.
இதிலிருந்து மீள சில
தமிழ்பாடல்களை முன்தள்ளுவதும்
இசைக்கருவிகளை மாற்றவதும் என
வித்தைகாட்டுகின்றனர்.
இது முன்னேற முடியாத முட்டுச்
சந்துpக்கு வந்துள்ளது.
இதை அவர்களின் பத்திரிகைகள்
தவிர்க்க முடியாமல் ஒத்துக்
கொள்கின்றன. இதிலிருந்து மீள
நாட்டுப்புற இசையை உண்டுசெரிக்க
முயல்கின்றனர் இதை ஒருபோதும்
அனுபமிக்கக் முடியாது. கர்நாடக
சங்கீதத்துக்கு எதிரான போரில்
மேற்குடன் கூடிய
மெல்லிசைக்கு எதிரான போரில்
நாட்டுப்புற
இசை போராடி தமிழிசையை மீட்க
வேண்டுமேயொழிய உடசெரிப்புக்
உட்பட்டல்ல. என்பதை நாம்
தெழிவாகப் புரிந்து கொள்ள
வேண்டும்.
இக்கட்டுரை தமிழ் நாட்டில் நடந்த 2ம்
ஆண்டு தமிழிசை மகாநாட்டுக்
குறிப்புகளை அடிப்படையாகக்
கொண்டு எழுதப்பட்டது.

தமிழனின் சமையல்

தமிழர் சமையல், பல
நூற்றாண்டுகளாக தென் இந்தியா ,
இலங்கை மற்றும் பிற நாடுகளில்
வசிக்கும் தமிழர்களால்
வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின்
சிறந்த சமையல்களில் ஒன்றாகும்.
இயற்கையுடனும்
காலநிலைகளுடனும் இணைந்த
ஒரு கிராமிய
சூழலிலேயே இச்சமையல்
வளர்ந்தது.
பலவகை உணவுகளை சுவையுடன்
சமைக்க விருந்தோம்ப தமிழர்
சமையற்கலை வழிசொல்கின்றது.
பல்வகை மரக்கறிகள் (காய்கறிகள்),
சுவையூட்டும் நறுமணம் தரும்
பலசரக்குகள், கடலுணவுகள்
தமிழர் சமையலில்
இன்றியமையா இடம் பெறுகின்றன.
சோறும் கறியும் தமிழரின்
முதன்மை உணவாகும். கறிகளில்
பலவகையுண்டு;
எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக்
குழம்பு, பருப்பு, கீரை , வறை,
மசியல், மீன் கறி என்பன.
பொதுவாக, தமிழர் உணவுகள்
காரம் மிகுந்தவை. தேங்காய்,
மிளகாய், கறிவேப்பிலை ,
வெங்காயம், உள்ளி, இஞ்சி உட்பட
பல்வகை பலசரக்குகள்
கறிகளுக்கும் பிற பக்க
உணவுகளுக்கும்
சேர்க்கப்படுவது வழக்கம்.
தமிழர் சமையல் வரலாறு
இலக்கியத்தில் உணவு
பழந்தமிழ் இலக்கியத்தில்
உணவு சமைக்கும் முறைகளைக்
கூறும் நூல் மடை நூல் என
அழைக்கப்படுகிறது. அதனைப்
பற்றிய செய்திகள்
சிறுபாணாற்றுப்படை,
மணிமேகலை, பெருங்கதை
முதலிய நூல்களில்
கூறப்படுகின்றன. காலத்திற்கும்,
நிலத்துக்கும் ஏற்ற
உணவுகளை அந்நூல்களில்
அறிந்துகொள்ளலாம். சீவக
சிந்தாமணியில் முத்தியிலம்பகத்தில்
இருது நுகர்வு என்னும் பகுதியில்
சில பெரும்பொழுதிற்குரிய[1]
உணவு வகைகள்
கூறப்பட்டுள்ளன[2] .
பண்டைய தமிழரின் உணவு
தமிழ் இலக்கிய
ஆதாரங்களைக்கொண்டு அ.
தட்சிணாமூர்த்தி தனது தமிழர்
நாகரிகமும் பண்பாடும் என்ற
நூலில் "பண்டைய தமிழரின்
உணவு" பற்றி குறிப்புகள்
தந்துள்ளார். வாழ்த
நிலத்துக்கேற்பவும்
குலத்துக்கேற்பவும் பண்டைய
தமிழரிடையே உணவுகள்
வேறுபடுகின்றன. எனினும்,
அனேக தமிழர்கள் சோறும்,
மரக்கறியும், புலாணுவும்,
மதுவும் விரும்பியுண்டனர்
என்பது தெரிகின்றது. நெற்சோறு,
வரகுச்சோறு, வெண்ணற்சோறு,
நண்டுக் கறி, உடும்புக் கறி,
வரால்மீன் குழம்பு,
கோழியிறைச்சி வற்றல்,
பன்றியிறைச்சி, முயல், ஈயல்,
மாங்கனிச் சாறு, மாதுளங்காய்-
மிளக்ப்பொடி-
கறிவேப்பிலை பொரியல், ஊறுகாய்
என தமிழ்நாட்டில் வாழ்ந்த
பலதரப்பட்டோர் உண்ட
உணவுகளை தமிழ் இலக்கிய
சான்றுகளோடு அ.
தட்சிணாமூர்த்தி விபரிக்கின்றார்.
"கடுகு இட்டுக்
காய்கறிகளை தாளிப்பது",
"பசுவெண்ணையில் பொரிப்பது",
"முளிதயிர் பிசைந்து தயிர்க்
குழம்பு வைப்பது", கூழைத்
"தட்டுப் பிழாவில்
ஊற்றி உலரவைப்பது", "மோரில்
ஈயலை ஊறப்போட்டு புளிக்கறி சமைப்பது"
போன்ற பழந்தமிழர் சமையல்
வழிமுறைகளையும் அ.
தட்சிணாமூர்த்தி சுட்டியுள்ளார்.
மேலும், தென்னைக் கள்ளு,
பனங்கள்ளு, வீட்டில் சமைத்த
"தோப்பி" என்ற ஒருவகைக்
கள்ளு ஆகியவற்றை பழந்தமிழர்கள்
விரும்பி உண்டனர் என்கிறார்.
"பார்ப்பார் சங்க நாளில் புலால்
உண்டார் என்றுகோடல் சரியன்று"
என்று அ.
தட்சிணாமூர்த்தி சுட்டியுள்ளதும்
இங்கு குறிப்பிடத்தக்கது.
உணவுண்ணும் வழக்கங்கள்
தமிழர்கள் கைகளை நீரில் கழுவிய
பின்னர், ஒரு கையினால்
(பொதுவாக வலதுகை) உணவு
உண்ணும் வழக்கம் கொண்டவர்கள்.
இது கரண்டி, முள்ளுக்கரண்டி,
கத்தி போன்ற
கருவிகளை பயன்படுத்தி உணவுண்ணும்
மேலைநாட்டு வழக்கத்துக்கும்
குச்சிகள் (chop sticks ) போன்ற
கருவிகளை பயன்படுத்தி உணவுண்ணும்
சீன வழக்கத்துக்கும் மாறுபட்ட
வழக்கம் ஆகும். தமிழர்கள்
விரும்பி உண்ணும் சோறு,
இடியப்பம், புட்டு , தோசை போன்ற
உணவுகளையும் கறிகளுடன்
கைகளால் உண்ணுவதே இலகு.
குறிப்பாக கறிகளை ஏற்ற
அளவுக்கு சேர்த்து உண்ணுவதற்கு கைகள்
பயன்படுகின்றன. தற்காலத்தில்,
கரண்டி போன்ற
கருவிகளை பயன்படுத்தி உணவுண்ணும்
மேற்கத்திய முறையும்
தமிழர்களிடம் பரவிவருகின்றது.
கிராமப் புறங்களில் தரையில்
அல்லது தாள் இருக்கைகளில்
அமர்ந்து உணவு உண்ணுதலே வழக்கம்.
தமிழர்கள் செழுமையாக
சமைத்தாலும் வேகமாகவும்
அதிகமாகவும் உண்ணும்
வழக்கமுடையவர்கள்.
உணவு உண்ணும்போது பேசுவதை நற்பழக்கமாகக்
கருதுவதில்லை.
பழந்தமிழரின்
உணவு உட்கொள்ளும் 12 வகைகள்
[3]
1. அருந்துதல் - மிகச் சிறிய
அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் - வாயைக்
குவித்துக்கொண்டு நீரியற்
பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் - நீரியல்
உணவை (கஞ்சி போன்றவை)
சிறிது சிறிதாக பசி நீங்க
உட்கொள்ளல்.
5. தின்றல் -
தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் -
சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் - நாக்கினால்
துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் - முழுவதையும் ஓர்
வாயில்
ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் - நீரியற்
பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் - பெருவேட்கையுடன்
மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் - கடிய பண்டத்தைப்
பல்லால் கடித்துத்
துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் - பல்லுக்கும்
நாக்குக்கும்
இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.
வாழையிலையில் உணவு
விருந்துகளில்
அல்லது அன்னதானங்களில்
வாழையிலையில்
உணவுண்பது தமிழர் வழக்கம்.
இந்தியாவிலும் இலங்கையிலும்
வாழையிலை இலகுவாக
பெறக்கூடிய மலிவான பொருள்
ஆகையால்
பலருக்கு உணவளிக்கும்பொழுது வாழையிலையை பயன்படுத்தியிருக்கலாம்.
நடுத்தர உணவகங்களில்
பாத்திரங்களின் மேல் அளவாக
வெட்டப்பட்ட
வாழை இலையை வைத்து உணவு பரிமாறுவது உண்டு.
இப்பயன்பாடு, பாத்திரங்களில்
தூய்மை காக்கவும்,
சுத்தப்படுத்துவதற்கான
நீரை சேமிக்கவும் உதவுகிறது.
சிற்றுண்டிகளை தட்டில் பரிமாறும்
உணவகங்கள் கூட
சோற்றை வாழையிலையில்
பரிமாறுவதே வழக்கம்.
உணவகங்களில் பாத்திரங்களின்
தூய்மையை பற்றி ஐயமுறுவோர்,
வாழையிலையில் உண்ண
விரும்புவதும் உண்டு.
வாழையிலையில் கைகளால்
உணவுண்ணுவது உணவுக்கு சுவைகூட்டும்
என்பது பலரது எண்ணமாக
இருக்கிறது. இது தவிர, பிற
சாதியினருக்கு தாங்கள்
பயன்படுத்தும் தட்டுகளில்
உணவு பரிமாற விரும்பாத சிலர்,
நாசூக்காக
வாழையிலையை பயன்படுத்துவதும்,
இதே காரணத்துக்காக
உணவகங்களில்
வாழையிலை உணவுண்ண
விரும்புவதும் உண்டு. சில
மலிவு விலை உணவகங்களில்
தேக்க இலையிலும் தைக்கப்பட்ட
பிற மர
இலைகளிலுமோ உணவு பரிமாறப்படுவதுண்டு.
மூன்று வேளை உணவு
பொதுவாக, தமிழர்கள்
காலை வேளைகளில் தேநீர் அல்லது
காப்பி அருந்தும் வழக்கம்
உடையவர்கள். சிலர் நீர்
அல்லது பழரசங்கள் அருந்தும்
வழக்கமும் உடையவர்கள்.
காலை உணவாக இட்லி , தோசை,
இடியப்பம் போன்றவற்றை சாம்பார் ,
சட்னி போன்றவற்றுடன் உண்பர்.
அடிமட்ட, நடுத்தர குடும்பங்களில்
காலையில் சோறுண்பவர்களும்
உளர். பழைய சோறு உண்ணும்
வழக்கமும் தமிழர்களிடம் உண்டு.
உணவகங்களில் காலையில் வெண்
பொங்கல், வடை , தோசை, இட்லி,
பூரி போன்றவை கிடைக்கும்.
நன்பகல் உணவே தமிழர்களின்
முதன்மையான உணவு ஆகும்.
சோறும் கறியுமே தமிழரின்
முதன்மையான நன்பகல் உணவாக
விளங்குகிறது. பலவித பக்க
உணவுகளும் மதிய வேளைகளில்
சேர்த்து உண்ணப்படுவதுண்டு.
இரசம், தயிர் , மோர் போன்ற நீர்ம
உணவுகளும் மதிய உணவில்
சேர்த்து உண்ணப்படுகின்றது.
பிற்பகலிலும் மாலையிலும்
சிற்றுண்டிகளும் பழங்களும்
உண்ணும் வழக்கமும்
பலருக்கு உண்டு. தேநீர் கடைகள்,
வெதுப்பகங்கள் ஆகியவற்றில்
இந்நேரத்தில் வடை, பஜ்ஜி,
போண்டா ஆகியவை விரும்பி வாங்கி உண்ணப்படுகின்றன.
இரவு உணவாக வீடுகளில் சோறு,
தோசை, பிட்டு, இடியப்பம் , பூரி,
சப்பாத்தி,
போன்றவை உண்ணப்படுகின்றன.
உணவகங்களில் பரோட்டா போன்ற
உணவுகளும் கிடைப்பதுண்டு.
ஒருவேளை உணவுக்கும் அவலம்
பல ஏழைத் தமிழர்கள்
ஒருவேளை உணவுக்கே அவலப்படுகின்றார்கள்.
"வறுமைக் கோட்டுக்குக்
கீழே வாழ்பவராகக் கருதப்படும், 35
சதவீத மக்கள் (தமிழ்நாடு )
பெரும்பாலும் ஒரு நேர
உணவையே முழுமையாக
உண்பதாக கொள்ளலாம். இவர்கள்
2200 கலோரிக்கும் குறைவாக
ஊன்பதாகக் கணக்கிடுவர்" [4] .
தமிழர் உணவுவகைகள்
கடலுணவு
தமிழ் நாடும் தமிழீழமும் நீண்ட
கடற்கரையை கொண்டுள்ளமையால்,
தமிழர்கள் உணவில்
கடலுணவு முக்கிய
பங்கு வகிக்கின்றது. மீன், இறால் ,
நண்டு, கணவாய், மட்டி
ஆகியவை தமிழர்களால்
விரும்பி உண்ணப்படுகின்றது.
இறைச்சி
தமிழர்கள் கோழி , ஆடு , மாடு, பன்றி
, அணில் , முயல் , உடும்பு , மான் ,
மரை போன்ற
உணவுகளை உண்ணும் வழக்கம்
உடையவர்கள். கோயில்களில்
விலங்குகளை காவு கொடுத்து அவ்விறைச்சியை பங்கு போட்டு உண்ணும்
வழக்கம் சில கிராமங்களில் உண்டு.
மாடு உண்பதை இந்து சமயத்தை பின்பற்றும்
தமிழர்கள் பெரும்பாலும்
தவிர்க்கின்றார்கள்; ஆனால்,
புலம்பெயர்ந்த நாடுகளில்
இந்து சமயத்தை பின்பற்றும் பல
தமிழர்களால் மாடும்
உண்ணப்படுகின்றது.
சைவ உணவு
தமிழர் சமையலில் சைவ
உணவு சிறப்பிடம் பெறுகின்றது.
சைவம் என்றால்
மரக்கறி உணவை குறிக்கும்.
பெரும்பாலான தமிழர்கள் சைவ
சமயத்தை பின்பற்றுவதால்,
அச்சமயத்தில் சைவ
உணவு பரிந்துரைக்கப்படுவதால்
சைவ உணவு தமிழர் சமையலில்
ஒரு நீண்ட வரலாற்றையும் [1]
விரிவடைந்த
ஒரு பங்கை வகிக்கின்றது.
சிறப்பு உணவுகள்
கூழ்
பொங்கல

ஆர்யபட்டா

இந்தியக் கணிதவியல் வரலாற்றில்
இரண்டு ஆரியபட்டாக்கள் புகழ்
பெற்றுள்ளார்கள். இவர்களுள்
ஐந்தாம் நூற்றாண்டின்
இறுதிப்பகுதியிலும், ஆறாம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும்
வாழ்ந்த ஆரியபட்டாவைப்
பற்றியது இக் கட்டுரை.
பிற்காலத்தில் வாழ்ந்த இரண்டாம்
ஆரியபட்டா என்பவரிடம்
இருந்து வேறுபடுத்துவதற்காக
இவரை முதலாம் ஆரியபட்டா
அல்லது மூத்த
ஆரியபட்டா எனவும்
அழைப்பது உண்டு.
ஆரியபட்டா ( Āryabhaṭa ; வடமொழி :
आर्यभटः, கிபி 476 ~ 550) என்பவர்
இந்தியக் கணிதவியலின் செந்நெறிக்
காலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற
கணிதவியலாளரும், இந்திய
வானியலாளர்களுள்
முதன்மையானவரும் ஆவார்.
அவருடைய மிகவும் புகழ் பெற்ற
பணிகள் ஆர்யபட்டீய (கிபி 499, 23
வயதில்) மற்றும் ஆரிய-சித்தாந்தம்
ஆகும்.
முதலாம் ஆரியபட்டாவின்
பிறப்பிடத்தைச் சரியாகத்
தீர்மானிக்கத்தக்க வகையில்
சான்றுகள் எதுவும்
அகப்படவில்லை. எனினும் இவர்
குசுமபுர என்னும் இடத்துக்குச்
சென்று அங்கே உயர்கல்வி கற்றதாகவும்,
அங்கே வாழ்ந்ததாகவும்
அறியப்படுகின்றது. இவருடைய
நூலுக்கு உரையெழுதிய பாஸ்கரர்,
இவ்விடம், இன்றைய பாட்னாவான
பாடலிபுத்திரமே என்கிறார்.
ஆரியபட்டா எழுதிய நூல்களுள்,
ஆரியபட்டீயம், ஆரியபட்ட
சித்தாந்தம்
என்பவை முக்கியமானவை.
இயற்கணிதத்தைச்
சார்ந்து முதன்முதலில் உலகில்
எழுதப்பட்ட நூல் இந்தியாவில்
ஆரியபட்டாவால் 5ம் நூற்றாண்டில்
எழுதப்பட்டது. இது பீஜகணிதம்
என்று பெயர்கொண்டது. பாடல்
வடிவில் அமைந்துள்ள
ஆரியபட்டீயம், கணிதவியல்,
வானியல் என்பன தொடர்பான
கண்டுபிடிப்புக்கள் பலவற்றைக்
கொண்டுள்ளது. தொடர்ந்த பல
நூற்றாண்டுகளிலும் இந்தியக்
கணிதவியலில் இந்நூல்
செல்வாக்குச் செலுத்தியது. மிகச்
சுருக்க வடிவில் இருந்த
இந்நூலுக்கு, விரிவான
உரைகளை இவரது மாணவரான
முதலாம் பாஸ்கரரும்; 15 ஆம்
நூற்றாண்டில், ஆரியபட்டீய
பாஷ்யம் என்ற பெயரில் நீலகண்ட
சோமயாஜி என்பவரும்
எழுதியுள்ளனர்.
வாழ்க்கை வரலாறு
ஆர்யபட்டா பிறந்த வருடத்தைப்
பற்றி தெளிவாக ஆர்யபட்டியாவில்
கூறி இருந்தாலும், அவர் எந்த
இடத்தில் பிறந்தார்
என்பது அறிஞர்களுக்கு இடையே ஒரு புரியாத
புதிராக இன்றும்
இருந்து வருகிறது. சிலர் அவர்
நர்மதா மற்றும் கோதாவரி
நதிகளுக்கிடையே இருந்த அஷமாக
என்ற ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள
தெலுங்கானா வட்டாரத்தில்
பிறந்ததாகவும், ஆனால் முந்திய
புத்தமத உரைகள்
அஷ்மாகவை இன்னும்
தெற்கு வசமாக தக்ஷிணபதத்தில்
அதாவது தக்காணப் பீடபூமியிலும்,
மற்றும் இதர உரைகள் அஷமாக -
வில் அலெக்சாந்தருடன் போர்
புரிந்ததாகவும் விளக்கி உள்ளன,
அப்படி இருந்தால் அது இன்னும்
வடக்கு நோக்கி இருந்து இருக்கும். [1]
சமீபத்தில் நடந்த
ஒரு ஆய்வு ஆர்யபட்டா கேரளாவில்
உள்ள சமரவட்டம் என்ற இடத்தைச்
சார்ந்தவர் என்று கூறி உள்ளது.
(10N51, 75E45). இந்த
ஆய்வு அஷமாக
என்பது ஸ்ராவணபெலகோல என்ற
ஜெயின் மதத்தினர் வாழ்ந்து வந்த
இடமான ஒரே கல்லில் செய்த
சிற்பங்கள் பல நிறைந்த
சுற்றி இருக்கும் இடங்கள் அஷமாக
என்ற பெயர் உள்ள நாடாக
அது கற்பிதம் கொண்டுள்ளது.
சமரவட்டம் என்ற இடம் ஜெயின்
மதத்தினரின் தொன்மை வாய்ந்த
ராஜா பரதாவின் பெயரில் நிறுவிய
பாரதப்புழா நதியின் அருகாமையில்
உள்ள ஒரு ஜெயின் மதத்தினரின்
குடியிருப்பின் ஒரு பாகமாக
தெளிவு செய்கிறது.
ஆர்யபட்டா கூட யுகங்களைக்
குறிப்பிடும் போது,
ராஜா பரதரை சுட்டிக்
காட்டி இருக்கிறார் -
தாசகிடிகா என்ற நூலில் ஐந்தாம்
கவிதை வரியில் பாரத வருடங்கள்-
பாரத ராஜாவிற்குப் பின்
எத்தனை வருடங்கள் கழிந்த
பிறகு நிகழ்ச்சிகள் நடந்தன என்று.
அந்த நாட்களில் குசுமபுர என்ற
இடத்தில் ஒரு புகழ் பெற்ற
பல்கலைக் கழகம் இருந்தது,
ஜெயின் மதத்தினர்
இங்கே முடிவுகள் எடுக்கும்
செல்வாக்குடன் வாழ்ந்தார்கள்
மற்றும் ஆர்யபட்டாவின் பணிகள்
குசுமபுராவை சென்றடைந்து நல்ல
பாராட்டுக்கள் பெற்றிருக்கலாம்.[2]
[3]
எனினும், ஏதோ ஒரு நேரத்தில்,
அவர் மேல் படிப்புக்காக
குசுமபுராவிற்கு சென்றார் மற்றும்
அங்கே சில நாட்களுக்கு வசித்தார்
என்பது ஓரளவு உறுதியாகும்.[4]
பாஸ்கர I (கி பி 629)
குசுமபுராவைப் பாடலிபுத்ராவாக
அடையாளம் கண்டுள்ளார். (நவீன
பட்னா).
குப்தப் பேரரசு, முடிவு பெறும்
தறுவாயில் அங்கே அவர் வசித்தார்,
அந்த சமயமானது இந்தியாவின்
பொற்காலமாகக் கருதப்படுகிறது,
அப்போது புத்தகுப்தா மற்றும் இதர
சிறிய ராஜாக்கள் ஆண்டு வந்த
காலம்,
அதாவது விஷ்ணுகுப்தா என்பவரின்
ஆட்சிக்கு முன்னதாக;
அப்போது ஏற்கனவே வடகிழக்கு மாகாணங்கள்
ஹண் இனத்தினரின்
தாக்குதலுக்கு உட்பட்டு இருந்தது.
ஆர்யபட்டியத்தில்
ஆர்யபட்டா " லங்கா "என்று பல
முறை குறிப்பிட்டுள்ளார், ஆனால்
அவருடைய "லங்கா"
என்பது ஒரு கற்பனை வாதமாகும்,
அது பூமத்திய ரேகையில்
உஜ்ஜையனி நாட்டின்
நிலநிரைக்கோடிற்கு சமமாக உள்ள
ஒரு புள்ளியிடத்தை குறிப்பது ஆகும்.
படைப்புகள்
ஆர்யபட்டா கணிதம் மற்றும்
வானவியல் சார்ந்த பல ஆராய்ச்சிக்
கட்டுரைகளை எழுதியுள்ளார்,
அவையில் சில
தொலைந்து போயின. அவருடைய
பெரும் பணியான, ஆர்யபட்டீய,
கணிதம் மற்றும் வானவியலுக்கான
ஒரு பெரியநூற்சுருக்கம். இந்திய
கணித இலக்கியத்தில் பல
முறை பயன்படுத்திய, மேலும்
நவீன காலத்திலும் பயன்பெறக்
கூடியதாக விளங்குகிறது.
ஆர்யபட்டீயவின் கணித பாகம்
எண்கணிதம், அட்சரகணிதம், தல
கோணவியல் மற்றும் உருண்ட
கோணவியல் அடங்கியது. மேலும்
அவற்றில் தொடரும் பின்னங்கள்,
இருபடிச்சமன்பாடு, அடுக்குத்
தொடர்களின் கூட்டும்
முறை மற்றும் சைன்
கோணங்களுக்கான
அட்டவணை அடங்கும்.
ஆர்யா -சித்தாந்த , என்ற
தொலைந்து போன வானியல்
கணிதம் கொண்ட படைப்பு,
ஆர்யபட்டாவுடன் வாழ்ந்தவரான
வராஹமிஹிரா, என்பவரின்
படைப்புக்களில் இருந்தும், மற்றும்
அதற்குப் பின்னால் வந்த
கணிதயியலாளர்கள் மற்றும்
தொடர்விளக்க உரையாளர்களின்
படைப்புகளில் இருந்தும், அவற்றில்
பிரம்மகுப்தா மற்றும் பாஸ்கரா I
ஆகியோர் அடங்குவர், தெரிய
வருகிறது. இந்தப்
படைப்பானது பழமை வாய்ந்த
சூரிய சித்தாந்தத்தை தழுவியதாக
தெரிகிறது, மேலும்
அது நள்ளிரவை-நாளை-கணக்கில்
கொள்கிறது, ஆனால்
அதற்கு எதிர்மறையாக
ஆர்யபட்டீயவில் சூரிய உதயம்
கணக்கில் கொண்டுள்ளது. இதில்
பலவகையான வானவியல்
ஆராய்ச்சிக்கான கருவிகளைப்
பற்றி விவரித்துள்ளது, அவை
க்னோமொன் என்ற கருவி (சங்கு -
யந்திரம்{ /1}), ஒரு நிழற்க்
கருவியான (சாயா -யந்திரம் ),
கோணங்களை அளக்கும்
கருவிகளாக இருக்கலாம்,
அரை வட்டம் மற்றும் வட்டமான
(தனுர் -யந்திரம் / சக்ர -யந்திரம் ),
ஒரு உருளை வடிவம் கொண்ட வடி
யஸ்தி -யந்திரம்,
ஒரு குடை போன்ற கருவியான சத்ர
-யந்திரம் , மற்றும் தண்ணீர்
கடிகாரங்கள் இரு விதமானவை,
அம்பு போன்றதும் மற்றும்
உருளை வடிவத்தில். [1]
போன்றவை
அரபு மொழி பெயர்ப்பின் காரணமாக
மூன்றாவதான
ஒரு ஆர்யபட்டாவின் உரையும்
கிடைத்துள்ளது, அது அல் ந்த்ப்
அல்லது அல்-நந்ப், என்ற
தலைப்புடன் கூடியது, ஆனால்
அதன் சமஸ்க்ரி்த பெயர் தெரிய
வரவில்லை. இது ஒன்பதாம்
நூற்றாண்டை சார்ந்ததாக
இருந்திருக்கலாம். இதைப்
பற்றி பெர்சியன் நாட்டு அறிஞர்
மற்றும் இந்தியத்
தொடர்வரலாறுகளை எழுதிய
அபூ ரெஹான் அல்-பிரூனி [1]
குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆர்யபட்டீயம்
ஆர்யபட்டாவின் படைப்பைப்
பற்றி நேரடி விவரங்களை
ஆர்யபட்டீயத்தில் இருந்து தான்
அறிந்து கொள்ள முடியும்.
ஆர்யபட்டீயம் என்ற பெயர்
அமைந்ததற்கு காரணம் பின்னர்
வந்த தொடர் விளக்க
உரையாளர்கள் தான்,
ஆர்யபட்டா அவராகவே அதற்கு பெயர்
சூடி இருக்க வாய்ப்பில்லை;
அவர் சீடன் பாஸ்கர I அதை
அஷ்மகதந்த்ரா
அல்லது அஷ்மகா எழுதிய
உரை என்று பரிந்து உரைத்திருக்கிறார்.
எப்பொழுதாவது அதை ஆர்ய-
ஷடாஸ் -அஷ்டா{/0} என்றும்
கூறுவர், இல,
ஆர்யபட்டாவின் 108,
அவை உரையில் உள்ள
கவிதை வரிகளை குறிக்கும்.
அது மிகவும்
சொற்செறிவு நிறைந்த சூத்ரா
இலக்கிய நடையில் எழுதியது,
அதன் ஒவ்வொரு வரியும்
ஒரு சிக்கலான
முறையை எளிதில் மனப் பாடம்
செய்யும் வகையில்
அமைந்துள்ளது. அதனால்,
அதன் உட்பொருளை விளக்கம்
செய்தது தொடர் விளக்க
உரையாளர்களே. அதன்
முழு உரையும் 108
கவிதை வரிகளைக்
கொண்டுள்ளது மேலும்
கூடுதலாக அறிமுகவுரையாக
13 வரிகளும்,
இவை அனைத்தும் நான்கு
பதங்கள்
அல்லது அத்தியாயங்கள்
கொண்டதாகும்.
1. கிடிகபதம் : (13 கவிதை வரிகள்)
பெரிய அளவில் காலத்தைக்
குறிப்பவை - கல்ப , மன்வந்தர ,
யுகா , இவை யாவும்
ஒரு தற்கால
அண்டவியலை அறிமுகப்படுத்துகிறது அது அதற்கு முன்னர்
எழுதிய உரைகளான
லகாதாவின் வேதாங்க
ஜ்யோதிசத்தை
வேறுபடுத்தி உள்ளது. (சி ஏ .
முதல் நூற்றாண்டு கி.மு).
இதில் சைன் கோணங்களின்
(ஜ்யா ),
அட்டவணை ஒரே வரியில்
அடங்கி உள்ளது. ஒரு
மகாயுகத்தில், ஏற்படக்கூடிய
கிரகங்களைச் சார்ந்த
சுழற்சிகளுக்கு 4.32 மில்லியன்
ஆண்டுகள்
என்று வரையறுக்கப் பெற்றது.
1. கணிதபதம் (33 கவிதை வரிகள்),
அளவை இயலைச்
சார்ந்தது (க்ஷேத்திர
வ்யவஹாரா ), எண்கணிதம்
மற்றும்
கேத்திரகணிதத்துக்குரிய
விருத்தி, க்னோமொன் /
நிழல்கள் (ஷங்கு - சாயா ),
எளிதான , இருபடிச்
சமன்பாடு (இருபடிய) ,
ஒருங்கமைச் சமன்பாடுகள்
(ஒருங்கமை) மற்றும்
டையோபாண்டைனின்
சமன்பாடுகள் (தேறப்பெறாத
சமன்பாடுகள் (குட்டக )
1. காலக்ரியப்பதம் (25 வரிகள்):
காலத்தின்
வெவ்வேறு அளவுகோல்கள்
தொகுதி அலகு போன்ற
பிரிவுகள் மற்றும் கிரகங்களின்
இருப்பிட
நிலைகளை ஒரு குறிப்பிட்ட
நாள் அன்று அறிந்து கொள்ளும்
விதம்.
இடைப்படு மாதங்களை கணித்தலுக்கான
(அதிகமாக ), க்ஷய-திதி
முறைகள். ஏழு நாட்கள்
கொண்ட வாரத்தையும்,
வாரத்தின் பெயர்களையும்
விவரிக்கிறது.
1. கோலபதம் (50 வரிகள் ): வானக்
கோளத்தின் கேத்திரகணித /
திரிகோணகணித பாங்குகள்,
ஞாயிற்றின்
தோற்றப்பாதை (நீள்வட்டம்) ,
வானநடுவரை , கணு, புவியின்
ஆகாரம், பகல் மற்றும்
இரவுகளுக்கான காரணங்கள்,
இராசியின் அடையாளங்களை
கீழ்வானத்தில் எழுதல்
போன்றவை மற்றும் அவற்றின்
சிறப்புக்கூறுகள். கூடுதலாக,
சில பதிப்புகளின் கடைசியில்
சில கோலோபோன் (அச்சகம்)
(பிற இணைப்புகளைச்)
சேர்த்துள்ளனர்,
அவை படைப்பின்
குணாதிசயங்களை மெச்சுபவையாக
இருக்கும்.
ஆர்யபட்டீயா கணிதவியல் மற்றும்
வானவியலில் பல
புதுமைகளை கவிதை நயத்துடன்
புகுத்தியது, அவை பல
நூற்றாண்டுகளாக பயனுள்ளதாக
செல்வாக்குடன் அமைந்துள்ளன.
மிக சுருக்கமாக இருக்கும் இந்த
உரையினை அவரது சீடரான
பாஸ்கரா I தனது தொடர்விளக்க
விளக்க உரையாடல்களிலும்,
(பாஷயா , பா. 600) மேலும் நீலகந்த
சோமையாஜி தனது உரையான
ஆர்யபட்டீய பாஷ்யாவிலும்,
விவரமாக
எடுத்து உரைத்துள்ளனர்.(1465).
கணிதம்
இடப்பெறுமான முறை மற்றும்
சூன்யம்.
எண்கள் சார்ந்த இடப்பெறுமான
முறை, முதன் முதலாக மூன்றாம்
நூற்றாண்டின்
பக்ஷலி கையெழுத்துப்படியில்
எழுதியது, அவருடைய பணியில்
தெளிவாக படுத்தினார். [5] ; அவர்
அதற்கான குறியீடுகளைப் பயன்
படுத்தவில்லை என்றாலும்,
ஆனால் பிரான்ஸ்
நாட்டு கணிதயியலாளர் ஆன
ஜியோர்ஜாஸ் ஈப்ராஹ்
ஆர்யபட்டாவின் படைப்பில்
சூன்யத்தை பற்றியதான
அறிவாற்றல் உள்ளடக்கமாக காணப்
படுவதாகவும், அதை இடப்
பெறுமான முறையில்
இதை பத்து என்ற எண்ணின் அதிக
மதிப்பீடுகளாக சக்தியாக
கொண்டு அதற்கான குணகம்
சூன்யமாகவும்
கருதப்பட்டிருந்தது அதன்
படியாகும்
என்று விளக்கி உள்ளார். [6]
எனினும்,
ஆர்யபட்டா பிராஹ்மி எண்களைப்
பயன்படுத்தவில்லை; வேதிக
சமயத்தில் இருந்து , நிலவிய
சமஸ்க்ரி்த பாரம்பரிய முறையில்,
அட்சரங்களைப் பயன்படுத்தினார்,
மற்றும் அளவுகளைப்
பெறுவதற்கு (சைன்
அட்டவணைகளைப் போல)
நினைவுக்குறியீட்டு
வடிவங்களைப் பயன்படுத்தினார். [7]
.
பை என்பது ஒரு விகிதமுறா எண்
ஆர்யபட்டா பை என்ற
எழுத்தினை தோராயமாக
மதிப்பிட்டார், மேலும்
பை என்பது ஒரு விகிதமுறா எண்
என்ற முடிவிற்கு வந்தார்.
ஆர்யபட்டீயம் (gaṇitapāda 10)
இரண்டாம் பாகத்தில், அவர்
எழுதுகிறார் :
chaturadhikam śatamaśṭaguṇam dvāśaśṭistathā sahasrāṇām
'
Ayutadvayaviśkambhasyāsanno vrîttapariṇahaḥ.
'' "நூறோடு நாலைக் கூட்டு ,
அதை எட்டால்
பெருக்கு மேலும்
பிறகு 62,000 த்தை அதனுடன்
கூட்டு. இந்த விதி முறையில்
20000 விட்டம் கொண்ட
ஒரு வட்டத்தின் சுற்றளவைக்
கண்டறியலாம்."
இது என்ன சொல்கிறது என்றால்,
ஒரு வட்டத்தின் சுற்றளவு மற்றும்
அதன் விட்டத்தின் விகிதாச்சாரம்
((4+100)×8+62000)/20000 = 3.1416,
இந்த விடை ஆனது ஐந்து
பொருளுடைய இலக்கங்களுக்கு
துல்லியமாக பொருந்தும்.
ஆர்யபட்டா ஆசன்ன
(நெருங்குகிறது) என்ற
வார்த்தையை பயன் படுத்தினார்,
அது கடைசி வார்த்தைக்கு முன்னால்
இடம் பெற்றிருக்கும், அதன் மூலம்
இது தோராயமானதாகவும்,
ஆனால் அதன்
மதிப்பு அளவுக்கிணங்காததும்
ஆகும் (அல்லது விகிதமுறாத
எண்) . இது சரியானால் ,
அது மிகவும்
மதிநுட்பமிகு உளநிலையைக்
காட்டுகிறது, ஏன் என்றால்
யூரோப்பில் பை என்ற எண்ணின்
அளவுக்கிணங்கா தன்மையை 1761
ஆண்டில் தான் ஜோதன்ன்
ஹென்றிச் லம்பேர்ட் (லம்பேர்ட்) )
என்பவர் கண்டறிந்தார்.[8] .
ஆர்யபட்டீயா அரபு மொழி
பெயற்பிற்குப் பிறகு (சிஏ. 820 கி.பி.)
இந்த தோராயத்தை பற்றி அல்-
க்வாரிழ்மி யின் அட்சரக்கணிதம்
புத்தகத்தில்
குறிப்பிட்டு உள்ளது. [1] .
அளவியல் மற்றும் கோணவியல்
கணிதபதம் 6 -ல் ,
ஆர்யபட்டா ஒரு முக்கோணத்தின்
பரப்பளவை இவ்வாறு அளக்கிறார்
த்ரிபுஜாச்ய பலஷரிரம்
சமதளகோடி புஜர்தசம்வர்க
அதன் பொருளானது :
ஒரு முக்கோணத்திற்கு, அதன்
செங்குத்துடன் அரைப்
பக்கத்தை பெருக்கினால் அதன்
பரப்பளவு கிட்டும். [9]
ஆர்யபட்டா சைன் என்ற
கருத்துப்படிவத்தை தனது படைப்பான
அர்த-ஜ்ய வில் விளக்கி இருக்கிறார்.
நேர்ச்சரியாக, அது "பாதி-நாண்"
என்ற பொருள் படும். எளிதாக
இருப்பதற்கு , மக்கள் அதை ' ஜ்யா'
என்று கூற தொடங்கினர். அரபிக்
எழுத்தாளர்கள் அவருடைய
படைப்புகளை சம்ச்க்ரி்தத்தில்
இருந்து அரபு மொழி பெயர்த்த
போது, அவர்கள் அதை ஜிபா
என்றழைத்தனர் (ஒலிப்புமுறையில்
ஒப்புமை கொண்டதால்). எனினும்,
அரபு மொழி எழுத்துக்களில்,
உயிரெழுத்துக்கள் மருவியதால்
அது ஜப் என்று சுருங்கியது.
பிறகு வந்த எழுத்தாளர்கள் ஜப்
என்பது ஜிபா என்ற சொல்லின்
சுருக்கம் என்று அறிந்து கொண்டு,
அதை ஜியாப் , என்று திரும்ப
பதிலிடுத்தார்கள், அதன்
பொருளானது "சிறுகுடா"
அல்லது "விரிகுடா" ஆகும்
(அரபு மொழி, வெறும்
நுட்பச்சொல்லாக அது இருக்கிறது,
ஜிபா என்பது ஒரு பொருளும்
இல்லாத சொல்லாகும்). பிறகு 12
ஆம் நூற்றாண்டில்,
க்றேமொனா நகரத்து க்தேரர்டோ
இப்பகுப்புகளை அரபு மொழியிலிருந்து லத்தீன்
மொழிக்கு மொழி பெயர்த்த போது,
அவர் அரபு மொழி சொல்லான
ஜியாப் பை அதன் எதிப்பிரதி லத்தீன்
சொல்லான, சைனஸ் என்ற
சொல்லை மாற்றி புகுத்தினார்.
(அதன் பொருளும் "சிறு குடா"
அல்லது "விரிகுடா"வை குறிப்பதாகும்).
