Total Pageviews

Monday 30 April 2012

மே தினம்

மே நாள்
மே தினம் எனப்படும் உலகத்
தொழிலாளர் தினம் ஆண்டுதோறும்
மே முதலாம் திகதி ( மே 1 )
உலகளாவிய ரீதியில்
கொண்டாடப்படுவதாகும்.
மே தின வரலாறு
தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்
- 19ஆம் நூற்றாண்டின்
ஆரம்பத்திலும் வேகமாக
வளர்ச்சியடைந்த நாடுகளில்
தொழிலாளிகள் பலரும்
நாளொன்றுக்கு 12 முதல் 18
மணி நேரக் கட்டாய வேலை செய்ய
நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இதற்கெதிரான குரல்களும்
பல்வேறு நாடுகளில்
ஆங்காங்கே எழத் துவங்கியது.
இதில் குறிப்பிடத்தக்கது
இங்கிலாந்தில் தோன்றிய சாசன
இயக்கம் (chartists ). சாசன
இயக்கம் 6 முக்கிய
கோரிக்கைகளை முன்வைத்து தொடர்
இயக்கங்களை நடத்தியது. அதில்
குறிப்பிடத்தக்கது 10 மணி நேர
வேலை கோரிக்கை.
பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத்
தொழிலில் ஈடுபட்டிருந்த
தொழிலாளிகள் தினமும்
கட்டாயமாக 15 மணி நேரம்
உழைக்க வேண்டி இருந்தனர்.
இதை எதிர்த்து அவர்கள் பெரும்
வேலை நிறுத்தப்
போராட்டத்தை நடத்தினர். 1834இல்
ஜனநாயகம் அல்லது மரணம் என்ற
கோஷத்தை முன்வைத்து பெரும்
கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இவையனைஇத்தும் தோல்வியில்
முடிவடைந்தன.
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்
இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில்
கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த
தொழி லாளிகள் உலகிலேயே முதன்
முதலாக 8 மணி நேர
வேலை கோரிக்
கையை முன்வைத்து 1856இல்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு,
வெற்றியும் பெற்றனர்.
இது தொழிலாளி வர்க்க
போராட்டத்தின் மைல் கல்லாக
அமைந்தது.
ரஷ்யாவில் மே தினம்
சார் மன்னரின் ஆட்சியின் கீழ்
ரஷ்யத் தொழிலாளிகள் பெரும்
துன்பங்களுக்கு ஆளானார்கள்.
இங்கும் 1895 - 1899க்கு
இடைப்பட்ட காலத்தில்
நூற்றுக்கணக்கான
வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.
1896 ஏப்ரல் மாதத்தில் லெனின்
மே தினத்திற்காக எழுதிய
சிறு பிரசுரத்தில், ரஷ்யத்
தொழிலாளிகளின்
நிலைமை குறித்து விரிவாக
அலசியதோடு, ரஷ்யத்
தொழிலாளர்களின் பொருளாதார
போராட்டம் - அரசியல்
போராட்டமாக எழுச்சிக் கொள்ள
வேண்டும் என்பதையும்
வலியுறுத்தினர். தொழிலாளிகளின்
8 மணி நேர வேலைக்கான
போராட்டங்களே ரஷ்யப்
புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில்
அமெரிக்காவில் 1832இல்
பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய
தச்சுத் தொழிலாளர்கள் 10
மணி நேர
வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம்
செய்தனர். அதே போல், 1835இல்
பிலடெல்பியாவிலும்,
பென்சில்வேனியாவிலும்
இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம்
நடத்தப்பட்டது.
பென்சில்வேனியாவில் நிலக்கரிச்
சுரங்கத் தொழிலாளர்களும்,
இரயில்வே தொழிலாளர்களும்
குறைவான
வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின்
பல்வேறு மாநிலங்களில் உள்ள
தொழிலாளர்
இயக்கங்களை இணைத்து “அமெரிக்க
தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற
இயக்கம் உருவாக்கப்பட்டது.
இவ்வியக்கம் 8 மணி நேர
வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது.
அத்தோடு மே 1 , 1886
அன்று நாடு தழுவிய
வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல்
விடுத்தது. இவ்வியக்கமே
மே தினம்
பிறப்பதற்கு காரணமாகவும்
அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க்,
சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி,
சின்சினாட்டி, பால்டிமோர் என
அமெரிக்கா முழுவதும் 3,50,000
தொழிலாளர்கள் பங்கேற்ற
மாபெரும் வேலை நிறுத்தம்
துவங்கியது.
இவ்வேலை நிறுத்தத்தில்
1200க்கும் மேற்பட்ட
நிறுவனங்களில்
உள்ளதொழிலாளர்கள்
பங்கெடுத்துக் கொண்டனர்.
தொழிலாளர்களின் எழுச்சிமிக்க
வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க
பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன.
இரயில்
போக்குவரத்து நடைபெறவில்லை.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற
தொழிலாளர் ஊர்வலங்கள்
அமெரிக்காவை உலுக்கியது.
மிச்சிகனில் மட்டும் 40,000
தொழிலாளர்களும், சிக்காகோவில்
70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
தொழிலாளர்களும் கலந்துக்
கொண்டனர்.
சிக்காகோ பேரெழுச்சி
மே 3 , 1886 அன்று “மெக்கார்மிக்
ஹார் வஸ்டிங் மெஷின்
நிறுவனத்தின்” வாயிலில் 3000-
க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
அணி திரண்டு கண்டனக்
கூட்டத்தை நடத்தினர்.
இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4
தொழிலாளர்கள்
காவற்துறையினரின் துப்பாக்கிச்
சூட்டிற்குப் பலியாயினர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும்
வகையில் ஹேமார்க்கெட்
சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும்
கண்டன கூட்டம்
ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள்.
2500 தொழிலாளர்கள்
கலந்து கொண்ட கண்டனக் கூட்டம்
அமைதியான முறையில்
நடைபெற்றது. இந்நேரத்தில்
காவல்துறையினர் அனைவரையும்
கலைந்து செல்லுமாறு கூறினர்.
இவ்வேளையில்
திடீரென்று கூட்டத்தில்
வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த
இடத்திலேயே ஒரு காவல்துறையினர்
பலியானார். பின்னர் போலீசார்
கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்
சூடு நடத்தித் தொழிலாளரைத்
தாக்கினர். அத்துடன் தொழிலாளர்
தலைவர்களை கைது செய்து வழக்குத்
தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன்
21, 1886 அன்று துவங்கியது. 7
பேருக்கு தூக்குத்
தண்டனை வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் கறுப்பு தினம்
நவம்பர் 11 , 1887
அன்று தொழிலாளர் தலைவர்கள்
ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட்
பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர்,
ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர்
ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
நவம்பர் 13 , 1887 அன்று நடைபெற்ற
இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க
தேசமே அணி திரண்டது.
நாடு முழுவதும் 5 லட்சம் பேர்
இவர்களது இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொண்டதோடு,
அமெரிக்கா முழுவதும்
கறுப்பு தினமாக
அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8
மணி நேர வேலைக்கான
போராட்டமும்,
சிகாகோ தியாகிகளின்
தியாகமும்தான்
இன்றைக்கு மே தினமாக -
உழைப்பவர் தினமாக நம்முன்
நிற்கிறது.
அனைத்து நாடுகளிலும் மே தினம்
1889 ஜூலை 14 அன்று பாரீசில்
சோசலிசத் தொழிலாளர்களின்
‘’சர்வதேச தொழிலாளர்
பாராளுமன்றம்’’ கூடியது. 18
நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள்
இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர்
கலந்துகொண்ட இக்கூட்டத்தில்
கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8
மணி நேர
போராட்டத்தை முன்னெடுத்துச்
செல்வது என்றும்,
சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக
கண்டித்ததோடு, 1890 மே 1
அன்று அனைத்துலக அளவில்
தொழிலாளர்கள்
இயக்கங்களை நடத்திட வேண்டும்
என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல்
நாளை, சர்வதேச தொழிலாளர்
தினமாக, மே தினமாக
அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
இந்தியாவில் மே தினம்
இந்தியாவில் சென்னை மாநகரில்
தான் முதன்முதலில் தொழிலாளர்
தினம் கொண்டாடப்பட்டது.
பொதுவுடைமைவாதியும்
தலைசிறந்த சீர்திருத்தவாதியும்
ம.சிங்காரவேலர் தான் 1923 -இல்
சென்னை உயர்நீதிமன்றம்
அருகே உள்ள கடற்கரையில்
தொழிலாளர் தின விழாவைக்
கொண்டாடினார்.

Friday 27 April 2012

போர் கருவி

சங்க காலத் தமிழர் போர்
மரபுகள்
சங்க காலத்தில் தமிழர் போர்
மரபுகள் அறப்போர் முறையைச்
சார்ந்ததே ஆகும். அகம், புறம் என
வாழ்வை இரண்டாகப் பகுத்து புறம்
என்று போர்முறைகளுக்கும்
இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.
அவர்களது போர்முறை நேர்மையாக
இருந்தது. காலை சூரிய உதயத்தின்
போது முரசறைந்து போர்
தொடங்குவர். சூரியன் மறையும்
வரை மட்டுமே போர் நடை பெற்றது.
பின்
முரசறைந்து போரை நிறுத்துவர்.
எத்துனை நாள் போராயினும்
இதுவே வழக்கானது. பகைவர்
ஆயுதத்தை இழந்த போதும், போரில்
தோற்றோடும் போதும் அவர் மேல்
படை செலுத்தாத அறநெறி இருந்தது.
அவர்களுக்கு தகுந்த வாய்ப்பளிக்க
மறுநாள் போர் செய்தனர்.
ஓடி ஒளிந்தாரைக் கொல்லாமல்
அவர்கள் வரும்
வரை காத்திருந்து போர் புரியும்
வீரம் இருந்தது.
இறந்தோருக்கு இரங்கும் குணம்
இருந்தது.
போர் அறிவிப்பு
ஒருமன்னன் பகைவரோடு போரிடக்
கருதுவானாயின் கருதியவுடன்
படை எடுக்க
மாட்டான்.தனது கருத்தைப்
பகைவரது நாட்டார்க்குப்
பறையறைந்து தெரியப் படுத்துவான்.
அப்போது
"ஆவும் ஆனியல் பார்ப்பன
மாக்களும் பெண்டிரும்
பிணியுடையீரும் தென்புலம்
வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வரைப்
பெறாதீரும் எம்
அம்பு கடி விடுதும் நும்மரண்
சேரும், என்று அறிவிக்கப்படும்.
இதனால் தமிழர் போர்
தொடங்கும் போது அற
நெறியுடன் தொடங்கினர் என
அறியலாம்.
பலிபெறு நன்னகரும்
பள்ளியிடனும்
ஒலிகெழு நான்மறையோர் இல்லும்-
நலிவொரீஇப்
புல்லா; இரியப் பொருநர்
முனை கெடுத்த
வில்லார்க்கு அருள் சுரந்தான்
வேந்து. [1]
போர் நடக்கும் நாட்டில் மறவர்கள்,
பலியிடப்படும் கோவில்களுக்கும்,
துறவிகள் வாழும் பள்ளிகளுக்கும்,
வேதவொலி மிக்க அந்தணர்களின்
இல்லங்களுக்கும் எந்த நலிவையும்
செய்யவில்லை இவை போன்ற
தக்கார் உறையும் இடங்களை நீக்கிப்
பிற இடங்களில் போரிட்டுப்
பகைவரை வென்றுள்ளனர்.
அவ்வாறு அறநெறிப்படி போரிட்ட
மறவர்களுக்கே மன்னனும்
சிறப்பு செய்தான். அதுவே அரசியல்
அறமாகக் கருதப்பட்டது.
ஆநிரை கவர்தல்
போர் அறிவிப்பைச் செய்தும் உணர
மாட்டாதவை பசுக்களாகும்
எனவே பசுக்களைப் பாதுகாக்க
விரும்பி ஆநிரைக் கவர்தல்
நடைபெறும்.
அவ்வாறு கவர்ந்து திரும்பும்போது அப்பசுக்ளுக்கு உணவினை வழங்கி,
அவற்றிற்கு ஊறு செய்யாமல் ஓட்டிச்
செல்வர்
பூப்புனைதல்
மறவர் போர் தொடங்கும்
போது நிகழ்வுக்கேற்ற அடையாளப்
பூவைச் சூடுதல் வழக்கம்.
ஆநிரை கவரச் செல்வோர் வெட்சிப்
பூவையும், ஆநிரையை மீட்கப்
போவோர் கரந்தைப் பூவையும்,
பகைவர் நாட்டின்
மீது படை எடுப்போர் வஞ்சிப்
பூவையும் , அரணைக் காப்போர்
நொச்சிப் பூவையும்,
அரணத்தை முற்றுகை இடுவோர்
உழிஞைப் பூவையும், ஒரு களத்தில்
புக்குப் போரிடுவோர்
இரு திறத்தாரும் தும்பைப்
பூவையும் , போரில்
வெற்றி எய்தியோர் வாகைப்
பூவையும் சூடுவர்.
இவ்வாறு பூச்சூடுங்கால் உண்மைப்
பூவைச்
சூடுவதோடு பொற்பூவைப்
புனைதலும் உண்டு. அரசர்
மறவர்க்குப் பொற்பூ வழங்கிச்
சிறப்பித்தலும் உண்டு. முருகன்
கிரவுஞ்ச மலையை வெல்லுங்கால்
காந்தட் பூச் சூடினான் என்றும்,
சிவபெருமான் முப்புரத்தை எரித்த
காலத்தில் உழிஞைப் பூச்சூடினான்
என்றும் கூறுவர்.
நாட்கோள்
படை எடுக்க விரும்பும் மன்னர்
நன்னாளும் நன்முழுத்தமும்
அறிந்து தொடங்குவர். அந்நேரத்தில்
அரசனும் உடன் செல்ல
முடியாதிருந்தால் தனக்கு மாறாகத்
தன் குடையையாவது,
வாளையாவது புறவீடு விடுவான்.
அது நாட்கோள் எனப்படும்.
நெடுமொழியும் வஞ்சினமும்
படைவீரர்களான மறவர்கள் தம் அரசர்
முன்னும் பகை மறவர்களின்
முன்னும் நெடுமொழி (தற்பெருமை)
கூறிக் கொள்வர்.
தனது மாமன்னனுக்குத் தன்னுடைய
மேம்பாட்டை வீரன் ஒருவன்
தானே எடுத்து உரைப்பது நெடுமொழி கூறல்
எனப்படும். மன்னர்கள் போர்
தொடங்கும் முன் வஞ்சினம்
மொழிவர். வஞ்சினம்
என்பது 'இன்னது செய்வேன் நான்.
அவ்வாறு செய்யேனாயின் இன்னன்
ஆகுக' என்று வலிய சினத்தில்
கூறும் சொல் ஆகும்.
பகைநாட்டழிவு
வஞ்சியார் எனப்படும் வஞ்சி
மாலை அணிந்த வீரர்கள்
பகைவரது நாட்டு எல்லையுள்
புகுந்து போருக்கு அடியிடுவர்.
ஊரை நெருப்பிட்டுக் கொளுத்துவர்.
ஊர் மனைகளில் கொள்ளையும்
இடுவர். கரும்பும் நெல்லும் செழித்த
வயல்களில் நெருப்பு மூட்டி அழிப்பர்.
நீர் தேக்கி வைத்த குளம்
முதலியவற்றின்
கரைகளை உடைத்துவிடுவர்.
உழிஞை மறவர்
பகைவரது கோட்டைகளை இடித்துத்
தரை மட்டமாக்கிக் கழுதை ஏர்
கொண்டு உழுவர்; கவடு விதைப்பர்.
மற்றொரு வகையில்
இரு திறத்து மன்னரும் தும்பைப்
பூச்சூடி போருக்குச் செல்லுங்கால்
போர் ஊருக்குள் நடைபெறாமல்
குறிப்பிட்ட ஒரு போர்க்களத்தில்
நடைபெறும். இரு திறத்துப்
படைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக்
கொள்ளும்
இரு திறத்தாருக்குமே மிக்க
அழிவு ஏற்படும்
பாசறை நிலை
வஞ்சி மறவர்களது படை பகைவர்நாட்டில்
புகுந்து ஊர் எல்லையில் தங்கும்.
அரசன் தங்குவதற்குப் பசிய
மூங்கிலால் அறை வகுப்பர்.
(பசுமை+அறை=பாசறை) அதனைச்
சுற்றி மறவர்கள் தங்குவதற்குத்
தழைகளை வெட்டி மேற்கூரையாக
இட்டுச் சிறுசிறு அறைகள்
வகுக்கப்படும். அங்கே ஊரில்
வாழ்வது போன்ற
எல்லா அமைப்புகளும் இருக்கும்.
எனவே அது புதிதாகக் கட்டப்பட்ட
ஊரைப்
போலவே காணப்படும்.இது கட்டூர்
எனப்படும். (கட்டு + ஊர் = கட்டூர்,
பாசறை) ஒரு பக்கம் யானைகள்
முழங்கும்; ஒருபக்கம் ஆடல் பாடல்
மகளிரின் கூத்து நடக்கும்.
பாசறையில் தங்கியுள்ள
மன்னனுக்குப் பகைவர்
திறையளிப்பர். பாசறை மன்னன் தம்
மறவர்க்குப் பெருஞ்சோறளித்தலும்
உண்டு. போர்க்களம் புகுந்த மறவர்
நெடுநாள் பாசறையில்
தங்கியிருந்து போரிட்டு வருவர்.
அப்போது அவர்களுக்கு வழங்கும்
உணவு அளவுக்கு உட்பட்டே இருக்கும்.
அந்நாட்களில் ஒரு நாள் மன்னன்
மறவர்க்கு உணர்ச்சி பெருகுதல்
வேண்டிக் கறிவிரவிய
பெருஞ்சோற்றுத்திரள்களை அளிப்பான்
இதுவே பெருஞ்சோறு எனப்படும்.
மகள் மறுத்தல்
வஞ்சி மன்னன் பகை மன்னர்களிடம்
மகள் வேண்டுவான். காஞ்சியார்
மகளைக் கொடுக்க முடியாதென
மறுத்துப் பேசுவர். உழிஞை மறவன்
மகள் வேண்டுவான்; நொச்சி
மன்னன் மகள் தர மறுப்பான்.
உழிஞை வேந்தன்
நொச்சியானது மகளைக் கேட்பான்;
நொச்சியான் மகள் தர மறுப்பான்.
இவ்வாறான காரணங்களுக்காகப்
போர் நடைபெறலும் உண்டு.
உயிர் நீத்தல்
போரில் விழுப்புண்பட்ட மறவன்,
மீண்டும் உயிர் வாழ விரும்பாமல்
தன் புண்ணைத் தானே வேலால்
கிழித்துக் கொண்டு உயிர் நீப்பதும்
உண்டு. போரில் தனது அரசன்
இறந்ததைக் கண்டு தாமும் உடன்
இறப்பதற்காகச் சில மறவர்கள் உயிர்
வேட்டலும் உண்டு. சில மறவர்
செஞ்சோற்றுக் கடன்
வாய்ப்பதற்காகத்
தமதுயிரை அவியாக (பலியாக)
இடுதலும் உண்டு
முடி புனைதல்
பகைவரது மதிலை அழித்த மன்னன்
தனது வாளைப் புண்ணிய
நீராட்டுவான். முடிசூடித் தானும்
புண்ணிய நீராடுவான்.
முடிபுனைந்த
நாளை ஆண்டுதோறும் விழாவாகக்
கொண்டாடுவான்.
போர்ப்படை
போரிடுங்கால் யானை, குதிரை, தேர்
என்பன கையாளப்படும். மறவர்
இவற்றை இயக்கியும் இவற்றின்
மீது அமர்ந்து கருவி கொண்டும்
போரிடுவர். படையின் முதற்பகுதி
தூசிப்படை அல்லது தார் எனப்படும்.
வில் , அம்பு, வாள் , குந்தம், ஆழி,
வேல் முதலிய கருவிகள் போரில்
பயன்படுத்தப்படும். கருவிகள்
தம்மீது பாயாமல் பொருட்டுக் கிடுகு
(கேடயம்) கையாளப்படும்.
கருவிகளில் வேல்
என்பதே முதன்மையானது.
போரிடுங்கால் துடி, முரசம், வளை,
வயிர் போன்ற இசைக்கருவிகள்
முழங்கும்.

