Total Pageviews

Tuesday 26 February 2013

புலிக்குகை

மாமல்லபுரம் செல்லும்
பலருக்கு இந்த விடயம் தெரியாது.
சென்னையில்
இருந்து மாமல்லபுரம் செல்லும்
கிழக்கு கடற்கரை சாலையில்
சாளுவன்குப்பம் என்ற கிராமம்,
அப்போதைய பெயர் திருவிழிச்சில்.
இங்கே தான் (UNESCO)
சின்னங்களில் ஒன்றான
"புலிக்குகை" உள்ளது.
இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான்
இந்த இடமும் உள்ளது. இந்த
இடத்திற்கு சென்ற
போது ஏதோ ஒரு இனம் புரியாத
மகிழ்ச்சி. இதே போன்ற பல
கட்டிடங்கள்
இன்று கடலுக்கு அடியில் தான்
உள்ளது, ஆனால் இந்த
ஒரே ஒரு கட்டிடம் மட்டும்
தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.
தமிழகத்தில்
பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது.
குஷ்பு யாருடன் என்ன செய்கிறார்,
ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார்
என்பன போன்ற செய்தி தான்
ஊடகங்களுக்கு முக்கியம்!.
எப்போதோ வந்த ஒரு சுனாமியால்
உருத்தெரியாமல்
அழிந்து மண்ணுக்குள்
புதைந்து போன இது,
அதே சுனாமியால் மீண்டும்
வெளிவந்துள்ளது. 2004
சுனாமியால் நடந்த ஒரே நல்ல
விடயம் இது மட்டுமே.
இத்தனை ஆயிரம் வருடங்களாக யார்
கண்ணிலும் படாமல் மண்ணுக்குள்
இருந்த இந்த கட்டிடம் சுனாமியின்
போது படத்தின் பின்புறமாக
இருக்கும் கல்லில் இருந்த
கல்வெட்டு வெளிப்பட்டதனால்,
அந்த இடம்
தோண்டப்பட்டு கிடைத்தது.
படத்தில் நீங்கள்
பார்ப்பது ஏதோஒரு இடிந்து போன
சாதாரண கட்டிடம் அல்ல,
தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்
டுள்ள மிகப்பழமையான கோயிலில்
முதல் இடம் பிடித்திருப்பது
இது தான்,
அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன்
கட்டப்பட்ட முருகன் கோவில்!.
(Sangam period) (3rd century BC to
the 3rd century AD ),
அடித்தளத்தில் இருக்கும் செங்கல்
கட்டுமானம் சங்க
காலத்தை சேர்ந்தது, இந்த
இடத்தை நேரில் சென்று பார்த்த
போது ஆச்சர்யமாக இருந்தது,
செங்கற்கள் ஒவ்வொன்றும்
தற்போதைய அளவை விட
இரண்டு மடங்கு பெரியதாக
உள்ளது. இந்த சங்க கால கட்டிடம்
சுனாமியால் அழிந்ததையொட்டி,
இதில் பல்லவர்கள் இந்த செங்கல்
கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக
வைத்து அதன்
மீது கற்றளியை எழுப்பியுள்ளனர்,
அதன் பின்னர் சோழர் காலத்திலும்
திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர்
அதுவும் ஒரு சுனாமியால்
அழிந்து தற்போது அதே சங்ககால
அடித்தளமே மீதம் உள்ளது.
அதை மிக சிறப்பாக
தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல்
துறை. இந்த செங்கற்கள் சங்க கால
இடங்களான "பூம்புகார்,
உறையூர், மாங்குடி, அரிக்கமேடு"
ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற
கற்களோடு ஒத்துப்போகின்றது.
"சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள
"குறவன் கூத்து" பற்றிய மண்
சிற்பங்களும்
இங்கு கிடைக்கபெற்றுள்ளது.
கோவிலின் முன் புறத்தில்
கல்லிலேயே செய்யப்பட்ட
முருகனின் வேல் ஒன்று உள்ளது,
சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி,
ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள்,
சிவ லிங்கம், சோழர்களின்
செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க
காலத்திய பொருட்கள்
கிடைத்துள்ளது.
இங்கு கிடைக்கப்பெற்ற இந்த
ஒரு நந்தி தான் சுடுமண்ணால்
ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக
வாழ்ந்திருக்கிறோம்
என்பது புரியும். அனைவரும்
சென்று பார்க்க வேண்டிய இடம்,
நாம் நிற்கும் இதே இடத்தில்
தானே இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன் நம்
இனத்தாரும்
நின்று இதை கட்டியிருப்பார்கள்
என்ற உணர்வோடு பாருங்கள்,
மிகுந்த பூரிப்போடு இருக்கும்
நன்றி: சசிதரன்

Monday 25 February 2013

பெரிய காலாடி

வெண்ணிக் காலாடி
அல்லது பெரிய காலாடி
என்பவர் பூலித்தேவர்
படையின் முக்கியத்
தளபதியாக இருந்தவர்.
வெண்ணிக்காலாடி
தேவேந்திர குல
வேளாளர் சமூகத்தைச்
சேர்ந்தவர்.
போர்
பூலித்தேவரை நேரில்
சென்று எதிர்க்க
முடியாது என்று எண்ணினார்
கான்சாகிப் (மருத
நாயகம்). அதனால்
இரவில் பூலித்தேவரின்
கோட்டையை முற்றுகையிடலாம்
என்று தீர்மானித்து கான்சாகிப்பின்
படைகள், காட்டில்
முகாமிட்டிருந்த
செய்தியை அறிந்த
பெரிய காலாடி சில
வீரர்களுடன்
சென்று அம்முகாமைத்
தாக்கினார்.
அப்போது எதிரி வீரன்
ஒருவன்
மறைந்திருந்து தாக்கியதால்
காயமுற்றார் என்றாலும்
வயிறு கிழிக்கப்பட்டு,
குடல் வெளியே வந்த
நிலையிலும், தான்
தலைப்பாகையாகக்
கட்டியிருந்த
துண்டை எடுத்து,
வெளியே வந்த தன்
குடலை மீண்டும்
வயிற்றுக்குள் தள்ளி, தன்
வயிற்றைத் துண்டால்
கட்டிக்
கொண்டு எதிரிகளுடன்
சண்டையிட்டு அவர்களைத்
தோற்கடித்தார்.
எதிரிகளைத்
தோற்கடித்ததைப்
பூலித்தேவரிடம்
கூறிவிட்டு வீர மரணம்
அடைந்தார். [1]
↑முதல் பத்திக்குச் செல்
சிந்து
தன் தளபதி பெரிய
காலாடி எதிரிகளுடன்
போரிட்டு வீர மரணம்
அடைந்த இடத்தில்,
பிற்காலத்தில்
பூலித்தேவர், வீரக்கல்
(நடுகல்)
ஒன்றை நட்டு வைத்தார்.
அந்த இடம் இன்றும்
இப்பகுதி மக்களால்
‘காலாடி மேடு’
என்று அழைக்கப்படுகிறது.
பூலித் தேவன் சிந்தும்,
காலாடியின்
புகழை பாடுகிறது. [2]
↑முதல் பத்திக்குச் செல்
மேற்கோள்
1. ↑ குங்குமம் வார
இதழ் கட்டுரை, பெரிய
காலாடி
2. ↑
கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா
சூராதி சூரனப்பா..சூழ்ச்சியில்
வல்லவனப்பா
தாயகம்
காத்தே தரணி புகழடைந்தானப்பா
தார்வேந்தன்
பூலி பட்டயம்
பெற்றானப்பா."
பார்துலங்க பூலிமன்னன்
பேர்துலங்க -வெண்ணி
பாய்ந்தோடிச் சண்டைகள்
போட்டானே
பரங்கியர்
தலைகளை வெட்டியே காலாடி
பாங்காய் குவித்திட்டான்
மலைபோலே…
எத்தனை பட்டாளம்
வெட்டினானடா-
வெண்ணியை
எதிர்க்கவும்
ஒரு ஆள்கூட
இல்லையடா
செங்குருதி நனைத்து பூலித்தேவன்
வண்ணச்
சீர்மிகு மேனியெல்லாம்
கொப்பளிக்க…
காலாடி உயிருக்கோர்
காலன் வந்திட்டான்
கால் நொடியில் காற்றாய்
பறந்தானே…
பழிகள் பாவங்கள்
வந்ததென்றெனக்கூறி
பார்வேந்தன்
பூலித்தேவன் கதறியழ
… (பூலித்தேவன் சிந்த

