ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!
தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும்
நாம் நிறைய
சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த
அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும்
நம்மை அவமானப்படுத்துவதாக
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத
ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது.
அங்கிருக்கும் அதிபர் மாளிகையான
கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள்
அழகு தமிழில் எழுதியுள்ளார்கள்.
முதலாவதாக அவர்கள் தாய்மொழியான
ரசியத்திலும், இரண்டாவதாக
அண்டைநாட்டு மொழியான சீனத்திலும்,
உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில்
ஆங்கிலத்திலும், நான்காவதாக
தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.
தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள்
பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன.
ஆனால் அவற்றையெல்லாம்
விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர்
மாளிகையின்
பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும்
காரணம் , தமிழர்களாகிய நம்மைச்
சிந்திக்க வைப்பதாக உள்ளது.
“உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும்
தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன்,
எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம்.
இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள்
இன்று வழக்கில் இல்லை.
இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி.
எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய
மொழிகளான 642 மொழிகளிலும் சரியான,
தகுதியான மொழியாக “தமிழ்
மொழி “தென்பட்டது. அந்த மொழியைச்
சிறப்பிக்கவே “கிரெம்ளின் மாளிகை”
என தமிழில் எழுதினோம்”
என்று கூறுகிறார்கள்.
வெளிநாட்டினருக்குக் கூட தமிழின்
அருமை பெருமை தெரிந்திருக்கிறது.
நமக்குத்தான் தெரியவில்லை..
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம்
தமிழின் பெருமை தெரிந்து உள்ளது.
ஆனால் நாமோ’தமிழில் எழுதுங்கள்
என்பதற்கு ஒரு கருத்தரங்கம்
நடத்திக்கொண்டு இருக்கிறோம்’.
சிந்தியுங்கள்……..தமிழர்களே……
Total Pageviews
Saturday 21 July 2012
ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment