Total Pageviews

Sunday 30 September 2012

மருதகாசி வரிகள்

மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா
மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட
மிருகமடா
அட யாரும் திருந்தலயே இதுக்காக
வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக
வருந்தலயே
நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான்
மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு இந்த
பூமிய புதுசா பண்ணு
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னதான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில்
நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன
ஜென்மம்மடா
இப்ப
புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும்
நல்லப்பொழுது
இப்ப
புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும்
நல்லப்பொழுது
அடியே ஞான தங்கம்
இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதை பார்த்தா பொய்களும் ஓடும்
இரண்டு போட்ட உலகமும் மாறும்
அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில்
வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது
உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம

Thursday 27 September 2012

சித்தர்கள் பகுதியில் இருந்து

சித்தர் இராஜ்யம்நமது முன்னோர்கள்
சுவையினை இனிப்பு, புளிப்பு,
உறைப்பு, துவர்ப்பு, கசப்பு,
உவர்ப்பு என ஆறாக
பிரித்து கூறியிருப்பதை முன்னரே
பார்த்தோம். இத்தகைய சுவையுடைய
உணவுப் பொருட்களை சரியான
விகிதத்தில் எடுத்துக் கொள்வதன்
மூலம் நமக்கு உடலுக்குத் தேவையான
தாதுக்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த
சுவைகளை நமது நாக்கு உணரும்
போது நமது குடலில் உள்ள
சுரப்பிகள் தூண்டப் பட்டு ஜீரணமாகத்
தேவையான நீர்மங்கள் சுரக்கிறது.
நாள்தோறும் உணவில் அறுசுவையுடைய
உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம்
ஆரோக்கியவாழ்வு வாழ முடியும்
என்கிறார் தேரையர். மேலும் இந்த
உணவுகளை எந்த வரிசையில்
உட்கொள்வது பற்றியும்
தனது "பதார்த்த குண சிந்தாமணி"
என்னும் நூலில் பின்
வருமாறு விளக்குகிறார்.
ஆதி யினிப்புநாடு வாம்பிரநீ
ருப்பொடுசா
காதி யுரைப்பப்பா லந்தத்திற்-
கோதிறுவர்ப்
பாந்ததியுப்
பூறியகா யாதிவகை சேருணவை
மாந்ததிக கத்தையுறு வாய்.
முதலில் இனிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து புளிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து நீருப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து கீரை முதலானவைகளுடன்
காரச் சுவையுடைய உணவுப்
பொருட்களையும், உட்கொண்டு முடிவில்
துவர்ப்பு, தயிர், ஊறுகாய், என்ற
வரிசையில் உணவை உட்கொண்டால்
எப்போதும் சுகத்தையே கொடுக்கும்
என்கிறார்.
சரி இந்த
உணவுகளை எவ்வளவு எடுத்துக்
கொள்வதாம்?, அதனையும் தேரையர்
வரையறுத்துக் கூறியிருக்கிறார்.
முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு
முழுவுணலி
லக்கா ரணமன்ன
சாகாதிகூடி யரையதிற்பால்
சிக்கா வமுதம்பு தக்கிரங்
காலுண்டிச் சேடம்வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும்
வளியுமின்றே
சிறியவர், பெரியவர்,
ஆரோக்கியமானவர், நோயாளி என
பாகுபாடில்லாமல் அனைவரும் முக்கால்
வயிறு அளவுக்கே உணவு எடுத்துக்
கொள்ள வேண்டுமாம். அதாவது சோறு,
பலாகாரம் போன்ற பதார்த்தங்கள்
அரை வயிறும், பால், மோர், நீர்
போன்றவை கால்வயிறு அளவுக்கு
எடுத்துக் கொள்ளக் கூறுகிறார்.
ஒரு போதும்
முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக்
கூடாது என்கிறார்.
அப்படி முழு வயிறு உணவு
உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச்
சீரணிக்கத் தக்க அக்கினியும்
வாயுவும்
சஞ்சரிப்பதற்கு இடமிருக்காது
போய்விடும் என்கிறார்.

