Total Pageviews

Tuesday 3 July 2012

இசைத்தூண்கள்

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத
தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும்
பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள்
" !!.
இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான
பாறையை வெட்டி எடுத்து,
அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய
தூண்களாக வடித்துள்ளனர், இந்த
ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் "
சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி "
என்ற
தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! .
சில பெரிய தூண்களை சுற்றி இடம்
பெற்றுள்ள சிறிய தூண்களில்
ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில்
பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்.,
அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் "
மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி "
போன்ற இசைக்கருவிகளின்,
இசையை தருகின்றது !! அப்படி என்றால்
ஒவ்வொரு கல்லையும்
ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால்
தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில்
இசைக்கும் ! இதை தட்டுவதால் நம்
விரல்களுக்கு எந்த வலியும்
ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம்
உள்ளவர்கள் இதை தட்டினால்
இசைக்கருவியில் இருந்து வரும்
இசையை விட மிக துல்லியமாக
இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக
பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த
இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில்
விழாக்களின் போது,
ஒரு இசைக்கருவியை கூட
பயன்படுத்தாமல், இந்த
தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் ! .இது போன்றவை உலகில்
எந்த இடத்திலும்
இல்லை என்பது நமக்கு இன்னும்
சிறப்பை சேர்க்கின்றது !.இந்த
இசைத்தூண்களை "மிடறு"
என்று அழைத்தார்கள்.
இது எப்படி வேலை செய்கின்றது ?
ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும்
சப்தமும், ஒவ்வெரு விதமான "
அலைகற்றையை " உருவாக்குகின்றது !.எந்த
தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில்
இது எப்படி சாத்தியமானது ?
இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் )
திரு."அனிஷ் குமார் " என்பவரும்
அவருடன் பணிபுரியும் சிலரும் இதில்
ஒளிந்துள்ள " இயற்பியல்"
அதிசயத்தை முதன்முதலாக தூண்
வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின்
வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில்
இருந்து எழும்
ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.
"In situ metallography " (used to find
out in-service degradation of critical
components of process plants
operating under high temperature/
high pressure/ corrosive atmosphere)
( ஒரு பொருளின் நுண்ணிய
வடிவமைப்பு மற்றும் நுண்ணிய
ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய
தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில்
இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும்
ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என
தெரிய வந்தது !!. " spectral analysis
"என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில்
வரும் இசையானது " தன்மைக்கேற்ப
இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் "
சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது
!.சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான
விஷயம் என்பது ஒரு புறம் இருக்க,
இது எப்படி ஒரு விரலால்
தட்டினாலே இசை எழுகின்றது ? .நினைவில்
கொள்ளுங்கள் நாம்
சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை,
இதற்கு தேவை வெறும்
ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய்
வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த
தூண்களுக்குள்
காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கெ
ன ஒரு சிறு துவாரதைக்கூட
உருவாக்கவில்லை !
இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த "
இசைத்தூண்கள் " ஆயிரம்
ஆண்டுகளுக்கு மேல் வெறும்
ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய்
தந்து கொண்டிருக்கின்றது ! அடுத்த
ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என
தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும்
மனிதர்களாக பிறப்போமா என
தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த
தமிழ்நாட்டில்
பிறப்போமா என்பது தெரியாதது !
ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற
இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த
அதிசயங்களை கண்டு களியுங்கள் ,
இது போன்ற நம் பெருமைகளை உலகறிய
செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில்
வந்த நாம் புதிதாக எதுவும்
உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த
மொழியையும், கலாச்சாரத்தயுமா
வது கட்டிக்காப்போம்!


No comments:

Post a Comment