Total Pageviews

Wednesday 16 May 2012

மாறன்

இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர்
ஒரு பாண்டிய மன்னன்
வியட்நாம்
நாட்டை ஆண்டிருக்கிறான் !
அவன்தான் வரலாறு அறிந்த
முதல் வியட்னாமிய மன்னன்.
அவனுடைய பெயர்
ஸ்ரீமாறன் . தமிழில்
இதை திருமாறன்
என்று சொல்லலாம்.
வியட்னாமில்
கண்டுபிடிக்கப்பட்ட மிகப்
பழைய சமஸ்கிருத
கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன்
என்று குறிப்பிடுகிறது .
இந்தக் கல்வெட்டில் ஆட்சி,
ஆண்டு முதலிய விவரங்கள்
கிடைக்கவில்லை .
கல்வெட்டின்
பெரும்பகுதி அழிந்துவிட்டது .
ஆனால் எழுத்து அமைப்பின்
அடிப்படையில் இது கி. பி .
இரண்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததாக அறிஞர்கள்
கருதுகின்றனர் .
வியட்னாமில் வோ -சான்
என்னும் இடத்தில்
ஒரு பாறையின்
இரண்டு பக்கங்களில் ( VO–
CHANH ROCK INSCRIPTION)
இது செதுக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமாறன் என்ற அரசனின்
குடும்பம் செய்த
நன்கொடையை ( தானத்தை)
கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பாறையின் ஒரு பக்கத்தில் 15
வரிகளும் மறு பக்கத்தில்
ஏழு வரிகளும் உள்ளன .
ஆனால் ஒன்பது வரிகள் தவிர
மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன.
சமஸ்கிருத பாட்டுப்
பகுதி வசந்த
திலகா அணியிலும் ஏனைய
வரிகள் உரைநடையிலும்
உள்ளன . கிடைத்த
வரிகளிலும் கூட சில
சொற்கள் அழிந்துவிட்டன.
கல்வெட்டின் சில வரிகள் :-
. . . . . ... ப்ரஜானாம்
கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . .
வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . ..
ன . . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம்
ஸ்வகன . . .. ..ச . . . . . . . . . .. ..
இந்தக் கல்வெட்டில் ,
தனக்குச் சொந்தமான
வெள்ளி , தங்கம் , தானியக்
குவியல் மற்றுமுள்ள
அசையும் ,
அசையா சொத்து (ஸ்தாவர ,
ஜங்கம் ) வகைகள்
அனைத்தையும்
தமக்கு நெருங்கிய
மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக
மன்னன் அறிவிக்கிறான்.
எதிர்கால மன்னர்கள்
இதை மதித்து நடக்க
வேண்டும் என்றும்
ஆணை பிறப்பிக்கிறான்.
இது வீரனுக்கு தெரியட்டும் . . .. . . .. . . .. .. . .என்று பாதியில்
முடுகிறது கல்வெட்டு.
இதில் முக்கியமான சொற்கள்
“ ஸ்ரீமாற ராஜகுல ”
என்பதாகும் . இந்த
திருமாறனைக்
குறித்து மிகவும் குறைவான
தகவலே கிடைத்துள்ளது .
ஆனால் வியட்னாம்,
லாவோஸ் ,
கம்போடியா ஆகிய
நாடுகளில் 1300
ஆண்டுகளுக்கு நிலவிய
இந்து சாம்ராஜ்யத்தின் முதல்
மன்னன் இவன்
என்பதை சீனர்களின்
வரலாறும்
உறுதி செய்கிகிறது .
திருமாறனை சீன
வரலாற்று ஆசிரியர்கள்
கியு லியன் (KIU LIEN )
என்றும் இவன் ஹான்
வம்சம் (HAN DYNASTY )
சீனாவை ண்டபொழுது அவர்களின்
