Total Pageviews

Wednesday 20 June 2012

ஓர் எழுத்து ஓரு சொல்

ஓர் எழுத்து ஒரு சொல் !
ஒரு எழுத்து தனியாக
நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த
எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது)
ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.
ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற
ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில்
நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில்
நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள்
ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.
ஒரு எழுத்து சொல்லாகி தருகிற
அர்த்தங்களோடு பார்ப்போம்.
ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு
இந்த அனைத்து ஓர் எழுத்து சொற்களையும்
கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம்
உங்களுக்குத் தெரியும்.இவற்றில்
நொ,து,என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும்
தான் குறில் என்கிற குறைந்த கால
அளவுடைய எழுத்துக்கள்.மற்றவை எல்லாம்
நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள்
என்பதுதான் அந்த ஆச்சிர்யம்.


No comments:

Post a Comment