வேதியியல்

வேதியியல் (அல்லது
இரசாயனவியல் , chemistry)
எனப்படுவது பருப்பொருளின்
இயைபு, கட்டமைப்பு மற்றும்
அதனால் உருவாகும் பண்புகள்
பற்றிய புலம் ஆகும். வேதியியல்
அடிப்படையான மூன்று அறிவியல்
புலங்களில் ஒன்று; மற்றவை
உயிரியல் , இயற்பியல் ஆகும்.
பின்வருவன வேதியியலின்
மூன்று பெரும்பிரிவுகள் ஆகும்.
கரிம வேதியியல் (சேதன
இரசாயனம் ) - Organic
Chemistry
கனிம வேதியியல் ( அசேதன
இரசாயனம் ) - Inorganic
Chemistry
இயல் வேதியியல் (பௌதீக
இரசாயனம்) - Physical
Chemistry
வேதியியல் அணுக்கள் பற்றியும்,
அவ்வணுக்களுக்குப் பிற
அணுக்களுடனான இடைவினைகள்
பற்றியும், சிறப்பாக வேதியியல்
பிணைப்புக்களின் இயல்புகள்
குறித்தும் கவனம் செலுத்துகிறது.
நிலவியல் , உயிரியல் போன்ற
இயற்கை அறிவியல்
துறைகளை இயற்பியலுடன்
இணைக்கும் துறையாக வேதியியல்
இருப்பதால், சில வேளைகளில்
வேதியியலை "அறிவியலின் மையம்"
என்பதுண்டு. வேதியியல் இயற்பிய
அறிவியலின் ஒரு பகுதியாக
இருப்பினும், இது இயற்பியலில்
இருந்தும் வேறானது.
கோட்பாடு
மரபுவழி வேதியியலானது,
அடிப்படைத் துகள்கள், அணுக்கள்,
மூலக்கூறுகள், சாரப்பொருட்கள்,
உலோகங்கள், பளிங்குகள், பிற
பொருட் சேர்க்கைகள் என்பன
பற்றி ஆய்வு செய்கிறது.
இவ்வாய்வு அப் பொருட்களின்
திண்ம , நீர்ம அல்லது வளிம
நிலையில்
தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இடம்பெறலாம்.
வேதியியலில் ஆராயப்படும்
இடைவினைகள், தாக்கங்கள்,
மாற்றங்கள் என்பன
வேதிப்பொருட்களிடையே இடம்பெறும்
இடைவினைகளின் விளைவாக
அல்லது பொருளுக்கும்
ஆற்றலுக்கும் இடையேயான
இடைவினைகளின் விளைவாக
ஏற்படுபவை. வேதிப் பொருட்களின்
இவ்வாறான நடத்தைகள் பற்றிய
ஆய்வுகள், வேதியியல்
ஆய்வு கூடங்களில்
நடைபெறுகின்றன.
"வேதியியல் தாக்கம்"
அல்லது " வேதிவினை" என்பது சில
சாரப்பொருட்கள் ஒன்று அல்லது பல
சாரப்பொருட்களாக மாற்றம்
அடைவதைக் குறிக்கிறது. இதை ஒரு
வேதிச் சமன்பாட்டினால் குறியீடாக
வெளிப்படுத்த முடியும். இச்
சமன்பாடுகளின் வலது பக்கத்திலும்,
இடது பக்கத்திலும் உள்ள
அணுக்களின் எண்ணிக்கை மிகப்
பெரும்பாலும் ஒரே அளவாக
இருக்கும். ஒரு சாரப்பொருள்
உட்படும் வேதிவினைகளின்
இயல்புகளும், அதனோடு ஆற்றல்
மாற்றங்களும், வேதியியல் விதிகள்
எனப்படும் சில
அடிப்படை விதிகளுக்கு அடங்குவனவாக
உள்ளன.
ஆற்றல், மாற்றீட்டு வெப்பம்
ஆகியவற்றைக் கருத்துக்கு எடுத்தல்
ஏறத்தாழ எல்லா வேதியியல்
ஆய்வுகளிலுமே முக்கியமாக
உள்ளது. வேதிச் சாரப்பொருட்களை,
அவற்றின் கட்டமைப்பு, நிலை,
வேதியியல் சேர்க்கை என்பவற்றின்
அடிப்படையில்
வகைப்படுத்துகின்றனர்.
இவற்றை வேதியியல்
பகுப்பாய்வுகளுக்கான கருவிகளின்
துணையுடன் பகுத்தாய்வு செய்ய
முடியும். வேதியியல் ஆய்வுகளில்
ஈடுபடும் அறிவியலாளர்கள்
வேதியியலாளர் எனப் பெயர்
பெறுவர். வேதியியலாளர்கள்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
வேதியியலின் துணைப் பிரிவுகளில்
சிறப்புத் தகைமைகளைக்
கொண்டிருப்பது உண்டு.
வரலாறு
பண்டைய எகிப்தியர்கள் கிமு 4000
ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை வேதியியலின்
முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.
கிமு 1000
ஆண்டளவிலேயே பண்டைய நாகரிக
மக்கள் வேதியியலின்
பல்வேறு துணைப்
பிரிவுகளுக்கு அடிப்படையாக
அமையும் தொழில்நுட்பங்களைப்
பயன்படுத்தி உள்ளனர். இவற்றுள்
கனிம மூலங்களில்
இருந்து உலோகங்களைப்
பிரித்து எடுத்தல், மட்பாண்டங்களை
வனைந்து மெருகிடல்,
நொதிக்கவைத்துக் மதுவகைகள்
தயாரித்தல், ஆடைகளுக்கும்,
நிறந்தீட்டலுக்கும் வேண்டிய
வண்ணங்களைத் தயாரித்தல்,
மருந்துகளையும் வாசனைப்
பொருட்களையும்
செய்வதற்கு தாவரங்களில்
இருந்து வேதிப் பொருட்களைப்
பிரித்தெடுத்தல், பாற்கட்டிகளைச்
செய்தல், ஆடைகளுக்கு நிறமூட்டல்,
தோலைப் பதப்படுத்துதல்,
கொழுப்பிலிருந்து சவர்க்காரம்
உற்பத்திசெய்தல், கண்ணாடி
உற்பத்தி, வெண்கலம் போன்ற
கலப்புலோகங்களை உருவாக்குதல்
போன்றவை அடங்கும்.
வேதியியல், தாதுப் பொருட்களில்
இருந்து உலோகங்களைப்
பிரித்து எடுப்பதற்கு வழி சமைத்த
எரிதல் என்னும் தோற்றப்பாட்டில்
இருந்து தோற்றம் பெற்றதாகக்
கொள்ளலாம். அடிப்படையான
கோட்பாடுகளைப்
புரிந்து கொள்ளாவிட்டாலும்
பொன்னின் மீதிருந்த
பேராசை அதனை தூய்மையாக்கும்
வழிமுறைகளைக் கண்டுபிடிக்க
உதவியது. இது தூய்மையாக்குதல்
என்றில்லாமல் ஒரு மாற்றம்
என்றே அக்காலத்தில்
எண்ணியிருந்தனர்.
அக்காலத்து அறிஞர்கள் பலர்
மலிவான உலோகங்களைப்
பொன்னாக மாற்றுவதற்கான
வழிமுறைகள் உள்ளன என நம்பினர்.
இது இரசவாதம்
தோன்றுவதற்கு அடிப்படை ஆகியதுடன்,
மூல உலோகங்களைத் தொட்டதும்
பொன்னாக மாற்றக்கூடிய
"இரசவாதக்கல்"லைத் தேடும்
முயற்சிகளுக்கும் வித்திட்டது.
கிமு 50 ஆம் ஆண்டில் உரோமரான
லூக்கிரட்டியசு என்பவர் எழுதிய
பொருட்களின் இயல்பு (De Rerum
Natura ) என்னும் நூலில்
கண்டபடி,கிரேக்கர்களின் அணுவியக்
கோட்பாடு கிமு 440க்கு முற்பட்ட
பழமை வாய்ந்தது. தூய்மையாக்க
வழிமுறைகளின் தொடக்ககால
வளர்ச்சிகளில்
பெரும்பாலானவை குறித்து மூத்த
பிளினி என்பவர் தனது இயற்கைசார்
வரலாறு (Naturalis Historia) என்னும்
தனது நூலில் விளக்கியுள்ளார்.
வேதியியலின் வளர்ச்சிப் போக்கைப்
பருமட்டாகப்
பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:
1. எகிப்திய இரசவாதம் (கிமு 300 -
கிமு 400),
"ஆக்டோவாட்" (எண்மடங்கு)
போன்ற தொடக்ககாலத் தனிமக்
கோட்பாடுகளை உருவாக்கியது.
2. கிரேக்க இரசவாதம் (கிமு 332 -
கிபி 642), மசிடோனியப் பேரரசர்
அலெக்சாந்தர் எகிப்தைக்
கைப்பற்றியபோது அதன்
தலைநகர் அலெக்சாந்திரியாவில்
உலகின் மிகப்பெரிய நூலகம்
இருப்பதையும்
அங்கே அறிஞர்கள்
ஒன்றுகூடி ஆய்வு செய்வதையும்
அறிந்துகொண்டார்.
3. இசுலாமிய இரசவாதம் (கிபி 642 -
1200), இசுலாமியர் எகிப்தைக்
கைப்பற்றினர். சாபிர் இபின்
அய்யான், அல்-ராசி போன்றோர்
இரசவாதத்தை வளர்த்தனர், சாபிர்
அரிசுட்டாட்டிலின்
கோட்பாடுகளைத்
திருத்தியமைத்தார்.
வழிமுறைகளிலும் கருவிகளிலும்
மாற்றங்கள் ஏற்பட்டன.
4. ஐரோப்பிய இரசவாதம் (1300 -
இன்றுவரை), சியுடோ-கெபர்
என்பார் அராபிய
வேதியியலை அடிப்படையாக
வைத்து மேலும்
அதனை வளர்த்தெடுத்தார். 12
ஆம் நூற்றாண்டில்
இருந்து பெரிய முன்னேற்றங்கள்
அராபிய
மண்ணிலிருந்து ஐரோப்பாவுக்கு மாறின.
5. வேதியியல் (1661), போயில்
வேதியியலில் முக்கியமான
நூலொன்றை (The Sceptical
Chymist) எழுதினார்.
6. வேதியியல் (1788),
இலவோசியே என்பார்
தனது "வேதியியலின்
கூறுகள்" (Elements of
Chemistry) என்னும்
நூலை எழுதி வெளியிட்டார்.
7. வேதியியல் (1803), டால்ட்டனின்
"அணுக் கோட்பாடு" என்னும்
நூல் வெளியானது.
8. வேதியியல் (1869),
டிமிட்றி மென்ட்லீவ் தற்கான
வேதியியலின் சட்டகமாக
அமைந்திருக்கும் ஆவர்த்தன
அட்டவணையை முன்வைத்தார்.
தற்கால வேதியியலின்
முன்னோடிகளும், தற்கால
அறிவியல் வழிமுறைகளைக்
கண்டுபிடித்தவர்களும் நடுக்
காலத்தைச் சேர்ந்த அராபிய, பாரசீக
அறிஞர்கள் ஆவர். இவர்கள்
துல்லியமான கவனிப்புக்களையும்,
கட்டுப்பாடுள்ள
பரிசோதனை முறைகளையும்
அறிமுகப் படுத்தியதுடன், புதிய பல
வேதிப் பொருட்களையும்
கண்டறிந்தனர்.
"அறிவியல் என்ற வகையில்
வேதியியலை முழுமையாக
உருவாக்கியவர்கள்
முசுலிம்கள் எனலாம்.
இத்துறையில் கிரேக்கர்கள்
தொழில்துறைப்
பட்டறிவுகளுடனும்,
தெளிவற்ற
எடுகோள்களுடனும்
நிறுத்திக்கொள்ள, முசுலிம்கள்
துல்லியமான
கவனிப்புகளையும்,
கட்டுப்பாடுள்ள
சோதனை முறைகளையும்,
கவனமான
குறிப்பெடுத்தலையும்
அறிமுகப்படுத்தினர்.
"அலெம்பிக்" என
அழைக்கப்பட்ட
வடிகலன்களைக்
கண்டுபிடித்துப் பெயரிட்டனர்,
எண்ணற்ற
சாரப்பொருட்களை வேதியியல்
முறைப்படி பகுப்பாய்வு செய்தனர்,
கல் சார்ந்த
பொருட்களை உருவாக்கினர்,
காரத்தையும், அமிலத்தையும்
வேறுபடுத்தினர், அவற்றின்
நாட்டப் பண்புகள்
குறித்து ஆய்வு செய்தனர்,
நூற்றுக் கணக்கான மருந்துகள்
குறித்து ஆய்வு செய்து உற்பத்தி செய்தனர்.
முசுலிம்களுக்கு எகிப்தின்
வழியாகக் கிடைத்த இரசவாதம்,
ஆயிரக் கணக்கான
துணை விளைவுக்
கண்டுபிடிப்புக்களூடாகவும்,
மத்திய காலத்தின் மிகச் சிறந்த
அறிவியல் செயற்பாடாக
விளங்கிய அதன்
வழிமுறைகளூடாகவும்
வேதியியலுக்குப் பங்களிப்புச்
செய்தது."
மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த
முசுலிம் வேதியியலாளர்களுள்
சாபிர் இபின் ஐய்யான், அல்-கின்டி,
அல்-ராசி, அல்-பிரூனி, அல்-அசென்
என்போர் அடங்குவர். சாபிரின்
ஆக்கங்கள், 14 ஆம் நூற்றாண்டின்
எசுப்பானியாவைச் சேர்ந்த சியுடோ-
கெபெர் என்பவரின் இலத்தீன்
மொழிபெயர்ப்புக்கள் ஊடாக
ஐரோப்பாவுக்கு அறிமுகமாகின.
சியுடோ-கெபெர், கெபெர் என்னும்
புனை பெயரில் தானாகவும் சில
நூல்களை எழுதியுள்ளார்.
வேதியியலின் வளர்ச்சியில் இந்திய
இரசவாதிகளினதும்,
உலோகவியலாளர்களினதும்
பங்களிப்புகளும் குறிப்பிடத்
தக்கவை.
ஐரோப்பாவில் வேதியியலின் எழுச்சி,
இருண்ட காலம் என அழைக்கப்படும்
காலத்தில் அடிக்கடி ஏற்பட்ட
கொள்ளை நோயின்
காரணமாகவே ஏற்பட்டது.
இது மருந்துகளுக்கான தேவையைக்
கூட்டியது. அக்காலத்தில்
எல்லா நோயையும்
குணப்படுத்தவல்ல "காயகல்பம்" என
ஒன்று இருப்பதாகக் கருதினர்.
ஆனால், இரசவாதக்கல் என்பதைப்
போலவே இதையும் எவரும்
இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
இரசவாதத்தைக் கைக்கொண்ட சிலர்
அதை ஒரு அறிவார்ந்த
செயற்பாடாகவே கருதி வந்தனர்.
அவர்களிற் சிலர் காலப் போக்கில்
முன்னேற்றமான கருத்துக்களையும்
முன்வைத்தனர். எடுத்துக்காட்டாக
பராசெல்சசு (1493–1541) என்பார்,
வேதியியல் பொருட்களையும்
மருந்துகளையும் குறித்துத்
தனக்கு இருந்த தெளிவற்ற
புரிதலை வைத்துக்கொண்டு,
நான்கு மூலக்
கொள்கையை மறுத்து இரசவாதமும்
அறிவியலும் கலந்த கலப்புக்
கொள்கையொன்றை உருவாக்கினார்.
இதுபோலவே, கணிதத் துறையில்
கூடுதலான கட்டுப்பாடுகளையும்,
அறிவியல் கவனிப்புக்களில் பக்கச்
சார்பை நீக்குவதையும்
வலியுறுத்திய மெய்யியலாளர்களான
சர் பிரான்சிசு பேக்கன் (1561–1626),
ரெனே டேக்கார்ட் (1596–1650)
போன்றோரின்
செல்வாக்கு அறிவியல்
புரட்சிக்கு வித்திட்டது.
வேதியியலில், இது ராபர்ட் போயில்
(1627–1691) என்பவருடன்
தொடங்கியது. இவர் வளிம
நிலையின் இயல்புகள் தொடர்பான
விதி ஒன்றை வெளிப்படுத்தினார்.
இது போயில்சின் விதி என
அழைக்கப்படுகிறது.
ஆன்ட்டொயின் இலவோசியே
என்பவர் 1783 ஆம் ஆண்டில்
திணிவுக் காப்புக் கோட்பாட்டையும்,
1800ல் ஜான் டால்ட்டன் அணுக்
கோட்பாட்டையும் வெளியிட்டனர்.
உண்மையில் இதன்
பின்னரே வேதியியல்
முதிர்ச்சியடைந்தது எனலாம்.
திணிவுக் காப்பு விதியினதும்,
லவோய்சியரின்
முயற்சிகளையே பெரிதும்
அடிப்படையாகக் கொண்ட
எரிதலுக்கான ஒட்சிசன்
கோட்பாடினதும் விளைவாக
வேதியியலை மீளுருவாக்கம்
செய்யவேண்டி ஏற்பட்டது. எல்லாச்
சோதனைகளையும்,
ஒரே கோட்பாட்டுச் சட்டகத்துள்
பொருத்துவதற்கான
முயற்சியே இலவோசியே வேதியியலுக்கு அளித்த
அடிப்படையான பங்களிப்பு ஆகும்.
இலவோசியே வேதியியல்
சமநிலையின் தொடர்ச்சியான
பயன்பாட்டை நிலை நிறுத்தினார்,
ஒட்சிசனைப்
பயன்படுத்தி பிளாசித்தன்
கோட்பாட்டைத் தூக்கியெறிந்தார்,
புதிய வேதியியல் பெயரிடல்
முறை ஒன்றை உருவாக்கியதுடன்
நவீன மீட்டர் அளவு முறைக்கும்
பங்களிப்புச் செய்துள்ளார். பழைய,
வழக்கொழிந்த வேதியியல் சார்ந்த
சொற்களையும் தொழில்நுட்ப
மொழியையும் பெரும்பாலும்
கல்வியறிவு அற்ற பொதுமக்கள்
புரிந்துகொள்ளும் வகையில்
மொழிபெயர்ப்பதிலும்
இலவோசியே ஈடுபட்டார். இதனால்
வீதியியல் குறித்த மக்களின்
ஈடுபாடு கூடியது. வேதியியலில்
ஏற்பட்ட இத்தகைய முன்னேற்றங்கள்
"வேதியியல் புரட்சி"
என்று பொதுவாக அழைக்கப்படும்
நிலை ஏற்படக் காரணமாயின.
இலவோசியேயின் பங்களிப்புக்கள்,
உலகம் முழுதும்
இன்று கல்வி நிலையங்களில்
கற்கப்படும் நவீன வேதியியல்
உருவாக வழிசமைத்தன. இதனாலும்,
அவரது பிற பங்களிப்புக்களினாலும்
இலவோசியே நவீன வேதியியலின்
தந்தை எனப் போற்றப்படுகிறார்.
அடிப்படைக் கருத்துருக்கள்
வேதியியலில்
பல்வேறு அடிப்படையான
கருத்துருக்கள் உள்ளன. இவற்றுட்
சில கீழே விளக்கப்படுகின்றன.
அணு
அணுவே வேதியியலின்
அடிப்படையான அலகு.
இது நேரேற்றம் கொண்ட மையப்
பகுதியையும், அதைச் சுற்றிலும்
இலத்திரன்களையும் (எலெக்ட்ரான்)
கொண்டிருக்கும்.
அணுக்கரு என்று அழைக்கப்படும்
மையப்பகுதி புரோத்தன்
(புரோட்டான்), நியூத்திரன்
(நியூட்ரான்) என்னும் துகள்களால்
ஆனது. சூழ இருக்கும்
இலத்திரன்கள் எதிரேற்றம்
கொண்டவை. அதனால்,
அணுக்கருவின் நேரேற்றத்தைச்
சமநிலைப் படுத்துகின்றன.
ஒரு தனிமத்தின் இயல்புகளைக்
கொண்டிருக்கும் என
எதிர்பார்க்கக்கூடிய மிகச் சிறிய
துணிக்கையும் அணுவே.
தனிமம்
வேதியியல் தனிமம் என்னும்
கருத்துரு வேதியியல் பொருட்கள்
என்பதோடு தொடர்புடையது.
ஒரு வேதியியல் தனிமம்
என்பது அடிப்படையில்
ஒரே வகையான அணுக்களைக்
கொண்ட ஒரு பொருள்.
ஒரு குறிப்பிட்ட தனிமம் ஒரு குறித்த
எண்ணிக்கை புரோத்தன்களை அதன்
அணுக்கருவில் கொண்டிருக்கும்.
இந்த எண்ணிக்கை அத் தனிமத்தின்
அணுவெண் எனப்படும். எடுத்துக்
காட்டாக 6 புரோத்தன்களைத்
தமது அணுக்கருவில் கொண்ட
அணுக்கள் அனைத்தும் கரிமம்
என்னும் தனிமத்தில் அணுக்கள்.
அதேபோல், 62 புரோத்தன்களைக்
கொண்ட அணுக்கள் யுரேனியம்
என்னும் தனிமத்துக்கு உரியவை.
குறித்த தனிமத்துக்கு உரிய
அணுக்கள் அனைத்தும்
ஒரே எண்ணிக்கையான
புரோத்தன்களைக் கொண்டிருக்கும்
எனினும், அவற்றில் உள்ள
நியூத்திரன்கள்
ஒரே எண்ணிக்கையில்
இருக்கவேண்டும் என்பதில்லை.
இவ்வாறு ஒரேயளவு புரோத்தன்களையும்,
வெவ்வேறு எண்ணிக்கையான
நியூத்திரன்களையும் கொண்ட
அணுக்களையுடைய தனிமங்கள்
ஓரிடத்தான்கள் அல்லது சமதானிகள்
எனப்படுகின்றன. உண்மையில்
ஒரு தனிமத்துக்குப் பல
ஓரிடத்தான்கள் இருக்க முடியும்.
புரோத்தன்களின் எண்ணிக்கையின்
அடிப்படையில் 94 வேதியியல்
தனிமங்கள் அல்லது அணுவகைகள்
இயற்கையில் காணப்படுவதாக
அறியப்பட்டுள்ளது. மேலும் 18
வகையான தனிமங்கள்
ஆய்வு கூடத்தில்
உருவாக்கப்பட்டுள்ளன.
வேதியியல் தனிமங்களைப்
பொதுவாக ஆவர்த்தன
அட்டவணையில்
ஒழுங்கமைக்கின்றனர். இதில்
தனிமங்கள் அணுவெண்களின்
அடிப்படையிலும், இலத்திரன்
அமைப்பின் அடிப்படையில்
கூட்டங்களாகவும்
பிரிக்கப்பட்டுள்ளன. அட்டவணையில்
உள்ள நிரல்கள் கூட்டங்களையும்,
கிடை வரிசைகள்
ஆவர்த்தனங்களையும்
குறிக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்ட
கூட்டங்களில்
அல்லது ஆவர்த்தனங்களில்
இருக்கும் தனிமங்கள் அணு ஆரை,
இலத்திரன் இழுதிறன் போன்ற சில
பொது இயல்புகளைக்
கொண்டவையாக இருக்கின்றன.
சேர்மம்
சேர்மம் என்பது, குறிப்பிட்ட சில
வேதியியல் தனிமங்களின்
அணுக்களைக் குறிப்பிட்ட
விகிதத்திலும், குறிப்பிட்ட
ஒழுங்கமைப்பிலும் கொண்டுள்ள
ஒரு வேதிப்பொருள்.
இது கொண்டுள்ள தனிமங்கள் அதன்
சேர்க்கையையும்,
ஒழுங்கமைப்பு சேர்மத்தின்
வேதியியல் இயல்புகளையும்
தீர்மானிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, "நீர்" என்பது
ஐதரசன் (ஹைட்ரஜன்), ஒட்சிசன்
(ஆக்சிஜன்) ஆகிய தனிமங்களின்
அணுக்களை இரண்டுக்கு ஒன்று என்னும்
விகிதத்தில் கொண்டுள்ள
ஒரு சேர்மம். இதில், ஒட்சிசன்
இரண்டு ஐதரசன்
அணுக்களுக்கு நடுவே தம்மிடையே 104.5°
கோணத்தை உருவாக்கும்படி பிணைக்கப்பட்டு உள்ளது.
சேர்மங்கள் உருவாவதும்,
அவை ஒன்றிலிருந்து இன்னொன்றாக
மாறுவதும் வேதிவினைகளின்
காரணமாக நடைபெறுகின்றன.
வேதிப்பொருள்
வேதிப்பொருள் என்பது குறித்த
சேர்க்கைப் பொருள்களையும்,
இயல்புகளையும் கொண்ட
ஒரு பொருள். இது சேர்வைகள்,
தனிமங்கள் அல்லது சேர்வைகள்
தனிமங்கள் இரண்டினதும்
கலவை ஆகும். அன்றாட
வாழ்க்கையில் காணும் பெரும்பலான
வேதிப்பொருட்கள் ஏதோ ஒரு வகைக்
கலவைகளே. வளி, கலப்புலோகம்
போன்றவற்றை எடுத்துக்காட்டாகக்
கொள்ளலாம்.
வேதிப்பொருட்களுக்கான பெயரிடல்
முறை வேதியியல் மொழியின்
முக்கிய பகுதியாகும். பொதுவாக
இது வேதியியல் சேர்மங்களுக்குப்
பெயரிடும் ஒரு முறையைக்
குறிக்கிறது. வேதியியல் வரலாற்றில்
தொடக்க காலத்தில்
சேர்மங்களுக்கு அவற்றைக்
கண்டுபிடித்தவர்களின் பெயரைத்
தழுவிப் பெயரிட்டனர். இது பல
வகையான குழப்பங்களையும்,
சிக்கல்களையும் ஏற்படுத்திற்று.
இன்று, தூய,
பயன்பாட்டு வேதியியலுக்கான
பன்னாட்டு ஒன்றியத்தினால்
உருவாக்கப்பட்ட முறையைப்
பயன்படுத்தி இலகுவாகப் பெயரிட
முடிகிறது. வேதியியல் பொருள்
வகைகளுக்குப்
பெயரிடுவதற்கு சிறப்பாக
வரையறுக்கப்பட்ட முறைகள்
உள்ளன. கரிமச் சேர்மங்களுக்கு
கரிமப் பெயரிடல் முறையும், கனிமச்
சேர்மங்களுக்குப் பெயரிடக் கனிமப்
பெயரிடல் முறையும்
பயன்படுகின்றன. இதைவிட
வேதிப்பொருட்களை எண்கள் மூலம்
அடையாளம் காணும் முறைகளும்
உள்ளன.
மூலக்கூறு
அயனிகளும் உப்புக்களும்
வேதியியல் விதிகள்
வேதிவினைகள் சில
விதிகளுக்கு அமைவாகவே இடம்பெறுகின்றன.
இவை வேதியியலின் அடிப்படைக்
கருத்துருக்களாக உள்ளன. அவற்றுட்
சில வருமாறு:
அவகாதரோவின் விதி
பீர்-லம்பேர்ட்டின் விதி
போயில்சின் விதி
சார்லசின் விதி
கே-லூசாக்கின் விதி
லே சட்டலியேரின் விதி
என்றியின் விதி
எசுவின் விதி
ஆற்றல் காப்பு விதி
திணிவுக் காப்பு விதி

