Total Pageviews

Monday 7 May 2012

பறை

வாழ்வியல் கூறுகளுடன் பறை
ஒரு மன்னன்
எதிர்நாட்டுக்கு சென்று போர்
புரியும் முன் அங்குள்ள போர்
புரியவியலாத
மக்களை வெளியேர வேண்ட, [1]
பெருகிவரும் புனலை அடைக்க,
உழவர் மக்களை அழைக்க,
போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட,
வெற்றி தோல்வியை அறிவிக்க,
வயல்களில்
உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க,
விதைக்க,
அறுவடை செய்ய,
காடுகளில்
விலங்குகளை விரட்ட,
மன்னரின்
செய்திகளை மக்களுக்குத்
தெரிவிக்க,
இயற்கை வழிபாட்டில்,
கூத்துகளில்,
விழாக்களில்,
இறப்பில்
எனப் பல்வேறு வாழ்வியல்
கூறுகளுடன் 'பறை'
இணைந்து இயங்கியுள்ளதற்கான
ஆதாரங்கள் உள்ளன.
"பறை என்பது ஓடும்
இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர்
அளவோடு சீரோடு, ஒத்த
அழகோடு நடக்க,
இசைக்கு நடை கற்பிக்கும் கருவி'
என முனைவர்
வளர்மதி தன்னுடைய "பறை'
ஆய்வு நூலில் விளக்குகிறார்.
[2]
பறை இசைக் குழுக்கள்
குறிஞ்சி மலர் (இசைக் குழு)
புத்தர் கலைக் குழு
பறையின் வகைகள்
பறையின் இசையும், வடிவமும்
நுணுக்கமாக வேறுபடுகிறது.
அவற்றில்
முக்கியமானவை வருமாறு;- [3]
அரிப்பறை - அரித்தெழும்
ஓசையையுடைய பறை.
அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக
சிந்தாமணி . 2688).
ஆறெறிப் பறை -
வழிப்பறி செய்வோர் கொட்டும்
பறை. திருக்குறள் - 1076
ஆறெறிபறையுஞ் சூறைச்
சின்னமும் (சிலப்பதிகாரம் .
12, 40).
உவகைப்பறை -
மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை.
(திவாகர நிகண்டு)
சாப்பறை - சாவில்
அடிக்கப்படும் பறை. ( திவாகர
நிகண்டு)
சாக்காட்டுப் பறை - இறுதிச்
சடங்கின் போது இசைக்கும்
பறை.
வெட்டியான்பறை - சில
விசேடகாலங்களிற் கொட்டும்
பறை.
நெய்தற்பறை - நெய்தல்
நிலத்துக்குரிய
பறை. திருக்குறள்-1115
பம்பை - நெய்தனிலங்கட்குரிய
பறை. ( திவாகர நிகண்டு ).
தழங்குரற் பம்பையிற்
சாற்றி ( சீவக சிந்தாமணி .40).
மீன்கோட்பறை - நெய்தனிலப்
பறை. (இறை. 1, பக். 17.)
மருதநிலப்பறை -
மருதநிலத்திற்குரிய பறை.
கல்லவடம் - ஒரு வகைப்பறை
கல்லவடமிட்டுத்
திசைதொழு தாடியும்
(தேவாரம். 576, 6).
குரவைப்பறை -
குறிஞ்சிநிலத்துக்குரியது.
குறிஞ்சிப்பறை =
குறிஞ்சிநிலத்துக்குரிய
தொண்டகப் பறை.
தடறு - தொண்டகப் பறை. (அக.
நி.)
குறும்பறை -
குறும்பறை யசைஇ
(புறநானூறு . 67, 9)
கொடுகொட்டி -
ஒரு வகைப்பறை
கொடுகொட்டி யாடலும்
(சிலப்பதிகாரம் . 6, 43),
குடமுழவங்
கொடு கொட்டி குழலு மோங்க
(தேவாரம். 225, 2).
கோட்பறை - செய்திகளை நகரத்
தார்க்குத் தெரிவிக்கும் பறை.
தமுக்கு - செய்தி தெரிவிக்க
முழக்கும் ஒருகட் பறை.
நிசாளம் - ஒருகட் பறை. நிசாளந்
துடுமை (சிலப். 3, 27, உரை).
சூசிகம் - ஒருவகைப் பறை.
தகுதியெனக் கூறும் நெறி.
தக்கை -
அகப்புறமுழவு மூன்றனுள்
ஒன்றாகிய ஒருவகைப் பறை.
(பிங்கல நிகண்டு );
(சிலப்பதிகாரம் . 3, 26, உரை.)
தடாரி - பம்பையென்னும் பறை.
(பிங்கல நிகண்டு )
பறைத்தப்பட்டை, தண்ணம்,
தம்பட்டம், திடும், திண்டிமம்,
நாவாய்ப்பறை,
திமிலை (சிலப்பதிகாரம் . 3, 27,
உரை)
தலைப்பறை -
யானை முதலியவற்றின்
முன்னே கொட்டும் பறை.
படலை - வாயகன்ற பறை.
(சூடாமணி நிகண்டு )
பண்டாரமேளம் - அரச
விளம்பரங் குறிக்கும் பறை.
பன்றிப்பறை -
காட்டுப்பன்றிகளை வெருட்டக்
கொட்டும் பறை. ( பிங்கல
நிகண்டு)
முரசம், வெருப்பறை - போர்ப்
பறைகள்.
முரச மிடைப்புலத் திரங்க
வாரமர் மயங்கிய ஞாட்பில்
(புறநானூறு . 288).
பூசற்றண்ணுமை -
பகைவருடன் போர்புரிதற்காக,
வீரரை அழைத்தற்குக்
கொட்டும் பறை. ( நன்னூல்)
முருகியம் - குறிஞ்சிநிலத்தில்
முருகனுக்குரிய வெறியாட்டுப்
பறை. ( தொல்காப்பியம். பொ. 18,
உரை.)
வெறியாட்டுப்பறை -
குறிஞ்சிநிலப் பறை.
வீராணம் - ஒருவகைப் பெரிய
பறை.
வீராணம்
வெற்றிமுரசு ( திருப்புகழ்.
264).
பஞ்சமாசத்தம் -
சேகண்டி கைத்தாளம் காளம்
என்றும்
தத்தளி மத்தளி கரடிகை தாளம்
காகளம் என்றும் இருவித மாகச்
சொல்லும் ஐவகைப் பறை.

No comments:

Post a Comment