Total Pageviews

Thursday 20 December 2012

தமிழை பற்றி பாரதி

தமிழை பற்றி பாரதி
கூறியது..
1) யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய்,
உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக்
கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ?
சொல்லீர்!
தேமதுரத்
தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
2) யாமறிந்த
புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல்,
இளங்கோ வைப்போல்
பூமிதனில்
யாங்கணுமே பிறந்ததிலை,
உண்மை, வெறும்
புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க்
குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில்
தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
3) பிறநாட்டு நல்லறிஞர்
சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல்
வேண்டும்;
இறவாத புகழுடைய
புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்
வேண்டும்;
மறைவாக
நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில்
வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல்
வேண்டும்.
4) உள்ளத்தில்
உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல்
கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும்
குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின்
சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

அடிப்படை தமிழ் குழந்தைகளுக்கு

'அடிப்படைத் தமிழறிவைக்
குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?'
''எண்களோடு எண்ணங்களை இணைத்துக்
கற்றுக்கொடுங்கள்;
அப்படியே நெஞ்சில் ஒட்டும்.
ஒன்று: வானம் - ஒன்று.
இரண்டு: ஆண், பெண் -
சாதி இரண்டு.
மூன்று: இயல், இசை, நாடகம்-
தமிழ் மூன்று.
நான்கு:
வடக்கிலிருந்து வருவது வாடை,
தெற்கிலிருந்து வீசுவது தென்றல்,
கிழக்கிலிருந்து
தீண்டுவது கொண்டல்,
மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-
தமிழன் காற்றுக்கு வைத்த பெயர்
நான்கு.
ஐந்து: எழுத்து, சொல், பொருள்,
யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.
ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு,
உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-
சுவைகள் ஆறு.
ஏழு: குரல், துத்தம், கைக்கிளை,
உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப்
பண்கள் ஏழு.
எட்டு: நகை, அழுகை, இளிவரல்,
மருட்கை, அச்சம், பெருமிதம்,
உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள்
எட்டு.
ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு,
நாசி இரண்டு, வாய் ஒன்று,
முன்னொன்று, பின்னொன்று-உடலி­
ன் வாசல்கள் ஒன்பது.
இப்படி எண்களுக்குப் பக்கத்தில்
எண்ணங்களைப் பொருத்தித்
தமிழியம் கற்றுக்கொடுக்க
முடியுமா என்று கருதிப்பாருங்கள்
தமிழாசிரியப் பெருமக்களே!''
-அகரமுதலி

Thursday 6 December 2012

சாதனை காது கேளாதவர்க்கு

காது கேளாதவர்களும்
செல்போனை பயன்படுத்துவதற்கான
கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள்
புதுக்கோட்டை மாணவர்கள்...
காது கேளாதவர்களும் இனி செல்போனில்
பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக்
கண்டுபிடித்துள்ளார்கள்,
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள
செந்தூரான் பொறியியல்
கல்லூரி மாணவர்களான சிவனேஷ்,
வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர்.
இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல்
மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்
இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும்
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் படிப்பின்
இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள்
கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம்
மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத்
துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல்,
நம்மைப் போலவே காது கேளாதவர் கள்
பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும்
ரசிக்கமுடியும்.
ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக்
கருவியில் பிரத்யேகமாக
இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான்
இருக்கிறது சங்கதி.
ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப்
பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப்
பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின்
பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன்
செயல்பாடு.
"பொதுவாகவே மூக்கு, தொண்டை,
காது போன்றவை ஒரே நரம்பால்
பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால்,
இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான
பல் இதற்கு உதவி செய்கிறது.
ஹெட்போனில் இருக்கும் நீண்ட
குச்சி போன்ற அமைப்பு பேசும்போது,
தொடர்ந்து பல்லில்
பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள்
கேட்க உதவி செய்கிறது. இந்தத்
தொழில்நுட்பத்தால் பேசுவதைக்
கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க
முடியும்" என்று சிவனேஷ் தங்கள்
கருவியின் செயல்பாட்டைப்
பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும்
கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500
ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.
பேட்டரி மூலம் இயங்கும் இந்தக்
கருவியை எந்த
செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப்
பயன்படுத்த முடியும்.
தற்பொழுது பேடண்ட் வாங்க
முயற்சித்து வருகிறார்கள்.
அது கிடைத்து, தொழிற் சாலையில்
தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான
விலைக்கே வழங்க முடியும்
என்கிறார்கள்.


Wednesday 21 November 2012

கொஞ்சம் சைக்காலஜி

கொஞ்சம் சைக்காலஜி
தெரிஞ்சுக்கலாமா?
1. மொக்கை மேட்டருக்கெல்லாம்....
ஒருத்தன் ரொம்ப,
விழுந்து விழுந்து,
குதிச்சு குதிச்சு
சிரிக்கிறான்னு வைங்க.....அவனோட
அடி மனசுல கேட்ட எண்ணங்கள்
இருப்பதற்கான
வாய்ப்பு நிறையவே இருக்காம்.
2. ஒருத்தர் ரொம்ப
அதிகமா தூங்கராருன்னா .......
அவர் ரொம்ப தனிமையை விரும்பும்
ஆளாக இருக்கணும்,
இல்லைன்னா தனிமையில்
விடப்பட்டவரா இருக்கணுமாம்.
3. எப்போதும் கம்மியா பேசுற
ஆளு.....ஏதாவது ஒரு
விசயத்துக்கு மட்டும்
அதிகமா பேசினால், அந்த
விஷயத்துல இருக்கும் ரகசியம்
எதையோ அவர் மறைக்க
விரும்புராருன்னு அர்த்தமாம்.
4. செமையான சோக
மேட்டருக்கு கூட ஒருத்தருக்கு
அழுகாச்சியே வரலைன்னா,
அவரு மனசளவுல ரொம்ப
வீக்கானவராம்.
5.
சாதரணமா இல்லாம......சாப்பிடும்
போது,
பறக்காவட்டி தனமா ஒருத்தர்
சாப்பிட்டாக்க ,
அவரு ஒரு டென்ஷன் பார்ட்டியாக
இருக்க
வாய்ப்பு ஜாஸ்தியா இருக்காம்.
6. சின்ன சின்ன
விஷயத்துக்கெல்லாம்....
உண்மையிலேயே ஒருத்தர்
அழுதாருன்னா, அவரு ஒரு விவரம்
தெரியாத, இளகிய
மனசு உள்ளவராம்.
(பச்சை மண்ணு.)
7. சப்பை மேட்டருக்கெல்லாம்
தாவி குதிக்கராருன்னு
வச்சுக்கங்க, அவரு காதலில்
விழுந்து கோட்டை கட்டிக்கிட்டு
இருக்கற கொத்தனாராம்.

Tuesday 20 November 2012

தமிழரின் கோவில்

தமிழர்கள் பெரும்பாலோர் ”குலதெய்வ
வழிபாடு” செய்வார்கள். நம்
முன்னோர்களை வழிபடுவதே ”குலதெய்வ
வழிபாடு”.
பண்டை காலத்தில் கோவில்கள் கீழ்காணும்
வகையில் வகைப் படுத்தபட்டுள்ளன.
பெருங்கோயில் - மாடக் கோயில்
குன்றுகள் மேல்
கட்டப்பட்டவை பெருங்கோயில்கள்.
கரக்கோயில்
தேரைப் போன்ற அமைப்புள்ளது.
ஞாழற் கோயில்
நறுஞ்சோலைகளின்
நடுவே யமைந்தது ஞாழற்கோயில்.
இளங்கோயில்
பழமையான கோயில்களுக்கு மாறாகக்
காலத்தால் பிற்பட்ட கோயில்கள்
இளங்கோயில்கள்.
மணிக்கோயில்
மணிபோன்ற விமான அமைப்பைக் கொண்ட
கோயில்.
கொகுடிக் கோயில்
முல்லைக் கொடிகள் படந்த சூழ்நிலையில்
அமைந்தது.
ஆலக்கோயில்
ஆலமரத்தடியில் எழுந்த கோயில்கள்
ஆலக்கோயில்கள்.