Thursday 20 September 2012

சித்தர்கள் பகுதியில் இருந்து

சித்தர் இராஜ்யம்நமது முன்னோர்கள்
சுவையினை இனிப்பு, புளிப்பு,
உறைப்பு, துவர்ப்பு, கசப்பு,
உவர்ப்பு என ஆறாக
பிரித்து கூறியிருப்பதை முன்னரே
பார்த்தோம். இத்தகைய சுவையுடைய
உணவுப் பொருட்களை சரியான
விகிதத்தில் எடுத்துக் கொள்வதன்
மூலம் நமக்கு உடலுக்குத் தேவையான
தாதுக்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த
சுவைகளை நமது நாக்கு உணரும்
போது நமது குடலில் உள்ள
சுரப்பிகள் தூண்டப் பட்டு ஜீரணமாகத்
தேவையான நீர்மங்கள் சுரக்கிறது.
நாள்தோறும் உணவில் அறுசுவையுடைய
உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம்
ஆரோக்கியவாழ்வு வாழ முடியும்
என்கிறார் தேரையர். மேலும் இந்த
உணவுகளை எந்த வரிசையில்
உட்கொள்வது பற்றியும்
தனது "பதார்த்த குண சிந்தாமணி"
என்னும் நூலில் பின்
வருமாறு விளக்குகிறார்.
ஆதி யினிப்புநாடு வாம்பிரநீ
ருப்பொடுசா
காதி யுரைப்பப்பா லந்தத்திற்-
கோதிறுவர்ப்
பாந்ததியுப்
பூறியகா யாதிவகை சேருணவை
மாந்ததிக கத்தையுறு வாய்.
முதலில் இனிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து புளிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து நீருப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து கீரை முதலானவைகளுடன்
காரச் சுவையுடைய உணவுப்
பொருட்களையும், உட்கொண்டு முடிவில்
துவர்ப்பு, தயிர், ஊறுகாய், என்ற
வரிசையில் உணவை உட்கொண்டால்
எப்போதும் சுகத்தையே கொடுக்கும்
என்கிறார்.
சரி இந்த
உணவுகளை எவ்வளவு எடுத்துக்
கொள்வதாம்?, அதனையும் தேரையர்
வரையறுத்துக் கூறியிருக்கிறார்.
முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு
முழுவுணலி
லக்கா ரணமன்ன
சாகாதிகூடி யரையதிற்பால்
சிக்கா வமுதம்பு தக்கிரங்
காலுண்டிச் சேடம்வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும்
வளியுமின்றே
சிறியவர், பெரியவர்,
ஆரோக்கியமானவர், நோயாளி என
பாகுபாடில்லாமல் அனைவரும் முக்கால்
வயிறு அளவுக்கே உணவு எடுத்துக்
கொள்ள வேண்டுமாம். அதாவது சோறு,
பலாகாரம் போன்ற பதார்த்தங்கள்
அரை வயிறும், பால், மோர், நீர்
போன்றவை கால்வயிறு அளவுக்கு
எடுத்துக் கொள்ளக் கூறுகிறார்.
ஒரு போதும்
முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக்
கூடாது என்கிறார்.
அப்படி முழு வயிறு உணவு
உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச்
சீரணிக்கத் தக்க அக்கினியும்
வாயுவும்
சஞ்சரிப்பதற்கு இடமிருக்காது
போய்விடும் என்கிறார்.

சித்தர்கள் பகுதியில் இருந்து

நமது முன்னோர்கள்
சுவையினை இனிப்பு, புளிப்பு,
உறைப்பு, துவர்ப்பு, கசப்பு,
உவர்ப்பு என ஆறாக
பிரித்து கூறியிருப்பதை முன்னரே
பார்த்தோம். இத்தகைய சுவையுடைய
உணவுப் பொருட்களை சரியான
விகிதத்தில் எடுத்துக் கொள்வதன்
மூலம் நமக்கு உடலுக்குத் தேவையான
தாதுக்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த
சுவைகளை நமது நாக்கு உணரும்
போது நமது குடலில் உள்ள
சுரப்பிகள் தூண்டப் பட்டு ஜீரணமாகத்
தேவையான நீர்மங்கள் சுரக்கிறது.
நாள்தோறும் உணவில் அறுசுவையுடைய
உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம்
ஆரோக்கியவாழ்வு வாழ முடியும்
என்கிறார் தேரையர். மேலும் இந்த
உணவுகளை எந்த வரிசையில்
உட்கொள்வது பற்றியும்
தனது "பதார்த்த குண சிந்தாமணி"
என்னும் நூலில் பின்
வருமாறு விளக்குகிறார்.
ஆதி யினிப்புநாடு வாம்பிரநீ
ருப்பொடுசா
காதி யுரைப்பப்பா லந்தத்திற்-
கோதிறுவர்ப்
பாந்ததியுப்
பூறியகா யாதிவகை சேருணவை
மாந்ததிக கத்தையுறு வாய்.
முதலில் இனிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து புளிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து நீருப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து கீரை முதலானவைகளுடன்
காரச் சுவையுடைய உணவுப்
பொருட்களையும், உட்கொண்டு முடிவில்
துவர்ப்பு, தயிர், ஊறுகாய், என்ற
வரிசையில் உணவை உட்கொண்டால்
எப்போதும் சுகத்தையே கொடுக்கும்
என்கிறார்.
சரி இந்த
உணவுகளை எவ்வளவு எடுத்துக்
கொள்வதாம்?, அதனையும் தேரையர்
வரையறுத்துக் கூறியிருக்கிறார்.
முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு
முழுவுணலி
லக்கா ரணமன்ன
சாகாதிகூடி யரையதிற்பால்
சிக்கா வமுதம்பு தக்கிரங்
காலுண்டிச் சேடம்வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும்
வளியுமின்றே
சிறியவர், பெரியவர்,
ஆரோக்கியமானவர், நோயாளி என
பாகுபாடில்லாமல் அனைவரும் முக்கால்
வயிறு அளவுக்கே உணவு எடுத்துக்
கொள்ள வேண்டுமாம். அதாவது சோறு,
பலாகாரம் போன்ற பதார்த்தங்கள்
அரை வயிறும், பால், மோர், நீர்
போன்றவை கால்வயிறு அளவுக்கு
எடுத்துக் கொள்ளக் கூறுகிறார்.
ஒரு போதும்
முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக்
கூடாது என்கிறார்.
அப்படி முழு வயிறு உணவு
உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச்
சீரணிக்கத் தக்க அக்கினியும்
வாயுவும்
சஞ்சரிப்பதற்கு இடமிருக்காது
போய்விடும் என்கிறார்.

Tuesday 18 September 2012

நன்மை தரும் ஏழு வரிகள்

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக
சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக
வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க
முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

Monday 17 September 2012

வாதம் பித்தம் ஐயம் நீங்க

சோற்றுக் கற்றாழை மடல் களில்
பெரிதாக உள்ளதாகப்
பார்த்து ஐந்து மடல்களைக்
கொண்டுவந்து, அவற்றை சீவி அதில் உள்ள
சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள்
ஒரு பலம் போட்டுப் பிசைந்தால்
அது நீர்த்துப் போய் விடுமாம். பின்னர்
அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன்
எலுமிச்சம் பழச்சாறு பத்துத்
துளி விட்டு கலந்து மூன்று நாட்கள்
காலை வேளையில் தொடர்ந்து அருந்த
வேண்டுமாம். அப்படி அருந்தினால்
வயிறு கழியுமாம். அத்துடன் வாதம்,
பித்தம், ஐயம் ஆகிய
மூன்று குற்றங்களும் நீங்கும்
என்கிறார்.

வாதம பித்தம் கபம்்

புளிப்பும் துவர்ப்பும் அதிகரித்தால்
வாதம் அதிகரிக்கும் .
உப்பும் கசப்பும் அதிகரித்தால் பித்தம்
அதிகரிக்கும் .
காரமும் இனிப்பும் அதிகரித்தால் கபம்
அதிகரிக்கும் .

Monday 10 September 2012

சித்தர்கள்

மனையடி சாத்திரமும்
கிணறும்!
மனையில் வீடு அமைக்க அடிக்கல்
நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு,
கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல்
படி வைக்கும் இடம்
வரை அனைத்து விவரங்களும்
சித்தர்களின் பாடல்களில் காணக்
கிடைக்கிறது.முதலில்
கிணற்றை அமைத்த
பின்னரே மனை அமைக்கும்
வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்
என்கின்றனர்.
கிணறு அமைப்பது என்பது அத்தனை
எளிதான காரியமில்லை. பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய
கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும்.
அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய
இலகுவான தீர்வுகளை சித்தர்கள்
அருளிச் சென்றிருக்கின்றனர்.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர்.
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி?
அதற்கும் சித்தர்கள்
தீர்வு சொல்கிறார்கள்...
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள்,
அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த
இடத்தில் கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள்.
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று....
கோடைகாலத்திலும் வற்றாத நீர்
ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி?
அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின்
குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம்.
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு, ஐந்து நாட்கள்
அவதானித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில்
தோண்டினால் வற்றாத நீரூற்றுக்
கிடைக்குமாம்.
சுவாரசியமான
தகவல்கள்தானே!...இப்படியான பல
தகவல்கள் சித்தர்களின் பாடல்களில்
காணக் கிடைக்கிறது.
இவை முறையே சேகரிக்கப்
பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படுதல்
அவசியம்.