அதற்கு பிறகு, சைனஸ் என்பது
"சைன் ஆக ஆங்கிலத்தில்
மாறி அமைந்தது.[10]
தேறப்பெறாத சமன்பாடுகள்
பண்டைய காலத்தில் இருந்தே
இந்திய கணிதயியலாளர்களுக்கு
அதிக ஆர்வத்தைத் தூண்டியது ax
+ b =cy போன்ற
சம்னபாடுகளுக்கு விடைகளைக்
கண்டுபிடிப்பது ஆகும், இதனை
டையோபாண்டைனின்
சமன்பாடுகள் என்று கூறுவர்.
இதோ ஒரு எடுத்துக்காட்டு பாஸ்கராவின்
ஆர்யபட்டீயவைப் பற்றிக் கூறிய
விளக்க உரை :
எட்டால் வகுத்தால் மீதி 5
வரக்கூடியதும்; ஒன்பதால்
வகுத்தால் 4 வரக்கூடியதும்;
மற்றும் ஏழால் வகுத்தால் மீதி 1
வரக்கூடியதுமான எண்ணைக்
கண்டுபிடிப்பது.
அதாவது N = 8x+5 = 9y+4 = 7z+1
என்று வரும் எண்ணைக்
கண்டு பிடி. N என்ற
பதத்திற்கு மிகக் குறைவான
மதிப்பீடு 85 ஆகும். பொதுவாக,
டையோபாண்டைனின்
சமன்பாடுகள் கடினமானதாகக்
காணப்படும். இது போன்ற
சமன்பாடுகள் பண்டைய வேதிக்
இலக்கிய உரையான சுலப
சூத்திரங்களில் விரிவாக
உரைக்கப்பெற்றது, மிகவும்
பழைமையான பாகங்கள் கிமு 800
ஆண்டுகளாக இருக்கலாம்.
இதற்கு விடை காணும்
ஆர்யபட்டாவின் முறையானது
kuṭṭaka (कुट्टक) குட்டக்
முறை என்று அழைக்கப்பெற்றது.
குட்டக் என்றால் பொடியாக்குவது,
அதாவது சிறு துண்டுகளாக
அதை உடைப்பது மேலும்
அதற்கான அசல்
காரணிகளை எழுதுவதற்கு ஒரு மீள்சுருள்
நெறி முறை தேவைப்பட்டது.
இன்று இந்த மீள்சுருள் நெறிமுறை,
பாஸ்கர கிபி 621 ஆம் ஆண்டில்
காண்பித்தது போல
முதல்வரிசை டையோபாண்டைனின்
சமன்பாடுகளின் விடையைக்
கண்டுபிடிக்க உதவும் நியம
முறையாகும், மேலும் இதனை
ஆர்யபட்டா நெறிமுறை (ஆர்யபட்டா அல்கோரிதம்)
என்று அழைக்கிறார்கள். [11]
டையோபாண்டைனின் சமன்பாடு
கிர்ப்டோலோஜி, இரகசிய தகவல்
பரிமாற்றம், ரகசியமாக வைத்தல்
தொழிலுக்கு பயன்பாடுள்ளதாகும்,
மேலும் 2006 ஆர் எஸ் ஏ
மாநாடு கூட்டத்தில் குட்டக
முறை மற்றும் பண்டைய
முறைகள் சுலப சூத்திரங்கள்
பரிசீலிக்கப்பட்டன.
அட்ச்சர கணிதம்
ஆர்யபட்டீய வில் ஆர்யபட்டா சதுர
மற்றும் கனசதுர தொடர் கணிதம்
சார்ந்த தொடருக்கான
கூட்டு விடையை மிக நளினமாக
வடிவமைத்தார்: }[12]
மற்றும்
வானியல்
ஆர்யபட்டாவின் வானியல்
முறையானது அவுதயகா முறை
என்று அழைக்கப்பெற்றது.
(நாட்களின்
கணக்கெடுப்பானது காலை உதயம் ,
லங்காவில் , நிலநடுக்கோட்டில்
விடியல் ஏற்படும் போது). அவர்
வானவியல் பற்றி பின்னர் எழுதிய
நூல்கள், அவர்
இரண்டாவது ஒரு மாதிரியை முன்மொழிந்தார்,
அந்த மாதிரியான ( அர்த-ராத்ரிக ,
நள்ளிரவு சார்ந்த),
தொலைந்து விட்டது, ஆனால்
அவற்றில் சில பாகங்களைப்
பிராமகுப்தாவின் காந்தகாட்யகா
வை பற்றிய கலந்துரையாடல்
மூலம் திரும்பவும்
புனரமைக்கலாம். சில
பதிவேடுகளில் அவர் வானுலக
நகர்வினைப் புவியின் சுழற்சியின்
காரணமாக ஏற்படுவதாக குறித்துக்
காட்டுகிறார்.மேலும் இவர்
கோள்களின்
சுற்றுப்பாதையை நீள்வட்ட வடிவம்
என்று கணித்தார்
சூரிய மண்டல இயக்கம்.
ஆர்யபட்டா புவி தன்
அச்சினை ஒட்டி சுழன்று வருவதாக
நம்பினார்.
இதனை ஒரு கருத்தை வெளியிடும்
பொழுது காணலாம், லங்காவை
குறிப்பிடும் போது,
நட்சத்திரங்களின்
நகற்சியை புவி சுழற்சியால்
ஏற்படும் சார்பு இயக்கம்
என்று விவரித்துள்ளார்:
ஒரு மனிதன் தனது படகில்
முன்னோக்கி செல்லும் போது,
அவனைச் சுற்றி இருக்கும்
அசையாத பொருட்கள் பின்
நோக்கி நகருவதைப் போல
தோற்றம் அளிக்கும், அதைப்
போலவே அசையாமல்
இருக்கும் நட்சத்திரங்கள்
லங்காவில் இருந்து பார்க்கும்
போது, (அதாவது பூ மத்திய
ரேகை) நுண்மையான
மேற்கு நோக்கி செல்வது போல
காட்சி அளிக்கும்.
[அச்சலாணி பாணி சமபஷ்சிமகாணி
- கோலபதம்.9]'
ஆனால் அதற்குப் பின் வரும் வரிகள்
நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின்
உண்மையான, நகர்ச்சியைப்
பற்றி விவரிக்கிறது:
“அவை எழுவதற்கும்
மறைவதற்கும் ஆன காரணம்
அவற்றின் கதிர்வம் அடங்கிய
வட்டமானது மேலும் அதனுடன்
கிரகங்களின் சலனம், திசையன்
சார்பான காற்றால் இயக்கப்
படுவதால், லங்காவில்
தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்”.
லங்கா (இல. ஸ்ரீ லங்கா )
ஆனது இங்கே பூ மத்திய
ரேகையில் உள்ள ஒரு அடையாள
புள்ளி ஆகும், அதனை அடையாள
உச்ச நெடுங்கோடுக்கு சமமாக
வானியல் கணிப்புகளுக்காக
எடுத்துக் கொண்டதாகும்.
ஆர்யபட்டா சூரிய மண்டலத்தின்
புவிமையத் தோற்றம் கொண்ட
மாதிரியை விளக்கி உள்ளார். அதில்
சூரியன் மற்றும் சந்திரன்
இரண்டுமே மேல்வட்டம்,
நீள்வட்டங்களில்
தாங்கி செல்லப்படுகிறது, மேலும்
அவை முறைப்படி வரும்
போது புவியைச் சுற்றி வருகிறது.
இந்த மாதிரியில், இது
பைதாமகாசித்தாந்தாவிலும் (சி ஏ.
கிபி 425), கிரகங்களின்
நகர்ச்சி ஒவ்வொன்றும்
இரு நீள்வட்டங்களால் முறைப்
படுகிறது, ஒரு சின்ன மந்த (மெல்ல
செல்லும்) நீள்வட்டம் மற்றும் ஒரு
சீக்ர (விரைவான) நீள்வட்டம். [13]
புவியில் இருந்து கிரகங்களுக்கான
தூரத்தை வைத்து கிரகங்களை வரிசைப்
படுத்தினால், அவை: சந்திரன் ,
புதன், வெள்ளி, சூரியன் ,
செவ்வாய்., வியாழன் , சனி மற்றும்
கதிர்வங்கள் [1] .