Sunday 24 February 2013

வீரன் சுந்தரலிங்கம்

வீரன் சுந்தரலிங்கம் தேவேந்திரர்.
வீரன் சுந்தரலிங்கம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள
ஓட்டப்பிடாரம் அருகில்
கவர்னகிரி என்னும்
கிராமத்தி சித்திரை பௌர்ணமி அன்று 1770
ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம்
நாள் காலாடி என்ற கட்டக்
கருப்பணனுக்கும்
முத்திருளி அம்மாளுக்கும் பிறந்தார்.
வறுமையின் காரணமாக
இளமையில் வீர
விளையாட்டக்களைக் கற்க
இயலாவிட்டாலும் குறும்பும்,
அறிவு நுட்பமும் துணிச்சலும்
சுந்தரலிங்கத்திடம் இருந்தன.
கவர்னகிரியில்
கிடைக்கு மந்தை போடும்
இடங்களில் ஒரு கும்பல்
ஆடுகளை திருடிக்கொண்டே இருந்தது.
இதைக் க௾ட்ட சுந்தரலிங்கம்
வெகுண்டெழுந்து,
தானே ஆடு திருட்டு தடுப்புப்
படைக்கு தலைமையேற்கிறேன்
என்று சபதமேற்று ஆட்டுத்
திருட்டை ஒழித்தார். இதனால்
ஆடுகள் திருட்டை ஒழித்த வீரன்
சுந்தரலிங்கத்தின்
பெயரி கவர்னகிரியையும்
தாண்டி பக்கத்து கிராமங்களுக்கும்
பரவியது. அக்காலத்தில் பெரும்
வீரர்களாக விளங்கிய பெரிய
காலாடி, சின்னக் காலாடி மாடக்
குடும்பனார், மொட்டை சங்கரன்
காலாடி போன்றவர்களிடம்
அனைத்து கலைகளையும் கற்றுத்
தேர்ந்த சுந்தரலிங்கம்,
கவரினகிரி தற்காப்புப்
படைப்பள்ளிக்கு தலைவராக
நியமிக்கப்பட்டார். சுந்தரலிங்கத்தின்
வீரத்தைத் தனது அமைச்சர்
தானாவதிப் பிள்ளையின் மூலம்
கேள்விப்பட்ட கட்டபொம்மன்
அவரைச் சந்தித்தே தீர வேண்டும்
என்று ஆர்வமாக இருந்தார்.
அதோடு அவரை எல்லைப்
பகுதியை கண்காணிக்கப் படையில்
சேர்த்துக் கொள்ள விரும்பினார்.
வீரன் சுந்தரலிங்கத்தின்
கீரத்தையும் நேர்மையையும்
பரிசோதிக்க வெள்ளையத் தேவனும்
கட்டப்பொம்மனும் மாறுவேடத்தில்
சென்றனர். இவர்களின் செயல்
திட்டத்தின்படி அமைச்சர்
தானாவதிப்பிளிளை
தூத்துக்குடி மாவட்டத்தின்
ஒரு பகுதியாக விளங்கும்
ஓட்டப்பிடாரத்திலுள்ள
பாஞ்சை கிராமத்தில் தன்னுடைய
நண்பர் வீட்டில் சுந்தரலிங்கத்தை
தங்க வைத்திருந்தார்.
அப்போது வீட்டின் உரிமையாளர்
வீட்டை படிபார்த்திருக்கும் வீரன்
சுந்தரலிங்கத்திடம்
கூறிவிட்டு சென்றவர் நீண்ட
நேரமாகியும் வரவில்லை. இந்த
நேரத்தில் கட்டப்பொம்மனும்
வெள்ளையத்தேவனும் நாங்கள் தான்
வீட்டின் உரிமையாளர்கள்
என்று அறிமுகம்
செய்து அதே வீட்டிற்குள்
நுழைந்தனர். சிறுது நேரத்தில்
வீட்டிலிருக்கும் நகைகளைத்திருடிக­
கொண்டு் வெளியேற அவர்களைக்
கையும் களவுமாகச் சுந்தரலிங்கம்
பிடித்தார். நீங்கள் இந்த கீட்டின்
உரிமையாளர்
இல்லை என்பது எனக்குத் தெரியும்
நீங்கள் என்ன செய்கின்றீர்கள்
என்று தான் கவனத்தோடு பார்த்துக்
கொண்டே இருந்தேன். நான்
நினைத்தபடியே நீங்கள் திருடர்கள்
தான்
என்று சொல்லி வாளை உருவினார்
வீரன் சுந்தரலிங்கம்.
அதற்கு அவர்கள் நாம் மூவர்
மட்டுமே இங்கே இருக்கிறோம்.
நகைகளைச் சரிபாகமாக
பங்கிட்டு கொள்ளலாம் என
ஆசை காட்டினார்கள். இதைச்
சம்மதிக்காத வீரன் சுந்தரலிங்கம்
உயிர்மீது உங்களுக்கு ஆசை இல்லையா என்று வாளை எடுக்க
மாறுவேடத்தை வீரபாண்டிய
கட்டபொம்மனும்
வெள்ளையத்தேவனும் கலைத்தனர்.
தனது சோதனையில் வெற்றிப்
பெற்ற வீரன் சுந்தரலிங்கத்தைப்
பாஞ்சாலங்குறிச்சி அரசபையின்
ஒற்றர் படைத் தளபதியாக
அறிவிக்கிறேன்
என்று கட்டபொம்மன் கூறினார்.
திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன்
கட்டப்பொம்மனிடம் சமாதானம் பேச
அழைத்தார். அப்போது ஜாக்சன்
வரி விஷயத்தைக் கிளர
வெகுண்டெழுந்த வீரபாண்டிய
கட்டப்பொம்மன் வானம்
பொழிகிறது பூமி விளைகிறது.
உனக்கு ஏன் தரவேண்டும் கிஸ்தி,
வரி என்று வீரமுழக்கமிட்டார்.
மோதல் ஏற்படவே ஜாக்சன்
துரை கட்டப்பொம்மனையும்
அவனது ஆட்களையும்
கைது செய்ய உத்தரவிட்டார்.
வெள்ளையர்கள்
சதித்திட்த்தை அறிந்து ஆயுதங்களுடன்
மாறுவேடத்தில்
வந்து வெள்ளை சிப்பாய்களைக்
கொன்று குவித்தார் வீரன்
சுந்தரலிங்கம். அவரது வாள்
வீச்சில் ஏராளமானோர்
உயிரை இழந்தனர்.
தலை தப்பியது போதும் என
அஞ்சி ஓடினார் ஜாக்சன் துரை.
ஆனால் அவருடன் ஓடிய
லெப்டினன்ட் கிளார்க்கை வீரன்
சுந்தரலிங்கம் வாளால் வெட்டிச்
சாய்த்தார்.
பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையில்
கரியப்பன் என்ற கூலியாள்
எட்டையபுரம்
அரண்மனைக்கு ஒற்றனாகச்
செயல்பட்டு வந்ததைக் கையும்
களவுமாகப் பிடித்தார்.
இதற்கு காமாட்சி என்ற
அவரது காதலியும் கரியப்பனின்
மனைவியும் உதவி செய்தார்ள்.
எட்டையபுரம் எட்டப்பரின்
பட்டத்துக் கதிரையைக் கவர்ந்து வர
திட்டமிட்டார் வீரபாண்டிய
கட்டபொம்மன். அந்த வேலை வீரன்
சுந்தரலிங்கத்தின் தந்தை கட்டக்
கருப்பணனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்பா கடத்திவரப்பட்ட
எட்டையபுரத்தின் பேய்
குதிரை என்று அழைக்கப்பட்ட அந்த
பட்டத்து குதிரை யாருக்கும்
கட்டுப்படாமல் சண்டித்தனம்
செய்து வந்தது.
அக்குதிரையை அடக்க நினைத்தார்
கட்டப்பொம்மன். பொங்கல்
திருவிழா அன்று வீரஜக்கம்மா கோவில்
வளாகத்தில் ஜல்லிக் கட்டின்
போது காளைகளுடன் அந்தக்
குதிரையையும் இறக்கிவிட
முடிவெடுத்தார். இந்தக்
குதிரையை அடக்குபவர்களுக்கு அக்குதிரையையே பரிசாக
வழங்கப்படும் என அறிவித்துக்
களத்தில் இறங்க
அக்குதிரையை அடக்க யாரும்
முன்வரலில்லை மேடையில் இருந்த
வீராபாண்டிய கட்டப்பொம்மனும்
தளபதியும் திகைத்தனர்.
எட்டையபுரம் பட்டத்துக்
குதிரையை அடக்க
பாஞ்சாலங்குறிச்சியில்
யாருமே இல்லையா?
வீரக்கேள்வியைக் கேட்டுக்
கொண்டே வீரன் சுந்தரலிங்கத்தை
பார்த்தார் கட்டப்பொம்மன். மன்னர்
உன் வீரத்தை உலகறியும்
படி செய்ய விரும்புகிறார்
என்று அமைச்சர்
தானாபதி பிள்ளை கூற, அடுத்த
நிமிடமே குதிரையை அடக்க
களத்தில் நின்றார்.மாவீரனைக்
கண்டு கூட்டத்தினர் ஆரவாரம்
செய்தனர். அந்தப் பேய்க்
குதிரையை மடக்கிப்பிடித்து அதன்
முதுகில் ஏறி அமர்ந்த அடக்கினார்.
குதிரைப் பெட்டிப்பாம்பாக
அடங்கிப்போனது. மாவீரன்
சுந்தரலிங்கம் வாழ்க! வாழ்க!!
வாழ்க!!! என்று கோஷம்
விண்ணைப்பிளக்க கட்டபொம்மன்
மேடையை விட்டிறங்கி தனது தளபதியைக்
கட்டித் தழுவினார். முதன்
முறையாக சொந்த ஊர் செல்லும்
வீரன் சுந்தரலிங்கத்தி­
ற்கு வீரப்பதக்கங்களை
அணிவித்து ராஜமரியாதைச்செய­
யும்் விதமாக தனது குதிரைப்
படையின் ஒரு பிரிவையும்
அவருடன் அனுப்பி வைத்தார்
கட்டபொம்மன். ஆங்கிலேயருக்கும்
பாஞ்சாலங்குறிச்சி சமஸ்தானத்திற்கு­
ம் நேரடிப்போர் நடந்தது. முதல்
நாள் போரில்
திறமை முழுவதையும் காட்டிப்
போரிட்டு வெள்ளைத் தேவன்
வீரமரணமடைந்தார்.
அன்றையப்போரில் விழுப்புண்பட்டு
வீழ்ந்த ஊமைத்துரை வீரத்தாய்
ஒருவரால் காப்பாற்றப்பட்ட­
ு சிவகங்கைச்
சீமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கட்டப்பொம்மன்
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில்
இருப்பது ஆபத்து என்று நாகலாபுரத்திலிர­
ுந்து தப்பி புதுக்கோட்டை தொண்டமானிடம்
தஞ்சம் புகுந்ததாகவும் ஆனால்
தொண்டமான்
கட்டப்பொம்மனை ஆங்கிலேயரிடம்
ஒப்படைத்ததாகவும்
வரலாறு கூறுகிறது. வீரன்
சுந்தரலிங்கம்
உயிருக்கு பயந்து எங்கும்
தப்பித்து ஓடவில்லை.
வெற்றி அல்லது வீர மரணம்
என்பது தான் வீரனின் குறிக்கோளாக
இருந்தது. சுந்தரலிங்கத்தை
வீழ்த்திவிட்டால்
பாஞ்சாலங்குறிச்சி நம் கையில்
என்று கும்மாளமிட்டனர்.கோட்டைக்
கதவுகளை திறந்து ஆங்கிலேயரையும்
கூலிப்படையினரையும்
வெட்டி வீழ்த்தினார்.
ஆங்கிலேயர்கள் அவரை நெருங்கப்
பயந்தார்கள் தனியொருவனாக
இருந்தும் எதிரியிடம்
சரணடையாமல் தொடர்ந்த
போரிட்டார். மூன்று நாள் போரில்
சாதித்துக் காட்டினார் வீரன்
சுந்தரலிங்கம். நான்காம் நாள்
போரில் சொந்த வீரர்களுடன்
இருந்து வீரன் சுந்தரலிங்கத்தி­
ற்கு சோதனைகள் நெருங்கின.
இனனியும் சிறுபடையுடன் போராட
முடியாது என உணர்ந்த அவர்
ஆங்கிலேய ஆயுத
