Total Pageviews

Tuesday 26 June 2012

தசாவதாரம்்

ஒவ்வரு மதத்திட்கும் ஒவ்வரு விதமான
கோட்பாடுகள் உண்டு. மதம் எப்பொதும்
மனிதர்களை நல்ல வழிகளில்தான்
செல்லச் சொல்கிறது. மனிதனின் ஆணவமும், அகங்காரமும்தான் அவனை அழிவின்
பாதைக்கு கொண்டு செல்கின்றது. இந்து மதத்தின்படி இறைவன் என்பவன் ஒவ்வரு யுகத்திலும்
ஒவ்வரு வடிவெடுத்து மக்களை காப்பதோடு மக்களுக்கு நன்மை, தீமைகளை புரியவைப்பதோடு  அவனது
அவதாரம் முடிவடைகிறது. இப்படியாக அவரது  9 அவதாரங்கள் முடிவடைந்த  பிறகு தசாவதாரமான கடைசி
அவதாரம்  கல்கி அவதாரமே மிச்சமிருக்கிறது.
இந்த அவதாரங்கள்
உலகத்தோடு ஒப்பிட்டு பார்த்தல் சில
முக்கிய விசையங்கள் தெளிவாகும்.
எதற்காக இறைவன் இத்தகைய அவதாரம்
எடுத்தான் அதற்கு என்ன அவசியம் என்பது.
முதல் அவதாரமாக மச்ச அவதாரம். உலகம்
தோன்றியபொழுது முதல் முதலில்
தோன்றிய உயிரினம் நீரில்தான் என்பதனால்
முதல் முதலாக இறைவன் மச்ச அவதாரம்
என்ற ஒரு அவதாரத்தை எடுத்தார்.
மனிதனின் மூதாதையர் மீன்களாக
கூட இருக்கலாம். டார்வின் கொள்கைப்படி உலகின் முதல்
உயிரினம் கடல் மார்கமாக வந்தது என்பது. அதன் அடிபடையாகதான் முதல்
அவதாரம்
சிரிஷ்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அடுத்து இறைவன் அவதாரமாக
சிரிஷ்டிக்கப்பட்டது கூர்ம அவதாரம்
ஆமை வடிவம். நீர் வழியான உயிரினம்
நிலத்திலும்
வாழும்படி இறைவனே ஒரு அவதாரமாக
காட்சியளிக்கிறார். இதன் படி நீரிலும்
வாழும் நிலத்திலும் வாழும்படியான
ஒரு அவதாரமாக
தன்னை காட்டிகொள்கின்றார் போலும்.
இந்த உலகம்
என்பது கொஞ்சம்  இன்பமும் நிறைய  துன்பமும்
நிறைந்தது. அப்படிப்பட்ட உலகில்
எல்லா விதமான ஜீவராசிகளுக்கும்
இடமுண்டு அப்படியான ஒரு ஜீவன்
நீரிலும், நிலத்திலும் வாழ்வதாக
இல்லாமல் சேற்றிலும், சகதியிலும்
வாழும்படியாக
ஒரு அவதாரத்தை எடுத்ததுதான்
பன்றி அவதாரம் என்னும் வராக அவதாரம்
எனலாம்.
யுகங்கள் மாறும்போது காட்சிகளும்
மாறும் அவதாரங்களும் மாறும்.
இதுவரை எடுத்த அவதாரங்கள்
சாந்தமானது. ஆனால்
அதற்கு பிறகு எடுத்த அவதாரம்
மிகவும் உக்கிரமான நரசிம்ம அவதாரம்.
இந்த அவதாரம்
ஒரு கொலை செய்வதட்காகவே எடுக்கபட்டது. இதட்கு பிறகுதான் மற்றவைகளை கொன்று அதை உணவாக உட்கொண்டு
வாழும் உயிரினங்கள் அவதரித்திருக்க
வேண்டும். உலகம்
பொதுபடையானது என்பதட்காகவே தானே அந்த
அவதாரத்தை எடுத்து மக்களுக்கு உலகம்
தோன்றியதன் விளக்கமாக
காட்சியளிதிருக்க வேண்டும்.
இறைவனின் கணக்குப்படி மனிதன் என்னும்
பிறவி இப்போதுதான் பூமியில் அவதரிகிறது.
எல்லா 5 அறிவு ஜீவராசிகளும் படைக்கப்பட்ட பிறகுதான் மனிதக் குழந்தை இந்த
பூமியில் பிறக்கிறது. இதை வலியுறுத்தவே வாமன அவதாரம்
எடுத்து மூன்றடி நிலம் கேட்டு மனிதனின் குணதிசையங்கள் விளக்குவதாக அவதரித்தார். அப்போதிருந்தே
மண்ணாசை மனிதனுக்கு இருந்திருக்க
வேண்டும் என்பதே இதன் அடிப்படையாக
