அந்த இளம்பெண் தன் வீட்டுச்
சுவரில் பூங்கொடி ஒன்றினை
நட்டிருந்தாள்...
ஆசை ஆசையாய்
நீர்பாய்ச்சி ஆர்வமாய்
வளர்த்தாள்.
பூங்கொடி நீண்டுகொண்டே
போனதே தவிர பூப் பூத்ததாய்த்
தெரியவில்லை.
அவள் வருத்தத்திலிருந்த
போது சக்கர
நாற்காலியை உருட்டிக்கொண்டே
வந்த பக்கத்து வீட்டுக்காரர்,
அவளுக்கு நன்றி தெரிவித்தார்.
“உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த
கொடி எங்கள் வீட்டுக்குள்
எப்படியெல்லாம் பூத்துக்
குலுங்குகிறது தெரியுமா..?
மிக்க நன்றி” என்றார்.
நம்முடைய சில முயற்சிகளின்
விளைவுகள் நம் கண்ணுக்குத்
தெரியாவிட்டாலும்
எங்கோ எவருக்கோ நன்மை
கொடுக்கும்...
பயனில்லாத
முயற்சியென்று எதுவுமில்லை.
..!
Total Pageviews
Friday 1 March 2013
சிறந்த தத்துவம் முகநூலில் இருந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment