Total Pageviews

Monday 7 May 2012

பிரசவம்

பிரசவம் என்பது கர்ப்பமுற்ற பெண்;
தன்
வயிற்றுக்குள்ளேயே பத்துமாதங்கள்
பொத்தி வைத்து பாதுகாத்த
குழந்தையை இப்பூவுலகில்
பிரசவித்தல் எனப் பொருள்படும். சில
சந்தற்பங்களில் ஒரு தாய்
ஒன்றிற்கு பேற்பட்ட
குழந்தைகளை பிரசவிப்பதும் உண்டு.
ஒரு தாய் தன் யோனிவழியாக
குழந்தையை பிரசவித்தல்
என்பது மிகவும் வேதனைகளும்
சோதனைகளும் நிறைந்த
நிகழ்வாகும். "அழுதாலும்
பிள்ளை அவளே பெற வேண்டும்"
என்பது பழமொழி.
தற்பொழுது வைத்தியசாலைகளில்
நவீன வசதிகள் இருப்பதனால்
பிரசவத்தின் போது ஏற்படுகின்ற
ஆபத்துக்கள் குறைந்துள்ளன.
சாதாரணமாக யோனிவழிப் பிரசவம்
(normal Vaginal Delivery)
என்பது கருப்பைச் சுருக்கத்துடன்
(Uterine Contraction) கருப்பைக்
கழுத்து திறக்கப்பட்டு (Cervical
dilatation) குழந்தை வெளியே வரும்
சாதாரண முறையாகும். பிரசவ
குத்து வந்தவுடன் பிரசவ
அறைக்குள் கற்பிணியை கூட்டிச்
சென்று வைத்தியர், தாதிகளின்
உதவியுடன் பிள்ளையை பிறக்க
வைப்பது என்பதாகும்.
சில கர்ப்பவதிகளுக்கு பிரசவ குத்து
ஆரம்பமாகியும் பிள்ளை பிறப்பதில்
தாமதம் ஏற்படுகிகின்றது.
சிலருக்கு பிரசவ அறிகுறிகள்
தென்பட்ட போதிலும் பிரசவ குத்து
குறைவாக இருக்கும்.
அப்போது பிரசவலி (Oxytocin)
எனப்படுகின்ற ஓமோன்
வகை மருந்தை ஊசி மூலம்
ஏற்றி பிரசவ குத்தை
உண்டு பண்ணி (Induced Labour)
குழந்தையைப் பிறக்க செய்கிறார்கள்.
பிரசவ வலி எப்போது எடுக்கும்
என்பதை யாராலும்
முன்கூட்டியே சொல்ல முடியாது.
அதிகமாக வலி எடுத்தால் சில
மருத்துவமனைகளில்
கர்ப்பிணிகளை குளிப்பாட்டுவர்.
இளஞ்சூடான நீரில் குளித்தால்
ஆரம்பகால பிரசவ
வேதனையை சற்று தணிக்கும்
என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.
தாங்க முடியாத
வலி ஏற்படும்போது சில குறிப்பிட்ட
வலி நிவாரணிகளை மருத்துவர்
தருவார். பேறு காலத்தில் ஏற்படும்
வேதனையை நினைத்து கவலைப்படு
வலி அதிகரிக்கும். எனவே,
வலியைக் குறைக்க மூச்சுப்
பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
சுவாசிக்கும்போது மார்பகச்சுவர்
விரிவடைந்து, உதரவி தானம்
அதிகளவு கீழ் இறங்குவதுதான்
முழுமையான சுவாசம். நீங்கள்
சரியான வழியில் சுவாசித்தால்
குழந்தைப்பேற்றின்போது மிகச்சுலபம
குழந்தை வெளித்தள்ளப்படும்.
சாதாரணமாக கருவுற்ற
பெண்ணுக்கு 280 நாட்களின்
முடிவில் குழந்தை பெறுவதற்கான
குத்து ஏற்படலாம்.
இது இரு வாரங்கள் முன்னால்
அல்லது பின்னால் நிகழ்வதும்
சாதாரணமானது. கருவுற்ற பின்
கருப்பை விரிவடையும்
போது தாயானவள்
ஒரு சிறு அசௌகரியத்தை உணரக்
கூடும். மேலும் கருப்பை விரிய
விரிய அங்கே காணப்படும் நரம்புகள்
முறுக்கப்பட்டு அழுத்தப்படுவதால்
வயிற்று நோவு சற்று அதிகமாக
நிகழக் கூடும்.
கர்ப்பகாலம் 35 வாரங்களை (245-
நாட்கள்) அண்மிக்கும்
போது (கர்ப்பகாலம், கடைசி முதல்
மாதவிடாய்த்
திகதியிலிருந்து கணிக்கப்படும்)
விட்டு விட்டு ஏற்படும்
“பிரக்ஸ்ரஸன் கிரிக்“ எனப்படும்
குத்துவலி எழும்பும். இவ்வாறான
நோக்கள் பல காணப்படும்
போது எவ்வாறு உண்மையான
பிரசவ
வலியை உணர்வது என்று நீங்கள்
கேட்கலாம். பிரசவ வலியின்
போது கடுமையான கருப்பைச்
சுருக்கத்துடன்
வேதனை அதிகரித்துச் செல்வதுடன்
இரு குத்து வலிகளுக்கிடையிலான
நேர இடைவெளி (The Interval
between the contraction)
குறைந்து செல்லும்.
உதாரணமாக
ஒவ்வொரு அரை மணிக்கு ஒரு தடவ
வலி பின்னர்
இருபது நிமிடங்களுக்கு ஒரு தடவைய
பதினைந்து தடவைகளுக்கு ஒரு முற
ஏற்பட்டு பிரசவகுத்ததாக மாறும்
போது ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்
மூன்று தடவைகள் ‘குத்து’ எழும்பல்
நிகழும்.சாதாரணமாக பிரசவ
வலி எழும்பும் போது பன்னீர் குடம்
உடைநது திரவம் வெளியேறும்
போது தாயானவள் உடனடியாக
பிரசவ
விடுதிக்கு அல்லது பிரசவமனைக்கு
வேண்டும்.
அங்கே மருத்துவர் பிரசவ
நிலையை அளவிட்டு அதற்கேற்ப
நடவடிக்கைகள் மேற்கொள்வார்.
பிரசவம் ஆரம்ப நிலையிலிருக்கும்
போது இனீமா கொடுப்பதன் மூலம்
குடலிலிருந்து மலம் அகற்றப்படும்
(இல்லாவிட்டால் குழந்தை பிறக்கும்
போது தாயின் மலமும்
வெளியேறி குழப்பத்தை ஏற்படுத்தி வி
இவ்வாறு சுத்தம் செய்த பின் பன்னீர்
குடம் உடைக்கப்படும்.
இதன் போது வெளியேறும்
அம்னியன் பாய்பொருளின் நிறம்
அவதானிக்கப்படும். பெரும்பாலும்
அம்னியன் பாய்பொருள் நிறமற்றதாக
அல்லது மெல்லிய வைக்கோல்
நிறமுடையதாக இருக்கும்
(உண்மையில் அம்னியன்
பாய்பொருள்
என்பது மென்சவ்வுகளின்
சுரப்புக்களையும் குழந்தை கழித்த
சிறுநீரையும் கொண்ட திரவமாகும்)
பின்னர் பிரசவத்தை விரைவுபடுத்த
சின்ரோசினொன் என்ற ஒக்சிரோசின்
ஒமோன் ஊசி மூலம் ஏற்றப்படும்.
தொடர்ந்து குழந்தையின் இதயத்
துடிப்பு அவதானிக்கப்படும்.
குழந்தையின் இதயத் துடிப்பானது
“பனாட்” என்கின்ற
உடலொலிபெருக்கி மூலமாகவோ அ
மூலம் வரைபாகவோ (CTG)
பெற்றுக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்
கருப்பைக் கழுத்து விரிவை (Cervical
dilatation) அளவிட்டுக்
கொண்டிருப்பார். கருப்பைச் சுருக்கம்
குழந்தையின் இதயத்துடிப்பு /
தாயின் நாடித்துடிப்பு
குருதியமுக்கம் என்பன
தொடர்ந்து அவதானிக்கப்பட்டுக்
கொண்டிருக்கும். பிரசவவலி உச்சக்
கட்டத்தை அடையும்
போது வலியைச் சற்றுக்
குறைப்பதற்காக பெத்தடீன் போன்ற
வலி நிவாரணிகள்
தாய்க்கு ஏற்றப்படும்.
சாதாரணமாக பிரசவ
காலமானது 12-18
மணித்தியாலங்கள் வரை நீடிக்கும்.
இக்காலப் பகுதியில் தாய் உணவு,
நீராகாரம் எதுவும்மின்றி (Fasting)
வைக்கப்படுவார். குழந்தையைப்
பெறும் நோவுடன் இருக்கும்
தாயை பட்டினி போடும் கல்
நெஞ்சக்காரர்களா மருத்துவர்கள் என
நீங்கள் நினைக்கலாம். அதற்கும்
காரணம் உண்டு. பிரசவத்தில் ஏதும்
சிக்கல் நிகழ்ந்து அறுவைச்
சிகிச்சை ஏதாவது செய்யவேண்டி ஏற்ப
அதற்கான தயார் நிலையே இந்த
Fasting பட்டினி நிலை.
இதன்போது ஊசி வழியாகத்
தாய்க்கு தேவையான நீராகாரம்
சென்று கொண்டிருக்கும்.
குழந்தையின்
இதயத்துடிப்பு குறையும் பட்சத்தில்
(foetal distress)
அல்லது குழந்தையின்
அம்னியன்பாய் பொருளினுள் மலம்
கழிக்கும் பட்சத்தில் அல்லது நீண்ட
நேரமாகியும்
குழந்தை பெறமுடியாத
சந்தர்ப்பத்தில் (Prolong Labour)
சிசேரியன் அறுவைச் சிகிச்சை
தேவைப்படலாம்.
குழந்தை பிறப்பதற்கு அண்மித்த
நிலையில் குழந்தையின்
தலை வெளியே வர முயற்சிக்கும்
இதன் போது வலி உச்ச
நிலையை அடையும். குழந்தையின்
தலை இலகுவாக
வெளியே வருவதற்காகவும் தாயின்
யோனியின் வழியில் கிழிவுகள்
ஏற்படாதிருக்கவும்
எபிசியோட்டமி (Episiotomy) என்ற
சிறு வெட்டு ஒன்று வெட்டப்படும்.
தொடர்ந்து தலை வேகமாக
வந்து மோதுவதைத் தடுக்க
கையால் அணை கொடுக்கப்படும்.
தலை வெளியே வந்ததும் அந்த
நேரம் குழந்தை பெறப்படும்
நேரமாகக் குறிக்கப்படும். (உங்கள்
சாதகம், கிரகநிலை, செவ்வாய்
தோஷம் எனப்படும் இந்த
வேளைகளில் சோதிடர்களால்
கணிக்கப்படும்.)
தலையை தொடர்நது தோள்களும்
பின்னர் முழுக் குழந்தையும்
வெளியே இழுத்தெடுக்கப்படும்.
குழந்தை பிறந்தவுடன் தொப்பிள்
நாண் கட்டப்பட்டு சூல்வித்தகத்தில்
இருந்து குழந்தை பிரிக்கப்பட்டு சுத்தப்
குழந்தை பிறந்தவுடன் வீரிட்டு அழ
வேண்டும். இதுவே குழந்தையின்
சுவாச தூண்டல்.
அவ்வாறு குழந்தை அழாவிட்டால்
நாம் அதனை தூண்ட
வேண்டி ஏற்படும்.
அப்பாடா குழந்தை பிறந்துவிட்டது என்
முடியாது. அதன் பிறகும் திக் திக்
நிமிடங்கள்
தொடர்ந்து கொண்டிருக்கும்.
என்ன என்று கேட்கிறீர்களா?
சூல்வித்தகம் முழுமையாக
வெளியேறும் வரை பிரசவம்
முடிந்துவிட்டதாக கூற முடியாது.
பொதுவாக
குழந்தையை தொடர்ந்து சூல்வித்தகம
வெளியேறிவிடும். ஆனாலும்
சிலவேளைகளில்
கருப்பையை விட்டு வெளியேற
மாட்டேன் என்று நீண்டநேரம்
அடம்பிடிக்கும்,
சூல்லித்தகத்தை கருப்பையின்
உள்ளே கைவிட்டு மருத்துவர்
வெளியே எடுப்பார். பின்னர்
எபிசியோட்டமி தைக்கப்படும். இதன்
பிறகும் திகில் நிமிடங்கள்
முடிவதில்லை.
சிலவேளைகளில்
கருப்பையிலிருந்து குருதி பெருகுவது
மீண்டும் எல்லோரது நெஞ்சத்திலும்
பயம் பற்றிக் கொள்ளும்
எனவே குருதிப்பெருக்கை அவதானிப்ப
பிரசவத்தின் பின்னர் ஏறத்தாழ 2
மணித்தியாலங்கள் தாய்
கண்காணிப்பின் கீழ் பிரசவ
அறையினுள்ளேயே வைத்திருக்கப்படு
இதன்போது குழந்தையை பாலுட்ட
தாயிடம் குழந்தை வழங்கப்படும்.
இவ்வளவு காலமும் சுமந்த
வேதனை குழந்தையை முத்தமிடும்
தாய்க்கு பஞ்சாக பறந்துவிடும்.
சாதாரணமாக குழந்தை பிறந்து 24
மணித்தியாலங்களின் பின்னர்
(வேறு குழப்பங்கள்
தாய்க்கோ குழந்தைக்கோ இல்லாதவி
தாய் சேய் இருவரும் வீடு செல்ல
அனுமதிக்கப்படுவார்கள்.
நன்றி : வீரகேசரி
குழந்தைக்கு பாலூட்டியதும் செய்ய
வேண்டியது:
குழந்தைகள் பால் குடிக்கும்
போது அது தாயின் மார்பில்
இருந்து தாய்பாலைக் குடித்தாலும்
சரி, பால் புட்டியில் குடித்தாலும்
சரி, பாலோடு சேர்த்து காற்றையும்
சேர்த்து விழுங்கிவிடும்‌‌‌.
எனவே ஒவ்வொரு முறையும் பால்
கொடுத்த பிறகு‌ குழந்தையை தோளில்
போட்டு முதுகின் மீது‌ லேசாகத்
தட்டிவிட்டால் மிகவும்‌ நல்லது.
அப்போது அவர்களுக்கு ஏப்பம்
போன்று காற்று வெளியே வரும்.
தோளில் போட்டு தட்டுவதைப்
சிலர்போன்றே, ‌ மடியில்
குழந்தையை நிமிர்த்தி‌ உட்கார
வைத்துப் பிடித்துக்‌ கொள்வார்கள்.
இதன் மூலமாகவும் வயிற்றுக்குள்
சென்ற காற்று எளிதாக
வெளியேறிவிடும்.
அதன்
பிறகு கீழேகுழந்தையை ‌ படுக்க
வைக்கலாம். இதனால் பால்
குடித்ததும்
குழந்தை வாந்தி எடுப்பது போன்ற
அசெளகரியங்கள் தவிர்க்கப்படும்.
இந்த விஷயத்தை‌ எப்போதும்
தவறாமல் செய்ய
வேண்டியது மிகவும்‌ அவசியம்.
பிரசவ நேரத்தின்போது மேற்கொள்ள
வேண்டிய முன்ஏற்பாடுகள்
என்னென்ன?
மருத்துவமனையில்
சேர்வதற்கு ஒருவாரம்
இருக்கும்போதே எடுத்துச் செல்ல
வேண்டிய பொருள்களை தயாராக
வைத்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஊட்ட வசதியாக
முன்பக்கம் திறப்பு வைத்த உடை,
நீண்ட கவுன் போன்ற
மாற்று உடைகள், காலணிகள்,
குழந்தைக்குத் தேவையான
துணிகள், ஈரம் உறிஞ்சும்
துண்டுகள்
போன்றவற்றை மறக்காமல்
எடுத்துச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே உங்களுக்கு குழந்தைகள்
இருந்தால் அவர்களைப் பார்த்துக்
கொள்வதற்கான ஏற்பாட்டையும்
செய்ய வேண்டும்.
அதேபோல்
மருத்துவமனையிலிருந்து திரும்பியது
உங்களுக் கும், உங்கள்
குழந்தைக்கும் தேவையான
உடைகள், சோப்புகள், நாப்பிகள்,
துப்புரவுத் துணிகள்
போன்றவற்றை தயாராக
வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் மருத்துவர், மருத்துவமனை,
கணவர், நண்பர்,
அவசரத்திற்கு கூப்பிட்டால்
ஓடிவரும் உறவினர்கள்
போன்றோரின் செல்
நம்பர்களை குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அவசர நேரத்தில்
அவர்களை அழைப்பதற்கு உதவியாக
இருக்கும்.
பிரசவத்தின்போது மருத்துவமனைக்கு
செல்லும் வாகன ஏற்பாட்டையும்
தயார் செய்து கொள்ளுங்கள்.
குழந்தைகளின் வளர்ச்சிப்
படிநிலைகள்:
குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ச்சிய
மற்றும் சிரமமான செயலாகும்.
அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக்
குறிப்பிட்ட வயதுகளில் செய்ய
வேண்டும். இவைகளைத்தான்
வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம்.
ஒரு குழந்தை வளருகின்ற
வீதத்திலேயே மற்றொரு குழந்தையும்
வளர வேண்டும்
என்பது அவசியமில்லை என்று பெற்ற
உணர வேண்டும்.
பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய
முடிவதை எல்லாம் நம்முடைய
குழந்தையால் செய்ய
முடியவில்லை என்று புலம்புவதும்
வருத்தப்படுவதும் தேவை அற்றது.
கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி குழந்தை
எந்தெந்த வயதுகளில் என்னென்ன
செய்யும்
என்பதை அறிந்து கொண்டு அதன்படி
செயல்பாடுகளைக் கவனிக்க
வேண்டும்.
அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய
வேண்டிய
செயல்களை குழந்தையால் செய்ய
முடியவில்லை எனில்,உடனடியாக
குழந்தைகள் நல மருத்துவரிடம்
சென்று குழந்தையைக்
காட்டி ஆலோசனை பெறுதல்
அவசியம்.
குழந்தை உடல்நிலை சரியில்லாமல்
இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம்
போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தால
குழந்தைகளின் செயல்பாட்டிலும்
பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள்
இருக்கலாம். சில சமயங்களில்
ஒரு குழந்தை சம வயது கொண்ட
மற்றொரு குழந்தையை விட சில
செயல்பாடுகளில் குறைவான
வீதத்தில் வளர்ச்சியும், அதேசமயம்
வேறு சில செயல்களில்
அதிவேகத்தில் நல்ல வளர்ச்சியும்
பெற்று இருக்கும்.
குழந்தை நடப்பதற்குத் தயாராக
இல்லாத
தருணத்தில்,குழந்தையை நடக்கச்
சொல்லி வலுக்கட்டாயமாகப்
பயிற்சி கொடுத்தல் எந்தவித
பலனையும் தராது.
கண்காணிக்கப்பட வேண்டிய
வளர்ச்சி நிலைகள்:
பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்
* தலையை ஒருபுறமாகத்
திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக்க
* திடீரென்று உருவாகும் சத்தம்
கேட்டு குழந்தையின் உடல்
விறுக்கென்று சிலிர்த்துக்
கொள்ளுதல்.
* கைவிரல்களை இறுக்கமாக
மூடி வைத்து இருத்தல்.
* குழந்தையின் உள்ளங்கையில்
ஒரு பொருளையோ அல்லது விரலைய
இறுக்கமாகப்
பிடித்து வைத்து கொள்ளுதல்.
6 முதல் 12 வாரங்கள்
* குழந்தை கழுத்தை நன்றாக நிற்க
வைக்கப் பழகும்.
* பொருள்களின்
மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கு
* 2 மாதங்கள் - புன்சிரிப்பு
* 4 மாதங்கள் - கழுத்து நிற்பது
* 8 மாதங்கள் - எவ்வித
உதவியுமின்றி சுயமாக உட்காருதல்
* 12 மாதங்கள் - எழுந்து நிற்பது

No comments:

Post a Comment