இருக்கலாம்.
ஒவ்வரு மனிதனின் அழிவும் ஆசையினாலும், கோபத்தினாளும்தான் என்பதை வலியுறுத்தவே
மனிதனின் முதல் அவதாரத்தில் மண்ணாசையை என்னும் ஆசையை உட்பொருளாக அவதாரம்
மேற்கொண்டவன் அடுத்த அவதாரத்தில் கோபத்தால் தன் தாயையே கொலை செய்த பரசுராம
அவதாரம். இதிலிருந்து எப்போதும்
கோபப்படும் மனிதன்  மற்றவர்களால் புறகணிக்கப்படுவான்  அது
கடவுளாக இருந்தாலும்
சரி என்பதை உணர்த்தவே இந்த அவதாரம்
அமைகப்பட்டிருக்கலாம்.
அடுத்த அவதாரத்தில் ராமவதாரம்
எடுத்து தன் மனைவியைத் தவிர எந்த
பெண்ணையும் நினைக்காத உத்தமனாக
அவதாரம் மேட்கொண்டன் அப்போது  தன்
மனைவியை வஞ்சத்தால் அபகரிக்க முயன்ற ராவணனை வதம் செய்து  தன் மனைவியை
மீட்டு வருவதான அவதாரம்
ராமவதாரம். இதில் என்னதான் உத்தமனானாலும் ராமன்  தன்
மனைவியை ஒருமுறையாவது  சந்தேகப்படுவான் காரணம் அவன் மனிதன்
அது மனிதனின்
இயல்பு   என்பதை உணர்த்தவே ராமன்  சீதையை சிதையில்
இறங்கச் செய்திருக்கலாம்.
அடுத்த அவதாரம் பலராம அவதாரம். இதில்
கிருஷ்ணனுக்கு அண்ணனாக
கிருஷ்ணனை காப்பவனகவும் எடுத்த
அவதாரத்தின் நோக்கம் அனைவருக்கும்
உணவளித்து காக்கும்
விவசாயத்தை மையமாக கொண்டமையால்தான்
பலராமன் ஏர் கலப்பையை கையில்
வைத்திருக்கிறார். இந்த அவதாரம்
முழுக்க முழுக்க
விவசாயத்தை உணர்த்துவதாக
இருக்கலாம்.
இதுவரை எடுத்த அவதாரங்கள் ஓவ்வொன்றும்
இந்த பூமியின் படைப்பை ஒத்திருந்தது.
ஒரு மனிதன்
எப்படி வாழவேண்டும் என்பதை எப்படி தன்னை அடைவது என்ற பாடத்தை கற்றுகொடுக்க
நினைத்த இறைவன்
தன்னை கிருஷ்ணனாக அவதரித்து கொண்டு. சிறுவதில் சிறுபிள்ளையாக விளையாடிக்கொண்டு ஒவ்வரு வயதிலும்
ஒரு மனிதன்
எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற
பாடத்தை மக்களுக்கு போதித்ததோடு இறுதி நிலையான முக்தி நிலையை அடைய வேண்டிய
பாடத்தை அர்ஜுனனுக்கு உபதேசிப்பது போல்
உலக மக்கள் அனைவர்க்கும்
உபதேசிக்கிறார். இந்த கீதா உபதேசம்
உணர்ந்தால்
தன்னை அடைவதாகிய  பிறப்பற்ற  முக்தி அடையலாம்
என்ற
பாடத்தை மனிதர்களுக்கு போதிக்கவே எடுக்கப்பட்ட
அவதாரம் இந்த கிருஷ்ணா அவதாரமாக
இருக்கலாம்.
தசாவதாரத்தில் இறுதி அவதாரமாகிய கல்கி அவதாரம்.
இதுவரை எடுத்த அவதாரம்
பூமியின் தொடக்கமும், மனிதர்களின் குணாதிசையங்களும் , மனிதனுக்கான பாடமும்.
ஒன்று துவக்கம் என்றிருந்தால்
அதற்கு முடிவு என்ற ஒன்று கட்டாயம்
உண்டு. அப்படி துவங்கிய பூமியின்
முடிவில் மனிதன்
மட்டுமே மிஞ்சி நிற்பான்.
எப்படி ஒரு உயிரினம்
தோன்றியதோ அப்படியே அது அழியவும்
செய்யும். நீருக்குள்
தோன்றியது நீருக்குள் அழியும்.
நிலத்தில் தோன்றியது நிலத்தில்
அழியும். அப்படி இறைவன் மனிதனாக
அவதரித்த முதல் அவதாரம் மண்ணிற்காக
ஆகையால் மனிதன்
அழிவது அதே மண்ணிற்காக
என்பதை உணர்த்தும் போர்கல வீரனாக
கல்கி அவதாரம் காட்டப்பட்டிருக்கலாம்.











No comments:

Post a Comment