பெண்களுக்கு

குழந்தை பிறந்த உடனே முன்
காலங்களில் அம்மியில் அரைத்த
பச்சை மஞ்சளைக் கொடுப்பார்கள்.
மஞ்சள் வயிற்றுப்
புண்ணை ஆற்றுவதோடு சுட்ட
கத்தரிக்காய் போல் இருக்கும் கர்ப்பப்
பையை வலுப்படுத்தி ஒரு நிவாரணியாகவும்
செயல்படும். பின்னர் வெற்றிலையில்,
இந்த
வெற்றிலை பிள்ளை பெற்றவர்களுக்கென்றே இளம்
வெற்றிலையாகத்
தேர்ந்தெடுப்பார்கள். அத்தகைய
வெற்றிலையில் கஸ்தூரி மானின்
உடலிலில்
இருந்து எடுக்கப்படுவதாய்ச்
சொல்லப் படும்
கஸ்தூரியை வைத்து மடித்துக்
கொடுப்பார்கள். பின்னர் திப்பிலிச்
சுரசம் தேனை விட்டுக்
கொடுப்பார்கள்.
திப்பிலியை நன்கு வெறும்
வாணலியில் வறுத்துப்
பொடி செய்து இரண்டு கிண்ணம்
நீரில் ஒரு ஸ்பூன் திப்பிலிப்
பொடியைப் போட்டு அரைக்
கிண்ணமாகும் வரை சுண்ட வைத்துத்
தேனை ஊற்றிக் கொடுப்பார்கள்.
பிரசவம் ஆன அன்று நீராகாரமான
கஞ்சி மட்டுமே கொடுப்பார்கள்.
அதுவும்
புழுங்கலரிசியை வறுத்துக்கொண்டு மிக்சியில்
ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டு,
வெந்தயம் சேர்த்துக் குழைய வேக
வைத்து மிதமான
அளவு சர்க்கரையும், பாலும்
சேர்த்துக் கொடுப்பார்கள்.
முன்காலங்களில் பிரசவம் ஆன
பெண்களை நிறைய
வெற்றிலை போட்டுக்கொள்ளச்
சொல்லுவார்கள். அதுவும்
நாட்டு மருந்து எனப்படும்
மூலிகைகள், வேர்கள்
போன்றவற்றால் ஆன சுரசம்,
லேகியம் போன்றவை விடிகாலையில்
நான்கு மணிக்கு எழுப்பிக்
கொடுத்துவிட்டு
உடனே வெற்றிலை போட்டுக்கொண்டு படுக்கச்
சொல்வார்கள். லேகியம், சுரசம்
போன்றவை குடிக்கும், சாப்பிடும்
அளவு மிதமான சூட்டில் இருத்தல்
வேண்டும். இவை எல்லாமே பிரசவம்
ஆனது இருபது,
இருபத்திரண்டு நாட்களுக்குள்ளாகச்
செய்ய வேண்டியவை.
சாப்பிட வேண்டிய காய்கள்: கீரை,
புடலை, அவரை, கத்திரி,
பீர்க்கை எல்லாமே பிஞ்சுகளாக
இருத்தல் நலம். முருங்கையும்
பிஞ்சாகப் பயன்படுத்தலாம்.
வாழைக்காய், உருளைக்கிழங்கு,
சேப்பங்கிழங்கு, சேனை, பூஷணி,
பறங்கி போன்றவற்றைத் தவிர்த்தல்
நல்லது. பூண்டு, வெங்காயம்
அதிகம் சேர்க்கலாம். பூண்டையும்,
வெங்காயத்தையும் பொடியாக
நறுக்கிப் போட்டு தோசை, ஊத்தப்பம்,
இஞ்சி சேர்த்துச் சட்னி, துவையல்,
பச்சடி போன்ற முறையில்
சாப்பிடலாம். வாழைப்பழம்
மலைப்பழம், கற்பூர
ரஸ்தாளி போன்றவை சாப்பிடலாம்.
மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி,
ஆரஞ்சு போன்றவையும்
சாப்பிடலாம். மற்றவை தவிர்த்தல்
நலம். அடுத்து பிரசவ லேகியம்.
பிரசவ லேகியம்
தேவையான பொருட்கள்:
வசம்பு., திப்பிலி, வாய்விளங்கம்,
தேசாவரம், (கண்டந்திப்பிலி,)
சுக்கு,மிளகு, ஜீரகம், சோம்பு,
பறங்கிப்பட்டை, ஜாதிபத்திரி, பெரிய
ஏலக்காய், சின்ன ஏலக்காய்,
அதி மதுரம், அதி விடையம், சடவஞ்சி,
தாளிசிபத்திரி, வால்மிளகு,
லவங்கப்பட்டை, லவங்கம் என்னும்
கிராம்பு, சிறுநாகப்பூ, காட்டாதிப்பு,
ஜாதிக்காய், அரத்தை, சித்தரத்தை,
தனியா, மலைதாங்கி, கருஞ்சீரகம்,
நஞ்சுவிதை, கோஷ்டம், அக்ரகாரம்,
வில்வவேர், நருக்கு மூலம், கூகைநீர்,
ஓமம், செவியம்,
இஞ்சி நூறு கிராம், தேன்
நூறு கிராம் , கால் கிலோ கருப்பட்டி,
நெய் கால் கிலோ, நல்லெண்ணெய்
நூறு கிராம்
மேற்சொன்ன சாமான்கள்
நாட்டு மருந்துக் கடைகளில்
கிடைக்கும். பத்து கிராமுக்குக்
குறையாமலும்,
இருபத்தைந்து கிராமுக்கு மிகாமலும்
மேற்கண்ட
சாமான்களை வாங்கிக்கொள்ளவும்.
பின்னர் சுத்தம் செய்து வெயிலில்
காய வைக்கவும். வெறும்
வாணலியில் ஒவ்வொன்றாய்ப்
போட்டு வறுக்கவும். வறுத்த
சாமான்களை மிக்சியில்
அல்லது இயந்திரத்தில்
பொடி செய்து கொள்ளவும். சுமார்
முக்கால் கிலோ வரை பொடி வரும்.
கால் கிலோ கருப்பட்டியைத் தூள்
செய்து சுத்தமான நீரில்
போட்டு அழுக்கு, கல்
நீக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
இஞ்சி நூறு கிராம் வாங்கித் தோல்
நீக்கித்
துருவி அரைத்துக்கொண்டு சாறு எடுக்கவும்.
சாறை ஒரு இரும்புச் சட்டியில்
ஊற்றிக் கொதிக்க விடவும்.
கொதிக்கையிலே கொஞ்சம்
கொஞ்சமாய்க் கருப்பட்டி நீரையும்
சேர்க்கவும். இரண்டும்
நன்கு கொதிக்கையிலே மேற்சொன்ன
மருந்துப் பொடியில்
பாதி அளவு எடுத்துக்கொண்டு கொதிக்கும்
கலவையில் ஒரு கையால்
கிளறிக்கொண்டே இன்னொரு கையால்
மருந்துப் பொடியைத் தூவவும்.
நன்கு கெட்டியாக வருகையில்
பொடியை நிறுத்திவிடவும். கொஞ்சம்
நெய், நல்லெண்ணெய் எனச் சேர்த்துக்
கிளறிக்கொண்டே இருக்கவும்.
வாணலியில் ஒட்டாமல்
சுருண்டு உருட்டும்
பதத்துக்கு வந்ததும் மிச்சம் இருக்கும்
நெய்யையும், நல்லெண்ணையையும்
விட்டுக் கிளறிக்
கீழே இறக்கி ஆறவிடவும்.
நன்கு ஆறியதும் தேனை விட்டுக்
கலந்து ஒரு சுத்தமான பாத்திரத்தில்
எடுத்து வைக்கவும்.
சாப்பிடும் முறை :
காலை வெறும் வயிற்றில் கொடுத்தல்
நன்மை பயக்கும். ஆனால்
தற்போதைய ஆங்கில மருத்துவம்
இந்த
மருந்துகளை அறவே தடுப்பதால்
காலைக் காப்பியின் போது ஒரு டேபிள்
ஸ்பூன் இந்த லேகியம் கொடுத்த
பின்னர் காலைக்காப்பியைச் சாப்பிட
வைக்கலாம். தினமும்
இருவேளை எடுத்துக்கொள்ளலாம்.
அஜீர்ணம், வாயு சேர்தல், பித்தம்,
ருசியின்மை போன்றவை குறைந்து பிரசவம்
ஆன பெண் நன்கு ஆரோக்கியமாக
உணவு எடுக்க
முடிவதோடு குழந்தைக்குப்பாலும்
சுரக்கும். மேற்சொன்ன அளவுப்
பொடியை மூன்று மாதங்களுக்குப்பயன்படுத்தலாம்.
அதன் பிறகும் தேவை எனில்
சாமான்கள் வாங்கி மருந்துப்
பொடி தயாரித்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
குழந்தை பிறந்த ஒருவருடமும் முன்
காலங்களில் சாப்பிட்டு வந்தார்கள்.
பிரசவம் ஆன கர்ப்பிணிப் பெண்களில்
பலரும் தாய்ப்பால்
சுரக்கவில்லை எனக் கவலைப்
படுகின்றனர்.
அவர்கள் கீழ்க்கண்ட முறைகளில்
ஏதேனும் ஒன்றைத்
தொடர்ந்து கடைப்பிடித்தால் சீக்கிரம்
குழந்தைக்குப் பாலூட்டி மகிழலாம்.
வெள்ளைப் பூண்டை நெய்யில்
வதக்கிச் சாதத்தில் போட்டுச்
சாப்பிடலாம், அல்லது தோசையில்
வெங்காய ஊத்தப்பம் போல்
பூண்டு ஊத்தப்பமாகச்
சாப்பிட்டு வரலாம். நெய்யில் வதக்கிய
பூண்டைப் பாலில் வேகவைத்தும்
சர்க்கரை சேர்த்துச்
சாப்பிட்டு வரலாம்.
முருங்கைக்கீரையை நன்கு ஆய்ந்து நறுக்கி நெய்யில்
வதக்கிப்பொரியலாகவோ, சூப்
போலவோ வைத்துச்
சாப்பிட்டு வரலாம். பருப்புடன்
சேர்த்துக் கூட்டாகவும்
சாப்பிட்டு வரலாம்.
கேழ்வரகை ஊற வைத்து,
முளை கட்டி, மாவாக்கி அந்த
மாவுடன் எள்ளும், வெல்லமும்
சேர்த்து உருண்டைகளாக்கிச்
சாப்பிட்டு வரலாம்.
புழுங்கலரிசியை வறுத்துக்கொண்டு அத்துடன்
வெந்தயமும் சேர்த்துக் கஞ்சியாக்கிச்
சாப்பிட்டு வரலாம்.
(இதைப்பிரசவத்திற்கு முன்னாலேயே கர்ப்ப
காலத்திலேயே ஆரம்பிக்கலாம்.)
சுரைக்காயுடன்,
பாசிப்பருப்பு சேர்த்து, நெய்யில்
கடுகு, சீரகம் தாளித்துப் பொரியல்
செய்து சாப்பிடலாம்.
முற்றிய பப்பாளிக்காய்களையும்
பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ,
சாலடாகவோ,
பொரியலாகவோ சாப்பிடலாம்.
பூண்டு நிறையப் போட்டு ரசம்
வைத்துச் சாப்பிடலாம்.
வெங்காயத் தாள், பூண்டுதாள்
நறுக்கி வெங்காயம், தக்காளியுடன்
தாளிதம் செய்து வதக்கிச் சாதத்தில்
போட்டுச் சாப்பிடலாம்.
சீரகம்
பொடிசெய்து கொண்டு அத்துடன் சம
அளவு வெல்லம் சேர்த்தும்
சாப்பிடலாம்.
--Geetha Sambasivam 08:03, 1 ஜூன்
2011 (UTC)

பாரம்பரிய உணவு

நலம் தரும் பாரம்பரிய
உணவுகள
நலம் தரும் பாரம்பரிய உணவுகள்
"தோலுடன் சாப்பிடுபவை மிகச்சிறந்த
உணவு' :
இயற்கை மருத்துவ சங்க கூட்டத்தில்
தகவல் கும்பகோணம்: கும்பகோணம்
அருகே ஆடுதுறை இயற்கை மருத்துவ
சங்கத்தின் 333வது கூட்டம்
ஆடுதுறை மாவட்ட ஆசிரியர்
கல்வி நிறுவனத்தில்
செயற்குழு உறுப்பினர் மழைநீர்
பொறியாளர் வரதராஜன் தலைமையில்
நடந்தது. செயலர் ராமலிங்கம் கூட்ட
அறிக்கை, கணக்கை படித்தார்.
இணை செயலாளர்
திருநீலக்குடி உலகநாதன்
வரவேற்றார். தலைவர் வரதராஜன்
உடற்பயிற்சிகளை செய்து காட்டினார்.
கும்பகோணம் குழந்தைகள் நல
மருத்துவர் விருதகிரி, "நலம் தரும்
பாரம்பரிய உணவுகள்,' என்ற
தலைப்பில் பேசியதாவது:
சுவாமிமலை முருகனுக்கு தேனும்,
தினைமாவும், சூரியனார்கோவில்
நவக்கிரகங்களுக்கு நவதானியங்கள்
படைக்கப்படும். இவை தோலுடன்
சாப்பிடக்கூடிய உணவுகள்.
தோலுடன் சாப்பிடக்கூடிய
உணவுகளே மிகச்சிறந்த உணவுகள்.
கம்பு, கேழ்வரகு, வரகு, தினை,
சாமை முதலிய தானியங்களை நம்
முன்னோர்கள் அதிகம்
உண்டு நோயின்றி ஆரோக்கியமாக
வாழ்ந்தனர்.
குழந்தைகளின் மிகச்சிறந்த
சத்துணவு தாய்ப்பால்தான்.
குழந்தை பிறந்த
அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால்
கொடுக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு பின்
இரண்டாண்டுகள்
வரை தாய்ப்பாலுடன் பருப்பு, நெய்,
கீரை, காய்கறிகள் சேர்ந்த
உணவு கொடுக்கலாம். தாய்ப்பால்
சுரக்க அரிசி சாதத்துடன் பூண்டு,
பச்சைப்பயறு முதலியவற்றை சமைத்துக்
கொடுக்கலாம். டப்பாக்களில்
அடைக்கப்பட்ட
உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க
தேவையில்லை. பதப்படுத்தப்பட்ட
உணவுகள் பயனில்லாத உணவுகள்.
நாட்டில் எளிமையான சத்துகள்
உண்டு.
கைக்குத்தல் புழுங்கல் அரிசி மிகுந்த
சத்துள்ளது. குறுணை அரிசியில்
இட்லி, கொழுக்கட்டை முதலிய
பலகாரங்கள் செய்து சாப்பிடலாம்.
வரகரிசியில் பொங்கல்,
உப்புமா செய்து சாப்பிடலாம்.
ஊறவைத்த அரிசி இரண்டு பங்கு,
முடக்கத்தான்
இலை அல்லது செம்பருத்தி இலை ஏதேனும்
ஒரு கீரை, தோலுடன் ஊற வைத்த
உளுந்து அரை பங்கு அரைத்து தோசையாக
சாப்பிடலாம். கீரைகள்
சிறுநீரகத்தை கெடாமல் காப்பாற்றும்.
நெல்லிக்காயும், எலுமிச்சையும்
மிகச்சிறந்த உணவுகள்.
நம் முன்னோர்கள்
பிஞ்சு வாழைக்காயை சேர்த்து சாப்பிட்டுள்ளார்கள்.
இஞ்சி, பூண்டு, பெருங்காயம்
ஆகியவற்றில் நுண்தாதுப் பொருள்கள்
உள்ளன. மஞ்சள் மிகச்சிறந்த
கிருமிநாசினி. இது ஞாபக
மறதி நோய்க்குத் தடுப்பாக
அமைகிறது. நல்லெண்ணைய்,
கடலை எண்ணையும் நம் உடல்
நலத்துக்கு ஏற்றவை. மலைத்தேன்
உடலுக்கு தி தரக்கூடியது.
தேங்காய் மிகச்சிறந்த உணவு.
அதனால் தான்
இறைவனுக்கு படைக்கிறார்கள். அதில்
நடுத்தரமான அமிலம் உள்ளது.
அது சிறுநீரகத்திலும், கல்லீரலிலும்
கொழுப்பாக படியாது.
"மாறுபாடில்லாத
உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு,'
என்று வள்ளுவர் கூறியுள்ளார். நம்
நாட்டில் எளிய
சத்துணவுகளை வறுத்தல்,
பொரித்தல், எண்ணையில்
வேகவைத்தல் முதலிய
முறைகளை பயன்படுத்தி மாறுபடுத்தாமல்
நீரில் வேகவைத்தல், நீராவியல்
வேகவைத்தல் முதலிய
முறைகளை பயன்படுத்தி அளவு மீறாமல்
உண்டு வந்தால்
நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