கட்டுபாட்டில் இருந்த ‘ சம்பா’
தேசத்தில்
புரட்சி செய்து ஆட்சியைக்
கைபற்றியதாகவும்
எழுதிவைத்துள்ளனர் .
சம்பா (CHAMPA )
என்பது தற்போதைய
வியட்னாமின்
ஒரு பகுதியாகும் . மன்னனின்
குடும்பப் பெயர் கியு (KIU )
என்றும் மன்னனின் பெயர்
லியன் ( LIEN) என்றும்
எழுதிவைத்துள்ளனர் . இவன்
காங்ட்சாவோவின் (KONG
TSAO ) புதல்வன் என்றும்
தெரிகிறது .
தென்கிழக்கு ஆசியா முழுதும்
முதல்முதலாக
தொல்பொருள்
ஆராயச்சி நடத்திய
பிரெஞ்சுக்காரர்கள்
ஸ்ரீமாறனும் ,
கியு லியானும் ஒருவர்தான்
என்று உறுதிசெய்துள்ளனர்.
கி. பி . 137 ல்
சீனர்களை எதிர்த்துக் கலகம்
துவங்கியது . ஆனால்
கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன்
ஆட்சி ஏற்பட்டது .
ஸ்ரீ மாறனுக்குப் பின்னர்
ஆண்ட மன்னர்களில்
பெயர்கள் எல்லாம்
சீனமொழி வாயிலாக
‘ உருமாறி ’ கிடைப்பதால்
அவர்களின் உண்மையான
பெயர்கள் தெரியவில்லை.
எல்லா மன்னர்களின்
பெயர்களும் பான் (FAN)
என்று முடிவதால்
இதை ‘வர்மன் ”
என்று முடிவுசெய்துள்ளனர் .
ஏனெனில்
இடையிடையேயும் ஆறாம்
நூற்றாண்டுகளுக்குப்
பின்னரும் மன்னர்களின்
பெயர்களுக்குப் பின்னால்
‘ வர்மன் ’ என்ற பெயர்
தெளிவாக உள்ளது . இதில்
வியப்பு என்னவென்றால்
தமிழ்நாட்டில் கிடைத்த
செப்புப் பட்டயங்களிலும்
பாண்டியன் வம்சாவளியில்
ஸ்ரீமாறன் , வர்மன் என்ற
இரண்டு பெயர்களும்
கிடைக்கின்றன .
இந்தோனேசியாவுக்குச்
சொந்தமான
போர்னியோ தீவின் அடர்ந்த
காட்டிற்குள் மூலவர்மன்
என்ற மன்னனின்
சமஸ்கிருதக்
கல்வெட்டு கிடைத்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில்
800 க்கும் அதிகமான
சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள்
கிடைத்துள்ளன .
வியட்னாமியக்
கல்வெட்டு ‘பாண்டிய’ என்ற
பெயரைக் குறிப்பிடவில்லை .
ஆயினும் ஸ்ரீமாறன் ( ஸ்ரீ =
திரு ) என்பவன்
பாண்டியனே என்பதற்குப் பல
சான்றுகள் உள்ளன:-
( 1 ) இடைச்சங்கத்தின்
கடைசி மன்னன் பெயர்
திருமாறன் . அவன் அரசாண்ட
காலத்தில் கடல்
பொங்கி தென்
மதுரையை அழித்ததால்
அவன் தற்போதைய
மதுரையில்
கடைச்சங்கத்தை அமைத்ததாக
உரையாசிரியர்கள்
எழுதி வைத்துள்ளனர். இந்த
மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில்
ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.
( 2 ) வேள்விக்குடி செப்பேடும்
திருமாறன் என்ற மன்னனைக்
குறிப்பிடுகிறது .
அதே செப்பேட்டில்
மாறவர்மன்
( அவனி சூளாமணி ),
ஸ்ரீமாறவர்மன் ( அரிகேசரி)
ஸ்ரீ மாறன் (ராஜசிம்மன் )
என்ற பெயர்களையும்
காணலாம் . பாண்டிய வம்ச
மன்னர்கள் மாறன், சடையன்
என்ற
பெயர்களை மாறி மாறிப்
பயன்படுத்துவர் .
( 3 )
தொல்காப்பியத்தை அரங்கேற்றிய
இடைச்சங்க கால மன்னன்
நிலந்தரு திருவில் பாண்டியன்
என்று பனம்பாரனாரின்
பாயிரம் கூறுகிறது. பல
நாடுகளை வென்று தந்ததால்
