Total Pageviews

Tuesday 19 June 2012

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை;ஆதிபகவன், உலகில் வாழும்உயிர்களுக்கு முதன்மை.விளக்கம்:அகர முதல எழுத்தெல்லாம் - அகரம்முதலாகிய எழுத்துக்கள் எல்லாமேஆதிபகவன் முதற்றே உலகு -ஆதிபகவானே முதலானவன்தனது திருக்குறளின் முதல்அதிகாரத்தை கடவுள் வாழ்த்தாகஆரம்பிக்கிறார் வள்ளுவர், அதில்கடவுளின் நிலையை அடைந்தஆதிபகவானை முதலாகவைத்து தனது குறளை எழுதஆரம்பிக்கிறார். தனது நூலில் சொல்லப்போகும் அகரம் முதலான எழுத்துக்கள்அனைத்திற்கும்ஆதிபகவானே முதன்மையாக இருகிறான்என்று கூறுகிறார்.2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றான் தொழாஅர் எனின்.தன்னை விட அறிவில் மூத்தபெருந்தகையாளரின்முன்னே வணங்கி நிற்கும்பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர்கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்?ஒன்றுமில்லை.3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப்பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில்நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.4. வேண்டுதல்வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.விறுப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித்திகழ்கின்றவரைப்பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம்ஏற்படுவதில்லை.5. இருள்சேர் இருவினையும்சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.இறைவன் என்பதற்குரிய பொருளைப்புரிந்து கொண்டு புகழ் பெறவிரும்புகிறவர்கள்,நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வார்கள்.6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்.மெய், வாய், கண், மூக்கு, செவி எனும்ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தியதூயவனின் உண்மையான ஒழுக்கமுடையநெறியை பின்பற்றி நிற்பவர்களின்புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.7. தனக்குவமை இல்லாதான்தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடையஅடியொற்றி நடப்பவர்களைத் தவிர,மற்றவர்களின் மனக்கவலை தீரவழியேதுமில்லை.8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.அந்தணர் என்பதற்குப் பொருள் 'சான்றோர்'என்பதால், அறக்கடலாகவே விளங்கும்அந்தச் சான்றோரின்அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி,மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக்கடப்பது என்பது எளிதான காரியமல்ல.9. கோளில் பொறியிற்குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை.உடல், கண், காது, மூக்கு, வாய் எனும்ஐம்பொறிகள் இருந்தும், அவைகள்இயங்காவிட்டால் என்னநிலையோ அதே நிலைதான் ஈடற்றஆற்றலிலும் பண்பும்கொண்டவனை வணங்கி நடக்காதவனின்நிலையும் ஆகும்.10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர்நீந்தார்இறைவன் அடிசேரா தார்.வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக்கடக்க முனைவோர், தலையானவனாகஇருப்பவனின்அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்தமுடியாமல் தவிக்க நேரிடும்.


No comments:

Post a Comment