கோள்கள்

கோள்களை அறிவோம்
பொருளடக்கம் [ மறை]
1 ஆசிரியர் : திரு. செல்வன் USA
1.1 பகுதி -1
1.2 வியாழ மண்டலம் (jupiter)
1.3
1.4 பகுதி - 2
1.5 புத மண்டலம் (mercury)
1.6 பகுதி - 3
1.6.1 கோள்களின் தோற்றம்
1.7 பகுதி - 4
ஆசிரியர் : திரு. செல்வன் USA
பகுதி -1
வியாழ மண்டலம் (jupiter)
வியாழனுக்கு 63 துணைக்கோள்கள்
உள்ளன.அவற்றுள்
ஒன்று யூரபா (Europa ) நிலவின்
அளவை விடச் சற்றுப் பெரிதான இந்த
கிரகத்தில் சூரியக் குடும்பத்தில்
உள்ள மாபெரும் அற்புதம்
ஒன்று காணப்படுகிறது...அதான்
தண்ணீர். அதுவும் சாமானியமாக
இல்லை. யூரபாவில் மிகப்பெரும்
கடல் அளவில் திரவம் உள்ளது.
இந்தச் செய்தி அறிவியல் உலகில்
மாபெரும்
அதிர்வுகளை ஏற்படுத்தியது.
யூரபாவில் -300 டிகிரி குளிர்
நிலவுவதால் அங்கே திரவநிலையில்
தண்ணீர் இருக்கும்
என்பதை அறிவியலாரால்
கற்பனையில்கூட எதிர்பார்த்திருக்க
மாட்டார்கள்; ஆனால் பேரதிசயமாக
யூரபாவில் - 300
டிகிரி திரவநிலையில் நீர் உள்ளது.
காரணம் ஜியோதெர்மல்
எனெர்ஜி ( geothermal
energy) ...குழம்பவேண்டாம்.
http://en.wikipedia.org/
wiki/Europa%28moon%29
பூமியில் உள்ள கடலில் அலைகள்
உருவாக நிலவின்
ஈர்ப்பு விசையே காரணம் என
அறிவோம். பூமியை விடப்
பலமடங்கு சிறிய நிலவு பூமியைக்
கவர்ந்து இழுக்க முயன்று பூமியில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
பூமியை விடப் பல மடங்கு பெரிய
ஜுபிடர் கிரகம் நிலவை ஒத்த
யூரபாவில்
எத்தனை குழப்பத்தை ஏற்படுத்தும்
என எண்ணிப் பாருங்கள்... ஜுபிடரின்
ஈர்ப்பு விசை யூரபாவில்
பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இப்படி ஜூபிடரின் ஈர்ப்பு விசையும்,
யூரபாவின் ஈர்ப்பு விசையும்
பொருதும்போது மிக
உயர்நிலை வெப்பம் யுரபாவின்
அடியாழத்தில் உருவாகிறது. அந்த
வெப்பம் யுரபாவின் சமுத்திரத்தைச்
சூடாக்கி திரவ நிலையில்
வைத்திருக்கிறது. ஆனால்
மேற்புறத்தில் -300 டிகிரி F குளிர்
நிலவுவதால் சமுத்திரத்தின்
மேற்புறம் பனியாக
உறைந்து காணப்படுகிறது.
ஆக யூரபாவில் வெப்பம் உண்டு,
சமுத்திரம்
உண்டு....உயிரை உருவாக்கும்
மூலக்கூறுகளைக் (Molecules)
கொண்டுவந்து சேர்க்கும் விண்கல்
(வால் நக்ஷத்ரம்) தாக்குதலும்
உண்டு.
பூமியில் உருவான முதல் உயிரினம்
செவ்வாய்
கிரகத்திலிருந்து வந்தது என்றொரு கோட்பாடும்
உண்டு. ஆம்..நாலரை பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில்
கடல் இருந்தது, ஆறுகள் ஓடின.
அப்போது செவ்வாயைத் தாக்கிய
விண்கல் ஒன்று அதனுள்
பேரதிர்வை ஏற்படுத்தியதாகவும்,
அப்போது செவ்வாயில் இருந்த கற்கள்
விண்வெளியில் தூக்கி எறியப்
பட்டதாகவும், அதில் ஒரு கல்
பூமியில் வந்து விழுந்ததாகவும்,
அந்தக் கல்லில்
ஒரு சிறு உயிரி ஒட்டிகொண்டு வந்து பூமியில்
பல்கிப் பெருகியதாகவும்
ஒரு கோட்பாடு உண்டு.
இது உண்மை எனில் நாம்
அனைவரும் ஏலியன்களே.
யூரபாவிலும் இதேபோல் விண்கல்
தாக்குதல்கள் உண்டு என்பதால்
யூரபாவின் சமுத்திரத்தில் ஏலியன்
உயிர்கள் இருக்கலாம் என்ற
கருத்தாக்கம் அறிவியல் உலகில்
உருவாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் சூரிய ஒளிபடாமல்
பனிக்கட்டிகள்
சமுத்திரத்தை முழுவதும்
மூடியிருப்பதால் உயிரினம்
அங்கே வாழும் சூழல் இருக்காது என
முன்பு அறிவியலார் நம்பினர்.
அன்றைய காலகட்டத்தில் சூரிய
ஒளி இல்லாமல் உயிர்கள்
வாழஇயலாது எனக் கருதப்பட்டது;
ஆனால் பூமியில் பசிபிக்
சமுத்திரத்தின்
அடியாழத்தை ஆராய்ந்த உயிரியலார்
(biologists) அங்கே சூரிய
ஒளியே இல்லாத பிரதேசத்திலும்
ஜியோதெர்மல் எனெர்ஜி (geothermal
energy) மூலம் உயிர்கள் வாழ்வதைக்
கண்டு பிடித்தனர்.
இது விண்வெளி ஆய்விலும்
பரபரப்பைக் கிளப்பியது.
பூமியின் அண்டார்க்டிகாவிலும்
உயிரிகள் உள்ளன என்பதை இந்த
வலைத்தளம் சொல்கிறது –
http://www.i-fink.com/articles/
articles/lonely_old_bacteria/ம்
http://en.wikipedia.org/wiki/Europa
%28moon%29
சூரிய ஒளியே படாத இடத்தில்
திரவநிலை சமுத்திரத்தில் பூமியில்
ஜியோதெர்மல் எனெர்ஜி மூலம்
உயிர்கள் பல்கிப்பெருக முடியும்
என்றால் யுரோபாவிலும்
பனிக்கட்டிக்கு அடியே திரவநிலை சமுத்திரத்தில்
ஏன் உயிர்கள் வாழக்கூடாது ?
உயிரினம் உருவாக,
வாழ,பல்கிப்பெருகத் தேவைப்படும்
எல்லாச் சூழல்களும் யூரபாவில்
நிலவுகின்றன. உயிரினம் என்றால்
ஏதேனும் கடல் கன்னி, திமிங்கிலம்,
நாலு கால் மனிதன் எனக்
கற்பனை செய்ய வேண்டாம்.
ஒரே ஒரு மைக்ரோப், பாக்டீரியா,
வைரஸ், பாசி, செடி என எதுவாக
இருந்தாலும் அதுவும் உயிர்தான்.
பூமிக்கு வெளியே ஏதோவொரு கோளில்
ஒரே ஒரு சிற்றுயிர்
இருப்பது ஊர்ஜிதமானாலும்
அது நிலவில் மனிதன்
காலடி எடுத்து வைத்ததற்கொப்பான
அரிதான கண்டுபிடிப்பு.
இரு இடங்களில் உயிர்கள் இருந்தால்
பிரபஞ்சம் முழுவதும் உயிர்கள்
மலிந்திருக்கும் என நிரூபணமாகும்.
பூமியில் உயிர்
தோன்றியது விபத்து அன்று; அந்தச்
சூழல் நிலவும் எந்த கிரகத்திலும்
உயிர்கள் உண்டு என
நிரூபணமானால் அப்புறம் பிரபஞ்சம்
முழுவதும் உயிர்கள் இருக்கும்
என்பது உறுதி ஆகும். பிரபஞ்சத்தில்
கணக்கு வழக்கற்ற எண்ணிக்கையில்
அண்டங்கள் (galaxies) உள்ளன.
ஒவ்வொரு காலக்சியிலும் ஆயிரம்
கோடிக் கோள்கள். ஆக எண்ணற்ற
ஏலியன் உயிரினங்கள் இருக்கும்
வாய்ப்பு உண்டு; ஆனால்
இதை நிரூபிக்க நமக்குத்
தேவைப்படுவது ஒரே ஒரு ஏலியன்
(Alien) உயிரினம். அது யூரபாவில்
உண்டா இல்லையா என்பதை எப்படிக்
கண்டு பிடிப்பது?
யூரபாவுக்கு ஒரு ராக்கெட்டை அனுப்புவது.
அது யுரபாவின் மேற்பரப்பில்
இறங்கி அங்கே ஒரு சுரங்கம்
வெட்டும். அதனுள் நீரில் நீந்தக்கூடிய
ரோபோ ஒன்று காமராவுடன்
இறங்கி நீந்தியபடி விடியோ எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கும்.
அந்த வீடியோவில் ஏலியன் உயிரினம்
ஒன்றே ஒன்று தட்டுப்பட்டாலும்
அது அறிவியலில் வரலாற்றுத்
திருப்புமுனையாக அமையும்.
ஆகா அருமையான திட்டமா இருக்கு.
யூரபாவுக்கு ராக்கெட் எப்பக்
கிளம்புகிறது என்று கேட்கிறீர்களா ???
இப்போதைக்குக் கிளம்புவதாக
இல்லை.காரணம் இப்படி எளிதான
திட்டம் கையில் இருந்தாலும்
அதை நிறைவேற்றும் நுட்பம்
நம்மிடம் இன்னும் இல்லை.
முப்பது கோடி மைலுக்கு அப்பால்
உள்ள
கோளுக்கு ஒரு ராக்கட்டை அனுப்பி,
அங்கே மைனஸ் 300 டிகிரி F குளிரில்
பாறையாக உறைந்து கிடக்கும்
பனியில் பல மைல் ஆழத்துக்குக்
குழிதோண்டி, ரோபோவை கடலுள்
இறக்கி,,, புகைப்படம் எடுத்து....
இதைச் செய்யும் நுட்பம் நம்மிடம்
இன்று இல்லை.
ஆனால் இன்னும் 20, 30 ஆண்டுகளில்
அந்த டெக்னாலஜி நம்மிடம்
கிடைக்கலாம். இப்போதுதான்
அண்டார்டிகா பனிப்பரப்பைத்
துளைத்துச் சுரங்கம்
தோண்டி உள்ளே இருக்கும்
சமுத்திரத்தை ஆராயும் முயற்சியில்
அறிவியலார் வெற்றியடைந்துள்ளனர் -
http://earthsky.org/space/
bill-stone-robo-sub-allien-life-jupiters-
moon
இதையே முப்பது கோடி மைலுக்கு அப்பால்
உள்ள ஒரு கோளில் செய்தால்
இத்திட்டம் வெற்றி அடையும்...
பில்லியன் கணக்கான ஆண்டுகளாக
சமுத்திரத்தில்
உறைபனிக்கு அடியே எந்த
மாதிரியான உயிரினங்கள் யூரபாவில்
உருவாகியிருக்கக் கூடும்?
முதன்முதலில் ஒரு காமிரா ஏந்திய
ரோபோவைச்
சந்திப்பது அவற்றுக்கு என்ன
வகையான
உணர்வுகளை அளிக்கக்கூடும்?
பிரபஞ்ச
வரலாற்றை மாற்றியமைக்கும்
இத்தகைய
மகத்தானதொரு சந்திப்பு நிகழுமா?
நம்புவோம்...நம்பிக்கைதானே வாழ்க்கை?
பகுதி - 2
புத மண்டலம் (mercury)
”எக்ஸோடஸ் எர்த்” எனும் சயன்ஸ்
சானல் நிகழ்ச்சியில் புத மண்டலத்தில்
(மெர்க்குரி) மனிதன் குடியேற
முடியும் என்பதை விளக்கினார்கள்.
மெர்க்குரி என்பது கடும் வெப்பம்
நிறைந்த,கால் வைக்கவும் இயலாத
கோள் எனக் கருதியிருந்த
எனக்கு அந்த
நினைப்பு தவறு என்பதை இந்த
நிகழ்ச்சி நிரூபித்தது.
புதன் (mercury)
என்பது சூரியனுக்கு அருகே உள்ள
கோள். பூமியின் அளவில்
நாற்பது சதவிகிதம் மட்டுமே உள்ள
கோள் புதன். புத மண்டலத்தின்
ஒரு நாளின் அளவு அதன் ஆண்டின்
கால அளவைக் காட்டிலும் சுமார்
இரு மடங்கு அதிகம்.
அது எப்படி என்று பார்ப்போம்.
பூ மண்டலம் 24 மணி நேரத்தில்
தன்னைச் சுற்றுகிறது; சூரியனைச்
சுற்ற 365 நாட்கள்; ஆனால் புத
மண்டலத்தின் இயல்பு வேறு.
அது தன்னைத் தானே சுற்ற
பூமி நாட்களில் 176
நாட்களுக்கு சமமான
நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
அதாவது புதனின் ஒரு நாள்
என்பது பூமியில் 176
நாட்களுக்கு சமம்; ஆனால்
சூரியனையோ அதே அளவில் 87
நாட்களில் சுற்றி விடுகிறது புத
மண்டலம். ஆக புதனின் ஒரு நாள்
அதன் வருடத்தை விட சுமார்
இருமடங்கு அதிகம்.
சூரியக் குடும்பத்தில் மனிதன்
குடியேறும் வாய்ப்புள்ள கிரகங்களில்
மெர்க்குரியும்
ஒன்று என்பது விந்தையான
தகவல்.காரணம் மெர்க்குரியின்
வித்தியாசமான
நிலவியலே.மெர்க்குரியின் ஒருபக்கம்
சூரியனைப் பார்த்தபடி உள்ளது.
அந்தப் பகுதியில் 800 டிகிரி வெப்பம்
நிலவுகிறது. ஒப்பீட்டளவில் சமையல்
செய்யும் அவனில் (oven) 450
டிகிரி வெப்பம் தான்.
இந்த அளவு வெப்பம் மிக்க
மெர்க்குரியில் எப்படிக்
குடியேறுவது என்று கேட்கிறீர்களா?
ரொம்ப சிம்பிள். மெர்க்குரியின்
ஒரு பக்கம்தான் சூரியனைப்
பார்த்தபடி உள்ளது; அதன்
இன்னொருபக்கம்
சூரியனுக்கு எதிர்ப்புறமாக. அந்தப்
பக்கம் சூரியனை நோக்கித் திரும்ப
176 நாட்கள் ஆகும் என்பதால்
அங்கே கடும்குளிர் நிலவும்,
கடும்குளிர் என்றால் -261
டிகிரி குளிர்.
அதாவது அண்டார்டிகாவை விட
இரு மடங்கு குளிர் அதிகம்.
மெர்க்குரியில் சூர்யோதயம் -
http://
discoveryenterprise.blogspot.com/2010/04/
exodus-earth-mercury.html
ஆனால் அதிசயமாக மெர்க்குரியின்
துருவங்களில் சூரிய ஒளி அதிகம்
படுவதில்லை. அங்கே விண்கற்கள்
விழுந்து உருவான பல குழிகள்
உண்டு.
அங்கே அண்டார்டிகாவுக்கு ஒப்பான
குளிர் நிலவும்.எப்போதும்
அங்கே வெயில் படாது.
அண்டார்டிகாவில் அறிவியலார்
வசிப்பது போல அந்த குழிகளுக்குள்
நிரந்தரக்
குடியிருப்புக்களை ஏற்படுத்திக்
கொண்டு வசிக்கலாம்.
குழிக்குள் வசித்தால் நீர், காற்று,
உணவுக்கு எங்கே போவது என்று கேட்கிறீர்களா?
அதிசயத்திலும் அதிசயமாக
மெர்க்குரியின் துருவப் பகுதிகளில்
பனிக்கட்டி வடிவில் நீர் உள்ளது.
அதுவும் கிட்டத்தட்ட
அண்டார்டிகா பனித்
தகடுக்கு சமமான
அளவு பனிக்கட்டி உள்ளது.
இத்தனை பனி அங்கே எப்படி வந்தது ?
விண்கற்கள் மெர்க்குரியைத்
தாக்கியபோது அவற்றிலிருந்த நீர்
அப்படியே மெர்க்குரியின் துருவப்
பகுதிகளில் தங்கி விட்டது.
அங்கே சூரிய வெளிச்சம்
படுவதில்லை என்பதால்
பனிக்கட்டியாக உறைந்து விட்டது.
நீர் இருக்கு சரி..காற்றுக்கு (உயிர்
வளிக்கு) என்ன செய்வது? அறிவியல்
அதற்கும் வழி சொல்கிறது.
மெர்குரியில் காற்றே இல்லை.
ஆனால் மெர்க்குரியின் மண்ணில்
ஏராளமான அளவு உயிர்
வளி உள்ளது. மண்ணில்
இருந்து உயிர்வளியைப் (oxygen)
பிரித்தெடுக்க முடியும். மெர்க்குரியில்
சிறு நகரம் ஒன்றை ஏற்படுத்திச்
செயற்கையாக
ஆக்சிஜனை உற்பத்தி செய்து, நீர்,
உயிர்வளி மூலம் உயிர்வாழ இயலும்;
உணவுக்குக் கோழி,
ஆடு போன்றவற்றை வளர்க்க
இயலும்; மெர்க்குரியில் சோலார்
பேனல்கள் அமைத்தால் மின்சாரம்
எளிதில் உற்பத்தி செய்ய இயலும்.
மெர்க்குரியில் சூரிய ஒளி ஏராளம்
என்பதால் பூமியை விட மிக
விரைவில் அங்கே சூரிய ஆற்றல்
கிடைக்கும்.
மெர்க்குரியில் புவியீர்ப்பு விசையும்
நிலவை விட மூன்று மடங்கு அதிகம்
என்பதால் அங்கே வாழ்க்கை சிரமமாக
இருக்காது.மனிதனால்
ஈர்ப்பு விசை இல்லாமல் உயிர்வாழ
இயலாது. அந்த விஷயத்தில்
நிலவை விட
மெர்க்குரி பரவாயில்லை.அதுபோக
நிலவில் இன்னொரு சிக்கலும்
உண்டு.அதாவது சூரியனில்
இருந்து வரும்
கதிர்வீச்சுக்களை பூமி மின்காந்த
அலைகள் மூலம் தடுக்கிறது.
நிலவில் அப்படி மின்காந்த
அலை ஏதும் இல்லை. அதனால்
நிலவில் அதிகநாள் வசித்தால்
புற்றுநோய் வந்து நாம்
இறந்துவிடுவோம். மெர்க்குரியும்
பூமியைப் போலவே மின்காந்த
அலைகளை உருவாக்குவதால்
அங்கேயும் மனிதர்கள்
வசிப்பது பாதுகாப்பானதே.
மெர்க்குரியில் ஒருபக்கம் 800
டிகிரி வெப்பம், இன்னொரு பக்கம் -260
டிகிரி குளிர். இந்த
இரு பெரு நிலப்பரப்புகளும் சந்திக்கும்
இடத்தில் அதாவது இரவும் பகலும்
சந்திக்கும் சாயங்காலப் பகுதியில்
சுமார் 30 சதுர மைல்
பரப்புக்கு மனிதன் வாழக்கூடிய
அளவு வெப்பம் உள்ளது என்கின்றனர்
அறிவியலார்; ஆனால்
மெர்க்குரி தன்னைத்
தானே சுற்றுவதால் இந்த 30
சதுரமைல்
பகுதி நகர்ந்துகொண்டே இருக்கும்.
இந்த 30 ச. மைல் பிரதேசத்தில் புதன்
தன்னைச் சுற்றும்
வேகத்திலேயே நாமும் நகர்ந்தால்
நாம் பாதுகாப்பாக முழுக்
கோளையும் சுற்றிப் பார்க்கலாம்.
சற்று விளக்கமாக -
மெர்க்குரி தன்னைத்
தானே சுற்றுகிறது.
அதாவது பூமி சுழல்வதைப் போல.
இப்படிச் சுழலும்போது மெர்க்குரியின்
இருள் கவிந்த
பகுதி சூரியனை நோக்கித்
திரும்புகிறது. அப்போது அங்கே பகல்
ஆகிறது. சூரியனை நோக்கி இருந்த
பகுதி மறுபக்கம் திரும்புவதால்
அங்கே இருள் கவிகிறது.
இப்படி இரவுக்கும் பகலுக்கும்
இடையே 30 சதுரமைல்
பகுதி இரவும், பகலும் அற்ற
அந்திப்பொழுதாக இருக்கும்.
மெர்க்குரியின் பகல் பொழுது வெப்பம்
800 டிகிரி செல்ஷியஸ். இரவுப்
பகுதி வெப்பம் -261
டிகிரி செல்ஷியஸ். இரண்டுக்கும்
இடைபட்ட இந்த 30 சதுரமைல்
பகுதியில்தான் மனிதன் வாழத்தகுந்த
அளவு வெப்பம் இருக்கும். ஒரு சில
ஆயிரம் பேரே மெர்க்குரியில் வசிக்க
இயலும்.
ஆனால் மெர்க்குரி தன்னைத்
தானே சுற்றுவதால் இந்த பகுதியும்
நகர்ந்து கொண்டே இருக்கும்.
அதனால் மெர்க்குரி சுற்றும்
வேகத்தில் நாமும் இந்த அந்திப்
பொழுது நிலவும்
பகுதியிலேயே தொடர்ந்து பயணித்தால்
பாதுகாப்பான தட்பவெப்பத்தில்
புதனைச் சுற்றி வரலாம்.
சோலார் பேனல் பொருத்தப்பட்ட
ஊர்தி ஒன்றை எடுத்துக்
கொள்ளுங்கள்; சூரிய ஒளிபடும்
இடத்தில் சோலார்
பேனலை வையுங்கள்; அதை உங்கள்
ஊர்தியுடன் இணையுங்கள்.
அவ்வூர்தியை 30 ச.மைல் ட்வலைட்
சோனில் (twilight zone) நிறுத்துங்கள்.
மணிக்கு இரண்டு மைல் தூரம்
பயணித்தால் மட்டுமே போதும்.
மெர்க்குரியின் பாதுகாப்பான 30 ச.
மைல் பிரதேசம்
உங்களுடனே தொடர்ந்து வரும்.
இது ஒரு சுற்றுலாவைப்போல்
உள்ளது என்பது வியப்பளிக்கிறது இல்லையா !
பகுதி - 3
கோள்களின் தோற்றம்
சூரியக் குடும்பம் உண்டான
போது அதில் நூற்றுக்கும் மேற்பட்ட
கோள்கள் இருந்ததாகத் தெரிகிறது.
அவை ஒன்றுடன்,
ஒன்று மோதி அழிந்து, வலுவான
கோள்களின் ஈர்ப்பு விசையால்
உள்ளிழுக்கப்பட்டுத்
தற்போது காணப்படும் கிரக
அமைப்பு உருவானது.
கோள்கள் உருவானது எப்படி ?
பெருநட்சத்திரம்
ஒன்று அழிந்து விண்வெளி தூசு உருவானது.
அந்த தூசுகள்
ஒன்றை ஒன்று ஈர்த்துக்
கொண்டு கோள்களாக மாறின.
ஹைட்ரஜன் வாயுத் துகள்கள்
ஒன்றையொன்று ஈர்த்துக்
கொண்டு சூரியனாக மாறியது.
ஈர்ப்பு விசையால் கோள்கள்
சூரியனை சுற்றி வரத் துவங்கின.
சூரியனுக்கு அருகே உள்ள புதன்,
வெள்ளி, பூமி, செவ்வாய்
(மெர்குரி,வீனஸ், எர்த், மார்ஸ்) ஆகிய
நான்கு கோள்களும் பாறையால்
ஆனவை. ஜூபிடரும் சாடர்னும்
வாயுக்களால் ஆனவை.
நெப்டியூனும், யுரேனசும்
பாறையைச் சுற்றி வாயு என்னும்
அமைப்பைக் கொண்டவை.
சூரியனுக்கு அருகேதான்
பாறை கோள்கள் உருவாகும்; ஆனால்
சூரியனுக்கு இத்தனை தொலைவுக்கு அப்பால்
பாறை கோள்கள்
உருவானது எப்படி என மண்டையைப்
பிய்த்து கொண்ட அறிவியலார்
யுரேனசும், நெப்டியூனும்
தற்போது உள்ள இடங்களில்
உருவாகியிருக்க
சாத்தியமே இல்லை என்ற
முடிவுக்கு வந்தனர். இந்த கோள்கள்
சூரியனுக்கு அருகே உருவானவை.
முன்பு இவற்றின்
பாதை அருகே ஜூபிடரும், சாடர்னும்
(குருவும் சனியும்) ஒரே நேரத்தில்
வந்தன. அப்போது அவற்றின்
ஈர்ப்பு விசை இந்த
இரு கோள்களையும் சூரியக்
குடும்பத்தை விட்டு உந்தித்
தள்ளியது.
மணிக்கு மில்லியன் கணக்கான
கிமி வேகத்தில் சூரியக்
குடும்பத்தை விட்டு தூக்கி எறியப்பட்ட
இந்த இரு கோள்களையும் Asteroid
belt என அழைக்கப்படும்
விண்கற்களின் தொகுதி பெல்ட் பிரேக்
போட்டது போல
அடித்து நிறுத்தி வேகத்தைக்
குறைத்து சூரியக் குடும்பத்தினுள்
தக்க வைத்தது. அதன்பின்
சூரியனுக்கு மிக அருகே இருந்த
நெப்டியூன் சூரியக் குடும்பத்தின்
கடைசிக் கோளாக மாறி ஏக்கத்துடன்
சூரியனைச் சுற்றி வரத்
தொடங்கியது.
அப்புறம் சூரியனை ஆராய்ந்த
அறிவியலார் சூரியனின் மேற்பரப்பில்
லிதியம் எனும்
வாயு இருப்பதை கண்டு அதிசயித்தனர்.
லிதியம்
வாயு எங்கே எப்படி வந்தது என
ஆராய்ந்ததில்
சூரியனுக்கு அருகே முன்பு ஒரு Gas
giant planet (ஜூபிடரைப் போல)
இருந்ததும் அந்த கிரகம் சூரியனின்
ஈர்ப்பு சக்தியால் இழுபட்டு சூரியன்
மேல் மோதித் தன்னிடம் இருந்த
லிதியத்தை சூரியனுக்குத்
தாரை வார்த்ததாகவும்
கண்டுபிடித்தனர்.
( Gas giant planet - http://
en.wikipedia.org/wiki/Gas_giant )
நம் நிலவு உருவாகக் காரணமும்
இப்படி ஒரு கிரக மோதல்தானாம்.
முன்பு பூமிக்கு தியா என்ற
துணைக்கோள்
இருந்ததாம்.அது ஒரு நாள் பூமியின்
மேல் மோதியது. அப்போது பெரும்
அளவில் பாறைத் துணுக்குகள் விண்
வெளியில் வீசப்பட்டன. நாளடைவில்
அவை ஒன்றை ஒன்று ஈர்த்து கொண்டு நிலவாக
மாறின. பூமியோடு மோதிய
தியாவை பூமி உள்ளிழுத்துக்
கொள்ளவே பூமியின்
பரப்பளவு மேலும் அதிகரித்தது.
தியாவின்
இரும்பு மையப்பகுதியை (core)
பூமி உள்ளிழுத்துத் தன் மையத்தில்
தக்க வைத்துக் கொண்டது.
பூமியின் மரணமும் இதேபோல கிரக
மோதலால்தான் நிகழுமாம்.
சூரியனுக்கு அருகே அப்பிராணியாகச்
சுற்றிக் கொண்டிருக்கும்
மெர்க்குரி தூக்கி வீசப்பட்டு பூமியின்
மேல்
மோதுமாம்.அப்போது பூமி உடைந்து துண்டுகளாகி சூரியனால்
இழுக்கப்பட்டு சூரியனுள்
சமாதி அடையுமாம்.
பூமாதேவி தன் காதலனான சூரிய
(நாராயண)னுடன்
இணைவது சுபமான முடிவு தானே?
காதலர்கள் இணைந்தாச்சு.அப்புறம்
என்ன?
வணக்கம் போடப்பட்டு சூரியக்
குடும்பம் இழுத்து மூடப்படும்:-)
பகுதி - 4
தியா பூமியில்
மோதியபோது தற்போது இருக்கும்
கண்ட அமைப்புகள் இல்லை.சொல்லப்
போனால் அப்போது பூமியில்
தண்ணீரே இல்லை.
தியாவுக்கு முந்தைய
பூமி தற்போதிருக்கும் வடிவத்தில்
இல்லை.
தியா என்பது செவ்வாய் கிரகம்
அளவு பெரிய கிரகம்.அது பூமியின்
மேல்
விழுந்தபோது லக்ஷக்கணக்கான
அணுகுண்டுகள்
வெடித்ததற்கு ஒப்பான விளைவுகள்
ஏற்பட்டன.பூமியே பிளந்தது. அந்தச்
சூட்டில் தியாவின்
மேற்பரப்பு துண்டு,துண்டாக சிதறிப்
பாறையாக, கல்லாக, மண்ணாக
விண்வெளியில் தூக்கி வீசப்பட்டது.
தியாவையும், பூமியையும்
மாங்கனியாகக்
கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மாங்கனிக்கு நடுவே கொட்டை,
மேற்புறம் கெட்டியான
பழம்,அதை மூடும் தோல்..
அதே மாதிரிதான் பூமிக்கும்,
தியாவுக்கும் நடுவே இரும்பு கோர்.
அதைச் சுற்றிப்
பாறை போன்று இறுகிய மேன்டில்,
மேற்புறம் ஜூஸ் போல இளகிய திரவ
நிலையில் இரும்பு.
அதற்கு மேற்புறம் மீண்டும் பாறை.
அதற்கு மேலே நாம்.
இப்படி இரு மாங்கனிகள் ஒன்றின்
மேல் ஒன்று பலத்த வேகத்துடன்
மோத தியா மாங்கனியின் மேற்புறம்
முழுக்க விண்வெளியில்
தூக்கி வீசப்பட்டது. பூமியும்
பிளந்தது. தியாவின்நடுவே இருந்த
இரும்பு கோர் பூமியின்
உள்ளே இழுக்கப்பட்டது.
அது பூமியைத் துளைத்துக்
கொண்டு உள்ளே போய்
பூமிக்கு நடுவே இருந்த இரும்புக்
கோருடன் கலந்து விட்டது.
அதன் பின் தூக்கி வீசப்பட்ட
துகள்களில் சில பகுதிகள் பூமியால்
ஈர்க்கப்பட்டு விழுந்தன.
தியா பூமியில் விழுந்ததால் உண்டான
குழி இதனாலும் பிளேட்
டெக்டானிக்ஸாலும் மூடப்பட்டது.
சொல்லப் போனால் அதன்பின் பல
மில்லியன் வருடங்களுக்கு பூமியின்
மேற்புறம் உருகிய இரும்பாகவும்,
பாறையாகவும் திரவ வடிவில்
இருந்தது,இறுகியது,மாறியது.
தியாவின் சில பகுதிகள்
புவியீர்ப்பு வெளிக்கு வெளியே சென்றாலும்
பூமியின் ஈர்ப்பு விசைக்குக்
கட்டுப்பட்டு பூமியைச் சுற்றி வரத்
தொடங்கின.தற்போது சனிகிரகத்துக்கு ஒரு வளையம்
இருப்பது போல பூமிக்கும் வளையம்
உண்டானது. நாளடைவில் அந்த
வளையத்தில் இருந்த பாறைகள்
ஒன்றை ஒன்று ஈர்த்துக்
கொண்டு சுழற்சி வேகத்தில் நிலவாக
மாறின.
Plate tectonics
கண்டங்களையே நகர்த்தும்
சக்தி வாய்ந்தது.
இந்தியா முன்பு ஆபிரிக்காவின்
மடகாஸ்கருடன் ஒட்டியதாக
இருந்தது. தென் அமெரிக்காவும்,
ஆபிரிக்காவும் மறுபுறம்
ஒட்டிக்கொண்டு இருந்தன. பிளேட்
டெக்டானிக்ஸ் விளைவால்
இந்தியா ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர்
பகுதியிலிருந்து மேலே தூக்கி வீசப்பட்டு ஆசியாவின்
மேல் வந்து மோதியது. அந்த
மோதலின் விளைவாக இந்தியாவின்
விளிம்பும், ஆசியாவின் விளிம்பும்
மோதி மேலே உயர்ந்து இமயமலை உருவானது.
தியாவும், பூமியும் மோதியதைக்
காட்டும் computer simulation இதோ -
http://
www.youtube.com/watch?

