Total Pageviews

Saturday 1 September 2012

மூச்சு

எண்ணும் எழுத்தும்
__________________
உடற்கூறு கணிதம்
சித்தர்கள் வகுத்த மூச்சுக்கணக்கு:
21600 மூச்சுக்காற்று..!
உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின்
இயக்கமாகும். மூச்சுக்காற்றின்
இயக்கமே உயிரின் இயக்கமாகும்.
சித்தர்களின் கணக்குப்படி மனிதனின்
மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600
முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில்
இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம்
(உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம்
(வெளியேறுதல் 10800/நாள்)
சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது.
இப்படி ஒரு தினத்தில் 21,600
மூச்சு நாம் விடுகின்றோம். இம்
மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக்
கலை (அ+உ = ய) பத்தும்
கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது.
ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது,
(21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக்
கலைகள்.
சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால்
மூச்சில்லாதது. இவையே சித்தர்கள்
உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக
சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த
உலகமே மூச்சை அடிப்படையாக
வைத்தது என்பதற்காகவும்,
அது முட்டையின்
வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும்,
அண்ட சராசரம்(அண்டம் என்றால்
முட்டை என்று பொருள்)
என்று அழைத்து வந்தனர்.
1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1
மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1
நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.
உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த
21,600 மூச்சுக்களையே குறிக்கும்
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும்
21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம்
செய்தால் அவனுடைய ஆயுள் 120
ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்
கும் போது 12மூச்சும், நடக்கும்
போது 18 மூச்சும், ஒடும்போது 25
மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,;
உடலுறவின் போதும், கோபம் முதலான
உணர்ச்சிகளில் சிக்கும் போது 64
மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த
மூச்சினுடைய
அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல்
ஆயுள் குறைகிறது.
அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம்
என்றும் அதில் அவும் (8) உவும் (2)
சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது.
இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும்
கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60
நாத விந்து கலையாகவும் கூறப்படும்.
இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம்
வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக்
கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம
கலையாற் பகுத்து, காலக்
கணக்கு கண்டுள்ளனர்.
அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும்,
60 விநாடி (60 X 60 = 3600 கலை)
ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X
60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும்
விளங்குகின்றதாம்.
ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின்
எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம்.
சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில்
தான், நடராஜர் நடனமிடும்
சிற்சபை எனும் பொன்னம்பலம்
அமைந்துள்ளது.இந்த
சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின்
அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.
சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64
கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான
கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க
ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின்
ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக்
காற்றுக்கான எண்ணிக்கை. 5 வெள்ளிப்
படிகள் உள்ளன.
இவை ஐந்தெழுத்து மந்திரமான
நமசிவாயத்தினையும் (பஞ்ச
பூதங்களையும்)
குறிப்பன.இதையே விதியை மதியால்
வெல்லலாம் என்பார்கள்.
இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல
மதி என்றால் சந்திரன் 16 அங்குலம்
ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க
சுருக்க ஆயுள் விருத்தியாகும்.
எனவே விதி முடிவும்
விலகியே போகும்.
வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக்
கல்வி என்னவென்றால் மூச்சே நேரம்.
இதுவே அனைத்து வேதங்களும்,
சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும்
சொல்வதும்.
நாம் விடும்
மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.
காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக்
கொண்டும், நேரத்தைக் கொண்டும்,
வான்வெளியைக் கொண்டும்
கணக்கிடப்படுவது.
10 வார்த்தைகளைக் கொண்ட
அட்சரத்தை உச்சரிக்க
நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய
வேண்டியது இருக்கும்.
மூச்சின் கணக்கு:
1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 .
இதில் நாளின் முதல் பாதியில் 10800
மறு பாதியில் 10800.
2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.
நேரத்தின் கணக்கு:
1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440
நிமிடங்கள்
2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்=
86400 விநாடிகள்; 86400/21600 = 4
விநாடிகள்= 1 மூச்சு
3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்=
1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் )
சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு:
1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000
2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1
மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360
மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்)
3. 60 கடிகைகள் = 1 நாள்
4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய
வருடங்கள்
ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள
்ளது:
1. கிரேதா யுகம் = 1728000 சூரிய
வருடங்கள்
2. திரேதா யுகம் = 1296000 சூரிய
வருடங்கள்
3. துவாபர யுகம் = 864000 சூரிய
வருடங்கள்
4. கலி யுகம் = 432000 சூரிய
வருடங்கள்
நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும்
இரண்டமறியாத மூடன்' என்கிறார். 8
என்பது 'அ' காரமாக தமிழ்
எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது.
இரண்டு என்பது 'உ' காரமாக தமிழ்
எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது.
இதையே அகார உகாரம்
என்று கூறுகின்றார்கள். 8*2=16
அங்குலம் ஓடும்
சந்திரகலையை குறிக்கிறது.

No comments:

Post a Comment