Total Pageviews

Friday 27 December 2013

மணல் ரகசியம்

பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல்
ரகசியம்
உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின்
பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க
முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன
சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த
பெரிய கோயிலின்
ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில்
இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக்
கிணறு தோண்டப்பட்டது.
மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார்
மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர்
இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக்
கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்
அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில்
கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன்
தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம்
கூறியதாவது:
கீழே இரு மடங்கு சுமை
பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன்
தரைப்பகுதியையும் சில
ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில்
கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான
ஆற்று மணல் படுகையைக்
கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம்
என்று தெரிகிறது. அதாவது, தரையின்
மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில்
கட்டுமானத்தைவிட
இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.
அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான்
பாறையை தொட்டியாக வெட்டி அதில்
பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக்
கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல்
விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல்
இயல்பாக அசைந்துகொடுக்கும்
தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத
அசைவுகளின்போது மணலின்
அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில்
இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது,
பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும்
நேராது.
தலையாட்டி பொம்மை போல..
தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின்
எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின்
எடை ஒரு லட்சம் டன்.
அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார்
ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில்
நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இதன்மூலம் பூமித் தகடுகளின்
அசைவின்போது மணல் அஸ்திவாரம்
தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும்.
இதனை zero settlement of foundation என்பர்.
இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில்
தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்து
க்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது.
தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும்
தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்
கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது.
அதனால்தான் பெரும்பாலான கடல்
கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும்
இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள்
ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம்
மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை.
அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும்
பாறைத் துகள் எதுவும் இல்லை. 350
அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான்
களிமண் வெளியேறியுள்ளது.
இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான
மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில்
இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப்
பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின்
அடியில் கிடைத்தது, அதைவிட
மூன்று மடங்கு பெரிய பருமணல்.
இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில்
படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின்
காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக்
கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்
கூறினார்.
சிலை, நாணயங்கள் இருக்கலாம்
ஒடிசா மாநிலத்தில் வரலாற்றுக்
கோட்டைகளை ஆய்வு செய்தவரான
ஒரிசா பாலு கூறும்போது, நம் மன்னர்கள்
பிரமாண்டமான
கோயில்களை கட்டியது காட்சிக்காகவும்
பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால்
நமது வரலாறு அழியாமல் இருக்கவும்,
பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான்
பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர்.
அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன்
அடியில் பெரும் நிலவறைகள்
வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும்.
எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள்,
செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க
வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென்
கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின்
மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக்
கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம்
தெரிந்துகொள்ளலாம். கோயிலில்
அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க
வேண்டும் என்ற அவசியம் இல்லை.
செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார்
மற்றும் Ground penetrating radar
தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள்
ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்”
என்றார்.
Thanks: Hindu Tamil

Wednesday 3 July 2013

இன்று வீரத்துறவி நினைவு தினம்

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே
ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன்
என்று நினைத்தால்
பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ
உன்னை வலிமையுடையவன்
என்று நினைத்தால் வலிமை படைத்த
வனாகவே ஆகிவிடுவாய். -
கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
மனிதன் தோல்வியின்
மூலமே புத்திசாலி ஆகின்றான்.
பிறரிடமிருந்து நல்லனவற்றைக்
கற்றுக் கொள்ள மறுப்பவன்,
இறந்தவனுக்கு ஒப்பாவான்.
காயம்படாதவன் தான் தழும்மைக்
கண்டு நகைப்பான்.
உடலிலும் மனதிலும்
வலிமை இல்லாமல் போனால்
ஆன்மாவை அடைய முடியாது.
நீ உன்னைப் பலவீன்ன்
என்று ஒரு போதும் சொல்லாதே.
எழுந்து நில். தைரியமாக இரு.
வலிமையாக இரு.