“ நிலந்தரு ”
“ திரு பாண்டியன் ” ( ஸ்ரீமாறன் )
என்று பெயர்
ஏற்பட்டிருக்கலாம் .
( 4 ) சங்க இலக்கியப்
பாடல்களிலும்
அடிக்குறிப்பிலும்
குறைந்தது பத்து முறை ‘மாறன் ’
என்ற மன்னர்கள்
குறிப்பிடப்படுகின்றனர் .
இவர்களில்
குறிப்பிடத்தக்கவர்
இடைச்சங்ககால மன்னன்
முடித்திருமாறன் .
நற்றிணை 105 , 228 ஆகிய 2
பாடல்களை இயற்றியவன் .
( 5 )
தென்கிழக்கு ஆசியா முழுவதும்
அகத்திய முனிவரின்
சிலைகள் கிடைக்கின்றன.
அகத்தியர் “ கடலைக் குடித்த”
கதைகளும்
பிரபலமாகியிருக்கின்றன .
முதல்முதலில் கடலைக்
கடந்து ஆட்சி நிறுவியதை “கடலைக்
குடித்தார் ”
என்று பெருமையாக
உயர்வு நவிற்சியாக
குறிப்பிடுகின்றனர் .
வேள்விக்குடி செப்பேடு இந்தக்
கதைகளைக்
குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின்
“ குல குரு” என்றும்
கூறுகிறது .
( 6 ) இந்திய
இலக்கியகர்த்தாக்களின்
முக்கிய இடத்தை வகிக்கும்
மாபெரும் வடமொழிக்
கவிஞன் காளிதாசன்,
பாண்டியர்களையும்
அகத்தியரையும்
தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான்
( ரகு வம்சம் 6 – 61)
ஆசியாவில் 800 க்கும்
அதிகமான சமஸ்கிருதக்
கல்வெட்டுகள்
கிடைத்துள்ளன .
( 7 ) புறநானூற்றுப் பாடல்
( புறம் 182 ) பாடிய
ஒரு பாண்டிய மன்னன் பெயர்
“ கடலுள் மாய்ந்த”
இளம்பெருவழுதி . இவன்
வெளிநாடு செல்லும்போதோ,
வெளிநாடுகளை வென்று திரும்பும்
போதோ கடலில்
மூழ்கி இறந்திருக்கலாம் .
( 8 ) டாலமி , பெரிப்ளூஸ் என்ற
யாத்ரீகர்கள் கி.பி . முதல்
இரண்டு நூற்றாண்டுகளில்
நடந்த தென் இந்திய கடல்
வாணிபத்தைக்
குறிப்பிடுகின்றனர் .
( 9 ) தென் இந்தியாவை கி.மு.
இரண்டாம்
நூற்றாண்டு முதல் 400
ஆண்டுகளுக்கு ஆண்ட
சாத்வா இன மன்னர்கள் தமிழ்
மொழியில் வெளியிட்ட
நாணயங்களில் ‘கப்பல்’ படம்
உள்ளது .
( 10) தமிழ் நாடு முழுவதும்
கிடைக்கும் ரோமானிய
நாணயங்களும் தமிழர்களின்
கடல்
வாணிபத்தை உறுதி செய்கின்றன.
( 11) ‘மிலிந்த பன்ன’ என்ற
கி. மு. இரண்டாம்
நூற்றாண்டு பெளத்த மத
நூல் வங்கம் ,
சோழமண்டலம் , குஜராத்,
சீனம் ,
எகிப்து இடையே நிலவிய
வணிகத்தைக்
குறிப்பிடுகிறது .
( 12) மலேசியாவில் தமிழ்
கல்வெட்டு இருக்கிறது.
தாய்லாந்தில்
தமிழ்நாட்டு நாணயங்கள்
கிடைத்துள்ளன .
மேற்கூரிய சான்றுகள்
அனைத்தும் தமிழர்களின்
கடல் பயண வன்மையைக்
காட்டுகின்றன. அகஸ்டஸ்
சீசரின் அவையில் பாண்டிய
மன்னனின் தூதர்
இருந்ததையும் ரோமானிய
ஆசிரியர்கள்
குறிப்பிடுகின்றன .
ரோம் (இத்தாலி )
வரை சென்ற தமிழனுக்கு,
தென்கிழக்கு ஆசியாவிலுள்ள
வியட்னாமுக்குச்
செல்வது எளிது தானே !
Reference :
( 1 ) R .C . MAJUMDAR-
CHAMPA : HISTORY &
CULTURE OF AN INDIAN
COLONIAL KINGDOM IN
THE FAR EAST GIAN
PUBLISHING HOUSE DELHI –
REPRINT 1985.

No comments:

Post a Comment