பலத்தை அழிக்கத் திட்டமிட்டார்.
வெள்ளையர்களை வெறும்
வாளுடன் சமாளிப்பது எப்படி என
யோசித்த வீரன் சுந்தரலிங்கம்
பீரங்கிக் குண்டுகளுக்குப்
பயன்படுத்தும்
வெடிமருந்தக்கிடங்கை அழித்துவிட்டால்
ஆங்கிலேயரின்
கொட்டத்தை அடக்கிவிடலாம் எனக்
கணித்தார். அவரின் மாமன் மகள்
(முறைப்பெண்)
வடிவு நினைவுக்கு வர அவள்
உதவியுடன்
வெடிமருந்து கிடங்கை அழிக்கத்
திட்டமிட்டு ஆட்டு மந்மையை ஆவாரங்காடு வழியாக
ஓட்டி வந்து கிடங்கிற்கு முன்
நிறுத்திவிடச் சொன்னார். வீரன்
சுந்தரலிங்கம் நுழைவாயிலில்
எரிந்து கொண்டிருந்த
திப்பந்தத்தை எடுத்துக்
கொண்டு உள்ளே சென்றார்.
இதைப்பார்த்த வெள்ளையச்
சிப்பாய்கள் மிரண்டார்கள்.
வடிவு வெள்ளை காரச் சிப்பாயைத்
தாக்கிவிட்டு வீரன் சுந்தரலிங்கத்தி­
டம் ஓடினாள். வெடிமருந்த
கிடங்கின் உள்ளே வீரன்
சுந்தரலிங்கமும் வடிவும்இருக்க
வெளியில் கொந்தளிப்புடன்
வெள்ளையர் இருப்பதைக்
கண்டு மெய்சிலித்தார்
வீரன்.பாஞ்சாலங்குறிச்சியைக்
காப்பாற்றுவது ஒன்றையே மனதில்
கொண்ட வீரன்
வெடிமருந்து கிடங்கை ஒரு முறைப்பார்வையிட­
டான்். அடுத்த
நொடியே வெடிமருந்து பெட்டிகள்
ஒன்றன்பின் ஒன்றாக
வெடித்து சிதறின.
அக்னி சுவாலையின்
வெம்மைத்தாங்காமல்
நூற்றுக்கணக்கானச் சிப்பாய்கள்
உடல் கருகி செத்தனர்.
பாங்சாலங்குறிச்சி கோட்டையை என்
உயிர் இருக்கும் வரை அன்னியன்
கையில் விடமாட்டேன். நாட்டுக்காக
நாட்டு மக்களுக்காக என் உடல்
பொருள் ஆவியை இழக்கத் தயாராக
இருக்கிறேன்
என்று முழக்கமிட்டபடி மாவீரன் தன்
மாமன் மகள் வடிவுடன் வீரமரணம்
அடைந்தான். ஆங்கிலேயப்
படைகளால் வெல்ல முடியாத அந்த
மாவீரனின் உயிர் விடுதலைக்கான
வேள்வியில் வெடிமருந்து கிடங்கில்
அடங்கியது. 08.09.1799
அன்று வீரமரணம் அடைந்தார்.
மாவீரன் சுந்தரலிங்கம் பிறந்த
கவர்னகிரி கிராம மண்ணை இன்றும்
மக்கள் வீரமண்ணாகப்
பாவித்து பிறந்த
குழந்தைகளுக்கு அந்த
மண்ணை ஊட்டி வருகின்றனர். அந்த
வீரமண்ணைத் தொட்டிலுக்குக்
கீழேயும் கொட்டி வைக்கின்றனர்.
மாவீரன் சுந்தரலிங்கத்தை
போன்றே வீரத்துடனும்,
விவேகத்துடனும் வளர்வார்கள்
என்பது இப்பகுதி மக்களிடையே காலம்
காலமாய்
இருந்து வருமூ நம்பிக்கை. உலக
வரலாற்றிலேயே தற்கொலைப்படை பிரிவு என்று ஒரு தனிப்படையை தொடங்கி அதற்கு தன்னையும்
தன் முறைப்பெண் வடிவையும்
பலியாகத் தந்தவர் மாவீரன்
சுந்தரலிங்கம். இந்தியாவின்
ஒரு தென்மூலையில் சுடராய்
கொழுந்த விட்டு எரிந்த
அடிமை தனத்திற்கு எதிராகப்
போராடிய மாவீரன் சுந்தரலிங்கத்தி­
ன் பங்கை யாராலும் இனி மறைக்க
முடியாது.