Sunday 9 September 2012

தமிழனின் விளையாட்டு

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய
காலம் வரை,
விளையாடப்பட்ட
விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள்
பலர்
தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின்
தொகுப்பாக
இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள்
அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்
வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.
சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு
(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி
கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)
அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்
குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி
நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்
கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது
உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா
சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)
கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்
உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு
கலை விளையாட்டு
1. கும்மி
இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை
உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர்
சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்
உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது
ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி
பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்
காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்
கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக்
கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)
முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்
பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)
எல்லாரும் விளையாடும் விளையாட்டு..
கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்
தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு
சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி
என்ன மூச்சு முட்டுகிறதா..?
போய் தண்ணீர் குடித்துவிட்டு,
உங்கள் கணிப்பொறியில்
cricket, car race விளையாடுங்கள்..
நமது பாரம்பரிய விளையாட்டுகள்
எப்படிப்போனால் நமக்கென்ன..?
அழுகை வருகிறது அன்பர்களே..!


Friday 7 September 2012

தலை முடி

நூறு மில்லி பசும்பாலில் .................
நெல்லி ( நில சக்தி ) 600 கிராம்,
மிளகு ( நீர் சக்தி ) 500 கிராம்,
கடுக்காய் ( தீ சக்தி ) 400 கிராம்,
மஞ்சள் ( வாயி சக்தி ) 300 கிராம்,
வேப்பவித்து ( ஆகாய சக்தி ) 200
கிராம்...............
இந்த ஐந்தையும் அரைத்துப்
பொடியாக்கி ..................
ஒரு டேபிள்ஸ்பூன் அளவில் கலந்து காய்ச்ச
வேண்டும் . இது இளம்சூடாக
இருக்கும்போது தலையில் தேய்த்து,
வெந்நீரில் குளிக்க வேண்டும் . ஷாம்பு,
சிகைக்காய் பயன்படுத்தக்கூடாது .
வாரம் ஒரு முறை இதைப் பின்பற்றினால்,
உடலில் பஞ்சபூத
சக்தி நிறைந்து ஆரோக்கியம் பெருகும் !