கிரகங்களின் இடம் மற்றும் காலம்
ஒரே சீராக நகரும் ஒப்புடன்
நோக்கத்தக்க புள்ளியுடன்
கணிக்கப்பெற்றது, அவை புதன்
மற்றும் வெள்ளியைப்
பொறுத்தவரை, சூரியனின்
சராசரி வேகத்தைப் போல
புவியை சுற்றி வருவதாகவும்
செவ்வாய், வியாழன் மற்றும்
சனி அவை குறிப்பிட்ட வேகத்தில்
புவியைச் சுற்றி வருகின்றன,
ஒவ்வொரு கிரகமும் தனிப்பிரதியாக
வான வீதியில் சலித்துக்
கொண்டே இருக்கின்றன. வானியல்
சார்ந்த மிக்க வரலாற்றாசிரியர்கள்
இந்த இரு நீள்வட்ட
மாதிரியினை ப்டோளேமிக்கு முன்
ஆன கிரேக்க வானியலாக
கருதுகின்றனர்..[14]
ஆர்யபட்டாவின்
இன்னொரு மாதிரியில், அதாவது
சீக்த்ரோக்கா , சூரியனுடன் ஒத்த
அதன் அடிப்படை காலமானது, சில
வரலாற்றாசிரியர்களால்
ஞாயிற்றுமையமான மாதிரியாக
காணலாம். [15]
கிரகணங்கள்.
சந்திரன் மற்றும் கிரகங்கள் சூரிய
ஒளியை பிரதிபலிக்கும்
போது மின்னுகிறதாக அவர்
சொல்கிறார். அண்டப் பிறப்பியலில்
கிரகணங்களைப் பற்றி நிலவி வந்த
போலி ராகு கேது கிரகங்களால்
கிரகணம் ஏற்படுகிறது என்ற
நிலைக்கு பதிலாக, அவர்
கிரகணங்கள் புவியாலும், புவியின்
மேலும் விழும் நிழல்களால்
ஏற்படுவதாக விளக்குகிறார்.
அப்படியாக சந்திர கிரகணம் சந்திரன்
பூமியின் நிழலில் வரும்
பொழுது ஏற்படுகிறது (வரி கோல.37),
மேலும் பூமியின் நிழலின்
அளவு மற்றும் அதன் ஆதிக்கத்தில்
வரும் பரப்பளவு ஆகியவற்றைப்
பற்றி விரிவாக விவரிக்கிறார்.
(வரிகள் கோல 38-48), மேலும்
அதற்கான கணிப்பு மற்றும்
கிரகணத்தில் அடங்கிய பாகத்தின்
அளவையும் தெரிவிக்கிறார்.
அவருக்குப் பின் வந்த இந்திய
விஞ்ஞானிகள் இந்த
கணிப்பு முறையை மேலும்
மேம்பாடு செய்தனர், ஆனால்
அவருடைய முறைகளே அதன்
கருவாக திகழ்கிறது. இந்த
கணிப்புக்கான மேற்கோள்
சூத்திரம் மிகவும் துல்லியமாக
இருந்தது, மேலும் 18 ஆம்
நூற்றாண்டின் விஞ்ஞானியான
குயில்லாமே லே ஜென்டில் ,
பாண்டிச்சேரிக்கு வந்த பொது,
1765-08-30 அன்று நடந்த சந்திர
கிரகணத்தின் கால அளவு, இந்திய
கணிப்பு முறைப்படி சோதித்துப்
பார்த்த போது 41 நொடிகள்
குறைவாகவும், அவருடைய
அட்டவணை முறைப்படி (அறிவியல்
அறிஞர்|டோபியாஸ் மேயர், 1752)
பார்க்கையில் 68 நொடிகள்
அதிகமாகவும் ஆக கண்டது.[1] .
ஆர்யபட்டாவின் கணிப்பின்
படி புவியின் பரி்தி் அல்லது
வட்டத்தின் சுற்றளவு, பரிதி|
சுற்றளவு 39,968.0582
கிலோ மீட்டர்கள் ஆக
கணக்கிட்டது, இது உண்மையான
நீளமான 40,075.0167
கிலோ மீட்டர்களை விட 0.2%
விழுக்காடு மட்டுமே குறைவாக
இருந்தது. இந்த கணிப்பின்
தோராயமானது குறிப்பிடத்தக்க
மேம்பாட்டுடன் கூடியது, ஏன்
என்றால் அதற்கு முந்தைய கிரேக்க
கணிதயியலாளர் ஆன,
ஏரதொஸ்தெநெஸ் (சி. 200 கி.மு.),
அவருடைய கணிப்பில் நவீன
அளவுகொல்களின் அலகு பயன்
படுத்தப் படவில்லை ஆனால்
அவருடைய மதிப்பீடு 5-10%
வரை பிழை உள்ளதாக
இருந்தது.[16][17]
மீன்வழிக் காலவட்டம்
நூதன ஆங்கில நேரத்தின்
அலகுகளைக்
கொண்டு கணக்கிட்டுப் பார்த்தால்,
ஆர்யபட்டாவின்
மீன்வழி் சுழற்சிக்கான
கணிப்பு (நட்சத்திரங்களின்
இடத்தை பொருத்தியதாக
கொண்டு புவியின்
சுழற்சியை கணக்கிடுதல்) 23
மணிகள் 56 நிமிடங்கள் மற்றும் 4.1
நொடிகள் ஆக இருந்தது;
தற்போதைய நவீன
பெறுமதி ஆனது 23:56:4.091.
அதே போல்,
மின்வழி ஆண்டு (மீன்வழி் வருடத்திற்கான)
அவருடைய மதிப்பீடு 365 நாட்கள் 6
மணிகள் 12 நிமிடங்கள் 30
நொடிகள், அதில் உள்ள
பிழையானது ஆண்டொன்றிற்கு 3
நிமிடங்கள் 20 நொடிகள் மட்டுமே.
மீன்வழிக் காலவட்டத்தைப்
பற்றி மிக்கவாறும் அன்றைய
அனைத்து இதர வானியல்
முறைகளிலும் தெரிந்தே இருந்தது,
ஆனால் அந்த கால கட்டத்தில்
அவருடைய கணிப்பே மிகவும்
துல்லியமாக இருந்தது.
ஞாயிற்றுமை மையம்
ஆர்யபட்டா புவி தனது அச்சினை மையமாக
கொண்டு சுழன்று கொண்டிருப்பதாகவும்,
மேலும் அவருடைய கிரகங்களின்
மேல்வட்டங்களுடன் கூடிய
மாதிரி் தனிமங்கள்,அதே வேகத்தில்
சூரியனை சுற்றி வருகிறது என்றும்
உரிமைப் படுத்தியுள்ளார். அதனால்
ஆர்யபட்டாவின் கணிப்புகள்
அவருடைய ஞாயிற்றுமை மையம்
கொண்ட மாதிரியின் அடிப்படையில்
கிரகங்கள் சூரியனை மையமாக
கொண்டு சுற்றி வருவதை கருத்தில்
கொண்டு இயக்கியதாக
இருக்கலாம். [18][19] இந்த
ஞாயிற்றுமை மைய
மொழி பெயர்ப்புக்கு எதிர்ப்புரைத்
தெரிவித்து வெளி வந்த
ஒரு விமர்சனம் பி. எல்.வான் தேர்
வேர்டேன் அவர்களின் புத்தகம்
"இந்தியாவின் கிரகங்கள்
கோட்பாட்டினை முழுதும் தவறாக
புரிந்து கொண்டு, [அது]
ஆர்யபட்டாவின் விளக்கங்களின்
ஒவ்வொரு வரியையும் சுவையற்ற
மறுப்புகளை தெரிவிக்கிறது," [20]
இருந்தாலும் சிலர் ஆர்யபட்டாவின்
முறை அதற்கு முன்னதாக
தெரியப்படாத ஒருவரின்
ஞாயிற்றுமை மைய முறையைச்
சார்ந்திருக்கலாம் என்று ஏற்றுக்
கொண்டும் இருக்கிறார்கள். [21]
அவர் கிரகங்களின் பாதை
நீள்வட்டத்துக்கு உரியதாக
ஆராய்ந்து இருக்கலாம், இதற்கான
முக்கிய ஆதாரங்கள் எதுவும்
குறிப்பிடப் படவில்லை.[22] சமோஸ்
நாட்டின் அரிஸ்டர்சுஸ் (கி.மு 3
ஆம் நூற்றாண்டு ) மேலும்
பொண்ட்ச நகரத்து ஹெரச்ளிதேஸ்
(4 ஆம் நூற்றாண்டு கி.மு.)