Thursday 21 February 2013

கள்ளிகாட்டில் பிறந்த தாயே

எனக்கு மிகவும் பிடித்த
பாடல் :
கள்ளிகாட்டில் பிறந்த தாயே
என கல்லோடச்சு
வளத்த நீயே
முள்ளு
காட்டில் மொளச்ச தாயே
என முள்ளு
தைக்க விடல நீயே
காடைக்கும்
காட்டு குருவிக்கும்
இந்த புதருக்குள் இடம்
உண்டு
கூடைக்கும் அடிக்கும்
குளிருக்கும்
தாயே
ஒதுங்கதான் இடம் உண்ட
கரடு மேடையே மாத்துன
அவ கல்ல புழிஞ்சு கஞ்சி
உத்துன
கள்ளிகாட்டில் பிறந்த தாயே
என கல்லோடச்சு
வளத்த நீயே
முள்ளு
காட்டில் மொளச்ச தாயே
என முள்ளு
தைக்க விடல நீயே
உழவு
காட்டுல வித விதைப்ப
ஓணா கரடுல கூழ் குடிப
ஆவாரம் குழையிலே கை
துடைப்ப
பாவம் அபா .. ஓஒ ...
வேலி
முள்ளில் அவ விறகெடுப
நாழி அரசி வச்சு ஒலை
எரிப
புள்ள உண்ட மிச்சம் உண்டு
உசிர் வளப
தியாகம் அப ...
கிழக்கு
விடியும் முன முளிகுற
அவ உலக்க பிடிச்சு
தான் பிறகுற
மன்ன கிண்டி
தான் பொழைக்கிற
உடல் மக்கி
போகும் மட்டும் உழைக்கிற
கள்ளிகாட்டில் பிறந்த தாயே
என கல்லோடச்சு
வளத்த நீயே
முள்ளு
காட்டில் மொளச்ச தாயே
என முள்ளு
தைக்க விடல நீயே
தங்கம் தனி தங்கம் மாசு
இல்ல
தாய் பல் ஒன்னில் மட்டும்
தூசு இல்ல
தாய் வழி
சொந்தம் போல பாசம்
இல்ல
நேசம் இல்ல ... ஓஒ ..
தாயே
கையில் என்ன மந்திரமோ
கேபக்களியில் ஒரு
நெய் ஒழுகும்
காஞ்ச கரு வாடு
தேன் ஒழுகும்
அவ சமைகையிலே ...
சொந்தம் நூறு
சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு
நிலைக்குத
சாமி நூறு சாமி இருக்குதே
அட தாய் ரெண்டு
தாய் இருகுத
கள்ளிகாட்டில் பிறந்த தாயே
என கல்லோடச்சு
வளத்த நீயே
முள்ளு
காட்டில் மொளச்ச தாயே
என முள்ளு
தைக்க விடல நீயே

Saturday 16 February 2013

ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி்

ஐந்து பெண் பெற்றால் அரசனும்
ஆண்டி என்பார்கள். ஆனால்
இது உண்மையல்ல. கீழ்கண்ட
ஐந்தும் பெற்றவர்கள் அரசனாக
இருந்தாலும் ஆண்டி ஆவார்கள்
என்கிறார்கள்.
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும்
தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன் பிறந்தோர்
மற்றும்
5) சொல் பேச்சு கேளாத
பிடிவாதமுடைய பிள்ளைகள்
என்பதாகும்.
மேற்கண்ட ஐந்தையும் ஒருவன்
பெற்றால், அவன் அரசனே ஆனாலும்
ஆண்டியாக போவான் இதுதான்
உண்மையான விளக்கம்
என்கிறார்கள்.