தமிழ் கணிதம்

தமிழில் கணிதச் சொற்கள்
அடிப்படை அலகு
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 -
குரல்வளைப்படி
1/57511466188800000 0 - வெள்ளம்
1/57511466188800000 000 -
நுண்மணல்
1/23238245302272000 00000 - தேர்த்
துகள்.
நீட்டலளவு
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
பொன்நிறுத்தல்
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
முகத்தல் அளவு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
பெய்தல் அளவு
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
கால அளவு
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
எண்ணல் அளவை
ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும்
அறிந்தவையே....கோடிக்கு பிறகான
எண்களின்
பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்
--Ksubashini 13:20, 8 ஜனவரி 2010
(UTC)
பங்களிப்பாளர்கள்
Subashini Tremmel

வாழை மரம்

திருமணப்பந்தலில் வாழை மரம்
கட்டுவது ஏன்?
திருமணப்பந்தலில் வாழை மரம்
கட்டுவது ஏன்?
திருமணப்பந்தலில்
மட்டுமல்லாது சுப காரியங்கள்
நடக்கும் அனைத்து இடங்களிலும்
வாழைமரம் கட்டுவது ஐதீகம்.
இது பற்றி சில சுவையான
தகவல்கள் :
தம்பதியர் தியாகம்
முக்கனிகளுள் ஒன்றான
வாழை எல்லா காலங்களிலும்
கிடைக்கும் கனி. மற்ற இரண்டு
கனிகளின் மரங்களை விட
வாழை மரம் அதிக
பயன்தரக்கூடியது.
வாழை, தன்னை அழித்துக் கொண்டு,
பிறருக்கு கனி தரும். இதுபோல்,
தம்பதியர்
ஒருவருக்கொருவர், தங்கள்
உயிரையும் கொடுக்க தயாராக
இருக்க வேண்டும் என்பதன்
அடையாளமாக வாழை மரம் உள்ளது.
குடும்ப விருத்திக்காகவும்,
வாழை மரத்தை
கட்டுவதுண்டு.
வாழையடி வாழை
வாழையின் இலை, காய், பூ, பட்டை,
தண்டு, நார் என அனைத்தும்
பயன்தரக்கூடியது. சில
பகுதிகள் மருந்தாகவும்
பயன்தரக்கூடியது. ஏனைய
மரங்களில் இருந்து ஒரு வகையில்
வாழை வித்தியாசமானது.
ஒரு வாழையை நட்டால் போதும்
வாழையடி வாழையாக அதன் குலம்
தலைக்கும்.
பெரியோர் வாழ்த்து
மனிதன் தலைமை பெறவேண்டும்,
தன்னைச்சார்ந்திருப்பவர்களுக்கு பலவகைகளிலும்
பயன்தரவேண்டும் என்றும் அவன்
குலம் வழி வழியாக தழைக்கவும்
என்பதை
உணர்த்துவதற்காகத்தான்
சுபகாரியப்பந்தலில் வாழை மரம்
கட்டுகின்றனர். மணமக்களை
ஆல் போல தழைத்து அருகு போல்
வேரோட வேண்டும்
என்று வாழ்த்தும் நெஞ்சத்தின்
புலப்பாடகத்தான் வாழைமரம்
கட்டுவதை கருத வேண்டும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 04:20,

கர்ப்பிணி

ர்ப்பிணிகளுக்கு சீமந்தம்
செய்வதன் பொருள்!
இப்போ பார்க்கப்
போவது பும்ஸுவனம், சீமந்தம்
இரண்டையும். இக்காலங்களில்
அவசர யுகம் என்பதால்
இரண்டையும் சேர்த்துச்
செய்கின்றனர். ஆனால் பும்ஸுவனம்
என்பது கர்ப்பம் உறுதி ஆனதும்,
நான்காம் மாதம் ஆரம்பத்தில் செய்தல்
நல்லது. முற்காலங்களில் நாலாம்
மாதம் முடிவதற்குள் கர்ப்பிணிப்
பெண்களுக்கு பும்ஸுவனம்
செய்து பின்னரே பிறந்தகம்
அனுப்புவார்கள். பொதுவாகக்
கருவில் உருவாகி இருக்கும் இந்த
முதல் குழந்தையைத் தவிர
இனி பிறக்கப் போகும் அனைத்துக்
குழந்தைகளுக்கும் சேர்த்துச்
செய்வது பும்ஸுவனம் என்பது சிலர்
கருத்து. ஆகவே இதைக் கட்டாயமாய்
நடத்த வேண்டும்.
அப்படி ஒருவேளை நாலாம் மாதம்
பும்ஸுவனம் செய்ய
முடியாவிட்டால், ஆறாம்
மாதமாவது செய்யவேண்டும். ஆறாம்
மாதமும் முடியவில்லை எனில்
எட்டாம் மாதம் செய்ய வேண்டும்.
தற்காலங்களில் வளைகாப்பு,
பும்ஸுவனம், சீமந்தம்
எல்லாவற்றையும் ஒரே நாளில்
எட்டாம் மாதம் செய்யும் வழக்கம்
வந்துள்ளது.
பும்ஸுவனமோ சீமந்தமோ செய்யவில்லை எனில்
அந்தக் குழந்தையைத் தகப்பன்
பார்க்கக் கூடாது என்றும்,
குழந்தை பிறந்ததும், குழந்தையைத்
தாயின் மடியில் மறைத்து வைத்துக்
கட்டி பும்ஸுவனம்,சீமந்தம்
போன்றவற்றைச் செய்த
பின்னரே குழந்தையின் தகப்பன்
குழந்தையைப் பார்க்கலாம் என
சாஸ்திரங்கள் அறிவுறுத்துவதாய்ச்
சொல்லுவார்கள்.
இந்த பும்ஸுவனம் ஆண்
குழந்தையை வேண்டிச்
செய்யப்படுவது என்பதும்
ஒரு கருத்து உள்ளது. ஆனாலும்
பிறக்கப் போகும்
ஒவ்வொரு குழந்தைக்கும்
பும்ஸுவனம் செய்யலாம்.
வசதி இருந்தால்
ஒவ்வொரு குழந்தை பிறக்கப் போகும்
முன்பும் செய்து கொள்ளலாம்.
அல்லது சாஸ்திரத்தில்
நம்பிக்கை உள்ளவரெனில்
செய்து கொள்ளலாம். இது அவரவர்
குடும்ப வழக்கப்படியும் வரும்.
இதற்கும் ஹோமம் எல்லாம் உண்டு.
பொதுவாய் அமாவாசை கழிந்த
வளர்பிறையில் பூச நக்ஷத்திரமாய்
வரும் நாட்களில் செய்வார்கள்.
அப்படி நாள் சரியாய்க்
கிடைக்கவில்லை எனில்
தேய்பிறையில் செய்யலாம். முன்
காலங்களில் பும்ஸுவனம்
செய்யவில்லை எனில்
ஜாதகர்மாவுக்குத்
தகுதி இல்லை என்பார்கள்.
அதிகாலையில் தம்பதிகள் மங்கள
ஸ்நாநனம் செய்துவிட்டுப்
புரோகிதர்கள் வழிகாட்டுதலின்
படி கலசத்தில் வருண
பகவானை வழிபடுவார்கள். அந்தக்
கலச ஜலத்தால் கர்ப்பிணிப்
பெண்ணிற்கு அபிஷேஹம்
செய்வார்கள். கர்ப்பிணியின்
இடக்கையில் காப்புப் போல்
ஒரு மஞ்சள் கயிறு மந்திரங்கள்
ஓதி ஜபித்துக் கட்டுவார்கள்.
கர்ப்பத்தைப் பாதுகாக்கும்
கடவுளை வேண்டி ஹோமத்தில் நெய்
வார்த்து வேண்டுவார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல் ஆலமரத்தின்
கிழக்குப் பாகம் அல்லது வடக்குப்
பாகத்தில் இருந்து இரு காய்களுடன்
கூடிய
ஆலமொக்கை எடுத்து வந்து கர்ப்பிணியின்
மூக்கில் பிழிவார்கள். இந்த மூக்குப்
பிழியும் சடங்கில் அது வரை கட்டாத
புத்தம்புதிய
புடைவையே பயன்படும். ஒரு சில
வீடுகளில் தேம்பு எனப்படும்
நான்கு கஜப் பட்டுத் துணியைப்
பயன்படுத்தி மூக்குப் பிழிந்துவிட்டுக்
கோயிலுக்குக்
கொடுத்துவிடுவார்கள்.
மூக்கிலிருந்து அது தொண்டைக்கு வருகையில்
கர்ப்பிணி அதை விழுங்க வேண்டும்.
ஆலமொக்கும் அதன் சாறும்
கர்ப்பத்திற்கு உறுதியையும்,
பலத்தையும் கொடுக்கும் என
ஆயுர்வேதத்தில் சுஸ்ருதர்
கூறி இருப்பதாய்ச் சொல்லுகின்றனர்.
குழந்தை கருப்பையிலிருந்து வெளிவரவும்
உதவும் என்பதும் ஆயுர்வேதம்
கூறுகிறது. இந்த பும்ஸுவனம்
சாதாரணமாய் கர்ப்பம்
உறுதியானதும் நான்காம் மாதம்
செய்ய வேண்டும்
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
காலப் போக்கில் இவை எட்டாம்
மாதமாகிவிட்டன.
இதன் பிறகே சீமந்தம் செய்ய
வேண்டும். வடமொழியில்
சீமா என்றால் எல்லை, அந்தம்
முடிவு. இது வகிடைப் பிளத்தலைக்
குறிக்கும். தலையில்
வகிடு ஆரம்பிக்கும்
இடத்திலிருந்து முடியும் இடம்
வரை பிளந்து விடுவதையே சீமந்தம்
என்பார்கள். இதை சீமந்தோநயனம்
என்றும் கூறுவார்கள்.
இது பும்ஸுவனம் ஆன பின்னர்
ஐந்து மாதத்திலிருந்து எட்டு மாதத்திற்குள்
செய்யலாம். பெளர்ணமி சந்திரனின்
அதி தேவதையான ராகா என்னும்
தேவதையைக் குறித்துக் கூப்பிட்டு,
அத்திமரக் கிளை, முள்ளம்பன்றி முள்,
நெற்கதிர் போன்றவற்றால் பெண்ணின்
வகிட்டைக்கணவன் பிளப்பான்.
அதாவது நெற்றியில்
ஆரம்பித்து உச்சந்தலை வரையிலும்
வகிட்டைக் கீற வேண்டும். இதனால்
கர்ப்பிணியின் மனக்கிலேசங்கள்
அகலும் என்று கூறப் படுகிறது.
ஆரோக்கியமாகவும், சுகமாகவும்
குழந்தை பிறக்க வழி செய்யும்
எனப்படும். இனிமையான சங்கீதம்
கேட்கவும் அறிவுறுத்தப்படும்.
அன்று முழுதும் தம்பதியர் உபவாசம்
இருக்கலாம். பின்னர்
காளைக்கன்றைத் தொட்டுவிட்டுச்
சாப்பிடுவார்கள். கர்ப்பிணிப்
பெண்ணைக் குனிந்து கொள்ளச்
சொல்லி இடுப்பின் அருகே அச்சுதம்
தெளித்தல் என்னும்
சடங்கை சுமங்கலிகள் சேர்ந்து செய்வார்கள்.
இதற்குப் பூக்கள், அக்ஷதை, சந்தனம்,
பால் போன்றவை பயன்படும்.
எல்லாவற்றையும் ஒன்றாய்க்
கலந்து கர்ப்பிணியின்
முதுகெலும்பும் இடுப்பெலும்பும்
சேரும் இடத்தினருகே ஆண் பிள்ளை,
பெற்றாள், பெண் பிள்ளை பெற்றாள்
என்று பாட்டுப்
பாடிக்கொண்டே தெளிப்பார்கள்.
பெண்ணின் புகுந்த வீட்டில் மாமியார்
அப்பம்,
கொழுக்கட்டை போன்றவற்றைச்
செய்து கர்ப்பிணியின் புடைவைத்
தலைப்பில் மட்டைத்
தேங்காயோடு கட்டிவிட்டு திருஷ்டி கழிப்பார்கள்.
படியில் நிறை நாழி வைத்து,
கர்ப்பிணிப் பெண்ணின் தலை,
தோள்பட்டை, கைகள், கால்கள்,
இடுப்பு போன்றவற்றில்
முழு ஒருரூபாய்க் காசு வைத்து,
விளக்கை ஏற்றி, இறக்கி, ஏற்றி,
இறக்கி திருஷ்டி கழிப்பார்கள். இந்தச்
சடங்குக்கு ஏற்றி, இறக்குதல்
என்றே பெயர். இதன் பின்னர் பிரசவம்
ஆனதும் பார்க்க வேண்டியவையும்
பிரசவ மருந்துகள், சாப்பாடு வகைகள்
போன்றவற்றைப் பார்க்கலாம்.
--Geetha Sambasivam 07:17, 1 ஜூன்
2011 (UTC)

