Total Pageviews

Wednesday 13 June 2012

பூச்சியம்

வானமும் நிலவும் போல, நகமும்
சதையும் போல என்றும் 1930 பாணியில்
உதாரணம் சொல்வதைவிட "டைம்ஸ் ஆஃப்
இந்தியாவும், ஆர்.கே.லட்சுமணும் போல'
என்று சொன்னால்தான் இன்றைக்குப்
பொருத்தமாக இருக்கும்.
ஒரு முறை கணிதம், தத்துவம்
இரண்டிலும் உச்ச கட்டப் புகழ்
பெற்றிருந்த மேதை பெர்ட்ராண்ட்
ரஸ்ஸலை லட்சுமணன்
சென்று சந்தித்தபோது, மணிக்கணக்கில்
பேசினார். அவர், ""எந்த
ஒரு கருத்தையும்
எடுத்து சொல்வதற்குச் சிறுகதைதான்
தகுந்த உத்தி'' என்று ரஸ்ஸல், நிறைய
உதாரணங்களைச் சொல்லி விளக்கினார்.
விடைபெறும்போது, ""இந்தியர்களான
நீங்கள் கண்டுபிடித்தது நத்திங்!
நத்திங்!'' என்றார். லட்சுமணுக்கு முகம்
சிவந்து போயிற்று. ""இல்லை சார்,
அப்படிச் சொல்லி விடமுடியாது.
உதாரணமாக செஸ் ஆட்டம்...''
என்று லட்சுமணன் தட்டுத்
தடுமாறி ஏதோ சமாதானமாகக் கூற
முயன்ற போது, கண்களில்
குறும்பு கொப்பளிக்க, ""இந்தியர்கள்
கண்டுபிடித்தது நத்திங்!
அதாவது நத்திங் என்ற கோட்பாட்டையும்
அதன் வரிவடிவமான பூஜ்யத்தையும்
நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள்.
கணிதத்தின் மாபெரும்
கண்டுபிடிப்பல்லவா அது!'' என்றாராம்
அந்தப் பொல்லாத மனிதர்.

No comments:

Post a Comment