Total Pageviews

Thursday 20 December 2012

அடிப்படை தமிழ் குழந்தைகளுக்கு

'அடிப்படைத் தமிழறிவைக்
குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?'
''எண்களோடு எண்ணங்களை இணைத்துக்
கற்றுக்கொடுங்கள்;
அப்படியே நெஞ்சில் ஒட்டும்.
ஒன்று: வானம் - ஒன்று.
இரண்டு: ஆண், பெண் -
சாதி இரண்டு.
மூன்று: இயல், இசை, நாடகம்-
தமிழ் மூன்று.
நான்கு:
வடக்கிலிருந்து வருவது வாடை,
தெற்கிலிருந்து வீசுவது தென்றல்,
கிழக்கிலிருந்து
தீண்டுவது கொண்டல்,
மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-
தமிழன் காற்றுக்கு வைத்த பெயர்
நான்கு.
ஐந்து: எழுத்து, சொல், பொருள்,
யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.
ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு,
உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-
சுவைகள் ஆறு.
ஏழு: குரல், துத்தம், கைக்கிளை,
உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப்
பண்கள் ஏழு.
எட்டு: நகை, அழுகை, இளிவரல்,
மருட்கை, அச்சம், பெருமிதம்,
உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள்
எட்டு.
ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு,
நாசி இரண்டு, வாய் ஒன்று,
முன்னொன்று, பின்னொன்று-உடலி­
ன் வாசல்கள் ஒன்பது.
இப்படி எண்களுக்குப் பக்கத்தில்
எண்ணங்களைப் பொருத்தித்
தமிழியம் கற்றுக்கொடுக்க
முடியுமா என்று கருதிப்பாருங்கள்
தமிழாசிரியப் பெருமக்களே!''
-அகரமுதலி

No comments:

Post a Comment