பெரிய கோவில்

தஞ்சைப் பெருங்கோவில்: தமிழர்களின்
சாதனை..!
சித்தபெருமான் கருவூரார் அவர்களால்
வடிவமைக்கப்பட்டு சோழப்பேரரசால்
கட்டப்பட்ட தஞ்சைப் பெருங்கோவில்.
உலகின் அதிசயம் என கூறப்படும்
இத்தாலியில் உள்ள "பீசா கோபுரம்"(pisa
tower) மூன்று கட்டமாக 177 வருடங்கள்
கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முதலில்
கட்டும் போது, இதன் கீழ் உள்ள
மண்ணை சோதிக்காமல் (soil test)
ஒரு கட்டிடம் கட்டுவதற்கான
அடிப்படை விசயங்களைக் கூட
கடைப்பிடிக்காமல் கட்டிட
அடித்தளத்தை காத்திரமில்லாமல்
கட்டினர். இதனால் இந்த கட்டிடம்
சாயத்தொடங்கியது... இரண்டாம் தளம்
கட்டும் போது போர் மூண்டதால் இதன்
கட்டுமானம் சிறிது காலம்
நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர்
தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள
மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால்
மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது !
ஒரு காத்திரமில்லாத கட்டுமானத்திற்க
ு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக
அதிசயப்பட்டியலில் இன்றும் உள்ளது !
(AUG 8TH 1173 - 1372)
நம் தஞ்சையில் உள்ள சித்தபெருமான்
கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்ட
ு, சோழப்பேரரசால் கட்டப்பட்ட 216
அடி உயரமான உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12
ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன்
கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன்
( 80,000 கிலோ ) எடை கொண்டது.
உலகையே வியக்க வைக்கும் இந்த 1000
வருடங்களாக்கு மேலாக கம்பீரமாக
நிற்கும் இப்பிரமாண்டான கட்டிடம்
இன்று வரை எந்த தொழில் நுட்பமும்
இல்லாத அந்த காலத்தில்
எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாக
வைத்துள்ளது. இப்படிப்பட்ட கட்டிடம்
உலக அதிசய பட்டியலில் இடம்
பெறாதது வருத்தத்திற்குரியது.
காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?
docid=-5096103596865842301
If you don't have the access 4
google video, try the following
youTube links.
1. http://youtu.be/SnANjdReAlY
2. http://youtu.be/yJomuGsi2fU
3. http://youtu.be/za6nYK4L9ns
4. http://youtu.be/c2a0GcoJAjw
5. http://youtu.be/hkCjoSJpkJ8
watch the full video.
200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில,
கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட
கோவில். இருந்தும் இது உலக
அதிசயங்களில்
இடம்பெறாதது கேள்விக்குரியது
நவீன கட்டிட நிர்மானத் தொழில்நுட்பங்கள
ால் கூட தஞ்சைப் பெரிய கோவிலின்
மகிமையை இன்றுவரை முழுமையாக
விளங்கிக்கொள்ள முடியாதுள்ளது.
சில நேரங்களில் வெளியில் உள்ளதைப்
பற்றி வியப்படையும் நாம், நம்
தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும்
சிறப்பாக உள்ளவற்றைப்
பற்றி மறந்து விடுகின்றோம் !
இந்த தகவலை நண்பர்களுடன்
பகிர்ந்து கொளுங்கள்!
வாழ்க தமிழ்!


Sunday 30 September 2012

மருதகாசி வரிகள்

மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா
மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட
மிருகமடா
அட யாரும் திருந்தலயே இதுக்காக
வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக
வருந்தலயே
நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான்
மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு இந்த
பூமிய புதுசா பண்ணு
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னதான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில்
நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன
ஜென்மம்மடா
இப்ப
புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும்
நல்லப்பொழுது
இப்ப
புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும்
நல்லப்பொழுது
அடியே ஞான தங்கம்
இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதை பார்த்தா பொய்களும் ஓடும்
இரண்டு போட்ட உலகமும் மாறும்
அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில்
வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது
உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம

Thursday 27 September 2012

சித்தர்கள் பகுதியில் இருந்து

சித்தர் இராஜ்யம்நமது முன்னோர்கள்
சுவையினை இனிப்பு, புளிப்பு,
உறைப்பு, துவர்ப்பு, கசப்பு,
உவர்ப்பு என ஆறாக
பிரித்து கூறியிருப்பதை முன்னரே
பார்த்தோம். இத்தகைய சுவையுடைய
உணவுப் பொருட்களை சரியான
விகிதத்தில் எடுத்துக் கொள்வதன்
மூலம் நமக்கு உடலுக்குத் தேவையான
தாதுக்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த
சுவைகளை நமது நாக்கு உணரும்
போது நமது குடலில் உள்ள
சுரப்பிகள் தூண்டப் பட்டு ஜீரணமாகத்
தேவையான நீர்மங்கள் சுரக்கிறது.
நாள்தோறும் உணவில் அறுசுவையுடைய
உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம்
ஆரோக்கியவாழ்வு வாழ முடியும்
என்கிறார் தேரையர். மேலும் இந்த
உணவுகளை எந்த வரிசையில்
உட்கொள்வது பற்றியும்
தனது "பதார்த்த குண சிந்தாமணி"
என்னும் நூலில் பின்
வருமாறு விளக்குகிறார்.
ஆதி யினிப்புநாடு வாம்பிரநீ
ருப்பொடுசா
காதி யுரைப்பப்பா லந்தத்திற்-
கோதிறுவர்ப்
பாந்ததியுப்
பூறியகா யாதிவகை சேருணவை
மாந்ததிக கத்தையுறு வாய்.
முதலில் இனிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து புளிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து நீருப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து கீரை முதலானவைகளுடன்
காரச் சுவையுடைய உணவுப்
பொருட்களையும், உட்கொண்டு முடிவில்
துவர்ப்பு, தயிர், ஊறுகாய், என்ற
வரிசையில் உணவை உட்கொண்டால்
எப்போதும் சுகத்தையே கொடுக்கும்
என்கிறார்.
சரி இந்த
உணவுகளை எவ்வளவு எடுத்துக்
கொள்வதாம்?, அதனையும் தேரையர்
வரையறுத்துக் கூறியிருக்கிறார்.
முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு
முழுவுணலி
லக்கா ரணமன்ன
சாகாதிகூடி யரையதிற்பால்
சிக்கா வமுதம்பு தக்கிரங்
காலுண்டிச் சேடம்வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும்
வளியுமின்றே
சிறியவர், பெரியவர்,
ஆரோக்கியமானவர், நோயாளி என
பாகுபாடில்லாமல் அனைவரும் முக்கால்
வயிறு அளவுக்கே உணவு எடுத்துக்
கொள்ள வேண்டுமாம். அதாவது சோறு,
பலாகாரம் போன்ற பதார்த்தங்கள்
அரை வயிறும், பால், மோர், நீர்
போன்றவை கால்வயிறு அளவுக்கு
எடுத்துக் கொள்ளக் கூறுகிறார்.
ஒரு போதும்
முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக்
கூடாது என்கிறார்.
அப்படி முழு வயிறு உணவு
உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச்
சீரணிக்கத் தக்க அக்கினியும்
வாயுவும்
சஞ்சரிப்பதற்கு இடமிருக்காது
போய்விடும் என்கிறார்.

