Total Pageviews

Sunday 22 April 2012

தமிழ்

தமிழ்நாடு ஏறத்தாழ 6000
ஆண்டுகளுக்கு மேல் பழமையான
வரலாற்றைக் கொண்டுள்ளது.
இங்கே வாழுகின்ற திராவிட இன
மக்களின் தோற்றம் (origin)
தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள்
நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில்
இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த
திராவிடர்,
சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள்
ஒரு பிரிவினராக இருந்தனர்
என்று கருதுகிறார்கள்.
இவ்வினத்தவருடைய
தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய
ஆக்கிரமிப்புக் கொள்கையுடன்
தொடர்பு படுத்தப் படுகின்றது. இக்
கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த
ஆரிய
ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய
இந்திய மாநிலங்களான தமிழ்நாடு,
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்,
கேரளா ஆகியவை அடங்கிய
தென்னிந்தியாவுக்குள்
ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது.
வரலாற்று உண்மைகள்
எவ்வாறு இருப்பினும், தற்காலத்
தமிழ் மக்களுடைய அடையாளம்
மேற்கண்ட கொள்கைகளின்
அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
இன்றைய தமிழ்நாட்டையும்
உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய
திராவிட நாடு,
பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது.
இவற்றைக் காலத்துக்குக் காலம் பல
அரச வம்சங்கள் ஆண்டுவந்தன.
இவற்றுள் முக்கியமாகக்
குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர்,
முத்தரையர், சேரர், சோழர், பல்லவர்,
சாளுக்கியர், விஜய நகரத்தார்,
நாயக்கர் என்போராவர்.
பாண்டியர்களுடைய காலம்
கி.மு ஆறாம்
நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச்
சொல்லப்படுகின்றது. மதுரை முதற்
பாண்டிய மன்னனான குலசேகர
பாண்டியனால் கட்டப்பட்டதாகச்
சொல்லப்படுகின்றது.
மேலே குறிப்பிடப்பட்ட
மதுரை தற்கால மதுரைக்குத்
தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில்
ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக
அழிந்து போனதாகப் பழந் தமிழ்
இலக்கியங்கள் வாயிலாக
அறியக்கிடக்கின்றது. பாண்டிய
நாடு கல்வியிலும், வணிகத்திலும்
சிறந்து விளங்கியது. இவர்கள்
அக்காலத்தின் பேரரசுகளாகிய
கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன்
வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
அவ்வப்போது பல்லவர்களாலும்,
சோழர்களாலும் அடக்கப்
பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம்
மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப்
பாண்டியர் விளங்கினர்.
கி.பி 1 முதல் 4 ஆம்
நூற்றாண்டு வரை
முற்காலச் சோழர் கி.பி முதலாம்
நூற்றாண்டு தொடக்கம் நான்காம்
நூற்றாண்டு வரை தமிழகத்தில்
ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப்
புகழ் பெற்றவனாக கரிகால் சோழன்
விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர்,
திருச்சிராப்பள்ளி ஆகிய
மாவட்டங்களை உள்ளடக்கிய
பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய
இவர்கள், யுத்த நடவடிக்கைகளில்
சிறந்து விளங்கினர்..
கி.பி 4 முதல் 9 ஆம்
நூற்றாண்டு வரை
கி.பி நான்காம் நூற்றாண்டின்
பிற்பாதியில், சிறந்த
கோவில்களை அமைத்த பல்லவர்கள்
முன்னணிக்கு வந்தனர். இவர்கள்
தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள்
ஆதிக்கம் செலுத்தினர்.
காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக்
கொண்டு தமிழ் நாட்டின்
பெரும்பகுதியைத் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள்
சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள்
செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக

கருதப்படுகின்றது. முதலாம்
மகேந்திரவர்மனும், அவனுடைய
மகனான நரசிம்மவர்மனும்
பல்லவர்களுள் சிறந்து விளங்கிய
அரசர்களாவர். திராவிடக்
கட்டிடக்கலை பல்லவர்
காலத்திலேயே உருப்பெற்றது.
இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன்
ஆவான். இவன் கி.பி ஒன்பதாம்
நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்
ஆதித்த சோழனால்
தோற்கடிக்கப்பட்டதுடன்
பல்லவராட்சி தமிழ் நாட்டில்
முடிவுக்கு வந்தது. இக்காலகட்ட
பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600)
பெளத்தம் தமிழகத்தில் மிகவும்
செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி 9 முதல் 13 ஆம்
நூற்றாண்டு வரை
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில்
சோழர்கள் மீண்டும்
ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ
சோழன் மற்றும் அவனது மகனான
இராஜேந்திர சோழன்
ஆகியோரது காலத்தில் சோழர்,
தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க
சக்தியாக உருவெடுத்தனர்.
இவர்களுடைய பேரரசு, மத்திய
இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும்
வங்காளத்தின் சில
பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.
இராசராச சோழன் கிழக்கிலிருந்த
சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர
மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன்
பாண்டிய
அரசிடமிருந்து இலங்கையின் சில
பகுதிகளையும் கைப்பற்றினான்.
இராசேந்திர சோழன் மேலும்
முன்னேறி அந்தமான் மற்றும்
நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள்,
சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும்
பெகு தீவுகளையும் தன்
கப்பற்படையைக்
கொண்டு கைப்பற்றினான். அத்துடன்
தற்போதைய பீகார் மற்றும்
வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த
மகிபாலனையும் வீழ்த்தினான். தன்
வெற்றியைக் கொண்டாடும்
வகையில் கங்கை கொண்ட
சோழபுரம் எனும்
தலைநகரை உருவாக்கினான்.
பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில்
சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.
14 ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டில் சோழர்களின்
வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள்
மீண்டும் எழுச்சி பெற்றனர்.
ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம்
நீடிக்கவில்லை. 1316ல்
வடக்கிலிருந்து படையெடுத்து வந்த
கில்ஜி ஆட்சியாளர்கள்,
மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர்.
இஸ்லாமியர்களின்
படையெடுப்பு சோழர்களையும்
பாண்டியர்களையும்
பலவீனப்படுத்தி இஸ்லாமிய
"பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது.
இஸ்லாமியப்
படையெடுப்புக்கு பதிலடி தரும்
வண்ணம் பல்வேறு சிற்றரசுகள்
சேர்ந்து விஜயநகர பேரரசைத்
தோற்றுவித்தன. இப்பேரரசின்
பல்வேறு பகுதிகள்
பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட
நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள்
நியமிக்கப் பட்டனர்.
ஹம்பியை தலை நகராகக்
கொண்டிருந்த விஜய நகரப்
பேரரசு செல்வச் செழிப்போடும்
அமைதியுடனும் திகழ்ந்தது.
ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில்
நடந்த தலிகோட்டா போரில்
தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த
சுல்தான்களால் விஜயநகர
ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு,
அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள்
யாவும்
நாயக்கர்களிடையே
பிரித்தளிக்கப்பட்டது.
நாயக்கர் ஆட்சிக் காலத்திலும்
தமிழ்நாடு அமைதியுடனும்
செழிப்புடனும்
விளங்கியது.தஞ்சை மற்றும்
மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள்
புகழ்
பெற்று விளங்கியதோடு பழங்கால
கோயில்களை புதுப்பிக்கவும்
செய்தனர்.
இன்றைய கேரளாவும்
மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர
நாட்டின்
ஆளுகைக்கு உட்பட்டிருந்தது
.கடலை ஒட்டியிருந்த
சேரர்களின்
ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான
வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது.
ஆங்கிலேய படையெடுப்பு நிகழும்
வரை சேரர்களின்
ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய
நிலப்பகுதி பெரும்பாலும்
வேறெவருடைய படையெடுப்பிற்கும்
ஆளாகாமல் இருந்தது.
17 ஆம் நூற்றாண்டு
முதன்மைக் கட்டுரை:
தமிழகத்தில் ஆங்கிலேயர்
ஆட்சி
1639 இல் ஆங்கிலேயர்கள்
மதராஸில்
(தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறத
ு)
கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய
பிறகு தமிழ் நாட்டின் அரசியல்
வரலாற்றில் புதிய
பகுதி தொடங்கியது. தமிழ்
நாட்டு சிற்றரசர்களிடைய
ே நிலவி வந்த
சச்சரவுகளைப்
பயன்படுத்தி அவர்களைப்
பிரித்தாண்டு , அவர்களின் மேல்
தங்கள் அதிகாரத்தை செலுத்தத்
தொடங்கினர். தமிழ்நாடும் அதைத்
தொடர்ந்து தென்னிந்தியாவும்
மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின்
கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
ஆங்கிலேயர் அதிகாரத்தை தம்
வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில்
அவர்களை எதிர்த்துப் போராடிய
தமிழ் ஆட்சியாளர்களும்
கணிசமானோர் இருந்தனர். வீர
பாண்டிய கட்டபொம்மன்,
மருது பாண்டியர், பூலித்தேவன்
ஆகியோர் அவர்களுள்
குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
20 ஆம் நூற்றாண்டு
1947இல்
இந்தியா விடுதலை அடைந்தபோது,
மதராஸ் மாகாணம் மதராஸ்
மாநிலம் ஆனது. தமிழ்நாடு,
கடலோர ஆந்திரப் பகுதிகள்,
மேற்கு கேரளம், தென்
மேற்கு கர்நாடக கடற்கரைப்
பகுதிகள் ஆகியவை மதராஸ்
மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல்
மதராஸ் மாநிலத்தின்
தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட
பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும்
தமிழ் பேசும் தென் பகுதிகள்
மதராஸ் மாநிலமாகவும் மேலும்
பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில
எல்லைகளை மறு வரையறை செய்யும்
சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ்
மாநிலத்தின்
மேற்கு கடற்கரை பகுதிகள்
கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும்
இடையே பிரித்தளிக்கப்பட்டது.
1968இல், மதராஸ்
மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.
பாரம்பரியம்
தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன்
விளங்கும், வளமான இலக்கிய,
இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப்
பெயர் பெற்றது. இது இந்தியாவின்
அதிக அளவு கைத்தொழில்
மயமாக்கப்பட்ட மாநிலங்களுள்
ஒன்று.
சுப்பிரமணிய பாரதி, வ. உ.
சிதம்பரம்பிள்ளை, சி. வி. ராமன்,
சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே.
நாராயண், சீனிவாச ராமானுஜன்,
அப்துல் கலாம் முதலியோர்
மாநிலத்தின் பிரபலமானவர்களுள்
சிலராவர். இவர்களோடு, கண்ணகி,
திருவள்ளுவர், ஒளவையார், கம்பர்,
இராஜராஜ சோழன் போன்ற
முற்காலத்தவரும் இன்றும்
நினைவில் இருப்பவர்களாவர். அலன்
டூரிங், எனும் கோட்பாட்டுக்
கணினியியல் அறிவியலாளரும் இளம்
வயதில் மதராஸ் பிரெசிடென்சியில்
இருந்தவரே.
அரசியல்
தமிழ் நாட்டின் சட்டமன்றத்
தொகுதிகள் எண்ணிக்கை 234.
நாடாளுமன்ற தொகுதிகளின்
எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ்
நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட
மன்றங்கள் இருந்தன.
தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது.
மாநகராட்சிகள், நகராட்சிகள்,
பேரூராட்சிகள், ஊராட்சிகள்
ஆகியவற்றுக்கும்
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல்
நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள்
தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.
தமிழ் நாட்டின் முக்கிய அரசியல்
கட்சிகளாக திராவிட முன்னேற்றக்
கழகம் மற்றும் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம்
ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ்
கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி ,இந்திய
கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி ,
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்
கழகம் விடுதலைச் சிறுத்தைகள்,
புதிய தமிழகம் ஆகியவையும்
குறிப்பிடத்தக்க முக்கியத்துவம்
வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
ஈ.வெ.ராமசாமி (தந்தை பெரியார்
என்று அறியப்படுகிறார்) 1944இல்
தோற்றுவித்த திராவிடர் கழகத்தில்
இருந்து பிரிந்து வந்து, 1949இல்
திராவிட முன்னேற்றக்
கழகத்தை (தி.மு.க, D.M.K) சி. என்.
அண்ணாதுரை தோற்றுவித்தார்.
1947இல் இந்திய விடுதலைக்குப்
பிறகு 1967 வரை தமிழ்
நாட்டை காங்கிரஸ்
கட்சி ஆண்டது.1967இல் திராவிட
முன்னேற்றக் கழகம்
ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட
முன்னேற்றக் கழகத்தில்
இருந்து பிரிந்து, அண்ணா திராவிட
முன்னேற்றக்
கழகத்தை (A.D.M.K,அ.தி.மு.க) ம.
கோ. இராமச்சந்திரன் [M.G.R]
தோற்றுவித்தார். 1977இல்
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் முதன் முதலில் ஆட்சியைப்
பிடித்தது.
1967 முதல் 2011இல் கடைசியாக
நடந்த சட்ட மன்ற தேர்தல்
வரை தி.மு.க அல்லது அ.தி.மு.க
ஆகிய இரண்டு கட்சிகளில்
ஒன்று (அல்லது அக்கட்சிகள்
தலைமை வகிக்கும் கூட்டணிகள்)
பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.தமிழ்
நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல
கட்சிகள்
கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும்,
இது வரை தனிக்
கட்சி ஆட்சியே நடை பெறுகிறது.
இருப்பினும், தமிழக கட்சிகள்
நடுவண் அரசில்
கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும்
பங்கேற்கவும் செய்கின்றன.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும்
பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர்
மற்றூம் சிறுபான்மை சமூகத்தின்
நலன், இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப்
பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள்,
பாமரர் மற்றும் நலிவடைந்த
பிரிவினர் நலன், ஊழல்
ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில்
முக்கியத்துவம் உள்ளவை

No comments:

Post a Comment