பொறுப்பு முழுவதையும் உன் தோள்
மீதே சுமந்து கொள்.
சுதந்திரமானவனாக இரு.
எவரிடமிருந்தும் எதையும்
எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச்
சொல்வேன். உனது கடந்து கால
வாழ்க்கையை நீ பின்னோக்கித்
திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக
எப்போதும்
மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற
முயற்சி செய்த்தையும்
அப்படி எதுவும் வராமற்
போனதையும்தான் காண்பாய். வந்த
உதவிகள் எல்லாம்
உனக்குள்ளிருந்தவையாகத்தான்
இருக்கும்.
மக்களுக்கு சேவை செய்யும்
தொண்டே மகேசனுக்குச் செய்யும்
தொண்டு
நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம்.
ஆனால் மதகோட்பாடு இருக்க
இயலாது. மத்த்தில்
நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை
அவசியம் இருக்க வேண்டும்.
குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத்
தவிர, மற்றர்கள்
குருவாவதற்கு விரும்பி அழிந்தும்
போகின்றனர்.
செல்வத்தைக்
கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட,
அரசனையும், ஆண்டியையும்
ஒன்றாக நினைத்து வாழும்
துறவிகளின் வாழ்வே சிறந்தது.
நாம் செல்வச்
செழிப்போடு வாழ்ந்தாலும்
இறந்துவிட்டபின் இவை நம்முடன்
வருமா? நாம் அழியும் செல்வத்தைச்
சேர்க்க நினைப்பதை விட அழியாத
ஒன்றைப் பெறுவதுதான்
ஆண்மைக்கு அழகு.
மரணத்தை வென்று, அதறக்குமேல்
உள்ள மெய்ப்பொருள் என்ன
என்பதைனைத்
தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற
வாழ்க்கையே மேல்.
மிருகத்தை மனிதானாக்குவதும்,
மனிதனைத் தெய்வம் ஆக்குவதும்
மதம்.
இந்த உலகில்
மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம்
கொண்ட எதையும் -
பயத்தை உண்டு பண்ணுகிற
எதையும் நிற்க வேண்டும்.
அவற்றுடன் போராடவேண்டும்.
பயந்து ஓடலாகாது.
மக்கள் எவராயினும் சகிப்புத்
தன்மையோடு, பிறருடைய
சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.
மதங்கள்
எல்லாமே உண்மையானவைதாம்!
ஆனால்
ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு
மக்களை மாறச்
செய்வது பொருள்ளற்றது.
கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த
கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள்
சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ
வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம்
தம் மதங்களில் முன்னேற்றம்
அடையவேண்டும்
என்பதே குறிக்கோளாக இருக்க
வேண்டுமே.
கடவுளை தாம் விரும்பும் உருவத்தில்
ஒவ்வொரு மதப்பழகப்படி ஒவ்வொருவரும்
வணங்கலாம்.
தங்கள்
மதமே சிறந்து விளங்கவேண்டும்
மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற
எண்ணம் மக்களுக்குள்
பகைமையை உருவாக்கும்.
பணி செய் அதற்குப் பெயர் தவம்.
தன்னலமற்று மக்களுக்கு உழைக்க
வேண்டும்.
மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக
எண்ணாதே அவ்வாறு உழைக்கும்
பணி தெய்வத்திற்குச் செய்யும்
திருத்தொண்டைப் போன்றது.
உடல் இன்பமே பெரிதன்று.
வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம்
செய்து கொண்டு பிள்ளைகளைப்
பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட,
பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு,
தன் நலத்தைக் குறைத்து, பிறர்
நலத்தை பேண வேண்டும்.
இறைவனே இன்று உலகாமகப்
பரந்து விரிந்து நிற்கின்றான்.
கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய்
. அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய்.
ஒழுக்கம் என்பது தன்னலமற்ற
சேவை. அதுவே சிறப்பு. அந்த
சிறப்பை அடைய மனிதன் முயல
வேண்டும்.
