திருப்பூர் குமரன்
திருப்பூர் குமரன்
திருப்பூர் குமரன் (அக்டோபர் 4 , 1904
- ஜனவரி 11 , 1932 ) இந்திய
விடுதலைப் போராட்ட
தியாகி ஆவார். இவர்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள்
சென்னிமலையில் பிறந்தார். 1932
ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம்
மீண்டும் தொடங்கிய போது தமிழகம்
முழுவதும் அறப்போராட்டம் பரவிய
நேரத்தில் திருப்பூரில்
தேசபந்து இளைஞர் மன்ற
உறுப்பினர்கள் அச்சமயம்
ஏற்பாடு செய்த மறியல்
போராட்டத்தில் தீவிரமாகப்
பங்குகொண்டு, கையில் தேசியக்
கொடியினை ஏந்தி, தொண்டர்
படைக்குத் தலைமை ஏற்று,
அணிவகுத்துச்
சென்றபோது காவலர்களால்
தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து,
கையில் இந்திய தேசியக் கொடியை
ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர்
மருத்துவமனையில் உயிர் துறந்தவர்
திருப்பூர் குமரன். இதனால்,
கொடிகாத்த குமரன் என்றும்
அழைக்கப்படுகிறார்.
நினைவகம்
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன்
தியாகத்தைப் போற்றும் வகையில்
திருப்பூரில் திருப்பூர் குமரன்
நினைவகம்
ஒன்றை அமைத்துள்ளது.
இங்கு தற்காலிக நூல் நிலையம்
உள்ளது. படிப்பகம்
ஒன்று செயல்பட்டு வருகின்றது.
மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட
வீரர்களின் படங்கள்
வரைந்து பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளத
No comments:
Post a Comment