மாரநாடு

மாரநாடு கோடாங்கி
(250-300 ஆண்டுகளுக்கு முன்
சிவகங்கை மாவட்டத்தில்
திருப்பாச்சேத்தி
அருகில் உள்ள மாரநாடு கிராமத்தில்
நடை​பெற்ற உண்மைச் சம்பவம்)
அரண்மனை அந்தப்புரம். அரசி,
இளவரசி, சேடியர் தவிர வேறுயாரும்
உள்ளே செல்ல முடியாது.
அவ்வளவு பாதுகாப்பு. யாரேனும்
உள்ளே
தெரிந்தால் உடனடியாகத்
தூக்கிலிட்டுவிடுவார்கள்.
அவ்வளவு கடுமையான தண்டனை.
இராமநாதபுர சமஸ்தானத்தின்
இளவரசி பருவமடைந்து அந்தப்புரத்தில் இருந்தாள்.
அழகு என்றால்
அழகு அவ்வளவு அழகு.
பார்த்தோரைப் பரவசப்படுத்தும்
அழகு.
மக்களுக்கு மகாலெட்சுமி போல் காட்சியளிப்பாள்.
இதனால், சமஸ்தான
மன்னர்களுக்குள் கடும்
போட்டாபோட்டி.
அவளை மணந்து கொண்டாள்,
இராமநாதபுர
சமஸ்தானத்திற்கு மன்னனாகி விடலாம்,
வீரமிக்க மன்னனுக்குச்
சொந்தமாகிவிடலாம்,
ஆளுக்கு ஆளும் ஆச்சு, பேருக்குப்
பேரும் ஆச்சு, ஊருக்கு ஊரும்
ஆச்சு. அதனால், "நான் நீ"
என்று போட்டி போட்டுக் கொண்டு,
பெண் கேட்டுத் தூது
அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அரசனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.
நல்லவனாக, வல்லவனாக
ஒருவனைத் தேர்ந்தெடுத்துத்
திருமணம் செய்து கொடுக்க
வேண்டும் என்று எண்ணியிருந்தான்.
பெண்கேட்டுப்
போட்டாபோட்டி போட்டதால், அரசனுக்குக்
கொஞ்சம் பெருமையும் கூடியது. தன்
பெண்ணை எண்ணிப் பூரிப்படைந்திருந்தான்.
ஆனால், விதி வேறுவகையாக
வேலை செய்தது! ஒருநாள் மாலை,
அமைச்சர்களுடன் ஆலோசனையில்
இருந்த அரசனுக்கு, அவசரமாக
அந்தப்புரத்தில்
இருந்து அழைப்பு வந்தது! என்ன
அவசரம் என்று எவருக்கும்
தெரியவில்லை. அரசனும்
அவசர அரசாங்க
ஆலோசனைகளை நிறுத்திவைத்துவிட்டு அந்தப்
புரத்திற்கு விரைந்து
சென்றான்.
அங்கே அதிர்ச்சி காத்திருந்தது!
இளவரசியின் கழுத்தில் இருந்த
"அரசமுத்திரை"மாலையைக்
காணவில்லை. எங்கு தேடியும்
கிடைக்கவில்லை, அந்த மாலை யார்
கழுத்தில் உள்ளதோ அவர்களே
அந்நாட்டின் இளைய பட்டம் ஆவர்,
அந்த மாலையைக் கையில்
வைத்திருப்போரே இளவரசியை மணந்து கொள்ளும்
அதிகாரம் பெற்றவர் ஆகிவிடுவர்.
கழுத்தில் இருந்த மாலை காணாமல்
போனது எப்படி?
காணாமல் போனதைக்
கண்டுபிடிப்பது எப்படி?
மன்னனுக்கு மகளைப்
பற்றி ஒரே கவலை. நல்லவனாக
வல்லவனாக அமைந்தால், மகளைக்
கட்டிக் கொடுப்பதற்குத் தயாராய்
இருந்தார். ஆனால்,
இப்போது நிலைமை வேறு,
மாலையை எவன் எடுத்திருந்தாலும்,
எதுவும் செய்ய முடியாது!
பேசாமல் கொள்ளாமல்
மாலையை வைத்திருப்பவனுக்கு மகளைத்
திருமணம்
செய்து கொடுத்துவிட வேண்டியதுதான்.
வேறு என்ன செய்யமுடியும்!
யார்கையிலாவது கிடைத்து ஏதாவது ஏடாகூடமாக
நடந்து விட்டால் என்ன செய்வது!
அந்தப்புரத்திற்குள் நுழைந்த அந்தக்
களவாணி யார்? ஆயிரத்தெட்டு
விசாரணைகள். இளவரசிக்குப் பதில்
சொல்வதே ஒருபெரும்
தொல்லையாய் போய்விட்டது!
"யாரிடமும் நான் மாலையைக்
கொடுக்கவும் இல்லை. யாரும்
மாலையை எடுக்கவும் இல்லை"
என்று எத்தனையோ முறை "இது சத்தியம்
சத்தியம்" என்று கூறினாள்!,
ஆளே புகமுடியாத அந்தப்புரத்தில்
அரசமுத்திரை பதித்த நகை எப்படிக்
காணாமல் போனது?
அரன்மனையிலேயே களவு நடந்துள்ளதால்,
மக்களிடம்
மரியாதை குறைவதை உணர
ஆரம்பித்தான் அரசன்,
என்ன செய்வதென்று எப்போதும்
ஒரே நினைப்பு!. நாடுபோனாலும்
போகட்டும், நகரம் போனாலும்
போகட்டும், மானம் போய் விடக்
கூடாதே! எத்தனைபேர்
பெண் கேட்டுத்
தூதுஅனுப்பியுள்ளனர். அத்தனைபேர்
முகத்திலும்
எப்படி இனி நான் முழிப்பேன்
என்று மன்னன் இரவு முழுவதும்
இதை மட்டுமே எண்ணியிருந்தான். எண்ணி எண்ணி உருக்குலைந்திருந்தான்.
எப்போதும் சரியாய் ஓடுவது காலம்
மட்டுமே! விடியற்காலம் வந்துது!
அவையைக் கூட்டி ஆலோசனை கேட்டான்
அரசன். ஆளாளுக்கு ஆள்,
ஆயிரத்தெட்டு யோசனை சொன்னார்கள்.
ஒன்று கூட உறுப்படியாய் இல்லை.
என்ன செய்வது?
எதுவுமே தெரியவில்லை யாருக்கும்!.
அரசன், யோசனைகள்
ஒவ்வொன்றையும்,
ஒவ்வொன்றாகச் செய்து பார்க்க
முடிவுசெய்தான் .
அரண்மனை அந்தப் புரத்தில் இருந்த
அனைவரையும்
ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தனர்
அரசு அதிகாரிகள். யாருக்கும்
எதுவும் தெரியவில்லை.
முத்திரைமாலை போன
இடத்தை அறியமுடியவில்லை.
அதிகாரிகள் விசாரணை விபரங்களை மன்னனிடம்
கூறினர்.
அரசனுக்குத் தாளமுடியாத வருத்தம்.
மானம் போகிறதே என்று கண்
கலங்கினான். என்ன செய்வது?
முத்திரை மாலை கிடைக்கும்வரை அத்தனை பேரையும் அரண்மனையிலேயே அடைத்து வையுங்கள்!
என்று உத்தரவு போட்டான்.
அரண்மனையிலிருந்து யாரும்
உள்ளே செல்ல முடியவில்லை.
உள்ளே யிருந்த யாரும்
வெளியே வரமுடிய வில்லை.
எல்லா இடமும் தேடியாச்சு.
அத்தனைபேர் தேடியும்
முத்திரைமாலை மட்டும்
அகப்படவே இல்லை. என்ன செய்வது?
அரண்மனையே ஸ்தம்பித்து.
எனவே என்ன
ஆலோசனை என்றாலும் ஏற்கத்
தயாராக இருந்தான்
அரசன். ஆலோசனை மேல்
ஆலோசனை. அதில் ஒன்றுதான்
குறிகேட்பது.
குறிசொல்வோர் அனைவரையும்
அரண்மனைக்கு அழைத்து வரச்
செய்தான் அரசன். குறிசொல்வோர்
சொன்ன குறியெல்லாம் தவறாகப்
போனது, குறி சொன்னது போல்
மாலை கிடைக்கவில்லை,
அரசனுக்குக் கோபமான
கோபம், அரசுமுத்திரைமாலை கிடைக்காமல்
யாரையும்
வெளியே விடுவாத இல்லை.
தவாறகக் குறி சொன்னவர்களையும்
சிறையில் அடைத்தான் அரசன்.
ஒருவர் இருவர் அல்ல,
ஒருஊருக்கு இரண்டு மூன்று என்று குறிசொல்பவர்கள்
இருந்தனர். எத்தனை பேர்
இருந்து என்ன செய்ய?
அரசமுத்திரை மாலை இருக்கும்
இடத்தைக் கண்டறிந்து குறி சொல்ல
முடியவில்லை!
அரசனது கோபத்துக்கு அஞ்சி, நாட்டிலிருந்த
குறிசொல்வோர் எல்லாம்
அண்டைநாடு அயலார்வீடு என
ஓடி ஒளிந்து
கொண்டனர்.
குறிசொல்வோரில் ஒருவன்
மட்டுமே துணிந்து அரசன் முன்
சென்று நின்றான்.
"என்ன? சொல்!" என்றான் மன்னன்.
"எனக்குச் சரியாகச் குறி சொல்லத்
தெரியாது! ஆனால்
சரியாகக் குறிசொல்பவனைத்
தெரியும்" என்றான். அவன்
ஒருவனை அழைத்து வந்தால்,
தேடும் பொருள் கிடைத்துவிடும்"
என்றான்,
குறிசொல்பவன் சொன்ன சொல்
மன்னனின் கதில் வீழ்ந்தது. நீ
சொல்வதுபோல் நடந்து விட்டால்,
உங்கள் அனைவரையும்
விடுதலை செய்து விடுகிறேன்
என்று மன்னன் வாக்களித்தான்.
மந்திரியை அழைத்தான், "இவன்
யாரைச்
சொல்கிறானோ அவனை இங்கே அழைத்து வாருங்கள்"
இது நமது ஆணை என்றான் மன்னன்,
குறி தப்பாமல் சொல்பவன்
நாட்டிலேயே ஒருவன்தான் உண்டு,
அவன்தான், "மாரநாடு கோடாங்கி".
"அவன்
கோடாங்கி எடுத்து அடித்தால்,
கருப்பணசாமி வரும்.
மாரநாடு கருப்பணசாமி வந்து சொல்லும்"
என்றனர்
அறிந்தவர் அனைவரும்.
அரசு அதிகாரிகள் விரைந்தனர்,
மாரநாடு
கிராமத்திற்கு.
இராமநாதபுரத்திலிருந்து, பரமக்குடி,
மானாமதுரை,
திருப்பாச்சேத்தி வந்து மாரநாடு கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.
ஊரின் உள்ளே நுழையும் முன்பு,
முகப்பு வாயிலிலேயே,
கண்மாய்க்கரை ஓரமாகக் கருப்பணசாமி கோயில்
இருந்தது. கோயில்
உள்ளே சென்று கருப்பணசாமியைக்
கும்பிட்டனர்.
கருவறையில் சிலையோ,
படங்களோ எதுவும் இல்லை,
வெருமெனே இருந்தது, கருவறை முன்
மண்டபத்தில் சூலம் மட்டும்
நடப்பட்டிருந்தது.
அந்தச் சூலத்தையே கருப்பணசாமி என
மக்கள் வணங்கி வருகின்றனர்,
கருப்பண சாமி வழிபாடு முடிந்ததும்,
கோயில் பூசரியிடம்,
"கோடாங்கியைப்
பார்க்க வந்திருக்கிறோம்" என்றனர்.
இப்படி மண்டபத்தில் உட்காருங்கள்
என்று சொல்லி பிரசாதத்
தட்டை கோயில் கருவறையில்
வைத்து விட்டு அங்கே வந்து பூசாரியும்
சேர்ந்து உட்கார்ந்து கொண்டான்.
சொல்லுங்கள், "மாரநாடு கோயில்
பூசாரிதான்
மாரநாடுகோடங்கி ஆவான்". நான்தான்
அந்தக் கோடாங்கி, உங்களுக்கு நான்
என்ன செய்ய வேண்டும்
என்று கேட்டான் கோடாங்கி.
வந்தர்களுக்கு ஒரே ஆச்சரியம்.
ஆஜாகுபான
உடம்பைத் தேடிவந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.
ஒல்லியான ஒருவ​ரைக்
கோடங்கியாகப் பார்த்தவுடன்
அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்,
கோடாங்கி, நாங்கள் வந்த நோக்கம்,
என்ன என்றால், "நீங்கள்
இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து குறி சொல்ல
வேண்டும்", இது அரச
உத்தவரவு என்றனர்.
"நான் குறி சொல்வது இல்லை, இந்தக்
கருப்பணசாமிதான் வந்து குறி
சொல்லுவான், உங்களுக்கு யார்
வேண்டும்?" என்று கேட்டார்
கோடாங்கி.
எங்களுக்குக் குறி சொல்ல
வேண்டும், கருப்பணசாமிதான்
குறிசொல்லும்
என்றால், சாமியைத்தான் அழைத்துச்
செல்ல வேண்டும் என்றனர்,
கருப்பணசாமி வருவது என்றால்,
சும்மாவா?
ஒட்டு மச்சம்கூட இல்லாத
வெள்ளைக்குதிரையில்தான்
கருப்பணசாமி வருவார். முடிந்தால்
அந்தமாதிரிக்குதிரையுடன்
வாருங்கள். அல்லது வரும்
மாசிமாதம் மகாசிவராத்தி அன்றுதான்
திருவிழாபற்றிப்
பேசி முடிவு செய்வார்கள்.
பங்குனிமாதம் திருவிழா நடைபெறும்,
சாமிபுறப்பாடு இருக்கும்,
அப்போது வந்து குறிகேளுங்கள்
என்று கூறிமுடித்தார்.
கோடாங்கி சொன்ன சொற்கள்,
சொல்மாறாமல் இராமநாதபுர
மன்னனிடம் கூறப்பட்டன. மானம்
போகிற பிரச்சனை ஆயிற்றே.
எனவே உடனடியாகக்
கோடாங்கி கூறியது போல் குதிரை ஒன்றை அனுப்பி வைத்து அழைத்து வாருங்கள்
என்று சொன்னான்,
அனைவரும் தயங்கி நின்றனர்.
மன்னனுக்குக் கோபமான கோபம்
வந்தது! "ஏன் நிற்கின்றீர்கள் என
எரிந்து விழுந்தான்" மன்னன்.
மந்திரி, தயங்கித் தயங்கி மன்னன்
அருகில் சென்று, "மன்னா! கோடாங்கி
சொல்லியபடி, ஒட்டுமச்சம்கூட
இல்லாமல் வெள்ளைவேளேர்
குதிரை ஒன்றே ஒன்றுதான் உள்ளது,
அதுதான் ஒரே யோசனை" என்றான்.
ஒன்று இருக்கிறதல்லவா?
அந்தக் குதிரையைக் கூட்டிச்
செல்வதற்கு ஏன் இத்தனை தயக்கம்?
என்று மன்னன் கேட்டான்,
அது பட்டத்துக் குதிரை மன்னா!
பட்டத்துக் குதிரையில் யார்
ஏறி வருகிறாரோ அவரே அந் நாட்டின்
மன்னன் ஆவான், பட்டத்துக்
குதிரையில் கோடாங்கி ஏறியவுடன்,
ஏடாகூடமாக ஏதாவது செய்தால்,
என்ன செய்வது?
ஒரே நாளில் ஓராயிரம்
கட்டளைகளைப் பிறப்பித்தால் என்ன
செய்வது? பட்டத்துக் குதிரையைத்
தவிர்த்து,
மற்றொரு குதிரைக்கு எங்கே போவது!
மற்றொரு குதிரை வாங்கிவரும்
வரை காத்திருக்க முடியாதே!
இருக்கும் மானத்தைக் காத்தாக
வேண்டுமே! என்ன விலையும்
கொடுக்கத் தயாராய் இருந்தான்
மன்னன், மன்னனுக்குப்
பட்டத்துக்குதிரையை அனுப்பிவைப்பதைத் தவிர
வேறு வழியும் தெரியவில்லை,
மன்னன் பட்டத்துக்
குதிரையை மாரநாட்டிற்கு அனுப்பி வைத்தான்,
மாரநாடு கருப்பணசாமி கோயில்
பூசாரியான கோடாங்கி, வந்திருந்த
பட்டத்துக்
குதிரைக்கு மாலை அணிவித்தான்,
மரியாதை
செய்தான். உடுக்கையையும்
விபூதிப் பையையும் எடுத்துக்
கொண்டான், கோயிலை வலம்
வந்தான்,
கருப்பணசாமியை வணங்கினான்,
அனைவரும்
மாரநாட்டிலிருந்து இராமநாதபுரத்திற்குச்
சொல்லத் தயாராய் இருந்தனர்,
ஆனால் கோடாங்கி குதிரையில்
ஏறவில்லை!
மந்திரி, கோடாங்கியிடம் சென்று,
"குதிரையில் ஏறவில்லையே"? என்று
கேட்டான்! பட்டத்துக்குதிரையில்
கருப்பணசாமிதான் ஏறி வரும். நான்
சாமிகூட ஓடியே வந்துவிடுவேன்
என்றான்
கோடாங்கி. மற்றொரு குதிரையை ஏற்பாடு செய்கிறேன்,
அதில் ஏறி வாருங்கள் என்றான்
மந்திரி, கோடாங்கி மறுத்துவிட்டான்.
சாமி பாதத்துக்கு மேலே நான்
இருக்கக்கூடாது. எனவே நான்
இப்படியே சாமிகூட
ஓடியே வந்துவிடுவேன் என்றான்,
மந்திரிக்கு, பட்டத்துக்குதிரையில்
ஒரு மனிதன் ஏறிவராமல்
ஒரு தெய்வம் ஏறிவருவது பெருமையாய்
இருந்தது. தான் நினைத்தபடி ஏதுவும்
ஏடாகூடமாக நடக்க
வாய்ப்பு இல்லை என்பதையும்
எண்ணி மனநிறைவடைந்தான் மந்திரி,
பட்டத்துக்குதிரை,
கோடாங்கி போட்டுவிட்ட
மாலையுடன்
முன்னே சென்றது. பட்டத்துக் குதி​
ரையுடன் கோடாங்கியும் ஒன்றாக
ஓடத் துவங்கினான். மந்திரியும்
மற்றோரும் அவரவர் குதிரையில்
ஏறிப் புறப்பட்டனர்.
மாரநாடு ஊரே ஒன்றாக
இணைந்து ஓடத் துவங்கியது. வழி​
நெடுக, அலையலையாய்
மக்கள் கூட்டம்,
வழியெல்லாம் தண்ணீர் தெளித்து,
பாதைஎங்கும் மாக்கோலம் போட்டுத்
தோரணம் கட்டி,
கொம்பு ஊதி வரவேற்பு செய்தனர்
மக்கள். தெய்வத்திற்கும் அரசனுக்கும்
செய்யும் மரியாதை அத்தனையும்
செய்து,
பட்டத்துக்குதிரையுடன் ஓடிவரும்
கோடாங்கியுடன் ஒன்றாய்
சேர்ந்து ஓடத் துவங்கினர் மக்கள்.
மாரநாட்டிலிருந்து கிளம்பி,
திருப்பாச்சேத்தி, மானாமதுரை,
பரமக்குடி
வழியாக இராமநாதபுரம்
அரண்மனை வந்தது சேர்ந்தது பட்டத்துக்
குதிரை.
குதிரையின் பின்
நாடே ஒன்று திரண்டு ஓடி வந்து சேர்ந்தது ஏறத்தாழ
எழுபதுகல் தூரம்,
மாரநாடு கோயிலில் துவங்கிய
ஓட்டம் இராமநாதபுரம்
அரண்மனை வாயிலில் வந்துதான்
நின்றது,
அரண்மனை வாயிலுக்கு வந்து வரவேற்றான்
மன்னன்,
உள்ளே சென்ற
கோடாங்கி மன்னனிடம், சாணம்
கரைத்துத்
தெளித்து அதில் மாக்கோலம் போட்டு​
வைக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டான்,
கோடாங்கி மாக்கோலத்தின்
நடுவே உட்கார்ந்து கொண்டான்.
மன்னனும் சிம்மாசனத்திலிருந்து கீழே இறங்கிக்
கோடாங்கி எதிரே, அவனுக்குச்
சமமாக உட்கார்ந்து கொண்டான்,
உடுக்கையை எடுத்து அடித்து கருப்பணசாமியை வரவழைத்தான்
கோடாங்கி,
"என்னை எதுக்கு இங்கே அழைக்கிறாய்?
உனக்கு என்ன வேண்டும்? "
என்று மன்னனிடம் கேட்டது கருப்பணசாமி,
"சாமி, மன்னனான
எனக்கு ஒரு மானப்பிரச்சனை,
பிரச்சனைக்கு உரிய
பொருள் எங்கே இருக்கிறது என்று கண்டறிய
முடியவில்லை" அதனால்
குறி சொல்ல வேண்டும் என்றான்
மன்னன். "மன்னன் கேட்டால்,
மறுக்கக்கூடாது!
உன்னைக் காத்து அருளுவோம்,
இரண்டு குறிக்குமேல் கேட்கக்
கூடாது!, கேள், சொல்கிறேன்"
என்றது கருப்பணசாமி,
"வந்திருப்பது கருப்பணசாமிதான்
என்று எப்படி இந்த மன்னனும்
இங்குள்ள மக்களும் நம்புவது?"
என்று கேட்டான் மன்னன்,
"முதற்குறி கேட்டுள்ளாய், கருப்பணன்
வந்த குதிரையில் மற்றொருவன்
ஏறக்கூடாது, எனவே நான் வந்த
வெள்ளைக்குதிரை நின்றபடியே இறந்திருக்கும் பார்"
என்றது கருப்பணசாமி,
எல்லோரும் ஒடிச் சென்று பார்த்தனர்.
மன்னன் முன்வந்து, நின்ற
குதிரையைத் தொட்டுப் பார்த்தான்,
அவ்வளவுதான் சடமாய் நின்ற
குதிரை செத்துப் பிணமாய் விழுந்தது,
பட்டத்துக்குதிரை பரிதாபமாய்
இறந்துகிடப்பது கண்டு மன்னன்
உள்ளம்
பதைபதைத்தது! இருப்பினும்
கருப்பணசாமியே அரண்மனைக்கு வந்து குறி சொல்லிக்
கொண்டிருப்பதை நினைத்துப்
பெருமை கொண்டான் மன்னன்,
ஓடோடி உள்ளே சென்றான்,
கருப்பணசாமியின் காலில்
விழுந்து வணங்கினான், "சாமி என்பிழையைப்
பொருத்தருள வேண்டும், மனிதன்
ஒருவன்
கோடங்கியுடன் வந்து குறி சொல்வதாகத் தவறாக
நினைத்துவிட்டேன்.
குறிசொல்வது மாரநாடு கருப்பணசாமி என்று அறியாமல் நான்
செய்த பிழையைப் பொருத்தருள
வேண்டும்"
என்று கருப்பணசாமியிடம் வேண்டிக்
கொண்டான்,
"என்மகள் கழுத்தில் அணிந்திருந்த
அரசமுத்திரைமாலையைக்
காணவில்லை?",
"கருப்பணசாமி தான் எங்களைக்
காத்தருள வேண்டும்" என்றான்
மன்னன்.
"இரண்டாவது குறி கேட்கிறாய்,
மன்னனே, காணாமல் போன
அரசமுத்திரைமாலை, அரண்மனை அந்தப்புரத்தில்
இளவரசி குளிக்கும் அறையில்
தண்ணீர் வெளியேறும் தூம்பின்
உள்ளே கிடக்கிறது, போய்
எடுத்து வரச் சொல்"
என்றது கருப்பணசாமி,
மன்னனும் "எடுத்துவாருங்கள்" எனக்
கட்டளை இட்டான்,
அவ்வளவுதான், மன்னன் இட்ட
கட்டளையை மக்கள் அனைவரும்
ஏற்றுக் கொண்டனர்,
கோடாங்கியையும் மன்னனையும்
தவிரக் கூடியிருந்தோர் அனைவரும்
அரண்மனை அந்தப்புரம்
நோக்கி ஒடினர். மன்னன் மட்டும்
கருப்பணசாமியின்
அருகிலேயே நின்றான்,
கருப்பணசாமியின் காலில்
விழுந்து விபூதி பிராசதம்
பெற்றுக் கொண்டான், ஓடிய
மக்கள்கூட்டம்
அரண்மனை அந்தப்புரம்
என்பதை எல்லாம் உள்ளே சென்று தேடிப்பார்த்தது.
தூம்பாக்குழியைத்
தோண்டியே எடுத்துவிட்டது,
உள்ளேகிடந்த
அரசமுத்திரைமாலையை அப்படியே கையில்
அள்ளி
எடுத்துவந்தார் மந்திரி. மந்திரியும்
மக்களும் கருப்பணசாமி காலில்
கும்பிட்டுவிழ முற்றபட்டனர்.
கோடாங்கி அவர்களைக்
கும்பிட்டு விழாமல் தடுத்துவிட்டான்.
"மன்னனுக்குப் பிரசாதம்
கொடுத்துவிட்டு கருப்பணசாமி மலையேறிப்
போய்விட்டது, என்காலில் நீங்கள்
யாரும் விழுந்து கும்பிடக்கூடாது"
என்றான் கோடாங்கி.
மன்னனின் மானம் மட்டுமல்ல,
நாட்டு மக்களின்மானமும்
காக்கப்பட்டுள்ளது.
காத்தவன் அந்த
மாரநாடு கருப்பணசாமி என்றான்
கோடாங்கி. "எங்கள்
மானத்தைக் காத்த,
கருப்பணசாமிக்கு நாங்கள் எல்லாம்
அடிமை" என்றனர் மன்னனும்
மக்களும்.
தங்கக்காசுகள் உட்பட, தாம்பாலம்
தாம்பலமாய் பரிசுப் பொருட்களைக்
கொண்டு வந்து மன்னன் கையில்
கொடுத்தனர்
அரண்மனை அலுவலர்கள், மன்னன்,
அவற்றை அப்படியே வாங்கிக்
கோடாங்கி கையில் கொடுக்க
முயன்றான்,
ஆனால், கோடாங்கி அவற்றைத்
தொட்டுக்கூடப் பார்க்கவில்லை,
"மானம் காத்த கருப்பணசாமிக்கு,
மாலை அணிவித்து மரியாதை செய்யுங்கள்" என்றான்.
"நான்
உண்பது நாழி உடுப்பது இரண்டு"
என்றான். அப்படியே செய்வதாக
வாக்களித்தான் மன்னன்,
சிறை​வைக்கப்பட்டிருந்த
அரண்மனை அந்தப்புறத்தில்
பணியாற்றி​யோர் மற்றும் குறி​
சொன்ன அனைவரும்
விடுவிக்கப்பட்டனர், அவரவர்
செய்து வந்த
தொழிலை அப்படியே தொடர்ந்து செய்துவருமாறு மன்னன்
ஆணையிட்டான்,
சமபந்தி போஜனத்திற்கு ஏற்பாடு செய்தான்.
மன்னனும், கோடாங்கியும்
மந்திரியும் மக்களும் ஒன்றாய்
உட்கார்ந்து உணவருந்தினர்.
கோடாங்கிக்கு ஒரு வேட்டியும்
துண்டும் பரிசாகக் கொடுத்தான்
மன்னன்,
இதுநடந்து இருநூற்றைம்பது முன்னூறு ஆண்டுகளுக்கும்
மேலாகி விட்டது. இருந்தாலும்,
இன்றும் ஒருகுறையும் இல்லாமல்,
மரபு மாறாமல் செய்து வருகின்றனர்
மன்னர் குடும்பத்தினர்.
பங்குனித் திருவிழாவில்
கருப்பணசாமி புறப்பாடு ஆரம்பித்தவுடன்,
முதல் மரியாதையாகக்
கருப்பணசாமிக்கு இராமநாதபுரஅரண்மனை மாலை அணிவிக்கப்படுகிறது.
அரண்மனை மாலையைத்
தொடர்ந்து மக்கள்அனைவரும்
சாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாழ்க்கையில்
உய்வடைகின்றனர்,
இரவு முழுவதும்
கருப்பணசாமி ஆட்டம்,
மாலை என்றால் மாலை,
மலைபோல் குமிந்து விழும்,
அதை அப்படியே குவித்து வைத்திருப்பர்.
இரவு முடிந்து
சூரியன் உதிப்பதற்கு முன்
கருப்பணசாமி ஆடி குறிசொல்லி முடித்துவிடும். விடிந்தால்,
சாமியும் இருக்காது. மலைபோல்
குவிந்த மாலையும் இருக்காது.
கருப்பணசாமி கோயிலுக்குள் சென்ற
மறுவினாடியே அத்தனை மாலையையும்
அவரவர் பிரசாதமாக எண்ணிப்
பக்தர்கள் எடுத்துச் சென்று விடுவர்,
வரும் பங்குனி மாதம் 11ஆம் நாள்
வெள்ளிக்கிழமை (25-03-2011)இரவு மாரநாடு கருப்பணசாமி கோயிலில்
திருவிழா, குறிகேட்க விளைவோர்
எல்லாம்
வந்து சாமிக்கு மாலையணிவித்து மரியாதை செய்து வேண்டிய
குறி கேட்டு உய்யலாம்.
இத்த உண்மைக் கதையைக்
படித்தோரும், படித்ததைப் பிறருக்குச்
சொன்னோரும், அதைக் கேட்டோரும்
மாரநாடு கருப்பணசாமியின்
திருவருளாள் இன்னல்கள்
நீங்கி நல்வாழ்வு வாழ்வர்,
மாரநாடு கருப்பணசாமியின்
திருவருளைச் சிந்தித்து,
அன்பன்
கி.காளைராசன்
பங்களிப்பாளர்கள