Wednesday 5 September 2012

சுவை

அறுசுவை
அறுசுவை எனப்படுவது நா
அறியக்கூடிய ஆறு வகை
சுவைகளாகும். பழங்கால இந்திய
மருத்துவங்களும், ஆயுர்வேதமும்
சுவைகளை ஆறு வகைகளாகப்
பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு,
இனிப்பு, புளிப்பு, கார்ப்பு,
கசப்பு, மற்றும்
உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம்
உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன்
இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல்
வளர்ச்சியில் இச்சுவைகளின்
பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு,
புளிப்பு, உவர்ப்பு, கசப்பு,
கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய
இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும்,
உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப்
பற்றியும் சற்று விரிவாய்
பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில்
இருந்து வரும் இந்திய
மருத்துவங்களாகிய ஆயுர்வேதம்,
சித்த மருத்துவம் போன்றவற்றில்
சுவைகள் ஆறு வகைகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது
இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,
நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய
ஏழு முக்கிய தாதுக்களைக்
கொண்டது என்பதனால் உடலை "யாக்கை"
என்று கூறினர். இதில்
ஏழாவது தாதுவான மூளை சரிவர
இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த
அளவில் இருத்தல் அவசியம். இந்த
ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன்
கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப்
பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு -
கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு -
எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு -
நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச்
செய்கின்றது
அக்கால மருத்துவங்களும்,
உணவு முறைகளும்
இதனை அடிப்படையாகக்
கொண்டே இருந்துவந்தது. உடல்
தாதுவைப் பெருக்க, சமன் செய்ய
அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத்
தயாரித்து வந்தனர். இதனைக்
கொண்டுதான் "உணவே மருந்து,
மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
துவர்ப்புச் சுவை (Astringent)
இது அதிகம் விருப்பு,
வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல்
ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த
சுவை. அதிக வியர்வையைக்
கட்டுப்படுத்துகின்றது.
இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது.
வயிற்றுப்போக்கினை
சரி செய்யவல்லது.
இது அதிகமாயின், இளமையில்
முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும்.
வாய் உலர்ந்து போகச் செய்யும்,
சரளமாக பேசுவதைப் பாதிக்கும்.
வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
வாழைக்காய் , மாதுளை , மாவடு, மஞ்சள் ,
அவரை , அத்திக்காய் போன்ற காய்
வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (sweet)
மனிதர்களால் அதிகம் விரும்பப்படும்
சுவை இதுதான்.
மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும்
உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய
சுவையிது. குழந்தைகளின்
வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
இது அதிகமாயின் உடல் தளர்வு,
சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல்
எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள்
பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
பழவகைகள், உருளைக் கிழங்கு , காரட்
போன்ற கிழங்கு வகைகள், அரிசி ,
கோதுமை போன்ற தானியங்கள் மற்றும்
கரும்பு போன்ற தண்டு வகைத்
தாவரங்களிலும் இனிப்புச்
சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்புச் சுவை (Sour)
உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும்
ஒரு சுவையிது. பசியுணர்வைத்
தூண்டும்.
உணர்வு நரம்புகளை வலுப்பெறச்
செய்கின்றது. இதயத்திற்கும்,
செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
இது அதிகமாயின், தாக
உணர்வினை அதிகரிக்கும். பற்களைப்
பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக்
கொதிப்பு, அரிப்பு போன்ற
தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல்
தளரச் செய்யும்.
எலுமிச்சை , புளிச்ச கீரை, இட்லி ,
தோசை , அரிசி, தக்காளி, புளி ,
மாங்காய், தயிர் , மோர், நார்த்தங்காய்
போன்றவற்றில் அதிகம் உள்ளது.
காரச் சுவை (Pungent)
பசியுணர்வைத்
தோற்றுவிப்பதோடு அல்லாமல்,
செரிமானத்திற்கும் பெரிதும்
உதவுகின்றது. உடல் இளைக்கவும்,
உடலில் உள்ள அதிக்கப்படியான
நீரை வெளியேற்றவும் செய்கின்றது.
இரத்தச் சுத்திகரிப்புச்
செய்கின்றது. தோல்
நோய்களுக்கு நல்லதொரு பலனைத்
தருகின்றது.
அதிகப்படியான காரம், உடல்
எரிச்சலை உண்டுவிக்கும். உடல்
சூட்டை அதிகரித்து,
வியர்வையை அதிகம் சுரக்கச்
செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக
வாய்ப்பு அளிக்கும்.
வெங்காயம், மிளகாய் , இஞ்சி , பூண்டு ,
மிளகு, கடுகு போன்றவற்றில்
அதிகப்படியான
காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்புச் சுவை (Bitter)
அதிகம் வெறுக்கப்படும் சுவையாக
இருந்தாலும், அதிகம் நன்மைப்
பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச்
சுவைகளை அறிய இது பெரிதும்
உதவுகின்றது. சிறந்த நோய்
எதிர்ப்புச் சக்தியாக
செயல்படுகின்றது. தாக உணர்வைக்
கட்டுப்படுத்துகின்றது. உடல்
எரிச்சல், அரிப்புகளில்
இருந்து நிவாரணம் தருகின்றது.
காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச்
சுத்திகரிப்புச் செய்கின்றது.
இது அதிகமாயின், உடலின் நீர்
குறைந்துப் போகச் செய்யும்.
மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற
நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும்.
அடிக்கடி மயக்கம் உண்டாகும்,
உச்சகட்டமாய் சுயநினைவற்ற
நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.
பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய் ,
வெந்தயம், பூண்டு, எள் , வேப்பம்பூ, ஓமம்
போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய்
உள்ளது.
உவர்ப்புச் சுவை (Salt)
தவிர்க்க இயலாத சுவை இது,
அளவோடு இருக்கும்பட்சத்தில்
அனைவராலும் விரும்பப்படும் ஒன்று.
உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது.
மற்றச் சுவைகளைச் சமன்செய்ய
உதவுகின்றது. உணவுச்
செரிமானத்திலும்
பங்கு வகிக்கின்றது.
இது அதிகமாயின் தோல்
தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப்
போகச் செய்யும். தோல்
வியாதிகளையும் தோன்றச்
செய்கின்றது.
உடல்
சூட்டினை அதிகப்படுத்தி சிறுக்
கட்டிகள், பருக்கள் தோன்ற
வழிவகுக்கும்.
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி ,
பூசணிக்காய், சுரைக்காய் ,
பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய்
இருக்கின்றது.