Total Pageviews

Friday 22 March 2013

இயற்கையான சுத்தம்.செய்யபட்ட தண்ணீர்

உலக தண்ணீர் தினத்தன்று மிக எளிமையான
வாட்டர் ஃப்யூரிஃபையர் குறித்த
தகவல்...
சுமார் 100 ரூபாய்க்குள்
ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப்
பெற முடியும். மூன்று மண்
பானைகளை வாங்குங்கள். ஆனால்,
அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக்
கேட்டு வாங்குங்கள்.
மண் பானையைச்
செய்யும்போதே இரண்டு பானைகளில்
தலைமுடி அளவுக்கு நுண்ணிய
துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள்.
பானையைத் தயாரித்த பின்பு அப்படித்
துளையிட முடியாது. உடைந்துவிடும்.
மூன்றாவது பானையில் குழாய்
இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய்
இணைப்பு வைத்த பானையின் மேல்
துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும்
அடுக்கிவையுங்கள். நடுப் பானையில்
தேங்காய் சிரட்டையை எரியவைத்துப்
பொடித்தோ அல்லது கரித்
துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப்
அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல்
பானையில் சுமார் 20
கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது,
மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த
தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள்.
இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த
பின்பு அடிப்பானையில் குடிநீர்
சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட
நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250
டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும்
கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது.
குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர்
வேண்டும் என்பவர்கள், தேங்காய்
சிரட்டைக்குப் பதில்
எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத்
தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக்
கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும்
கூழாங்கற்களையும் 15
நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.
தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில்
ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும்
தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான
குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள்.
ஆனால், கடல் நீர் ஊடுருவிய
நிலத்தடி நீர் மற்றும்
தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த
நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய
முடியாது!
Source :Vikatan

No comments:

Post a Comment