Thursday 14 February 2013

அரைஞாண் கயிறு

அரைஞாண் கயிறு உணமையில்
எதற்க்காக நம் முன்னோர்கள்
நம்மை கட்ட
சொல்லி வற்புறுத்தினர்..
"அரைஞாண்" நாம் சின்ன வயதில்
நம் பெற்றோர்
வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும்
ஒரு கருப்பு கயிறு.
எதற்கு இதை நான்
அணிந்து கொள்ள வேண்டும்
என்று கேட்டால், திருஷ்டி பட
கூடாதுன்னு தான்
பா கட்டிவிடுறோம்
னு சொல்லுவாங்க ....
உண்மையிலேயே இதுக்கு தான்
இந்த
கருப்பு கயிற்றை கட்டுகிறோமா??
நிச்சயமாக இல்லை ....
அந்த அரைஞாண் கயிற்றின்
பலன்கள் பல விதங்களில் உள்ளது
முதலாவது பலன்
-------------------------------------
அரைஞாண் என்பது கிராமத்தில்
வசிக்கும் அன்பர்களுக்கு அவசர
கால் உதவி..கழனியிலும்
காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர்
நலம் பேணும் ஏழைகளுக்கு கரம்
கொடுக்கும் ராஜ தந்திரி அது..
விடம் கொண்ட பூச்சிகள்,
பாம்பு தடம் பதித்து ஊடாடும்
போது அவர்களுடன்
வசிப்பவை அவை. எதிர்பாராமல்
தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய
கழனியில் கயிறு கிடைப்பது அரிது.
விடத்தின் கடிவாய்க்கும்
இதயத்துக்கும்
இடையே மருத்துவத்திற்குச்
செல்லுமுன் தடைபோடும்
உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற
தோழன்.
கையினால், விடம் உற்ற நேரம்
அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்ப
ட்டு அவசர உதவியாய் இறுக்கிக்
கட்டப்படுவது வருமுன் காக்கும்
உதவி. எப்போதும்
எதிர்பார்த்து தப்பாமல் உதவும்
அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய
முன்னோடி.
மருத்துவ பலன்
-----------------------------------
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற
அரைஞாண்கயிறு ஒரு நோய்
தடுப்பு முறையாக
வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத்
தெரியாது. ஆடவர்களுக்குப்
பொதுவாக குடல் இறக்க நோய்
வருவதுண்டு. அந் நோயைத்
தடுக்கவே இடுப்பில் அரைஞாண்
கயிறு முன்பெல்லாம் கட்டுகிற
பழக்கம் தமிழர்களிடையே இருந்தது.
பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக
மாறியது. இன்றைக்கு அநாகரீகம்
எனக் கருதி அரைஞாண்கயிறும்
கட்டுவதும் குறைந்து விட்டது.
உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச
தீமை 'குடல் இறக்க நோய்'
ஆங்கிலத்தில்
ஹெரணியா என்பார்கள்.
இது தொண்ணூறு சதவீதம்
ஆண்களுக்குத் தான் வரும் என
ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன .
இதை தடுக்கத்தான் நம்
முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண்
கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி , தங்கத்தில்
அறுணாக் கொடி கட்டுகிறார்கள்
தான். அது பகட்டுக்கு. சில
விடயங்கள் நாகரீக
மாற்றங்களுக்குட
்பட்டு மாறிவிட்டாலும் இன்றும்
கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள்
சில கோர்த்து அறுணாக்
கொடி கட்டத் தான் செய்கிறார்கள்.
இந்த அரைஞாண் கொடியின்
மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட
கண்ட தாயத்துகளை கட்டி தொங்க
விடுவதும், அது திருஷ்டி காக
என்று புறம்பு கூறுவதும்
தவறு....
நம் முன்னோர்கள் நம்
பெருமைகளை நமக்கு சொல்ல
மறந்ததை போல அல்லாமல்
இனி நாமாவது நம்
பிள்ளைகளுக்கு இது போன்ற நம்
பாரம்பரியத்தை விட்டுகொடுகாமல்
சிறு சிறு விடயங்கலளையும்
அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....