நீ கடவுளைத் தேடி எங்கும் போக
வேண்டாம். ஏழைகள்,
துன்ப்ப்படுவோர்
எல்லோருமே கடவுள் தான்,
அவர்களை ஏன் முதலில்
பூஜை செய்ய்க்கூடாது?
உடல் வலிமையுடையவன்,
வலிமை குறைந்தவன் மேல்
செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க
வேண்டும்.
செல்வம் படைத்தவன், செல்வம்
இல்லாதவன் மேல் செலுத்தும்
ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
அறிவுடையவன் அறிவு குறைந்தவன்
மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட
வேண்டும்.
முப்பத்து மூன்று கோடிப் புராண
தெய்வங்களிடத்தும், மேலும்
அவ்வப்போடு நம்மிடையே அன்னிய
நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர
தெய்வங்களிடத்தும்,
நம்பிக்கை இருந்தது. ஆனாலும்
ஒருவனிடத்தில்
தன்னம்பிக்கை இல்லாவிட்டால்
அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.
பாவம்
என்பது ஒன்று உண்டு என்றால்,
அது நான் பலவீனமானவன்,
மற்றவர்கள் பலவீனமானவர்கள்
என்று சொல்வது ஒன்றுதான்.
நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில்
நம்பிக்கை, கடவுளிடத்தில்
நம்பிக்கை -
இதுவே மகிமை பெறுவதன்
இரகசியமாகும்.
இவனை நம்பு அல்லது அவனை நம்பு
என்று மற்றவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், நான் சொல்கிறேன். முதலில்
உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை.
அதுதான் வாழ்க்கைக்கு வழி.
அடக்கப்படாமல் சரியான வழியில்
செலுத்தப்படாத மனம்,
நம்மை மேலும் மேலும்
என்றென்றைக்கும் கீழே இழுத்துச்
சென்றுவிடும். ஆனால்,
அடக்கப்பட்டுச் சரியான வழியில்
செல்கின்ற மனம்
நம்மை என்றென்றைக்கும்
காத்து இரட்சிக்கும்;
நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.
எப்போதும் விரிந்த
மலர்ந்து கொண்டே இருப்பதுதான்
வாழ்க்கையாகும்.
சுருங்கி விடுவது மட்டும் கவனித்துக்
கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும்
சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட
இடம் கிடையாது.
எதிரிகளை அழிக்க
ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.
யார் ஒருவன் தனக்குள் கௌரவமும்
மரியாதையும்
போய்விடுமோ என்று பயந்தபடி
இருக்கிறானோ அத்தகையவன்
அவமானத்தை தான் அடைகிறான்.
குருவுக்குப் பணிந்து நடந்தாலும்
பிரம்மச்சரிய
ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலம்
வெற்றிக்கு வழிகளாகும்.
சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள்.
நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற
மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.
சுதந்திர ஆன்மாக்கள், அழியாத
திருவருளைப் பெற்றவர்கள்.
போராட்டங்களையும் தவறுகளையும்
பொருட்படுத்தாதே, மிருகத்தைப்
போல வாழாதே!
இல்லை என்று ஒரு போதும்
சொல்லாதே! என்னால்
இயலாது என்று ஒரு நாளும்
சொல்லாதே. ஏனெனில் நீ
வரம்பில்லவலிமை பெற்றவன்,
உன்னுடைய
உண்மை இயல்போடு ஒப்பிடும்போது,
காலமும், இடமும் கூட
உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ
எதையும் சாதிக்ககூடியவன். சர்வ
வல்லமை படைத்தவன் நீ.
பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர்
அடியும் பின்வாங்கக்கூடாது.
கருத்து இதுதான் - எது வந்தாலும்
போராடி முடி. தங்கள்
நிலையிலிருந்து நட்சத்திரங்கள்
பிறழட்டும். முழு உலகமும்
நமக்கு எதிராக
எழுந்து எதிர்த்து நிறகட்டும்.