Thursday 20 September 2012

சித்தர்கள் பகுதியில் இருந்து

சித்தர் இராஜ்யம்நமது முன்னோர்கள்
சுவையினை இனிப்பு, புளிப்பு,
உறைப்பு, துவர்ப்பு, கசப்பு,
உவர்ப்பு என ஆறாக
பிரித்து கூறியிருப்பதை முன்னரே
பார்த்தோம். இத்தகைய சுவையுடைய
உணவுப் பொருட்களை சரியான
விகிதத்தில் எடுத்துக் கொள்வதன்
மூலம் நமக்கு உடலுக்குத் தேவையான
தாதுக்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த
சுவைகளை நமது நாக்கு உணரும்
போது நமது குடலில் உள்ள
சுரப்பிகள் தூண்டப் பட்டு ஜீரணமாகத்
தேவையான நீர்மங்கள் சுரக்கிறது.
நாள்தோறும் உணவில் அறுசுவையுடைய
உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம்
ஆரோக்கியவாழ்வு வாழ முடியும்
என்கிறார் தேரையர். மேலும் இந்த
உணவுகளை எந்த வரிசையில்
உட்கொள்வது பற்றியும்
தனது "பதார்த்த குண சிந்தாமணி"
என்னும் நூலில் பின்
வருமாறு விளக்குகிறார்.
ஆதி யினிப்புநாடு வாம்பிரநீ
ருப்பொடுசா
காதி யுரைப்பப்பா லந்தத்திற்-
கோதிறுவர்ப்
பாந்ததியுப்
பூறியகா யாதிவகை சேருணவை
மாந்ததிக கத்தையுறு வாய்.
முதலில் இனிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து புளிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து நீருப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து கீரை முதலானவைகளுடன்
காரச் சுவையுடைய உணவுப்
பொருட்களையும், உட்கொண்டு முடிவில்
துவர்ப்பு, தயிர், ஊறுகாய், என்ற
வரிசையில் உணவை உட்கொண்டால்
எப்போதும் சுகத்தையே கொடுக்கும்
என்கிறார்.
சரி இந்த
உணவுகளை எவ்வளவு எடுத்துக்
கொள்வதாம்?, அதனையும் தேரையர்
வரையறுத்துக் கூறியிருக்கிறார்.
முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு
முழுவுணலி
லக்கா ரணமன்ன
சாகாதிகூடி யரையதிற்பால்
சிக்கா வமுதம்பு தக்கிரங்
காலுண்டிச் சேடம்வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும்
வளியுமின்றே
சிறியவர், பெரியவர்,
ஆரோக்கியமானவர், நோயாளி என
பாகுபாடில்லாமல் அனைவரும் முக்கால்
வயிறு அளவுக்கே உணவு எடுத்துக்
கொள்ள வேண்டுமாம். அதாவது சோறு,
பலாகாரம் போன்ற பதார்த்தங்கள்
அரை வயிறும், பால், மோர், நீர்
போன்றவை கால்வயிறு அளவுக்கு
எடுத்துக் கொள்ளக் கூறுகிறார்.
ஒரு போதும்
முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக்
கூடாது என்கிறார்.
அப்படி முழு வயிறு உணவு
உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச்
சீரணிக்கத் தக்க அக்கினியும்
வாயுவும்
சஞ்சரிப்பதற்கு இடமிருக்காது
போய்விடும் என்கிறார்.

சித்தர்கள் பகுதியில் இருந்து

நமது முன்னோர்கள்
சுவையினை இனிப்பு, புளிப்பு,
உறைப்பு, துவர்ப்பு, கசப்பு,
உவர்ப்பு என ஆறாக
பிரித்து கூறியிருப்பதை முன்னரே
பார்த்தோம். இத்தகைய சுவையுடைய
உணவுப் பொருட்களை சரியான
விகிதத்தில் எடுத்துக் கொள்வதன்
மூலம் நமக்கு உடலுக்குத் தேவையான
தாதுக்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த
சுவைகளை நமது நாக்கு உணரும்
போது நமது குடலில் உள்ள
சுரப்பிகள் தூண்டப் பட்டு ஜீரணமாகத்
தேவையான நீர்மங்கள் சுரக்கிறது.
நாள்தோறும் உணவில் அறுசுவையுடைய
உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம்
ஆரோக்கியவாழ்வு வாழ முடியும்
என்கிறார் தேரையர். மேலும் இந்த
உணவுகளை எந்த வரிசையில்
உட்கொள்வது பற்றியும்
தனது "பதார்த்த குண சிந்தாமணி"
என்னும் நூலில் பின்
வருமாறு விளக்குகிறார்.
ஆதி யினிப்புநாடு வாம்பிரநீ
ருப்பொடுசா
காதி யுரைப்பப்பா லந்தத்திற்-
கோதிறுவர்ப்
பாந்ததியுப்
பூறியகா யாதிவகை சேருணவை
மாந்ததிக கத்தையுறு வாய்.
முதலில் இனிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து புளிப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து நீருப்புச் சுவையுடைய
உணவுப் பொருட்களையும்,
அடுத்து கீரை முதலானவைகளுடன்
காரச் சுவையுடைய உணவுப்
பொருட்களையும், உட்கொண்டு முடிவில்
துவர்ப்பு, தயிர், ஊறுகாய், என்ற
வரிசையில் உணவை உட்கொண்டால்
எப்போதும் சுகத்தையே கொடுக்கும்
என்கிறார்.
சரி இந்த
உணவுகளை எவ்வளவு எடுத்துக்
கொள்வதாம்?, அதனையும் தேரையர்
வரையறுத்துக் கூறியிருக்கிறார்.
முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு
முழுவுணலி
லக்கா ரணமன்ன
சாகாதிகூடி யரையதிற்பால்
சிக்கா வமுதம்பு தக்கிரங்
காலுண்டிச் சேடம்வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும்
வளியுமின்றே
சிறியவர், பெரியவர்,
ஆரோக்கியமானவர், நோயாளி என
பாகுபாடில்லாமல் அனைவரும் முக்கால்
வயிறு அளவுக்கே உணவு எடுத்துக்
கொள்ள வேண்டுமாம். அதாவது சோறு,
பலாகாரம் போன்ற பதார்த்தங்கள்
அரை வயிறும், பால், மோர், நீர்
போன்றவை கால்வயிறு அளவுக்கு
எடுத்துக் கொள்ளக் கூறுகிறார்.
ஒரு போதும்
முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக்
கூடாது என்கிறார்.
அப்படி முழு வயிறு உணவு
உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச்
சீரணிக்கத் தக்க அக்கினியும்
வாயுவும்
சஞ்சரிப்பதற்கு இடமிருக்காது
போய்விடும் என்கிறார்.