இருவரும் ஞாயிற்றுமை மைய
தத்துவத்தினை அறிந்து செயல்பட்டதாக
கூறினாலும், பண்டைய இந்திய
நாட்டில் அறிந்த கிரேக்க வானியல்
ஆன பாலிச சித்தாந்த தில்
(அலேக்சாந்திரியாவின் பால்
என்பவராக இருந்து இருக்கலாம்)
ஞாயிற்றுமை மைய தத்துவத்தைக்
குறிப்பிடவில்லை.
மரபுரிமைப் பேறு
இந்திய மரபு சார்ந்த
ஆர்யபட்டாவின் படைப்புகள்
மிகவும் செல்வாக்குடையது,
மேலும் அவை மொழிபயர்ப்புகள்
மூலம் பல அண்டை நாடுகளின்
கலாசாரத்தைப் பிரதீபலித்தது.
இஸ்லாமிய பொற்காலத்தில் இதன்
அரபு மொழி மொழி பெயர்ப்பு (ப.
820), மிகவும் செல்வாக்குடன்
கூடியது. அவர் படைப்புகளால்
ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி அல்-
க்வரிழ்மி மேற்கோள்
காட்டி உள்ளார், மேலும் அவரைப்
பற்றி பத்தாம் நூற்றாண்டின்
அரபு அறிஞர் ஆன அல்-
பிருனி கூறி உள்ளார்,
ஆர்யபட்டாவின் சீடர்கள்
புவியானது அதன்
அச்சை மையமாக
கொண்டு சுற்றிக்
கொண்டிருக்கிறது என்று நம்பி வந்தனர்.
அவர் சைன்(ஜ்ய) மற்றும் கோசைன்
(கோஜ்ய), வெர்சைன் ( உக்ரமஜ்ய)
மற்றும் தலை கீழான சைன்
(ஒட்க்ரம் ஜய), போன்ற
வைகளை வரையறுத்தார், மேலும்
அவற்றின் அடிப்படையில்
கோணவியல் கணிதம் பிறந்தது.
அவர் தான் முதன் முதலாக சைன்
மற்றும் வெர்சைன் (1 - கோஸ்
எக்ஸ்) அட்டவணைகளை, சுட்டிக்
குறிப்பிடு செய்தவர்; 0°இருந்து 90°
வரை, 3.75° இடை வேளைகளைக்
கொண்டு,
நான்கு பதின்பகுப்பு வரை மிகச்சரியாக
குறித்து வைத்தார்.
நிஜம் என்ன என்றால், புதிதாக
சூட்டிய பெயர்களான "சைன் "
மற்றும் " கோசைன் ",
ஆர்யபட்டா அறிமுகப்படுத்திய
சொற்களான ஜ்ய மற்றும்
கொஜ்யவுடன் சற்றும்
பொருந்தவில்லை. அவற்றை ஜிபா
மற்றும் கொஜிபா என்று
அரபு மொழி மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது.
அவற்றை கிரேமோன
நாட்டு கேரர்து என்பவர்
அரபு வடிவவியல் உரையை
லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்த
போது; அவர் ஜிபா என்ற
சொல்லை அரபு சொல்லான ஜைப்
எனத் தவறாகப் புரிந்துகொண்டார்,
அதன் அர்த்தம் "துணியில்
ஒரு மடிப்பு" என்பதாகும்,
ல.சினுஸ் (சி .1150) [23] .
ஆர்யபட்டாவின் வானவியல் கணித
முறைகளும் மிகவும்
செல்வாக்கு பெற்றவை ஆகும்.
கோணவியல் பட்டியல்கள்களுடன்,
இஸ்லாமியர் உலகமும்
இவற்றை பரவலாக
பயன்படுத்தி வந்தனர்,மேலும்
அவற்றை (ஜிஜ் எனப்படும்) பல
அரபு மொழி வானியல்
அட்டவணைகளில் பயன்
படுத்தினர். குறிப்பாக, அல்-
அண்டளுஸ் (ஸ்பெயின்
நாட்டு அரபு) விஞ்ஞானி அல்-
சர்கலி (11 ஆம் நூற்றாண்டு),
தனது பணிகளில் பயன்படுத்திய
வானியல் அட்டவணைகள் லத்தீன்
மொழியில் டோலேடோவின்
அட்டவணைகளாக
மொழி பெயர்க்கப் பட்டன (12 ஆம்
நூற்றாண்டு), மற்றும்
அவை பிரித்தானியர்களால் பல
நூற்றாண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்ட
மிகவும் துல்லியமான
இடை வெளிக்கால
அட்டவணைகளாக அமைந்தது.
ஆர்யபட்டா மற்றும் அவர் சீடர்கள்
பயன்படுத்திய
நாள்காட்டி கணிப்புகளை இந்தியாவில்
தொடர்சியாக பஞ்சாங்கம்
கணிப்பதற்காக , அதாவது
ஹிந்துக்களின்
நாள்காட்டி அல்லது காலண்டர்
பயன்படுத்தி வந்தனர்.
இவை இஸ்லாமிய உலகத்தினரும்
பயன்படுத்தினர் மற்றும்
இதை அடிப்படையாகக் கொண்ட
ஜலாலி நாள்காட்டியை, 1073
ஆண்டில் ஒமர் கய்யாம் [24]
மற்றும் பலர் அடங்கிய வானியல்
வல்லுனர்கள் அறிமுகப்படுத்தினர்,
இவற்றின் பதிப்புகளை (1925 ஆம்
ஆண்டில் சிறு திருத்தங்கள்
செய்தது) அடிப்படையாகக் கொண்ட
தேசீய நாட்காட்டிகள் இன்றும்
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான்
போன்ற நாடுகளில்
பயன்பட்டு வருகின்றன.
ஜலாலி நாட்காட்டி ஆனது ஆர்யபட்டா உரைந்த
முறையைப் போலவே(மற்றும்
முந்திய சித்தாந்த
முறை நாட்காட்டிகளைப் போல)
சூரியனின் நிஜமான
இடைவழியைப்
பொறுத்தே தேதிகளை முடிவு செய்கிறது.
இது போன்ற நாட்குறிப்புகளுக்கு
இடைவெளிக் காலம் தேதிகளைக்
கணக்கிடுவதற்காக
தேவைப்படுகிறது. தேதிகளைக்
கணிப்பது கொஞ்சம் கடினமாக
இருந்தாலும், கிரெகோரியன்
நாட்க்காட்டி முறையை விட
ஜலாலி நாட்காட்டி முறையில்
பருவ மாற்றங்களால் ஏற்பட்ட
தவறுகள் குறைவாகக்
காணப்படுகின்றன.
இந்தியாவின் முதல்
செயற்கைக்கோள் அவர் பெயரில்
ஆர்யபட்டா என அழைக்கப்பட்டது.
சந்திரனில் காணப்படும்
ஒரு கிண்னக்குழி
அவரை கௌரவிக்கும் முறையில்
ஆர்யபட்டா என்று பெயரிடப்பட்டது.
வானியல், வான்பௌதிகவியல்
மற்றும் வளிமண்டலத்திற்குரிய
அறிவியல்
ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக,
ஒரு நிறுவனம் இந்தியாவில்
நைனிதால்
அருகே ஆர்யபட்டா ரிசெர்ச்
இன்ஸ்டிடுட் ஒப் ஒப்செர்வேஷனல்
சைன்செஸ் (ஏ அற ஐ ஈ எஸ் )
நிறுவப் பட்டுள்ளது.
பள்ளிக்
கூடங்களுக்கை இடையே ஆன
ஆர்யபட்டா கணிதப் போட்டி அவர்
பெயரில் நடத்தப் படுகிறது.[25]
பசில்லுஸ் ஆர்யபட்டா, என்ற
பெயரில் ஐ எஸ் ஆர் ஒ நிறுவன
விஞானிகள் 2009 ஆம் ஆண்டில்
கண்டு பிடித்த
பாக்டீரியாக்களுக்கு (நுண்ணுயிரிகள்)
பெயர் வைத்துள்ளனர். [2