குறிக்கோளும் கொள்கையும்
மாறாமல் முன்னேறிச் செல்.
நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை,
கத்தி முனையில் நடப்பதைப் போல
மிகவும் கடினமானது தான். எனினும்
எழுந்திரு. விழித்துக் கொள். மனம்
தளராதே. நீ அடையவேண்டிய உனத்
இலட்சியமாகிய குறிக்கோளைக்
கண்டுபிடி.
நீ வீணாக அழுவதேன்? மரணமோ,
நோயோ உன்கில்லை. நீ அழுவதேன்?
துன்பமோ,
துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ
ஏன் அழ வேண்டும்?
மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை.
நீ ஆனந்தமயமானவன். நீ
உனது ஆன்மாவில் நிலைத்திரு.
மக்கள் என்ன வேண்டுமானாலும் இரு.
பிறகு, நிச்சயமாக
மற்றவை நடந்தேறி உலகம்
காலடியில் பணிந்து கிடக்கும்.
பகுத்தறிவைக் கொண்டவன்
பகவானை அடைய
வழிகளை நுட்பமாகத் தேடுகிறான்.
தனது உடம்பால்
உழைத்து இறைவனை அடைய
நினைப்பவன்
சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக
சேவையில் இறைபணியைத்
தேடுகிறான். மந்திரப் பூர்வமாக
நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும்
பூஜிக்கிறான்.
கர்மயோகம்: தனது கடமைகளைச்
செய்வதாலும் அதற்குரிய
செயல்களை ஆற்றுவதாலும்
இறை உணர்வைப் பெறுவது.
பக்தியோகம்: தனது அந்தரங்கமான
பக்தி உணர்வால்,
இறைவனை நினைந்து அவரைத்
தனக்கே உரியவராக அடைய
முற்படுவது.
ராஜயோகம்: மனத்தைக்
கட்டுப்படுத்தி,
உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி
இறைவன்பால்
தனது சிந்தனையை வழிப்படுத்தி,
இறை உணர்வைப் பெறுவது.
ஞானயோகம்: தனது அறிவாற்றலால்
பல்வேறு சாஸ்திர நூல்களைப்
படித்தும் ஞானபோதனைகளைப்
பெற்றும்,
இறைவனை உணர்ந்து அவரை அடைய
முற்படுவது.
இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப்
போன்று வேறில்லை.
எது எது பரிசுத்த மனதோ,
எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே
பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ,
அதற்குப் பெயர்தான் சீதை!
குரு ஒருவர்
ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க
வேண்டுமென்றாலும்,
ஒரு குழந்தையை வாழ்த்த
வேண்டுமென்றாலும், சீதையைப்
போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.
மனிதனாக வாழ முயற்சி செய்.
தோல்விகளை ஒரு போதும்
பொருட்படுத்தாதே. ஓராயிரம்
முறை நீ உனது இலட்சியத்தைக்
கைக்கொள். ஆயிரம் முறை நீ
தோல்வியுற்றாலும் மீண்டும்
ஒரு முறை கைக்கொள்ள
முயற்சி செய்.
பசியால் நலிந்து வாழும்
மக்களிடையே சென்று சமயப் பிரசாரம்
செய்வது அவர்களை அவமதிப்பதாகும்.
பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி,
அவனுக்குத் த்த்துவ போதனைகள்
செய்வது மேலும்
அவனை அவமதிப்பதாகும்.
ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால்
அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள்
நிறைய படிப்பதனால் எவனும்
பயன்பெற முடியுமா?
நம் நாட்டுப்
பொன்னை பித்தளையாகவும்,
அயல்நாட்டுப் பித்தளையைத்
தங்கமாகவும் கருதக்கூடிய
வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள்
கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள்.
நவீன காலமேற்றிசைக் கல்வி, நம்
நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது
மந்திர மாயம் போல் இருக்கிறது.
ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப்
பெறுவது போலவே,
தீமையிலிருந்து அறிவைப்
பெறுகிறான்.
உண்மையாக எதையும் துறக்கலாம்.
ஆனால், எதன் பொருட்டும்,
உண்மையைத் துறக்கலாகாது.
எந்த ஒரு காரியத்தை தொடங்கும்
பொழுதும், தவிர்க்க முடியாத
தவறுகள் சில ஏற்படவே செய்யும்.
பிறருடைய உத்தரவுக்குப்
பயந்து பயந்து நடப்பவர்கள்
நாளடைவில் சிந்திக்கும்
சக்தியை இழந்து விடுகிறார்கள்.
உங்களுக்குள் இருப்பதை உங்கள்
உழைப்பாலே வெளிக்கொணர
முயலுங்கள். பிறரைப்
பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம்
காணப்படும் நல்ல பண்புகளைப்
கற்றுக் கொள்ளுங்கள்.
விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய
கருத்துகளை ஏற்க ஆயத்தமாய்
இருக்கிறானோ இறுதியில்
அவனுடைய கருத்துகள்
வெற்றி அடைகின்றன.
கல்வி என்பது ஒருவனுடைய
மூளயல் பல விஷயங்களைத்
திணிப்பதுன்று, அப்படித்
திணிக்கப்படும் அந்த விஷயங்கள்
நன்றாக ஜீரணமாகிக்
பயன்படவேண்டும்.
ஆயிரம் முறை இடறி விழுவதன்
மூலம்தான் நல்ல
ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த
முடியும்.
ஒருவனுடைய உண்மைத்
தன்மையை ஆராய வேண்டின்,
அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க
வேண்டாம். அவன் தன் சாதாரணக்
காரியங்களை எங்ஙனம் செய்கிறான்
என்பதை கவனிக்க வேண்டும்.
நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக
இருந்தாலும் சரி,
அல்லது நாத்திகனாக இருந்தாலும்
சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி.
உன்னைடைய
சுகதுக்கங்களை மறந்து நீ
வேலை செய்க.
இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக்
கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.
எல்லாப் பேய்களும் நம்முடைய
மனத்திலே தான் இருக்கின்றன. மனம்
கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த
இடத்தில் நாம் இருந்தாலும்
அது சொர்க்கமாக மாறிவிடும்.
இன்பங்களை அனுபவிக்கும்
ஆசையை முற்றிலும்
மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக
வாழ்வில்
எதையுமே அதையமுடியாது.
இன்பங்கள் என்ற உன்னுடைய
எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின்
நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால்
தியாகம் செய்ய
முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர்
ஆகிவிடுகிறாய்.
மனிதன் இயற்கையை எதிர்த்துப்
பொராட ஆரம்பிக்கிறான். அதில் அவன்
பல தவறுகளைச் செய்கிறான்.
அதனால் துன்பப்படுகிறான்.
வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த
விடாமுயற்சியும், பெரும் மன
உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க
வேண்டும்.
மனிதன்
தானே பணத்தை உண்டு பண்ணுகிறான்.
பணம் மனிதனை உண்டு பண்ணியதாக
எங்கேயாவது எப்போதாவது நீ
கேள்விப்பட்டிருக்கிறாயா?
மனிதன் எந்த
அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த
அளவுக்குத் தக்கபடி அவன்
கடுமையான சோதனைகளையும்
கடந்து சென்றாக வேண்டும்.
நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது
சிரிப்பது போல, இன்னும்,
ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய
நிலையை எண்ணிச் சிரிப்போம்.
பெண்ணுக்குரிய அச்சம், நாணம்
போன்ற பண்புகளை இந்தியப்
பெண்களிடம் மட்டுமே நாம்
பார்க்கமுடியும். அத்தகைய
அற்புதமான குணங்களை உடைய
பெண்களை முன்னேற்ற உங்களால்
முடியவில்லை.
நூல்களைக் கற்கலாம்.
சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல
மணி நேரம் தொடர்ந்து பேசலாம்.
ஆனாலும் அனுபவமே சரியான
ஆசான். அதுவே உண்மையாம கல்வி.
நூல்நிலையம் ஒன்றில் இருக்கும்
எல்லா நூல்களையும்
ஒன்றுவிடாமல் படிக்கும்
புத்திசாலியைவிட, ஐந்து நல்ல,
உயர்ந்த
கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும்
, நீயே மெத்தபடித்தவனாக இருப்பாய்.
பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன
ஆகிறான்? அவன் எல்லையற்ற
பேரானந்தப் பெருக்கில்
திளைத்து வாழ்கிறான். பேரின்பம்
பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய
வேண்டுமோ, அந்த
ஆண்டவனை அடைந்து அவனுடன்
பேரானந்தத்தில் திளைக்கிறான்.
எல்லா ஒழுக்கத்திற்கும்,
எல்லா ஆன்மீக உணர்விக்கும்
பிரம்மச்சரியமே ஆதாரம்.
வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும்
பூஞ்சோலையாக
நினைத்து உருகி நிற்கும் காதலனின்ம
மனநிலை நமக்குத்
தேவையே இல்லை. மாறாக
வாழ்க்கை என்னும் போர்க்களத்தில்
அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன்
ஒருவனுடைய
மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.
கோழைகள் எப்போதும் வெற்றியடைய
முடியாது.
சிவன், விஷ்ணு என்றெல்லாம்
எத்தனையோ நூறு பெயர்களால்
அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான்.
பெய்ர்கள் வேறு. ஆனால்
இருப்பது ஒன்றுதான்.
அமைதியான மனமே உங்களின் மிக
முக்கியமான மூலதனம்.
அதுவே எல்லா வெற்றிகளையும்
கொண்டுவரும்.
துருப்பிடித்தத் தேய்வதைவிட,
உழைத்துத் தேய்வது மேலானது.
உண்மைக்காக எதையும் தியாகம்
செய்யலாம். ஆனால் எதற்காகவும்
உண்மையைத் தியாகம்
செய்யக்கூடாது.
வழிபாடுகள் எந்தப் பெயரிலும்
இருந்தாலும் சரி. எந்த வித்த்தில்
இருந்தாலும் சரி. அவை அனைத்தும்
ஒரே கடவுளக்குச்
செய்யப்படுகின்றன என்பதை நீங்கள்
உணர வேண்டும்.
தனது குழந்தைகளில் யாரேனும்
ஒருவருக்காவது உதவி செய்யும்
வாய்ப்பை ஆண்டவன் உனக்குக்
கொடுத்தால் அதன் மூலம் நீ
பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.
இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த
ஏழை எளியவர்களை நாம் உயர்த்த
வேண்டும். அவர்களின்
முன்னேற்றத்திற்கு உரிய
கருத்துக்களை நம்பிக்கயோடும்,
சிரத்தையோடும், அன்பான
சொற்களால் அவர்களுக்கு விரிவாக
எடுத்துச் சொல்ல வேண்டும்.
நோயாளிகளுக்கு வேண்டிய
பணிவிடைகளைச் செய். பசியால்
வாடுபவனுக்கு உணவு கொடு.
அறியாமையில்
உள்ளவனுக்குஉன்னால் முடிந்த
அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு.
இதுவே உனது கடமையாக்க் கொள்.
எதை நினைக்கிறாயோ அதுவாகவே
ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன்
என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ
ஆகிவிடுகிறாய். நீ
உன்னை வலிமையுடையவன்
என்று நினைத்தால்
வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்
.
மனிதனுக்கு மன அமைதியைத்
தருவதுதான் மத்த்தின்
அடிப்படை இலட்சியமாகும்.
இறைவனை ஒவ்வொரு உயிரிலும்
காண்பவன் ஆத்திகன்.
எவன் ஒருவனுக்குத்
தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான்
நாத்திகன்.
--
விவேகானந்தர