நெல்

செந்நெல்லுக்குப் பதிலாக
மஞ்சள் அரிசி
முனைவர் மலையமான்
பழங்காலத் தமிழ் மக்கள், அழகின்
வீடாகிய இயற்கையை வியந்தார்கள்.
விழியாலும் அதைப் போற்றினார்கள்.
விரும்பி வழிபட்டார்கள்.
இறைவனுக்குரிய
முதன்மை வழிபடு பொருளாக
இயற்கையை அமைத்துக்
கொண்டார்கள். இயற்கை அழகை விழைவுடன்
போற்றிய மரபு இப்படித்தான் பிறந்து,
வளர்ந்து,
தலைமை பெற்றது.மனதை மயக்கிய
இயற்கைக்கு அடுத்தபடியாக, மனித
வாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்ட
பொருளைப் போற்றும் பழக்கம் ஏற்றம்
பெற்றது.
வேட்டையாடி, காட்டில்
உணவு தேடுவதையே நாளும் நாடிய
தொழிலாகக் கொண்டிருந்த மக்கள்,
வழிவந்த முறையைக் கைவிட்டனர்.
ஓரிடத்தில் கால் ஊன்றினர்.
விழுமிய தொழிலாகிய
உழவை மேற்கொண்டனர்.
மூங்கிலில் விளைந்த நெல்லை, வயல்
பயிர்தாங்கும் செந்நெல்லாக
மாற்றினர். அந்த உணவு நெல்
அவர்களுடைய மிக முக்கிய
பொருளாகவும், பெரிதும் விரும்பிப்
போற்றப்படும் முதன்மைப்
பொருளாகவும் ஆனது. அதனையும்
தலைமேற்கொண்டனர்.தொலை நாள்
தமிழ்மகள், பூவோடு நெற்கதிரையும்
தலைமுடியில்
சூடி மகிழ்ந்தாள். இப்படி நெல்லுக்கு வாடாப்
பெருமையைக் கொடுத்தாள்.
இதனை,
"செழுஞ்செய் நெல்லின் விளைகதிர்
கொண்டு
தடந்தாள் ஆம்பல் மலரொடும் சூடி
என்று சங்க இலக்கியமாகிய
அகநானூறு (78:17 - 18)
அறிவிக்கிறது.
இந்தப் பழக்கம்,
தொடர்ந்து நெடுங்காலம்
நடைமுறையில்
இருந்தது என்பதை,"தளையவிழ்ப்
பூங்குவளை மதுவிள்ளும் பைங்குழல்
கதிர்நெல் மிலைச்சிய
புன்புலைச்சியர் (திருநாளைப்போவார்
- 10)என்று பெரியபுராணம்
அறிவிக்கிறது. மேலும், நெற்கதிருடன்
அறுகம்புல்
குவளை மலர்
ஆகியவற்றையும்
சேர்த்து மாலையாகக் கட்டி,
சூடிக்கொண்டார்கள் தமிழர்கள்
என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
"தொழுங்கொடி அறுகையும்
குவளையும் கலந்து
விளங்குகதிர் தொடுத்த விரியல்
சூட்டி (சிலம்பு:10132 - 133)
என்ற வரிகள் அந்தப்
பழக்கத்தை மேலும்
உறுதிப்படுத்துகிறது.
தலைமேல் வைத்து,
மகிழ்வு நிலையில் போற்றப்பட்ட
நெற்கதிர்,
பிறகு இறை வழிபாட்டுக்கும் உரிய
பொருளாக மாறியது. வீரச்செயல்
அல்லது அருஞ்செயல்
புரிந்தபோது இறந்த ஒருவனுக்கு,
முன்பு நடுகல் அமைக்கப்பட்டது.
இதைத் தொல்காப்பியம் சொல்லும்.
நடப்பட்ட நினைவுச் சின்னமான
நடுகல், பின்பு தொழப்படும் புனிதத்
தன்மையைப் பெற்றது.
அப்போது அதை, நெல்
தூவி வணங்கும்
முறை தொடங்கியது.
"கல்லே பரவின் அல்லது
நெல்லுகுத்துப் பரவும் தெய்வமும்
இலவே (புறம்:335.11 - 12)
எனப் புறநானூறு கூறுகிறது.
கடவுள் சிலையின் முன் அடி பணிந்த
பழக்கமும் நிலை பெற்றது.
"இரும்செய் விளக்கின்
ஈர்ந்திரி கொளீஇ
நெல்லொடு மலரும் தூஉய்க்
கைதொழுது
என்று நெடுநல்வாடை (42 - 43)
சொல்கிறது.
நெல்லொடு முல்லைப் பூவைக்
கலந்து தூவப்பட்ட நடைமுறையை,
முல்லைப்பாட்டு (8-10) கூறுகிறது,
"அகநக ரெல்லாம் அரும்பவிழ்
முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூய் (சில.9:1 -
2)
என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.
பழந்தமிழர், மணமக்களை மலரும்,
நெல்லும் தூவி வாழ்த்தினார்கள்
என்று அகநானூறு வழி அறிகிறோம்.
"நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தூய்
(அகம்:86 - 15 - 16)
ஸ்காட்லாந்தில் நெல்லைத்
தூவி மணமக்களை வாழ்த்தும்
பழக்கம் சில குடும்பங்களில் உள்ளது
என்று, ஒரு பாதிரியார் சொன்னதாக,
சென்னைப் பல்கலைக்கழகத்தின்
முன்னாள் பேரா.ந.சஞ்சீவி
கூறியுள்ளார்.
நெல்லைத்
தூவி மணமக்களை வாழ்த்தும்
முறை, பிறகு அரிசி தூவி வாழ்த்தும்
முறையாக மாறியது.
மணமக்களை நோக்கி வீசி எரியப்பட்ட
நெல்லின் கூர்முனை, மக்களின்
கண்ணில் பட்டோ பிற
வகையாலோ பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக்
கூடும். தரையில் விழுந்த நெல்
பாதத்தில் தைத்திருக்கக்கூடும்.
இப்படி உடலுக்கு ஊறு விளைவித்த
காரணத்தால், நெல்லுக்குப் பதிலாக
அதன் உள்ளீடான அரிசியைத்
தூவி வாழ்த்தும் முறை பிற்காலத்தில்
ஏற்பட்டிருக்கலாம்.
கம்பு
கேழ்வரகு
சோளம்
போன்று உருண்டை வடிவமாக
இல்லாமல் நீளமான - நெட்டையான
உருவம் கொண்டிருந்த காரணத்தால்
நெ - என்ற மூலத்தின் அடிப்படையில்,
நெல் என்ற தமிழ்ச்சொல் பிறந்தது.
உள்ளிருக்கும் பொருளைக் குறிக்கும்
"அரி" என்பதன் அடிப்படையில் "அரிசி"
என்பது வந்தது. காற்சிலம்பின்
உள்ளே இருக்கும் மாணிக்கம்,
அரி எனப்படும். இறந்த தமிழனுடைய
வாயில், இறுதியாக, உண்ட அரிசிச்
சோற்றை வைத்து வழியனுப்பும்
பழக்கம் முன்பு இருந்திருக்கிறது.
இது வாய்க்கரிசி என்று கூறப்பட்டது.
அது இயல்பான வெள்ளை நிறத்துடன்
இருந்தது.
இறைவனை வணங்கும்போது உயிர்ப்பலி தரும்
பழக்கம் அண்மைக் காலம்
வரை நிலவியது. காளி வணக்கத்தில்
இது கட்டாயமாக இடம்
பெற்றிருந்தது. வெட்டப்பட்ட
விலங்கின் இரத்தத்துடன் அரிசியைக்
கலந்து வீசும்
முறை இருந்தது என்பதை,
"குருதியோடு கலந்த தூவெள்ளரிசி
சில்பலி செய்து (233 - 34)
என்று திருமுருகாற்றுப்படை உரைக்கும்.
இறந்தவனுக்குத் தரும்
அரிசி வெண்ணிறமானது.
வழிபாட்டுக்குரிய
அரிசி செந்நிறமானது.
ஆகவே வாழ்த்துக்குரிய
அரிசியை வேறுபடுத்திக் காட்ட
வேண்டியது இன்றியமையாக்
கூறானது. நெல்லின் மேற்புறம்
ஏறத்தாழ மஞ்சள் நிறம் கொண்டது.
நெல்லுக்குப் பதிலாக, வாழ்த்தப்
பயன்படும் அரிசிக்கு மஞ்சள் நிறம்
ஏற்றினால் பொருத்தமாக அமையும்
என்ற கருத்து உதயமானது.
மஞ்சள் நிறம்
மங்கலத்துக்கு உரியது என்ற
உணர்வும் துணைபுரிய, இந்த
இரண்டு எண்ணங்களின்
அடிப்படையில் மஞ்சள் நிறம்
ஏற்றப்பட்ட அரிசி - மஞ்சள் அரிசி,
மணமக்களை வாழ்த்துவதற்கும் பிற
மங்கல நிகழ்ச்சிகளுக்கும் தகுதியான
இடத்தைப் பெற்றது.
மணமக்களை வாழ்த்த
மட்டுமன்றி பிறரை மங்கலமாக
இருக்க வாழ்த்தவும் மஞ்சள்
அரிசி தூவும்
பழக்கம் இன்றளவும்
தமிழரிடையே இருந்து வருகிறது.
நன்றி:- தினமணி

