Total Pageviews

Friday 13 July 2012

கடவுள் துகள்

இந்த கடவுளின் துகளை கண்டறியும்
முயற்சி ஆரம்பித்தது 1983ம் ஆண்டு.பல
ஆயிரம் கோடி ரூபாய் செலவில்
திட்டமிடப்பட்டு இதன் ஆய்வக
தயாரிப்புப் பணிகள்
நடந்து கொண்டே இருக்கின்றன.
இப்போதுதான் அந்த சோதனை மிக
முக்கியமான
ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது.
ஆனாலும் முழுமையான சோதனை முடிய
இன்னும் நான்கைந்து ஆண்டுகள் ஆகலாம்.
இதையடுத்து வேறோரு கோணத்தில்
ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும்
தொடர்ந்து கொண்டே போகும்
என்பது நிச்சயம்.
இந்த சோதனை நடந்தால் உலகமே அழியும்
என ஒரு குரூப் தீவிரமாக இந்த
சோதனைக்கு எதிராக நின்றனர். அளவிட
முடியாத அணுவின் ஆற்றல் இந்த மோதலில்
விளைவாய் ஏற்படும்
இதன் மூலம் உலகம் அழியும் என சிலரும்,
உலகம் இந்த சோதனையினால்
சுருங்கி சிதறும் என ஒரு செட்டப்
குரூப்பும் தங்கள்
தரப்பு விளக்கங்களோடு எதிர்க்கின்றனர்.
இன்னும் ஒரு சிலர் பூமியிலுள்ள
உயிர்வழி எல்லாம் இந்த சோதனையின் மூலம்
இழுக்கப்பட்டு பூமி வெற்றிடமாகிவிடு
ம்.
இந்த பூமி எனும் கோளமே இந்தச்
சோதனையின் மூலம் முழுமையாக
அழிக்கப்படும் என அச்சம்
தெரிவிக்கின்றனர்.
டாக்டர். அட்ரியன் கெண்ட் என்பவர் இந்த
சோதனையின் விளைவுகள் கவனமாய்
பரிசீலிக்கப்படவில்லை எனவும்
ஒட்டு மொத்த மனித குலத்தில்
சாவுமணியாய் இருக்கக் கூடும் இந்த
அராய்ச்சி என 2003 ல்
ஒரு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்
தக்கது.
எனினும், இந்தச் சோதனையில்
ஈடுபட்டுள்ளவர்களோ, இதில்
உலகிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என
தொடர்ந்து சமாதானம் சொல்லிக்
கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள்
செய்திருக்கும் ஏற்பாட்டைப் பார்த்தால்
வியப்பில் புருவங்கள் எகிறிம்.
பிரான்சு – சுவிட்சர்லாந்து எல்லைப்
பகுதியில்தான் இந்த சோதனைத் தளம்
உருவாக்கப்பட்டு வருகிறது. தரையில்
பூமிக்குக் கீழே சுமார் நூறு மீட்டர்
ஆழத்தில் தான் இந்த சோதனைச்
சாலையே அமைகிறது.
உள்ளே மிக சக்தி வாய்ந்த ஒரு சுற்றுப்
பாதையை அமைக்கிறார்கள். இந்தச் சுற்றுப்
பாதையின் நீளம் 27 கிலோ மீட்டர்கள்!
இந்தச் சுற்றுப் பாதை மிக மிக
சக்தி வாய்ந்த, கனம் வாய்ந்த,
வலிமை வாய்ந்த உலோகங்களால்
அமைக்கப்படுகிறது. அணுக்களின் மோதல்
என்ன விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதை முன்கூட்டியே துல்லியமாய்
ஊகிப்பது கடினம் என்பதால் அதீத கவனம்
எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்
விஞ்ஞானிகள்.
இந்த 27 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில்
சுமார் 5000 காந்தங்கள் பயன்படுத்தப்படு
கின்றன. இவையே இந்த
ஒளிக்கற்றையை சரியான பாதையில்
பயணிக்க வைக்கும்.
இந்த ஒட்டு மொத்த அமைப்பும் சுமார் -271
டிகிரி செண்டிகிரேடில் உறை குளிர்
நிலையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக
குளிரான இடம் இது என விஞ்ஞானிகள்
தெரிவிக்கின்றனர்.
அதற்காக அவர்கள் திரவ ஹீலியத்தைப்
பயன்படுத்துகின்றனர்
என்பது ஒரு இன்னோரு அறிவியல் தகவல்.
இந்த அமைப்பை இந்த நிலைக்குக் குளிர
வைக்கவே சுமார் ஒரு மாத காலம்
ஆகுமாம்.
இந்த அமைப்பிலுள்ள காம்பாக்ட் மோன்
சோலினாய்ட் ( Compact Muon Solenoid
(CMS) ), எனும் ஒரு சிறு பகுதியின்
எடை மட்டுமே சுமார் 2500 டன் என்றால்
மொத்த அமைப்பின்
எடையை சற்று யோசித்துப் பாருங்கள்.
இதை பூமியில் நூறு அடி ஆழத்தில்
இறக்கி வைக்க ஆன நேரமே 12 மணி நேரம்
எனில் மொத்த அமைப்பின் தயாரிப்புக்
காலத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
சரி, இதை வைத்துக் கொண்டு எப்படித் தான்
ஆராய்ச்சி செய்கிறார்கள்.
எளிய முறையில் சொல்ல வேண்டுமெனில்,
இந்த வட்டப்பாதையில்
ஒரு முனையிலிருந்து இரண்டு புரோட்டான்
ஒளிக்கதிர்களை பாய்ச்சுவார்கள். இதன்
சக்தி 450 கிகா எலக்டோ வால்ட்.
இது சுற்றுப் பாதையில்
இரண்டு பக்கமுமாகப் பாய்ந்து செல்லும்.
இந்த பாய்ச்சலை சுற்றியிருக்கும்
காந்தங்கள் வகைப்படுத்தும்.
வட்டத்தில் இரண்டு பாதை வழியாக
வேகமாக வரும் இந்த கதிர்கள்
ஒரு இடத்தில் மோதிச் சிதறும். அந்த
மோதிச் சிதறும் கணத்தில் இந்த கடவுளின்
துகள் என்று அவர்கள் அழைக்கும்
சக்தி வெளிப்படும் என்பதே அவர்களுடைய
கணிப்பு.
(க்ணிப்பு வ்பலித்து விட்டதே)
எவ்வளவு சக்தி வந்தாலும் இந்த
அமைப்பு தாங்குமா என்பதை பல்வேறு கடினமாக
சோதனைகள் மூலம் சோதித்து வந்தன்ர்.
பன்னிரண்டாயிரம் ஆம்ப்ஸ்
மின்சாரத்தை இவற்றில்
பாய்ச்சி சோதிப்பது அவற்றில் ஒன்று.
இந்தச் சோதனை குறித்த விரிவான
தகவல்கள் பெற விரும்பினால் http://
lhc.web.cern.ch/lhc/ எனும் இணைய
தளத்தை நாடலாம்.
பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில்
நிகழவிருக்கும் இந்த
ஆய்வு விஞ்ஞானத்தில் இன்னும் பல மர்மக்
கதவுகளை திறக்கப் படவில்லை.
இந்த ஆய்வு மனுக்குலத்தையே அழிக்கும்
பல்வேறு மூலக்கூறுகளை உருவாக்கலாம்,
அல்லது இயற்கை கட்டமைப்பின்
மாற்றங்களை உருவாக்கலாம்,
பூமியே உயிரற்ற ஒரு பொட்டல் காடாய்
மாறிவிடலாம் எனும் அச்சம் வேறு பல
ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.
இப்படிப்பட்ட சோதனைகளுக்காக பல
ஆயிரம் கோடி செலவிடுவதை விட அக்கம்
பக்கம் வறுமையினால்
உயிரை இழந்து கொண்டிருக்கும்
பட்டினி நாடுகளை வாழவைக்க இந்தப்
பணத்தைச் செலவிடலாமே என்றும், உயிரின்
முதல் துகளைத் தேடும் பணிக்காகச்
செலவிடும் பணத்தில் உயிரின் கடைசித்
துளியையும் இழந்து கொண்டிருப்பவனைக்
காப்பாற்றலாமே என்றும்
பல்வேறு எண்ணங்கள் மனித நேயம் கொண்ட
உங்களிடம்
இயல்பாகவே எழுகிறது தானே ?”
என்று யாரோ சொன்னதை நினைவுப்
ப்டுத்தி வுட்டுப் போனார் கட்டிங்
கண்ணையா!


No comments:

Post a Comment