Total Pageviews

Monday 25 February 2013

பெரிய காலாடி

வெண்ணிக் காலாடி
அல்லது பெரிய காலாடி
என்பவர் பூலித்தேவர்
படையின் முக்கியத்
தளபதியாக இருந்தவர்.
வெண்ணிக்காலாடி
தேவேந்திர குல
வேளாளர் சமூகத்தைச்
சேர்ந்தவர்.
போர்
பூலித்தேவரை நேரில்
சென்று எதிர்க்க
முடியாது என்று எண்ணினார்
கான்சாகிப் (மருத
நாயகம்). அதனால்
இரவில் பூலித்தேவரின்
கோட்டையை முற்றுகையிடலாம்
என்று தீர்மானித்து கான்சாகிப்பின்
படைகள், காட்டில்
முகாமிட்டிருந்த
செய்தியை அறிந்த
பெரிய காலாடி சில
வீரர்களுடன்
சென்று அம்முகாமைத்
தாக்கினார்.
அப்போது எதிரி வீரன்
ஒருவன்
மறைந்திருந்து தாக்கியதால்
காயமுற்றார் என்றாலும்
வயிறு கிழிக்கப்பட்டு,
குடல் வெளியே வந்த
நிலையிலும், தான்
தலைப்பாகையாகக்
கட்டியிருந்த
துண்டை எடுத்து,
வெளியே வந்த தன்
குடலை மீண்டும்
வயிற்றுக்குள் தள்ளி, தன்
வயிற்றைத் துண்டால்
கட்டிக்
கொண்டு எதிரிகளுடன்
சண்டையிட்டு அவர்களைத்
தோற்கடித்தார்.
எதிரிகளைத்
தோற்கடித்ததைப்
பூலித்தேவரிடம்
கூறிவிட்டு வீர மரணம்
அடைந்தார். [1]
↑முதல் பத்திக்குச் செல்
சிந்து
தன் தளபதி பெரிய
காலாடி எதிரிகளுடன்
போரிட்டு வீர மரணம்
அடைந்த இடத்தில்,
பிற்காலத்தில்
பூலித்தேவர், வீரக்கல்
(நடுகல்)
ஒன்றை நட்டு வைத்தார்.
அந்த இடம் இன்றும்
இப்பகுதி மக்களால்
‘காலாடி மேடு’
என்று அழைக்கப்படுகிறது.
பூலித் தேவன் சிந்தும்,
காலாடியின்
புகழை பாடுகிறது. [2]
↑முதல் பத்திக்குச் செல்
மேற்கோள்
1. ↑ குங்குமம் வார
இதழ் கட்டுரை, பெரிய
காலாடி
2. ↑
கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா
சூராதி சூரனப்பா..சூழ்ச்சியில்
வல்லவனப்பா
தாயகம்
காத்தே தரணி புகழடைந்தானப்பா
தார்வேந்தன்
பூலி பட்டயம்
பெற்றானப்பா."
பார்துலங்க பூலிமன்னன்
பேர்துலங்க -வெண்ணி
பாய்ந்தோடிச் சண்டைகள்
போட்டானே
பரங்கியர்
தலைகளை வெட்டியே காலாடி
பாங்காய் குவித்திட்டான்
மலைபோலே…
எத்தனை பட்டாளம்
வெட்டினானடா-
வெண்ணியை
எதிர்க்கவும்
ஒரு ஆள்கூட
இல்லையடா
செங்குருதி நனைத்து பூலித்தேவன்
வண்ணச்
சீர்மிகு மேனியெல்லாம்
கொப்பளிக்க…
காலாடி உயிருக்கோர்
காலன் வந்திட்டான்
கால் நொடியில் காற்றாய்
பறந்தானே…
பழிகள் பாவங்கள்
வந்ததென்றெனக்கூறி
பார்வேந்தன்
பூலித்தேவன் கதறியழ
… (பூலித்தேவன் சிந்த

No comments:

Post a Comment