ஆர்டிக்

உருகும் ஆர்க்டிக்
பனியிலிருந்து வெளியாகும்
நச்சு ரசாயனங்கள்
ஆர்க்டிக் பிரதேச கடல்
பனி உருகுவதிலிருந்து -
மோசமானது, நச்சுத்
தன்மையுடையது என்று கருதப்படும்
டீ.டீ.டி (DDT) என்ற நச்சு ரசாயனம்
உட்பட பல்வேறு தடைசெய்யப்பட்ட
நச்சு ரசாயனங்கள் வெளியேறுவதாக
நேச்சர் இதழில் வெளியான ஆய்வுக்
கட்டுரை தெரிவித்துள்ளது.
இந்த ரசாயனங்கள் ஆய்வுலகில்
"டேர்ட்டி டஜன்" (Dirty Dozen)
என்று அழைக்கப்படுகிறது.
டீ.டீ.டி.
என்பது "டைகுளோரோ டை ஃபினைல்
டிரைகுளோரோஇதேன்" என்ற
ரசாயனமாகும்.
இது பூச்சிக்கொல்லி மருந்தாக நீண்ட
நாட்கள்
பயன்படுத்தப்பட்டு வந்து பிறகு இதன்
மோசமான சுற்றுச்சூழல், மற்றும்
மனித உடல் ஆரோக்கிய விரோத
செயல்கள் காரணமாக நீண்ட
ஆண்டுகளுக்கு முன்னரே தடை செய்யப்பட்ட
ஒன்றாகும்.
2001ஆம் ஆண்டு இதன்
பயன்பாடு உலகம் முழுதும்
தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரசாயனம் இயற்கையில்
கரைந்து போக பல ஆண்டுகள்
பிடிக்கும். மேலும்
இது உயிர்பெருக்கம்
அடையக்கூடியது.
அதாவது உணவுச் சங்கியில் தாக்கம்
செலுத்தி பல உயிரிகளின்
இனப்பெருக்கக்
கூறுகளை அழிக்கவல்லது.
மேலும் இது நீரில் கரைக்க
முடியாதது. இதனால்
மண்ணிலிருந்து நீருக்கும்,
பிறகு விண்ணுக்கும் விரைவில்
சென்று தஞ்சமடைவது.
1993ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம்
ஆண்டு வரை ஆர்க்டிக் கடல்
பனி உருகுதலை ஆய்வு செய்தபிறகு இந்த
நச்சு ரசாயனங்களின் வெளியேற்றம்
ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள்
கண்டு பிடித்துள்ளனர்.
இத்தனையாண்டுகளாக இந்த
நச்சு ரசாயங்கள் பனிபாறைகளில்
படிந்துள்ளன.
தற்போது புவி வெப்பமடைதல்
காரணமாக
பனி உருகும்போது இவை மீண்டும்
வெளியேறுவது தொடர்ந்து வருகிறது.
இந்த 12 நச்சு ரசாயனங்கள் கடந்த 20
ஆண்டுகளாக ஆர்க்டிக் பிரதேச
வான்வெளியில் சென்றுள்ளதாக
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வை நடத்திய
கனடா நாட்டுச் சுற்றுச்சூழல் கழகம்
இதனை பேராபத்து என்று எச்சரித்துள்ளது.
டீ.டீ.டி. ரசாயனத்தின் தாக்கம்
பற்றி அமெரிக்காவின் நோய்கள்
தடுப்பு மையம் 2005ஆம்
ஆண்டு ஆய்வு மேற்கொண்டபோது அப்போது அமெரிக்க
மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த
மாதிரிகளில் ஏறத்தாழ
அனைத்து மாதிரிகளிலும் இந்த
நச்சு ரசாயனம்
இருப்பது தெரியவந்தது.
இந்த ரசாயனம்
அனைத்து உயிரிகளுக்கும்
ஊறு விளைவிப்பதோடு, மனித
உடலில் சொல்லொணாத
நோய்களை உருவாக்குவது என்பது பல
ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்றே.

விடுதலை

நம் பாரதத் திருநாடு சுதந்திரம்
பெற்று அறுபத்தி நான்காண்டுகள்
ஆகின்றன. இந்தச் சுதந்திரத்திற்காகப்
பாடுபட்டவர்களில் நாம் அறிந்த தேசத்
தலைவர்கள் பலர் இருந்தாலும்,
முதன் முதல் நம் தமிழ்நாட்டின்
திருநெல்வேலிச் சீமையிலேயே முதல்
சுதந்திரக் குரலைக் கொடுத்த தமிழ்
வீரன் இருந்தான் என்பதை நம்மில்
பலரும் அறிய மாட்டோம். நம்
நாட்டின்
முன்னாட்பெருமை குறித்து பாரதி,
புன்னகையு மின்னிசையு மெங்கொளித்துப்
போயினவோ,
இன்னலொடு கண்ணீ
ரிருப்பாகி விட்டனவே!
ஆணெலாம் பெண்ணாய்
அரிவையரெ லாம்விலங்காய்
மானெல்லாம்
பாழாகி மங்கி விட்டதிந்நாடே!
ஆரியர்கள் வாழ்ந்துவரும்
அற்புதநா டென்பதுபோய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச
மாயினதே!
வீமாதி வீரர்
விளிந்தெங்கு போயினரோ
ஏமாறி நிற்கு மிழிஞர்களிங்
குள்ளாரே!"
என மனம் வருந்திப் பாடியுள்ளார்.
ஆனால் பாரதிக்கும் பல ஆண்டுகள்
முன்னரே நம் நாட்டில் சுதந்திர
வேட்கை கொண்டு, “என்று தணியும்
இந்த சுதந்திர தாகம்; என்று மடியும்
இந்த அடிமையின் மோகம்”
என்று பாடி வருந்திய வீரத்
திருமகன்களும், மகள்களும்
இருந்திருக்கின்றனர். இந்திய சுதந்திரப்
போராட்ட வீரர்களுள் முக்கியமான
போராட்டக்காரன் பாரதி.
பாரதி மட்டுமா? தமிழ் நாட்டின் பல
இளைஞர்கள், இளம்பெண்கள்
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களில் பலரை நாம் அறிய
மாட்டோம். தாங்கள் கொண்ட
பணியிலேயே கருத்தாய்
தங்களை விளம்பரப்
படுத்திக்கொள்ளாமல்,
வெளிச்சத்திற்குள் வராமல்
மறைந்தவர்கள் பலர். மந்திரங்களுள்
அஜபா மந்திரம் என ஒன்றுண்டு.
வெளிப்படையாக ஜபிக்காமல்
மனதிற்குள்ளாகவே ஜபிக்க
வேண்டும். ஜபிக்க ஜபிக்க
நாளாவட்டத்தில் மந்திரம்
தானாகவே உள்ளே ஓடும்.
வெளி நாட்டத்தை நிறுத்தி உள்ளே பார்க்கத்
துணை செய்யும்.
அப்படி மெளனமாகத் தங்கள்
இருப்பை வெளிச்சம் போட்டுக்
காட்டாமல் மறைந்த வீரர்கள்
பலருண்டு. அவர்களுள்
சிலரை மட்டும் இங்கே பார்ப்போமா?
முதலில் அனைவருக்கும்
வெளியே தெரியாத பூலித் தேவன்
பற்றிப் பார்ப்போம். பொதுவாக 1857-ல்
ஏற்பட்ட சிப்பாய்க்
கலகத்தையே முதல் சுதந்திரப்
போராட்டம் எனப் படித்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால்
அதற்கும் முன்னால் நம்
சுதந்திரத்திற்காகக் குரல்
கொடுத்தவர்களுள் முதன்மையானவர்
திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த
பாளையக்காரர் ஆன பூலித் தேவன்
ஆவார். தமிழகத்தின் சுதந்திரப்
போராட்டக் களத்தின்
தகவல்களே முற்றிலும்
இருட்டடிப்புச் செய்யப் பட்டுவிட்டது.
நாமும் அதில் ஆர்வம்
காட்டாமலே பொதுவாகப் படித்துக்
கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட
சிப்பாய்க்
கலகத்திற்கு நூறாண்டுகளுக்கு முன்பே பூலித்தேவன்
ஆங்கிலேயத் தளபதி இன்னிங்ஸ்
என்பவரை எதிர்த்துக் குரல்
கொடுத்தார். அவரோடு யுத்தமும்
செய்தார். இங்கே அவரின்
வாழ்க்கை வரலாற்றை விவரித்தால்
கட்டுரை பெரிதாகிவிடும்.
திருநெல்வேலிச் சீமையில்,
“நெல்கட்டான் செவ்வல்” என்னும்
சின்னஞ்சிறு பாளையத்தின்
அதிபதியான பூலித்தேவர் வியாபாரம்
செய்ய வந்தவர்கள் ஆள்வதா என்ற
கோபத்தில் என் அப்பன், பாட்டன்,
பூட்டன் என தலைமுறை,
தலைமுறையாக வாழ்ந்து வந்த இந்த
பூமிக்கு எங்கிருந்தோ வந்த
வெள்ளையனுக்கு ஏன் கப்பம்
கட்டவேண்டும் என எதிர்த்துப்
போரிட்டார். வீரபாண்டியக்
கட்டபொம்மனும் கூட இவருக்குப்
பின்னர் தான். சொல்லப் போனால்
கட்டபொம்மன்
அப்போது பிறக்கவே இல்லை. அதன்
பின்னர் மூன்றாண்டுகள்
கழிந்தே 1760- கட்டபொம்மன்
பிறந்தான். கட்டபொம்மன் குறித்த என்
கருத்து மாறுபட்டது.
ஆகவே இங்கே கட்டபொம்மன்
குறித்துச் சொல்லப் போவதில்லை.
பூலித்தேவன் தன் வாழ்நாள் முழுதும்
ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப்
போரிட்டதாய் எழும்பூர்
ஆவணக்காப்பகங்களில் ஆவணங்கள்
சொல்லுவதாய்த் தெரிய வருகிறது.
இது வரைக்கும் இல்லாத
அளவுக்கு சுமார்
பதினைந்து ஆண்டுகள்
தொடர்ந்து வெள்ளையரை எதிர்த்துப்
போரிட்ட பூலித்தேவர், எல்லாப்
போர்களிலும்
கும்பினியாரை வெற்றி கொள்ளவே,
கோபம் கொண்ட கும்பினியார்
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்
என எண்ணி, சுதேசிப் படை என்ற
பெயரில் எல்லாப் பாளையக்காரர்களின்
படைகளையும் வளைத்துப் போட்டுத்
தமிழன் ஒருவனையே அதற்குத்
தளபதியாக்கி பூலித்தேவனை வெல்ல
அனுப்பி வைத்தார்கள். இவன் தான்
மருதநாயகம் என்னும் கான்சாகிப்.
மருதநாயகம் ஒன்றும் பெரிய
தியாகி எல்லாம் இல்லை.
சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போல்
சேவகம் பண்ணியவர் தான்.
கான்சாகிபோடு மூன்றாண்டுகள்
போர் புரிந்த பூலித்தேவன்
கடைசியில் 1761-ல் தோல்வி கண்டார்.
ஆனால் கான்சாகிபின் கைகளில்
மாட்டாமல்
தப்பி ஓடி ஒளிந்து கொண்டு மீண்டும்
படைகளை ரகசியமாய்த்
திரட்டி வந்தார். கடைசியில்
கான்சாகிபுக்கும்
கும்பினியாருக்குமே சண்டை மூள
கான்சாகிப் தூக்கில் போடப்பட்டான்.
தூக்கில் போடப் பட்டதால்
தியாகியாகவும் ஆனான். ஆனாலும்
அவன் இருக்கையில், நெல்கட்டும்
செவ்வல், வாசுதேவன் நல்லூர்,
பானையூர் ஆகிய இடங்களில் உள்ள
பூலித்தேவனின் கோட்டைகள்,
அனைத்தையும் இடித்துத்
தரைமட்டமாக்கிவிட்டான்.
கான்சாகிபின் மரணத்திற்குப் பின்னர்
ஒளிந்திருந்த பூலித்தேவன்
கடலாடியில்
இருந்து வந்து பாளையத்தைக்
கைப்பற்ற, கும்பினியாருடன் மீண்டும்
போர் நடந்தது. ஆனால்
இம்முறை பூலித்தேவனுக்குப்
பெருத்த சேதம் ஏற்பட அவர்
கைது செய்யப்பட்டு அழைத்துச்
செல்லப் பட்டார் என
ஒரு சாராரும்,மேற்குத்
தொடர்ச்சி மலைச்சாரலில் மறைந்தார்
என ஒரு சாராரும் கூறுகின்றனர்.
கைது செய்து அழைத்துச்
செல்லப்பட்ட பூலித்தேவர் சங்கரன்
கோயிலில் ஈசனை வழிபட வேண்டும்
என்று கூறியதாகவும்,
அவ்வாறே அனுமதிக்கப்பட்ட அவர்
கோயிலில் அம்மன்
சந்நிதிக்கு அருகே மர்மமான
முறையில் மறைந்ததாகவும்
ஒரு கூற்று உண்டு. சங்கரன்
கோயிலில் அம்மன்
சந்நிதி அருகே பூலித் தேவன்
அறை என்ற பெயரில்
ஒன்று இன்றளவும் உள்ளது. ஆனால்
பூலித்தேவன் கும்பினியார்களால்
சிறையிலேயே கொல்லப்பட்டிருக்கவேண்டும்
என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்த
மர்மம் இன்னும் வெளிவரவில்லை.
இவருக்கு அடுத்த விடுதலைப்
போராளியாகக் குறிப்பிடப்
போவது வீரமங்கை வேலு நாச்சியார்.
இவரும் தென்பாண்டி நாட்டைச்
சேர்ந்தவரே. பெண்கள்
அடக்கப்பட்டார்கள்,
ஒடுக்கப்பட்டார்கள்,
அவர்களுக்கு உரிய உரிமைகள்
கிடைக்கவில்லை என நாம்
அனைவரும் இன்றும்
கூறிக்கொண்டிருக்கிறோம். பெண்
இன்னும்
விடுதலை பெறவில்லை என்றும்
கூறுகிறோம். ஆனால்
இவை எதையும் பற்றிக்
குறை கூறாமல்
நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட
போராளிகளுள் பூலித்
தேவனுக்கு அடுத்தபடியாகக்
கூறத்தக்கவர்
வீரமங்கை வேலு நாச்சியார் ஆவார்.
இவரும் வெள்ளையர்களை எதிர்த்துப்
போராடியவரே. போர்க்களம்
சென்று போராடும் அளவுக்குத்
திறமையும், வலிவும் உடையவர்.
இதிலிருந்தே பெண்கள்
மனது வைத்தால் எதையும் செய்ய
முடியும் என்பது புரிகிறதல்லவா?
வீர மங்கை வேலு நாச்சியார்
ராமநாதபுரம் சேதுபதி அரசரின்
மகளாகப் பிறந்தவர்.
சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்த
முத்துவடுகநாதருக்கு மனைவியாக
வாழ்க்கைப்பட்டு வெள்ளச்சி என்ற
பெண்ணையும் பெற்றவர்.
முத்து வடுகநாதருக்கு சரியான
ஆலோசனைகள் கூறும்
நால்வரையும் காவல் தெய்வங்கள்
என அழைப்பர்.
அத்தகையதொரு காவல் தெய்வங்கள்
பட்டியலில் முதல் இடத்தில் அவரின்
முதல் மனைவியான வேலுநாச்சியார்
இடம் பெற்றார். மற்ற மூவரில் பெரிய
மருது, சின்ன மருது என
அழைக்கப்பட்ட
மருது பாண்டியர்களும்,
முத்து வடுகநாதரின் பிரதானியான
தாண்டவராயப் பிள்ளையும்
ஆவார்கள். முத்துவடுகநாதரும்
அவரின் இளைய மனைவியும்
கும்பினிப் படைகளின் பீரங்கித்
தாக்குதலில்
கொல்லப்படவே வேலு நாச்சியார் தம்
மகளுடனும், தாண்டவராயப்பிள்ளை,
மருது பாண்டியர்கள் துணையோடும்,
விருபாக்ஷி பாளையத்தில் போய்
அடைக்கலம் பெற்றார்.
கம்பளத்து நாயக்கர்களைக்
குடிமக்களாய்க் கொண்ட அந்தப்
பாளையத்திலே பாதுகாப்புக்
கிடைக்கும் என எதிர்பார்த்தது வீண்
போகவில்லை.
அங்கிருந்து ஆங்கிலேயருக்கு உதவிகள்
புரிந்து பாளையக்காரர்களையும்,
ராமநாதபுரம்,
சிவகங்கை அரசர்களையும்
தொந்திரவு செய்து கொண்டிருந்த
ஆற்காட்டு நவாபை விரட்டி அடிக்க
ஹைதர் அலியின்
உதவியை வேலு நாச்சியார் நாடினார்.
உருதுவில் சரளமாகப் பேசும்
அளவுக்குத் திறமை பெற்றிருந்த
வேலு நாச்சியார், ஹைதர்
அலியோடு தாண்டவராயப்
பிள்ளையின்
உதவியோடு தொடர்பு கொண்டு உதவிகள்
பெற்று ரகசியமாக
சிவகங்கையை விடுவிக்க முயற்சிகள்
செய்து வந்தார். தாண்டவராயப்
பிள்ளையின் முயற்சிகள் பலிக்காத
வண்ணம் ஆற்காடு நவாப் போட்ட
திட்டங்கள் பலித்தன.
சுதந்திரத்திற்காகப் போராடும்
கிளர்ச்சிக்கார மக்களைப் பிடித்துச்
சிறையில் போட்டனர். இதனால் மனம்
வருந்திய தாண்டவராயப்
பிள்ளை மரணமடைய,
வேலுநாச்சியார் மருது பாண்டியர்
மூலம் ஹைதர் அலியின்
உதவிகளைப் பெற்றார்.
மதுரைக்கு அருகே கோச்சடையில்
ஆற்காட்டு நவாபின்
படைகளோடு மோதி நவாபின்
படைகளைத் தோற்கடித்தார். அதன்
பின்னர் மானாமதுரையில்
தங்கி இருந்த கும்பினிப்
படைகளையும் விரட்டி அடித்தார். தம்
படைகளை மூன்று பிரிவாகப் பிரித்த
ராணி வேலு நாச்சியார் சிவகங்கைப்
பிரிவுக்குத்
தானே தலைமை தாங்கி நடத்தினார்.
திருப்பத்தூரிலிருந்த
பிரிவுக்கு நன்னியம்பலம் என்பவரும்,
காளையார் கோயிலில் இருந்த
பிரிவுக்கு மருது பாண்டியர்களும்
தலைமை தாங்கி நடத்தி மும்முனைத்
தாக்குதல் கொடுத்தனர். நவாப்
படைகள் பின்வாங்க, நாச்சியார்
எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன்
சொந்த நாடான
சிவகங்கைக்கு வெற்றிப்
பெருமிதத்துடன் சென்றார். அவர்
கூடவே அவர் மகள் வெள்ளச்சியும்
சென்றார். வெள்ளச்சிக்கு முடி சூட்டிப்
பெரிய மருதுவைத் தளபதியாகவும்,
சின்ன மருதுவைப் பிரதானியாகவும்
ஆக்கித் தம் நன்றிக்கடனைத் தீர்த்தார்.
வெள்ளச்சிக்குத் திருமணம் ஆன சில
நாட்களில் கும்பினிப் படை மீண்டும்
படை எடுத்து வந்தது. ஆனால்
அப்போது மருது பாண்டியர்களில்
சின்ன மருதுவின் ஆலோசனைப்
படி சமாதானம் செய்து கொண்டனர்.
வேலு நாச்சியார் அவரின் மகளான
வெள்ளச்சியின் மரணத்தால் மனம்
உடைந்தார் எனவும், அவர் உயிருடன்
இருக்கையிலேயே அவர் மருமகன்
பெரிய உடையணத்
தேவரை அரசராக்கினார்கள் எனவும்
கேள்விப் படுகிறோம். 1800-ஆம்
ஆண்டு சந்தேகாஸ்பதமான
சூழ்நிலையில் வேலு நாச்சியார்
மரணம் அடைந்தார் என ஒரு குறிப்புச்
சொல்கிறது.
இன்னொரு குறிப்பு மகளைத்
தொடர்ந்து பேத்தியும்
மரணமடையவே இதயம்
பாதிக்கப்பட்ட வேலு நாச்சியார்
சிகிச்சைக்காக பிரான்ஸ் சென்றார்
என்று கூறுகிறது. ஆனால் அதன்
பின்னர் அவர்
விருபாக்ஷி அரண்மனைக்கு வந்து சந்தேகத்துக்குரிய
முறையிலேயே இறந்தார் என்பதில்
மாற்றுக் கருத்து இல்லை. ஆண்
வாரிசு இல்லாத
நாட்டை அரசே ஏற்று நடத்தலாம்
என்ற வெள்ளையர்களின் சட்டப்படித்
தங்களுடன் சேர்த்துக்கொள்ள
வெள்ளையர்கள் செய்த
சூழ்ச்சியாகவும் இருக்கலாம் என
நம்பப்படுகிறது.
--Geetha Sambasivam 08:30, 15
ஆகஸ்ட் 2011 (UTC)
பங்களிப்பாளர்கள