Tuesday 18 September 2012

நன்மை தரும் ஏழு வரிகள்

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக
சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக
வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க
முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

Monday 17 September 2012

வாதம் பித்தம் ஐயம் நீங்க

சோற்றுக் கற்றாழை மடல் களில்
பெரிதாக உள்ளதாகப்
பார்த்து ஐந்து மடல்களைக்
கொண்டுவந்து, அவற்றை சீவி அதில் உள்ள
சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள்
ஒரு பலம் போட்டுப் பிசைந்தால்
அது நீர்த்துப் போய் விடுமாம். பின்னர்
அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன்
எலுமிச்சம் பழச்சாறு பத்துத்
துளி விட்டு கலந்து மூன்று நாட்கள்
காலை வேளையில் தொடர்ந்து அருந்த
வேண்டுமாம். அப்படி அருந்தினால்
வயிறு கழியுமாம். அத்துடன் வாதம்,
பித்தம், ஐயம் ஆகிய
மூன்று குற்றங்களும் நீங்கும்
என்கிறார்.

வாதம பித்தம் கபம்்

புளிப்பும் துவர்ப்பும் அதிகரித்தால்
வாதம் அதிகரிக்கும் .
உப்பும் கசப்பும் அதிகரித்தால் பித்தம்
அதிகரிக்கும் .
காரமும் இனிப்பும் அதிகரித்தால் கபம்
அதிகரிக்கும் .

Monday 10 September 2012

சித்தர்கள்

மனையடி சாத்திரமும்
கிணறும்!
மனையில் வீடு அமைக்க அடிக்கல்
நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு,
கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல்
படி வைக்கும் இடம்
வரை அனைத்து விவரங்களும்
சித்தர்களின் பாடல்களில் காணக்
கிடைக்கிறது.முதலில்
கிணற்றை அமைத்த
பின்னரே மனை அமைக்கும்
வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்
என்கின்றனர்.
கிணறு அமைப்பது என்பது அத்தனை
எளிதான காரியமில்லை. பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய
கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும்.
அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய
இலகுவான தீர்வுகளை சித்தர்கள்
அருளிச் சென்றிருக்கின்றனர்.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர்.
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி?
அதற்கும் சித்தர்கள்
தீர்வு சொல்கிறார்கள்...
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள்,
அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த
இடத்தில் கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள்.
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று....
கோடைகாலத்திலும் வற்றாத நீர்
ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி?
அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின்
குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம்.
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு, ஐந்து நாட்கள்
அவதானித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில்
தோண்டினால் வற்றாத நீரூற்றுக்
கிடைக்குமாம்.
சுவாரசியமான
தகவல்கள்தானே!...இப்படியான பல
தகவல்கள் சித்தர்களின் பாடல்களில்
காணக் கிடைக்கிறது.
இவை முறையே சேகரிக்கப்
பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படுதல்
அவசியம்.